search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mahalaya amavasya"

    • ஏழைகளுக்கு அன்னம் இடலாம்.
    • எள் மற்றும் காசு வைத்து தானம் கொடுக்கலாம்.

    மறைந்த அப்பா, அம்மா படத்தை எடுத்து சுத்தம் செய்து உரிய திதி நாளில் துளசி, மலர்மாலை சாற்றி பொட்டு வைத்து அதற்கு முன்பாக ஒரு தாம்பளத்தை வைத்து தர்ப்பை சட்டம் போட வேண்டும். அதன்மேல் முன்னோர் பெயரைச் சொல்லி அதில் எழுந்தருள்க என்று சொல்ல வேண்டும். அதாவது, எனது தாயே எழுந்தருள்க!

    தந்தையே எழுந்தருள்க! என்று எள்ளும் தண்ணீரும் விட வேண்டும். பிறகு சிவ (அல்லது) விஷ்ணு கோத்ரத்தை சேர்ந்தவருக்கு தர்பணம் செய்கிறேன் என்று கூறி 3 முறை நீர் எள் விடவும், அடுத்ததாக, எனது தந்தையின் தந்தைக்கு தர்ப்பணம் செய்கிறேன், என்று 3 முறை எள் தீர்த்தம் விடுக.

    மூன்றாவதாக எனது பாட்டனார்க்கு தர்ப்பணம் விடுகிறேன் என்று மூன்றுமுறை எள், தண்ணீர் விடவும். அடுத்ததாக, எனக்குத் தெரியாமல் என் வம்சாவழியில் வருகின்ற பித்ருக்களுக்கு (காருணீக பித்ரு) தர்ப்பணம் செய்கிறேன் என்று எள் நீர் விடவும். இதன் பொருட்டு தேவர்களும், தேவருலகவாசிகள் அனைவரும் எனது தர்ப்பண வழிபாட்டால் திருப்தி அடையட்டும் திருப்தியக என்று 3 முறை கூறுக. இது தான் எளிய தர்ப்பண பூஜை முறை.

    பிறகு எழுந்து நின்று கையில் எள் நீர் எடுத்துக்கொண்டு மூன்று முறை தன்னையே சுற்றுக்கொண்டு முட்டி போட்ட நிலையில், கட்டி கொண்டுள்ள வேட்டி துணியால் எள் தீர்த்தத்தை தொட்டு நெற்றி கண்களில் ஏற்றிக்கொள்ள வேண்டும்.

    அதில் உள்ள கூர்ச்ச முடிச்சை அவிழ்த்து எடுத்து என்னை சேர்த்துக் கொண்டு குலம் உறவினர்கள் தழைக்க தர்ப்பணம் செய்தேன். உலக மக்கள், என் மக்கள் நலன் காக்கப்பட்டும் என்று மூன்று முறை சொல்ல வேண்டும். பிறகு யாருக்கு தர்ப்பணம் செய்தோமோ அவக்குப் பிடித்தமான பண்டத்துடன், தேங்காய்,வாழைப்பழம் வைத்து மலர் துளசி போட்டு நெய் தீபம் காட்ட வேண்டும். தர்ப்பண நீரை அருகில் உள்ள நீர் நிலைகளில் அல்லது செடிகளில் விட்டுவிட வேண்டும்.

    பிறகு ஒரு பிடி சாதத்தை உருண்டையாகப் பிடித்து எள் நீர் விட்டு சிறிது பருப்பு கலந்து காக்கையை அழைத்து அது சாதத்தை எடுத்த பிறகு கயா....கயா... கயாதிதி சமர்ப்பணம் என்று மூன்று முறை கூறிய பின் விளக்கில் உள்ள திரியை மட்டும் மாற்றி தீபம் ஏற்றி விட்டு பிறகு வீட்டு தெய்வத்திற்கு பூஜை செய்த பிறகு குடும்பத்தில் உள்ளவர்கள் உணவு சாப்பிட வேண்டும்.

    பித்ருக்களும் தேவர்களும் காக்கை வடிவில் உணவு எடுக்க வருவதாக சாஸ்திரம் கூறுவதால் காக்கைக்கு அன்னமிட்டு கயாவில் சிரார்த்தம் செய்தது போல இந்த தர்ப்பணம் செய்தேன் என்று கூறுகிறோம்.

    பித்ரு தர்ப்பண பூஜை செய்வதால் மனிதர்களுக்கு உணவு, மற்ற தானங்கள், காக்கைக்கும் பசுவுக்கும் பிண்ட உணவு இறைகின்ற அரிசி எள் முதலியவற்றுக்கு உணவு என்று இயற்கையாகவே உயிரோம்புதல் நடைபெறுகிறது.

    சில கடுமையான பணி நிமித்தமாக வெளியூரில் இருப்பவர்களே தனக்குச்சக்தி இல்லாமை காரணமாக தடை வந்து செய்ய முடியாவிட்டால் மட்டும் அதற்கு வேறு வழி கூறப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு அன்னம் இடலாம். எள் மற்றும் காசு வைத்து தானம் கொடுக்கலாம். அதுவும் முடியவில்லை எனில் கட்டை விரலை ஈரம் செய்து அதில் ஒட்டிய எள்ளை தானம் தந்து பித்ருக்களை நினைக்கலாம்.

    பசுவுக்குப் புல் எடுத்துப்போட்டு அதைத் தர்ப்பணமாக ஏற்கும் படி பித்ருக்களை வணங்கிக்கேட்கலாம். அதுவும் முடியாதவர்கள் ஆகாயத்தை அன்னாந்து பார்த்து ஏ பித்ருக்களே! எனக்கு எதுவும் செய்ய இயலவில்லை வேண்டுகிறேன். திருப்தி பெறுவீர்களாக என்று வேண்டி விழுந்து வணங்கலாம்.

    • இந்த கோவிலில் சிதறு தேங்காய் உடைத்தால் திருமண தடைகள் நீங்கும்.
    • மூலை அனுமார் வாலில் சனீஸ்வர பகவான் உட்பட நவகிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம்.

    தஞ்சை மேலவீதியில் உள்ள மூலை அனுமார் வாலில் சனீஸ்வரபகவான் உட்பட நவகிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம். பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற மஞ்சள் பூசிய தேங்காயை தங்களது இல்லத்தில் இருந்து எடுத்து வந்து மூலை அனுமாரை புகழ் பெற்ற ராசி மண்டலம் சிற்பத்தில் அவரவர் ராசிக்கு கீழ் நின்று தரிசனம் செய்து மனம் உருகி தரிசனம் செய்வார்கள்.

    பின்னர் காணிக்கையாக ரூ.18 உண்டியலில் செலுத்தி சிதறு தேங்காய் உடைத்தால் திருமண தடைகள் நீங்கும். வியாபார அபிவிருத்தி உண்டாகும். பூர்வ ஜென்மம், இந்த ஜென்மத்தில் செய்த பாவங்கள் மற்றும் கர்ம வினைகள் யாவும் நீங்கும் என்பது ஐதீகம்.

    இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலில் வருகிற 25-ந் தேதி மகாளய அமாவாசையை முன்னிட்டு காலை 7 மணிக்கு லட்ச ராமநாமம் ஜெபம் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு வறுமை மற்றும் கடன் தொல்லைகள் நிவர்த்தியாகும் தேங்காய் துருவல் அபிஷேகம் மற்றும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது.

    மாலை 6 மணிக்கு கனிகளால் ஆன சிறப்பு அலங்காரமும், 6.30 மணிக்கு அல்லல் போக்கும் அமாவாசை 18 வலம் வரும் நிகழ்ச்சியும் அதனையடுத்து 1,008 எலுமிச்சை பழங்கள் மாலை சாற்றி தீபாராதனையும் நடைபெறுகிறது. மூலை அனுமாருக்கு மகாளய அமாவாசை அன்று பழங்களால் ஆன மாலை சாற்றி வழிபட்டால் பித்ரு தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகமாகும்.

    • இந்த 15 நாட்கள் மட்டுமே பித்ருக்கள் தொடர்ச்சியாக பூலோக வாசம் செய்ய இயலும்.
    • சிரார்த்தம், தர்ப்பணம் முதலியவற்றுக்கு அதிக பலன் உண்டு.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) மகாளய பட்சம் தொடங்குகிறது. நாளை முதல் அடுத்த 15 நாட்களுக்கு முன்னோர் வழிபாடு செய்வது குடும்பத்துக்கு மிகவும் நல்லது. ஒவ்வொரு மனிதனும், தேவகடன், பித்ருகடன், ரிஷிகடன் ஆகியவற்றைச் சரிவர நிறைவேற்ற வேண்டும். முறையான இறைவழிபாடு, குலதெய்வ வழிபாடு ஆகியவற்றைச் செய்வதன் மூலம், தேவகடனில் இருந்து விடுபடலாம்.

    தர்ப்பணம், சிரார்த்தம் முதலியவற்றைத் தக்க காலங்களில் செய்வதன் மூலம் பித்ருகடனில் இருந்தும், முனிவர்கள் அருளிய உயர்ந்த படைப்புகளை பாராயணம் செய்து உபாசிப்பதன் மூலம், குருமார்களையும் ரிஷிகளையும் ஆராதித்தல், வீடு தேடி வரும் சன்யாசிகளுக்கு உணவளித்தல், அவர்களுக்கு வேண்டுவனவற்றை அளித்தல் போன்றவற்றின் மூலம், ரிஷிகடனில் இருந்தும் நிவர்த்தி அடையலாம்.

    பித்ரு லோகத்தில் வசிப்பவர்கள், மாதப்பிறப்பு, அமாவாசை, மகாளய பட்சம், அவரவர் மறைந்த திதி ஆகிய நாட்களில் மட்டுமே பூலோகப் பிரவேசம் செய்ய இயலும். அதில், மகாளய பட்சம், 'பித்ருக்களின் பிரம்மோற்சவம்' என்று சிறப்பிக்கப்படுகிறது.

    இந்த 15 நாட்கள் மட்டுமே அவர்கள் தொடர்ச்சியாக பூலோக வாசம் செய்ய இயலும். அவர்கள், இவ்வாறு வாசம் செய்ய பூலோகம் வரும் போது, அவர்களை நினைத்துச் செய்யப்படும் சிரார்த்தம், தர்ப்பணம் முதலியவற்றுக்கு அதிக பலன் உண்டு.

    அமாவாசை தினங்கள் என்பது மூதாதையர்களை வழிபடுவதற்குரிய தினமாகவே கருதப்படுகிறது. பிதுர் தர்ப்பணம் செய்யாவிட்டால் பிதுர்களால் நமக்கு கிடைக்கும் ஆசி கிடைக்காமல் போய்விடும்.
    மறைந்த நம் முன்னோர் தங்கியிருக்கும் இடம், `பிதுர் லோகம்‘ எனப்படும். அங்கே, `பிதுர் தேவதைகள் இருக்கின்றனர். நம் உறவினர் ஒருவர் இப்போது பசுவாகப் பிறந்திருந்தால் நாம் அனுப்பும் பொருள் வைக்கோலாகவும், குதிரையாக பிறந்திருந்தால் கொள்ளாகவும். யானையாக பிறந்திருந்தால் கரும்பு, தென்னை ஓலை என ஏதோ ஒரு வடிவமைப் புக்கு மாற்றப்பட்டு, நாம் தர்ப்பணம் செய்யும் பொருள் போய் சேர்ந்து விடும்.

    இதை சேர்க்கும் வேலையை, `பிதுர் தேவதைகள்’ செய்கின்றனர். இதற்காகவே, இவர்களை கடவுள் நியமித்திருக்கிறார். இறப்புக்கு முன் நம் பெற்றோருக்கு எத்தனையோ சேவை செய்கிறோம். அது இறப்புக்கு பின்னும் தொடர வேண்டும். கிராமங்களில் இன்றும் ஒரு வழக்கம் உண்டு. யாராவது தன் சகோதரிகளைக் கன்னிப் பருவத்தில் இழந்து விட்டால், அவர்களுக்கு புடவை, தாவணி, பாவாடை படைத்து வழிபடும் வழக்கம் இருக்கிறது.

    இந்த புடவையை ஒரு பெட்டியில் வைத்து, ஒரு வருடம் வரை வீட்டில் ஒரு மூலையில் தொங்க விடுவர். அந்தப் பெண் இந்த புடவையை பயன்படுத்திக் கொள்வாள் என நம்புகின்றனர். பிதுர் தர்ப்பணம் செய்யாவிட்டால் பிதுர்களால் நமக்கு கிடைக்கும் ஆசி கிடைக்காமல் போய்விடும்.
    முன்னோர்களுக்கு தண்ணீரில் எள் கலந்து அமாவாசை அன்று வீட்டிற்கு வெளியில் வைத்திருப்பார்கள். அவை எதற்கு என்பதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    முன்னோர்களுக்கு தண்ணீரில் எள் கலந்து அமாவாசை அன்று வீட்டிற்கு வெளியில் வைத்திருப்பார்கள். அவை எதற்கு என்று தெரியுமா?

    தர்ப்பணம் என்பது 'திருப்தி' என்னும் பொருள். நீரை இறந்தவர்களுக்கு வழங்கி திருப்தி படுத்துவது ஆகும். எள்ளும், நீரும் கலந்து தர்ப்பணம் செய்வது அமாவாசை அல்லது திதி நாட்களில் தான் செய்வர்.

    அமாவாசை அன்று வீட்டில் வெளியில் தண்ணீரில் எள் கலந்து வைப்பார்கள். அப்படி செய்தால் அந்த நாள் அன்று இறந்தவர்களின் பசியும், தாகமும் விலகி நமக்கு அவர்கள் ஆசி வழங்குவார்கள் என்று நம்பப்படுகிறது.

    சந்திரனும், சூரியனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாள் தான் அமாவாசை. அமாவாசை தினம் அன்று ஒவ்வொருவர் வீட்டின் வாசலிலும் எள் கலந்த தண்ணீர் வைத்தால் முன்னோர்கள் வந்து பசியினை தீர்த்து கொள்வர். அன்றைய தினம் இதனை செய்ய தவறினால் அது தோஷமாக மாறிவிடும் என்று கூறுகின்றனர்.

    தர்ப்பணம் செய்து முடித்ததற்கு பிறகே, வீட்டில் பிற காரியங்கள் அதாவது பூஜைகள் எல்லாம் நடத்த வேண்டும். இந்த தர்ப்பணம் செய்வது கூட வீட்டில் இருக்கும் அனைவரது நன்மைக்காகத் தான் செய்யப்படுகிறது.

    ஒரு வருடத்தில் 96 நாட்கள் தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள். 96 நாட்கள் தான் மிக மிக உத்தமமான நாட்கள் தாய், தந்தையரின் திதி நாட்கள் அன்றும் தர்ப்பணம் செய்யலாம்.

    திதி கொடுக்கும் போது பெயர் சொல்வதற்கு காரணம், ஒரே நாளில் பலருக்கு திதி கொடுப்பர். அது சரியாக முன்னோர்களுக்கு போய் சேருமோ என்று பலரும் எண்ணுவர், இனி இந்த சந்தேகம் யாருக்கும் வராது.

    துவாதியை விட அமாவாசையும், அமாவாசையை விட தாய் தந்தையருக்கு திதி செய்யும் நாட்கள் மிகவும் புண்ணியங்கள் தரும். இதனால் அவரவருக்கு சரியாக அந்த தர்ப்பணம் போய் சேரும்.
    மகாளய அமாவாசை அன்று மறக்காமல் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். தர்ப்பணம் செய்யும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
    காகத்துக்கு ஏன் உணவு வைக்க வேண்டும்?

    தினமும் காலையில் சாப்பிடத் தொடங்கும் முன்பு, உங்கள் முன்னோரை நினைத்துக் கொள்ளுங்கள். இந்த உணவு உங்களால் வந்தது என்று மனதுக்குள் நினைத்து அவர்களுக்கு நன்றி கூறுங்கள். நன்றி சொல்லி விட்டால் போதுமா? அவர்களுக்கும் உணவு கொடுக்க வேண்டாமா? அதற்கு உங்களுக்கு காகம் உதவுகிறது. தினமும் காலையில் காகத்துக்கு உணவு வையுங்கள். நீங்கள் வைக்கும் உணவை காகம் சாப்பிடும்போது உங்கள் கர்ம வினைகள் கரைவதாக ஐதீகம். தினமும் காகத்துக்கு உணவளிக்கும் பட்சத்தில் நாளடைவில் உங்கள் கர்ம வினைகள் எல்லாம் காணாமல் போய் விடும்.

    எந்த நட்சத்திரத்தில் என்ன பலன்?

    சாதாரணமான அமாவாசையானது அனுஷம், விசாகம், சுவாதி நட்சத்திரங்களில் வருமானால் அப்போது செய்கிற சிரார்த்தம் ஒரு வருடத்துக்குரிய திருப்தியை உண்டாக்குகிறது. திருவாதிரை, புனர்பூசம்,பூசம் நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பிதுர்தர்ப்பணம் பனிரெண்டு ஆண்டுகள் பிதுர்திருப்தி ஏற்படுத்தும். அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பித்ருபூஜையானது, பித்ருக்களுக்கு தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலத்தைத் தரும்.

    நோயில் இறந்தவர்களுக்கு பிரதமையில் தர்ப்பணம்

    சிலர் நீண்ட நாட்கள் ஏதாவது தீராத கொடிய வியாதிகளில் சிக்கி மரணம் அடைந்து இருப்பார்கள். சிலர் கடைசி வரை புத்திர பாக்கியம் கிடைக்காமல் ஒரு வித ஏக்கத்துடன் வாழ்க்கையை முடித்து இருப்பார்கள். சிலர் விபத்துகளில் உயிரிழந்திருக்கலாம். சிலருக்கு சர்க்கரை வியாதிகளால் கை விரல், கால் விரல்கள் துண்டிக்கப்பட்டு இறந்து இருக்கலாம். இத்தகைய பித்ருக்களுக்கு பிரதமை திதியன்று வழிபாடுகள் செய்வது நல்லது.

    விவாகரத்தில் இறந்தவர்களுக்கு துவிதியில் தர்ப்பணம்

    விவாகரத்து பெற்றவர்களில் சிலருக்கு கடைசி வரை வேறு திருமணம் நடக்காது அவர்கள் மனக்குறையுடன் உயிர் விட நேரிடலாம் சிலர் சுவாச கோளாறால் இறந்தவர்கள் இத்தகைய பித்ருக்களுக்கு தூவிதியை தினத்தன்று தர்ப்பணம் கொடுத்து வழிபடலாம்.
    மறந்ததை எல்லாம் மாசியிலும், மஹாளயத்திலும் கொடு என்பது முன்னோர்கள் வாக்கு. அதாவது மாசி மாத அமாவாசையும் மஹாளய அமாவாசையும் பித்ருக்களுக்கு மிகமிக உகப்பான நாட்கள்.
    அகன்ட பாரத தேசத்தில் சுழன்று வரும் அறுபது வருடங்களிலும் உத்தமமான மாதமாக புரட்டாசி மாதம் திகழுகின்றது. சூரிய பகவான் தன் சொந்த வீடான சிம்மத்திலிருந்து புறப்படுகின்ற மாதம் கன்யா மாதம் என்றும் பாத்ரபத மாதம் என்றும் வழங்கப்படுகின்றது.

    இந்த பாத்ரவத மாதத்தில் தான் நம்முடைய மூதாதையர்களான பித்ருக்கள் நமக்கு பல விதமான பலன்களை தரத்தயாராக இந்த பூவுலகிற்கு வந்து நலம் தரப்போகும் எள்ளு கலந்த நீரை நெஞ்சார பருகி நமக்கு வாரி வழங்கும் வள்ளல் தன்மையுடன் கன்றுக்கிரங்கும் பசு போல் நம்மை வாழவைக்க இவ்வகையகம் வரும் மஹாளய பசமும் இம்மாதத்தில் தான் வருகிறது.

    ஒருவன் தான் ஜனிக்கும் போதே தேவ கடன், ரிஷி கடன், பித்ரு கடன் என்கிற மூன்று கடன்களுடன் பிறக்கிறான். பரந்தாமன் உறையும் தெய்வீக ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதாலும் வீட்டில் தெய்வீக முறைகள் யாகங்கள், ஹோமங்கள் செய்வதாலும் தன்னுடைய தேவ கடன் அடைக்கிறான்.

    மஹான்கள் பாதங்களில் நமஸ்காரங்கள் செய்து அவர்களது நல்ல உபதேசங்களை கேட்டு வாழ்க்கையை நடத்துவதாலும் நம் கோத்ர பூர்வர்களான ரிஷிகளின் சரித்திரத்தை கேட்டும் வணங்கி வழிபடுவதாலும் ரிஷியினுடைய கடனையும் அடைக்கிறான். மூன்றாவதானதும் முக்கியமானது பல சாபங்களை தவிர்க்க வல்லதாகவும் இருக்கிற பித்ரு கடனை ஒருவன் மாதா மாதம் அமாவாசை தினத்தில் கொடுக்கும் தர்பணங்களாலும் வருடாவருடம் செய்யும் திதி அன்ன சிராத்தத்தையும் சிரத்தையாக செய்து மேற்படி கடனை அடைக்கிறான்.

    மறந்ததை எல்லாம் மாசியிலும், மஹாளயத்திலும் கொடு என்பது முன்னோர்கள் வாக்கு. அதாவது மாசி மாத அமாவாசையும் மஹாளய அமாவாசையும் பித்ருக்களுக்கு மிகமிக உகப்பான நாட்கள். இந்த இரண்டு அமாவாசை தினங்களிலும் பித்ருக்களை மிகக் கட்டாயமாக பூஜித்து தர்ப்பண தானங்கள் செய்ய வேண்டும்.

    இது தவிர மாதா மாத அமாவாசையிலும் செய்ய வேண்டியது. இதில் ஏதாவது சில சந்தர்ப்பவசத்தால் செய்ய முடியாமல் போனதையும் குடும்பத்திலுள்ள சகலமான காலஞ்சென்றவர்களின் நினைவாகவும், கட்டாயம் மகாளய அமாவாசையன்று தர்ப்பண தானங்களை செய்ய வேண்டும். பவுர்ணமி ஆரம்பித்து மஹாளய பஷமான 15 தினங்களிலும் செய்வது மிக சிறப்பு. முடியாதவர்கள் கட்டாயம் மஹாளய அமாவாசை தினம் செய்ய வேண்டும்.

    இத்தகைய மகிமை வாய்ந்த பித்ரு கடனை தீர்க்க பல புண்ணிய நதிகள், புண்ய புஷ்கரிணிகள் (குளங்கள்) இருக்கின்றன. இவைகள் கிடைக்காத பட்சத்தில் வீட்டிலேயே கும்பம் வைத்து நீர்நிரப்பி அதில் கங்கையை பூஜித்து அந்த தண்ணீரால் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பானது. மஹாளய அமாவாசையன்று தர்ப்பணத்துடன் திதி சிராத்தம் அன்ன ரூபமாக செய்வது சிறப்பு அல்லது அதற் குண்டான பொருட்களை வாங்கி ஆமரூபமாக செய்வதும் நல்லது. இதை சாதாரணமாக அரிசி கொடுப்பது என்பர். இதுவே ஆமரூபமான சிராத்தமாகும்.

    இவ்வளவு மகிமை வாய்ந்த இந்த பித்ருக்களுக்கு புண்ணிய நதி களோ புண்ணிய தீர்த்தங்களோ தென்புறத்தில் இருந்தால் மிக மிக மேன்மையானது. அப்படி சில புண்ணிய தலங்களில் கோவிலுக்கு தென்புறத்தில் புண்ணிய தீர்த்தங்கள் அமைய பெற்றிருக்கும். இந்த தலங்களில் பித்ரு தர்ப்பணம் செய்வது பல மடங்கு பலனை தரவல்லது.

    இவ்வளவு பெருமைகளை உடைய புண்ணியதீர்த்தம் பாரத தேசத்தில் தென் பாகத்தில் திராவிட தேசத்தில் ஆன்மீகத்தின் அடித்தளமான தமிழ் நாட்டில் தலைநகராம் சென்னை பட்டினத்திற்கு அருகில் (சுமார் 45 கிலோ மீட்டர்) அமைந்துள்ளது. இந்த புண்ணிய பூமிக்கு புண்ணியாவர்த்த சேத்ரம் என்ற பெயர். இந்த புண்ணிய, புஷ்கரணிக்கு கிருந்தாப நாசினி என்றும் பெயர்.

    தற்போது இந்த திவ்ய தேச தலம் திருமழிசை ஆழ்வாராலும் திருமங்கை ஆழ்வாராலும் பாடல் பெற்று மங்களாசாசன திவ்யதேசமாக திரு எவ்வுள் என்றும் மருவி திருவள்ளூர் என்று அழைக்கப்படுகிறது. புண்யாவர்த்தம் இந்த தலத்தில் தெரிந்தோ தெரியாமலோ புண்யம் செய்தால் அது பல மடங்கு ஆவர்த்தமாகிறது.

    ஒரு புண்ணியம் பண்ணினாலே பல பாபங்கள் நசித்து விடும் என்பது சாஸ்திரம். அப்படியிருக்க இந்த தலத்தில் யார் ஒருவரும் பாபம் பண்ண நினைக்க முடியாது. இத்தகு பெருமை வாய்ந்த புண்யாவர்த்த சேத்தரமான திருவள்ளூருக்கு புரட்டாசி மாதத்தில் வந்து ஸ்ரீவீரராகவனை வணங்கி ரிஷிகடனையும் புண்ணிய தீர்த்தத்தில் நீராடி பித்ரு தர்பணங்கள் செய்து பித்ரு கடன்களையும் நிறைவேற்றி நீங்காத செல்வங்கள் நிறைந்து எங்கும் திருவருள் பெற்று இன்புற்று வாழ்வாங்கு வாழ வைத்திய வீரராகவனின் திருவடிகளில் வணங்கி வழிபடுவோம்.

    பெரும்பாலனவர்கள் இந்த திதி தினத்தை முறையாக செய்வதில்லை. கணிசமானவர்களுக்கு அந்த திதி என்றாலே என்ன என்ற விவரம் கூட தெரியாமல் உள்ளது.
    தர்ப்பணம் செய்ய வேண்டிய தினத்தன்று அதிகாலையில் எழுந்து விட வேண்டும். குளித்து, சுத்தமான ஆடை அணிந்து மூதாதையர்களை நினைத்துக்கொண்டே தர்ப்பணம் செய்ய வேண்டும். காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுத்து விடுவது நல்லது.

    முடியாதவர்கள் காலையில் சீக்கிரம் தர்ப்பணத்தை முடித்து விடவேண்டும். ஏனெனில் நாம் கொடுக்கும் எள் கலந்த நீரை பித்ருக்கள் ஏற்றுக்கொள்ளும் நேரம் என்பது மிக, மிக புனிதமானது. எனவே நாம் அதில் கவனமாக இருக்க வேண்டும்.எந்த காரணத்தையும் கொண்டும் சூரியன் மறைந்த பிறகு தர்ப்பணம் செய்யக்கூடாது.

    நாம் தர்ப்பணம் செய்ததும் அதை பெற்றுக் கொள்ளும் ஸ்வதா தேவி கண் இமைக்கும் நேரத்துக்குள் அதை நம் பித்ருக்களிடம் ஒப்படைத்து விடுவாள். எனவே தர்ப்பணம் செய்யும் போது ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி என்று சொல்ல மறந்து விடக்கூடாது. பொதுவாக நம் வீட்டு பெரியவர்கள் இயற்கையாக மரணம் அடையும் போது, இறந்த நேரம், திதி ஆகியவற்றை ஒரு டைரியில் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ் வொரு ஆண்டும் அந்த திதியில் தர்ப் பணம், சிதார்த்தம் உள்ளிட்டவைகளை செய்தல் வேண்டும்.

    பெரும்பாலனவர்கள் இந்த திதி தினத்தை முறையாக செய்வதில்லை. கணிசமானவர்களுக்கு அந்த திதி என்றாலே என்ன என்ற விவரம் கூட தெரியாமல் உள்ளது. ஆதிகாலத்தில் தமிழர்கள் நீத்தார் வழிபாடு நடத்தி பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய எல்லா கடமை களையும் செய்தனர். அதை செஞ் சோற்று கடனாக நினைத்தனர்.

    இப்போதும் பித்ருசாரியம் செய்கிறார்கள். ஆனால் அதை முறையாக, பித்ருக்கள் திருப்திபடும்படி செய்வதில்லை. அதனால்தான் குடும்பங்களில் மங்கள காரியங்கள் நடப்பது தடைபடுகிறது அல்லது தாமதமாகிறது. புத்திர சுகம் கிடைக்காமல் போய் விடுகிறது. எனவே நம் வம்சம் விளங்க வேண்டுமானால் நம்மை வளர்த்து ஆளாக்கிய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யப்பட வேண்டும்.

    உங்கள் முன்னோர்கள் எல்லாருமே பித்ருலோகத்தில் நல்ல நிலையில் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. சிலருக்கு அவர்கள் செய்த கர்ம வினைகள் தொடரக்கூடும். அப்படிப்பட்டவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் தர்ப்பணம்தான் தாகம் தணிப்பதாக இருக்கும். தாத்தாவுக்கு அப்பா எல்லாம் மறுபிறவி எடுத்திருப்பார் எனவே அவருக்கு ஏன் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று சிலர் நினைக்கலாம். உங்கள் முன்னோர்கள் மறுபிறவி எடுத்திருந்தாலும் கூட நீங்கள் கொடுக்கும் தர்ப்பணம் அவர்களுக்கு பெரும்பலனை கொடுக்கும் என்பதை மறந்து விடக் கூடாது.

    எனவே நீங்கள் முன்னோர் வழிபாட்டை ஆழ்ந்த நம்பிக்கையுடன் செய்தல் வேண்டும். நீங்கள் வழிபாடு செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்தான் பித்ருலோகத்தில் இருந்து மகாளய பட்சத்தின் 15 நாட்களும் உங்களோடு இருக்க உங்கள் முன்னோர்கள், உங்கள் வீடு தேடி வருகிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

    திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவர் பெருமாள் கோவிலில் மகாளய அமாவாசையையொட்டி இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
    திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவர் பெருமாள் கோவிலில் மகாளய அமாவாசையையொட்டி இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கோவில் குளத்தில் புனித நீராடி, குளக்கரையில் இருந்த புரோகிதர்களிடம் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

    பின்னர் கோவிலுக்கு சென்று மூலவர் வீரராகவர் பெருமாளை நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சுமார் 3 மணி நேரம் காத்திருந்து வழிபட்டனர்.

    மகாளய அமாவாசையையொட்டி நேற்று இரவே வீரராகவர் கோவிலில் திருவள்ளூர், காஞ்சீபுரம், சென்னை மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து இருந்தனர்.

    இன்று காலையும் திரளானோர் வந்ததால் கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காட்சி அளித்தது. திருவள்ளூர் டவுண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதேபோல் திருப்போரூர் முருகன் கோவில் குளத்திலும் இன்று ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின்னர் அவர்கள் கோவிலில் வழிபட்டனர். இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    தாய், தந்தையர் இறந்த தினத்தில் சிரார்த்தம் (திதி) செய்யாதவர்கூட, மறக்காமல் மஹாளயத்தை அவசியம் செய்ய வேண்டும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    தாய், தந்தையர் இறந்த தினத்தில் சிரார்த்தம் (திதி) செய்யாதவர்கூட, மறக்காமல் மஹாளயத்தை அவசியம் செய்ய வேண்டும். தகுந்த நபர்களை வைத்துக் கொண்டு முறைப்படி செய்ய முடியாதவர்கள், அரிசி, வாழைக்காய், தட்சிணை போன்றவற்றைக் கொடுத்தாவது பித்ருக்களை இந்த மஹாளயபட்சத்தில் திருப்தி செய்ய வேண்டும்.

    சிறுகச் செய்தாலும், பித்ரு காரியங்களை மனப்பூர்வமாக சிரத்தையாகச் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். வசிஷ்ட மகரிஷி, தசரதர், யயாதி, துஷ்யந்தன், நளன், அரிச்சந்திரன், கார்த்தவீர்யார்சுனன், ஸ்ரீராமர், தர்மர் முதலானோர் மஹாளயம் செய்து பெரும் பேறு பெற்றனர் என்கின்றன புராணங்கள். மும்மூர்த்தி உருவில் உலகுக்கே குருவாக வந்த ஸ்ரீதத்தாத்ரேயர் வேதாளம் பற்றிக்கொண்ட துராசாரனுக்கு சாப விமோசனமாக புரட்டாசி மாதம், கிருஷ்ண பட்சத்தில் மஹாளயம் செய்யுமாறு வழி கூறினார்.

    கல்யாணத்தை விரும்புகிற மனிதன் மஹாளயம் செய்ய வேண்டும். “”மஹாளயம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது’’ என்பது பழமொழி. இனம்புரியாத நோய்கள், உடற் குறையுடன் பிறக்கும் குழந்தைகள், குடும்பத்தில் தள்ளிப் போகும் திருமணங்கள், செய்யும் காரியங்களில் தடைகள் - குழப்பம், பெற்றோர்களை அவர்கள் வாழ்நாளில் சரிவர கவனிக்காமை போன்ற குறைகளுக்கு ஒரு சிறந்த, எளிய பரிகாரம் இந்த மஹாளய பட்ச நாட்களில் பித்ரு தேவதைகளை பூஜை செய்வதுதான். இந்த பித்ரு பூஜையை ஆறு, நதிக்கரைகளிலோ, குளக் கரைகளிலோ, முடியாவிட்டால் இல்லத்தில் இருந்தபடியோ செய்யலாம்.
    கோயிலில் தர்பணம் மற்றும் பித்ரு வழிபாடு முடித்த பிறகு வீட்டிற்கு திரும்பி வந்து முன்னோர்களின் படங்கள் இருந்தால் அதற்கு துளசிமாலையோ அல்லது துளசிஇலையோ சமர்ப்பிக்க வேண்டும்.
    கோயிலில் தர்பணம் மற்றும் பித்ரு வழிபாடு முடித்த பிறகு வீட்டிற்கு திரும்பி வந்து முன்னோர்களின் படங்கள் இருந்தால் அதற்கு துளசிமாலையோ அல்லது துளசிஇலையோ சமர்ப்பிக்க வேண்டும். துளசிவாசம் பெருமாளை சந்தோஷப்படுத்தும்.

    இதனால் அந்த பித்ருக்களுக்கு விஷ்ணு பகவானின் பரிபூரண ஆசி கிடைக்கும். முன்னோர்கள் விஷ்ணுவின் ஆசி பெற்ற மகிழ்ச்சியில் தமது வம்சத்தினரையும் மனதார வாழ்த்துவார்கள். அத்துடன் முன்னோர்களுக்கு பிடித்த உணவை படைத்து வணங்க வேண்டும். அந்த உணவை காக்கைக்கு வைத்த பிறகே நாம் சாப்பிட வேண்டும்.

    முதியவர்களுக்கு அன்னதானம் செய்வது நல்லது. அப்படி செய் வதாலும் முன்னோர்களின் ஆத்மா சாந்தியாகும். முன்னோர்களின் மனவருத்தத்தை அடைந்த குடும்பத்தை இறைவனாலும் காப்பாற்ற முடியாது என்கிறது சாஸ்திரம்.

    அதனால்தான் பகீரதன், மாபெரும் முயற்சி எடுத்து கங்கையை பூமிக்கு வரவழைத்து தம் முன்னோர்களை சாந்தப்படுத்தினான். நாமும் நம்மால் இயன்ற அளவு மகாளய அமாவாசை பூஜையும், தர்பணமும் முறையாக செய்து முன்னோர்களின் அருளாசி பெற்று சிறப்பான வாழ்வை பெறுவோம்.
    முன்னோர்களுக்கு ஒரு வருடம் திதி கொடுக்காமல் மறந்து இருந்தாலும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசையன்று கொடுத்தால் அந்த ஒரு வருட திதி கொடுத்த பலன் வந்து சேரும் என்பது இதன் பொருளாகும்.
    ‘மறந்தவனுக்கு மகாளயபட்சம்’ என்பது பழமொழி. அதாவது முன்னோர்களுக்கு ஒரு வருடம் திதி கொடுக்காமல் மறந்து இருந்தாலும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசையன்று கொடுத்தால் அந்த ஒரு வருட திதி கொடுத்த பலன் வந்து சேரும் என்பது இதன் பொருளாகும்.

    தென் புலத்தில் இருக்கும் மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக பதினைந்து நாட்கள் அவ்வுலகில் இருந்து பூமிக்கு வந்து 15 நாட்கள் நம்மோடு தங்கிச் செல்லும் காலமே மகாளயபட்சம் ஆகும். இது புரட்டாசி மாதத்து பவுர்ணமி திதிக்கு மறுநாள் பிரதமை திதியில் துவங்கி அமாவாசை வரை நீடிக்கும்.

    அந்நாட்களில் புனிதத் தலங்கள் புண்ணிய தீர்த்தங்களுக்கு சென்று புனித நீராடி நம் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக வேண்டுதல் செய்யலாம். அவரவர் சக்திக்கு தகுந்தவாறு வஸ்திரதானம், அன்னதானம், சிரமப்படும் மாணவர்களின் கல்விக்கு வித்யாதானம் செய்யலாம். இவ்வாறு செய்வதால் நம்முடன் இருக்கும் நம் முன்னோர்கள் மகிழ்வுடன் நம்மையும் நம் வாரிசுகளையும் ஆசீர்வதிப்பார்கள்.

    ×