search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மறந்தவனுக்கு மகாளயம்
    X

    மறந்தவனுக்கு மகாளயம்

    முன்னோர்களுக்கு ஒரு வருடம் திதி கொடுக்காமல் மறந்து இருந்தாலும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசையன்று கொடுத்தால் அந்த ஒரு வருட திதி கொடுத்த பலன் வந்து சேரும் என்பது இதன் பொருளாகும்.
    ‘மறந்தவனுக்கு மகாளயபட்சம்’ என்பது பழமொழி. அதாவது முன்னோர்களுக்கு ஒரு வருடம் திதி கொடுக்காமல் மறந்து இருந்தாலும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசையன்று கொடுத்தால் அந்த ஒரு வருட திதி கொடுத்த பலன் வந்து சேரும் என்பது இதன் பொருளாகும்.

    தென் புலத்தில் இருக்கும் மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக பதினைந்து நாட்கள் அவ்வுலகில் இருந்து பூமிக்கு வந்து 15 நாட்கள் நம்மோடு தங்கிச் செல்லும் காலமே மகாளயபட்சம் ஆகும். இது புரட்டாசி மாதத்து பவுர்ணமி திதிக்கு மறுநாள் பிரதமை திதியில் துவங்கி அமாவாசை வரை நீடிக்கும்.

    அந்நாட்களில் புனிதத் தலங்கள் புண்ணிய தீர்த்தங்களுக்கு சென்று புனித நீராடி நம் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக வேண்டுதல் செய்யலாம். அவரவர் சக்திக்கு தகுந்தவாறு வஸ்திரதானம், அன்னதானம், சிரமப்படும் மாணவர்களின் கல்விக்கு வித்யாதானம் செய்யலாம். இவ்வாறு செய்வதால் நம்முடன் இருக்கும் நம் முன்னோர்கள் மகிழ்வுடன் நம்மையும் நம் வாரிசுகளையும் ஆசீர்வதிப்பார்கள்.

    Next Story
    ×