search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Missile"

    செயற்கை கோளை சுட்டு வீழ்த்திய இந்தியாவின் சோதனை குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா, விண்வெளி குப்பைகள் குறித்து கவலை தெரிவித்துள்ளது. #IndiaAntisatelliteTest #SpaceDebris
    வாஷிங்டன்:

    விண்வெளியில் செயற்கை கோளை சுட்டு வீழ்த்தும், மிஷன் சக்தி சோதனையை இந்தியா வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளது. விண்வெளியில் 300 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வந்த செயற்கைகோளை சுட்டு வீழ்த்தியது. இந்த சாதனையின் மூலம் அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்து உள்ளது. இந்த தகவலை நேற்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவித்தார்.
     
    இந்த நிலையில், மிஷன் சக்தி சோதனையை வெற்றிகரமாக இந்தியா நடத்தி முடித்தது பற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:-



    செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை தொடர்பாக பிரதமர் மோடியின் அறிக்கையை நாங்கள் பார்த்தோம். விண்வெளி பாதுகாப்பு, ஆராய்ச்சியில் இந்தியாவுடனான தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடரும்.

    அதேசமயம், செயற்கைகோள்களால் விண்வெளியில் ஏற்படும் குப்பைகள் கவலை அளிப்பதாக உள்ளது. விண்வெளி குப்பைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த சோதனை வடிவமைக்கப்பட்டதாக கூறிய இந்தியாவின் அறிக்கைகளை கவனத்தில் கொண்டுள்ளோம்.


    இவ்வாறு அவர் கூறினார்.

    தாழ்வான வளிமண்டலத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டிருப்பதால், விண்வெளியில் குப்பைகள் சேராது என்றும், உடைந்து சிதறிய செயற்கைக் கோள் குப்பைகள் சில வாரங்களில் பூமியில் வந்து விழும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. #IndiaAntisatelliteTest #SpaceDebris
    நிலப்பரப்பு மற்றும் வான்வெளியில் நீண்டதூரம் சென்று தாக்கும் அதிநவீன பராக்-8 ரக ஏவுகணை தடுப்பு கவன்களை 77 கோடி டாலர்கள் விலையில் இஸ்ரேலிடம் இருந்து இந்தியா வாங்குகிறது. #IsraelsupplytoIndia #missiledefencesystems #$777mnmissiledefencesystems
    ஜெருசலேம்: 

    இஸ்ரேல் நாட்டின் கடற்படை மற்றும் கடலோரக் காவல் படைகள் உள்நாட்டின் பாதுகாப்புக்கு அதிநவீன பராக்-8 ரக ஏவுகணைகளை பயன்படுத்தி வருகின்றன. இந்தியாவின் கடலோரப் பகுதிகளிலும் இத்தகைய ஏவுகணை தடுப்பு கவன்களை பயன்படுத்த இந்தியா தீர்மானித்தது.

    இதில் ஒருகட்டமாக, 77 கோடி அமெரிக்க டாலர்கள் விலையில் நிலப்பரப்பு மற்றும் வான்வெளியில் நீண்டதூரம் சென்று தாக்கும் அதிநவீன பராக்-8 ரக ஏவுகணை தடுப்பு கவன்களை இஸ்ரேலிடம் இருந்து இந்தியா வாங்குகிறது.  

    இந்த ஏவுகணை தடுப்பு கவன்கள் இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இஸ்ரேல் நாட்டின் விண்வெளித்துறையின் கூட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டவை என்பதும், இந்திய ராணுவம் மற்றும் கடற்படைக்கு 200 கோடி ரூபாய் அளவுக்கு ஆயுதங்களை சப்ளை செய்யும் ஒப்பந்தங்களை இஸ்ரேல் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. #IsraelsupplytoIndia #missiledefencesystems #$777mnmissiledefencesystems
    எச்சரிக்கையும் மீறி வடகொரியா மீண்டும் 2 ஏவுகணைகள் தயாரிப்பதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். #us #northkorea
    வாஷிங்டன்:

    வடகொரியா தொடர்ந்து அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதனால் அமெரிக்காவும், ஐ.நாவும் வடகொரியா மீது கடும் பொருளாதார தடை விதித்தது.

    இதையடுத்து அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு உருவானது. கொரிய தீபகற்பத்தில் போர் சூழ்நிலை ஏற்பட்டது.

    எனவே பதட்டத்தை தணிக்க கடந்த ஜூன் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங்கும் நேரில் சந்தித்து பேசினர்.

    அப்போது ஏவுகணைகள் மற்றும் அணுகுண்டுகளை முற்றிலும் அழிப்பதாக வடகொரியா ஒப்புக் கொண்டது. மேலும் அவற்றை அழிப்பது போன்ற மாயையும் ஏற்படுத்தியது.

    ஆனால் இதை அமெரிக்கா நம்பவில்லை. வட கொரியா மீது உளவு செயற்கைகோளை பறக்க விட்டு அதன் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன. அப்போது அணுகுண்டு தயாரிக்க பயன்படும் யுரேனியம் செறிவூட்டப்பட்டு வருவது நிறுத்தப்படவில்லை என தெரியவந்தது.

    எனவே அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைகள் தயாரிப்பு பணிகள் நிறுத்தப்படும் வரை வடகொரியா மீதான பொருளாதார தடைகள் தொடரும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்தார்.



    எச்சரிக்கையும் மீறி வடகொரியா மீண்டும் 2 ஏவுகணைகள் தயாரிப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தலைநகர் பியாங் யாங் அருகேயுள்ள சனும்டாஸ் என்ற இடத்தில் வைத்து அவை தயாரிக்கப்படுவதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

    இவை கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் திறன் படைத்தது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே வடகொரிய தொழிற்சாலைகள் தொடர்ந்து அணு ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்தும் பொருட்களை உற்பத்தி செய்து வருவதாக அமெரிக்க உள்துறை மந்திரி மைக்பெம்போ குற்றம் சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. #us #northkorea
    ஏமனில் உள்ள ஹவுத்தி போராளிகள் வீசிய ஏவுகணையை சவுதி அரேபியா போர் விமானங்கள் வழிமறித்து தாக்கி அழித்தது.#SaudiAirDefenses
    ரியாத்:

    ஏமன் நாட்டில் பதவி இறக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபரின் ஆதரவாளர்கள் தற்போதைய அதிபர் அப்த் ரப்போ மன்சூர் ஹாதியின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டு இந்த கிளர்ச்சியானது ஆயுதப் போராட்டமாக திசைமாறியது.

    ஏமன் நாட்டின் அண்டைநாடான ஈரானின் ஆதரவுடனும், அல் கொய்தா தீவிரவாதிகளின் துணையுடனும் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப்படையினர் தலைநகர் சனா உள்ளிட்ட பல பகுதிகளை கைப்பற்றி, தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

    இந்த பகுதிகளை மீட்பதற்காக சவுதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகளின் கூட்டமைப்பு படைகள் ஏமன் அரசுக்கு உதவிசெய்து வருகின்றன.

    அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் நடைபெற்று வரும் உள்நாட்டு சண்டையால் அந்நாட்டில் வசிக்கும் சுமார் 3 கோடி மக்கள் குடிநீர், உணவு, மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில், ஏமன் நாட்டில் உள்ள ஹவுத்தி போராளிகள் இன்று சவுதி அரேபியா நாட்டின் தென்பகுதியில் உள்ள ஜஸான் நகரில் உள்ள விமான நிலையத்தின்மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். சவுதி அரேபியா விமானப்படையை சேர்ந்த போர் விமானங்கள் அந்த ஏவுகணைகளை வழிமறித்து தாக்கி அழித்ததாக சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.#SaudiAirDefenses
    ×