search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவுக்கு 77 கோடி டாலர் மதிப்புடைய அதிநவீன ஏவுகணை தடுப்பு கவன்களை விற்க இஸ்ரேல் ஒப்பந்தம்
    X

    இந்தியாவுக்கு 77 கோடி டாலர் மதிப்புடைய அதிநவீன ஏவுகணை தடுப்பு கவன்களை விற்க இஸ்ரேல் ஒப்பந்தம்

    நிலப்பரப்பு மற்றும் வான்வெளியில் நீண்டதூரம் சென்று தாக்கும் அதிநவீன பராக்-8 ரக ஏவுகணை தடுப்பு கவன்களை 77 கோடி டாலர்கள் விலையில் இஸ்ரேலிடம் இருந்து இந்தியா வாங்குகிறது. #IsraelsupplytoIndia #missiledefencesystems #$777mnmissiledefencesystems
    ஜெருசலேம்: 

    இஸ்ரேல் நாட்டின் கடற்படை மற்றும் கடலோரக் காவல் படைகள் உள்நாட்டின் பாதுகாப்புக்கு அதிநவீன பராக்-8 ரக ஏவுகணைகளை பயன்படுத்தி வருகின்றன. இந்தியாவின் கடலோரப் பகுதிகளிலும் இத்தகைய ஏவுகணை தடுப்பு கவன்களை பயன்படுத்த இந்தியா தீர்மானித்தது.

    இதில் ஒருகட்டமாக, 77 கோடி அமெரிக்க டாலர்கள் விலையில் நிலப்பரப்பு மற்றும் வான்வெளியில் நீண்டதூரம் சென்று தாக்கும் அதிநவீன பராக்-8 ரக ஏவுகணை தடுப்பு கவன்களை இஸ்ரேலிடம் இருந்து இந்தியா வாங்குகிறது.  

    இந்த ஏவுகணை தடுப்பு கவன்கள் இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இஸ்ரேல் நாட்டின் விண்வெளித்துறையின் கூட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டவை என்பதும், இந்திய ராணுவம் மற்றும் கடற்படைக்கு 200 கோடி ரூபாய் அளவுக்கு ஆயுதங்களை சப்ளை செய்யும் ஒப்பந்தங்களை இஸ்ரேல் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. #IsraelsupplytoIndia #missiledefencesystems #$777mnmissiledefencesystems
    Next Story
    ×