search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "manifesto"

    ராஜஸ்தான் மாநிலத்திற்கான தேர்தல் அறிக்கையை பாஜக இன்று வெளியிட்டது. அதில், பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. #RajastanPolls #BJPManifesto
    ஜெய்ப்பூர்:

    பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் டிசம்பர் 7-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர களப்பணியாற்றி வருகின்றன. அதேசமயம் ஆட்சியைத் தக்க வைக்க பாஜக தனது பிரசாரத்தை முடுக்கி விட்டுள்ளது. ஆட்சியின் சாதனைகள் மற்றும் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, பிரகாஷ் ஜவடேகர், மாநில முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் வெளியிட்டனர். நிகழ்ச்சியில் கட்சியின் பல்வேறு தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.


    பாஜகவின் தேர்தல் அறிக்கையில் பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், ஒவ்வொரு ஆண்டும் அரசுத்துறையில் 30 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்படும், தகுதிவாய்ந்த வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 5000 ரூபாய் வரை உதவித் தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் வசுந்தரா ராஜே பேசும்போது, 2013 சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் 95 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியிருப்பதாக குறிப்பிட்டார். #RajastanPolls #BJPManifesto
    மதம் ரீதியாக வாக்கு சேகரிக்கும் நோக்கில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அமைக்கப்பட்டிருப்பதாக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #karnatakaelection2018 #SCdismisses #pleaagainstCongress
    புதுடெல்லி:

    கர்நாடகாவில் நாளை மறுநாள் (12-ம் தேதி) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பா.ஜ.க, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் போன்ற கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. கர்நாடகாவில் ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்ற முனைப்புடன் பா.ஜ.க, பெங்களூரு நகருக்கென தனித் தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது.

    இந்நிலையில், ராஷ்டிரிய இந்து சேனா தலைவர் பிரமோத் முத்தலிக் சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கடந்த ஏப்ரல் 27-ம் தேதி வெளியிடப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையானது, மதம் ரீதியாக வாக்கு சேகரிக்கும் நோக்கில் அமைந்துள்ளது எனவும், இதன் காரணமாக காங்கிரஸ் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்து, தேசிய கட்சிகளின் பட்டியலிலிருந்து காங்கிரசை நீக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, தேர்தல் பணிகள் துவங்கிய பின்னர், நீதிமன்றம் அவற்றில் தலையிட முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. எனினும் தேர்தல் நடைமுறைகள் முடிந்தபிறகு, முத்தலிக் சட்டரீதியாக நிவாரணம் தேடிக்கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். #karnatakaelection2018 #SCdismisses #pleaagainstCongress
    ×