search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகாளய அமாவாசை: வீரராகவர் கோவிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள்
    X

    மகாளய அமாவாசை: வீரராகவர் கோவிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள்

    திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவர் பெருமாள் கோவிலில் மகாளய அமாவாசையையொட்டி இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
    திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவர் பெருமாள் கோவிலில் மகாளய அமாவாசையையொட்டி இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கோவில் குளத்தில் புனித நீராடி, குளக்கரையில் இருந்த புரோகிதர்களிடம் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

    பின்னர் கோவிலுக்கு சென்று மூலவர் வீரராகவர் பெருமாளை நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சுமார் 3 மணி நேரம் காத்திருந்து வழிபட்டனர்.

    மகாளய அமாவாசையையொட்டி நேற்று இரவே வீரராகவர் கோவிலில் திருவள்ளூர், காஞ்சீபுரம், சென்னை மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து இருந்தனர்.

    இன்று காலையும் திரளானோர் வந்ததால் கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காட்சி அளித்தது. திருவள்ளூர் டவுண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதேபோல் திருப்போரூர் முருகன் கோவில் குளத்திலும் இன்று ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின்னர் அவர்கள் கோவிலில் வழிபட்டனர். இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    Next Story
    ×