என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Madhavan"
- நயன்தாரா, மாதவன், சித்தார்த் இணைந்து நடிக்கும் படம் டெஸ்ட்.
- இப்படத்தின் மூலம் பாடகி சக்தி ஸ்ரீ இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
தமிழ்ப் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, மண்டேலா உள்ளிட்ட படங்களை தயாரித்த YNOT ஸ்டுடியோஸ் சஷிகாந்த் தற்போது இயக்குனராக அறிமுகமாகும் முதல் படத்தில் நயன்தாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் மாதவன், சித்தார்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
'டெஸ்ட்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தில் இணைந்துள்ள இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளனர்.
அதன்படி இப்படத்தில் என் உச்சி மண்டைல, மக்காயல, அக நக உள்ளிட்ட பல பாடல்களை பாடிய பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
- நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மலேசியாவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று 5 தங்கப் பதக்கங்களை வென்றார்.
- இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'அலைபாயுதே' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் மாதவன். இதைத்தொடர்ந்து 'மின்னலே', 'டும் டும் டும்', போன்ற பல படங்கள் நடித்ததன் மூலம் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி படங்களிலும் நடித்து புகழ் பெற்றார்.
வேதாந்த்
சமீபத்தில் 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் மாதவனின் தன் மகன் வேதாந்த் செய்யும் சாதனைகளை தனது சமூக வலைதளத்தில் அடிக்கடி பதிவிட்டு வருகிறார்
சமீபத்தில் வேதாந்த் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற Malaysia Invitational Age Group Swimming Championship போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்று 5 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளதாக மாதவன் தனது இணையப் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்திருந்தார். இவருக்கு திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
விஜயகாந்த் பதிவு
இந்நிலையில், வேதாந்திற்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் விஜயகாந்த் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மலேசியாவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் பங்கேற்ற நடிகர் மாதவனின் , 17 வயது மகன் வேதாந்த் 50, 100, 200, 400 & 1500 மீட்டர் ஆகிய பிரிவுகளில் பங்கேற்று வெற்றி பெற்று, 5 தங்கங்களை வென்றுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் ஒலிம்பிக் உள்ளிட்ட உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்கள் வென்று தமிழகத்திற்கும் இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று எனது பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் மனப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒலிம்பிக் உள்ளிட்ட உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்கள் வென்று தமிழகத்திற்கும் இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் மனப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறேன்.@ActorMadhavan | @VedaantMadhavan pic.twitter.com/XUgBk0HhK9
— Vijayakant (@iVijayakant) April 19, 2023
- தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுதா கொங்கரா.
- இவர் தற்போது சூரரைப் போற்று இந்தி ரீமேக் படத்தை இயக்கி வருகிறார்.
2010-ம் ஆண்டு ஸ்ரீகாந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான துரோகி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. அதன்பின்னர் மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளியான இறுதி சுற்று படத்தை இயக்கியதன் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இவர் சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்தை இயக்கி பலரின் பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்றார்.
மாதவனுக்கு விருந்தளித்த சுதா கொங்கரா
தற்போது இப்படத்தின் இந்தி ரீமேக் பணிகள் நடைபெற்று வருகிறது. இவருக்கு சமீபத்தில் கையில் காயம் ஏற்பட்டு ஒய்வெடுத்து வருகிறார். இந்நிலையில், இயக்குனர் சுதா கொங்கரா நடிகர் மாதவனுக்கு ஒன்பது வகையான உணவுடன் விருந்தளித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து தெரிவித்துள்ளார். இதற்கு சுதா கொங்கரா இயக்கும் அடுத்த படத்தில் மாதவன் நடிக்கவுள்ளாரா..? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Two decades of friendship with vankai annam, vadiyalu, podi, sambhar, Vatha kozhambu, thayir sadham , pendalam pachchadi and best dessert ever Ratnagiri Alfonso mangoes courtesy Maddy! @ActorMadhavan
— Sudha Kongara (@Sudha_Kongara) April 14, 2023
#foodlove #comfortfood#foodies pic.twitter.com/hNwhsdup4y
- தமிழ்ப் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, மண்டேலா உள்ளிட்ட படங்களை தயாரித்த YNOT ஸ்டுடியோஸ் சஷிகாந்த் தற்போது இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.
- இப்படத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
தமிழ்ப் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, மண்டேலா உள்ளிட்ட படங்களை தயாரித்த YNOT ஸ்டுடியோஸ் சஷிகாந்த் தற்போது இயக்குனராக அறிமுகமாகும் முதல் படத்தில் நயன்தாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் மாதவன், சித்தார்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
'டெஸ்ட்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. நயன்தாரா, மாதவன், சித்தார்த் மூவரும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பாப்பு அதிகரித்துள்ளது. இந்த மோஷன் போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
#theTEST? Shooting In Progress !
— Y Not Studios (@StudiosYNot) April 12, 2023
Motion Poster -https://t.co/9omIE3lMrB
Directed by @sash041075
Produced by @chakdyn & @sash041075
Starring @ActorMadhavan #Nayanthara #Siddharth & others.
- சமீபத்தில் மாதவன் நடித்து இயக்கியிருந்த 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
- தற்போது குட்டி, யாரடி நீ மோகினி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தில் மாதவன் நடித்து வருகிறார்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான மாதவன், சமீபத்தில் 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது குட்டி, யாரடி நீ மோகினி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் மாதவன் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் பிறந்த விஞ்ஞானி ஜி.டி. நாயுடுவின் சுயசரிதை படமாக உருவாகவுள்ள படத்தை மாதவன் இயக்கி நடிக்கிறார். பெயரிடப்படாத இந்த படத்தை மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' படம் நல்ல வரவேற்பை பெற்றது.
- தற்போது மித்ரன் ஜவஹர் புதிய படத்தில் மாதவனுடன் இணைந்துள்ளார்.
2008-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மித்ரன் ஜவஹர். அதன்பின் மீண்டும் தனுஷ் நடிப்பில் குட்டி, உத்தமபுத்திரன் படங்களை இயக்கினார். இதனை தொடர்ந்து மீண்டும் ஒரு காதல் கதை படத்தின் இயக்கியிருந்தார். சில தினங்களுக்கு முன்பு வெளியான திருசிற்றம்பலம் படத்தை இயக்கி அனைவரின் கவனத்தை ஈர்த்தார். தனுஷ், நித்யா மேனன், பாரதிராஜா, பிரகாஷ் ராஜா, ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் தற்போது புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் மூலம் நடிகர் மாதவனுடன் கைகோர்த்துள்ளதாக மித்ரன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மாதவன்-மித்ரன் இணைந்துள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
After the blockbuster success of Thiruchitrambalam, kicking off my next directorial project starring uber-talented, and fan-favourite @ActorMadhavan. Produced by the acclaimed Mediaone Global Entertainment. Let's Roll! ?@Mediaone_M1 @sharmilamandre
— Mithran R Jawahar (@MithranRJawahar) February 11, 2023
- நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'.
- இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் கதையை மையமாகக் கொண்டு இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்த நிலையில் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' திரைப்படம் அதிக வசூல் ஈட்டியது.
'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'
இந்நிலையில், 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' திரைப்படத்தில் கூறப்பட்ட 90 சதவீத தகவல்கள் பொய்யானவை' என, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இந்த திரைப்படம் குறித்து முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஏ.இ.முத்துநாயகம், இ.வி.எஸ்.நம்பூதிரி, டி.சசிகுமாரன் ஆகியோர் கூறியதாவது, "விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்று சினிமாவில் 90 சதவீதம் தவறான தகவல்கள் கூறப்பட்டுள்ளன.
'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'
இஸ்ரோவில் பணியாற்றி, ஜனாதிபதியாகவும் பதவி வகித்த அப்துல்கலாமின் தவறை திருத்தியதாக கூறியிருப்பது முற்றிலும் தவறான தகவல்.
அதுமட்டுமின்றி, தான் கைது செய்யப்பட்டதால்தான் இந்தியாவுக்கு கிரையோஜெனிக் தொழில் நுட்பம் தாமதமாக கிடைத்தது என்று முற்றிலும் ஆதாரமற்ற தகவலை இந்த திரைப்படத்தில் கூறியுள்ளனர். நாராயணனுக்கும் கிரையோஜெனிக் திட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று கூறினர்.
- நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'.
- இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் கதையை மையமாகக் கொண்டு இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்பிரபலங்கள் பலர் இப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' திரைப்படத்தை பாராட்டியுள்ளார்.
ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்
இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "வாவ்...மிகவும் அருமை. முழு மனதுடன் இப்படத்தை எடுத்ததற்காக நடிகர் மாதவன் மற்றும் படக்குழுவினருக்கு ஹாட்ஸ் ஆஃப். இப்படம் அனைத்து உண்மையான தேசபக்தர்களுக்கும் சமர்ப்பணம். சிம்ரன் அவர்கள் சூப்பர் மற்றும் நம்பி நாராயணன் அவர்களுக்கு பெரிய சல்யூட். இப்படத்தில் சூர்யா சார் கடைசியில் சொல்வது போல் எங்களை மன்னித்துவிடுங்கள்" என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை தனது இணையப்பக்கத்தில் பகிர்ந்துள்ள மாதவன், கார்த்தி சுப்பராஜிற்கு நன்றி கூறியுள்ளார்.
Wow . Thank you so very much bro. We are all very touched and elated. ❤️❤️🙏🚀🚀 https://t.co/HewvXfmg7Z
— Ranganathan Madhavan (@ActorMadhavan) August 12, 2022
- நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'.
- இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் கதையை மையமாகக் கொண்டு இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்
இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்த நிலையில் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' திரைப்படம் ரூ. 50 கோடியை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 28 நாட்களாக கிட்டத்தட்ட 350 திரைகளில் ஓடிக்கொண்டிருப்பதால் ரூ. 25 கோடியை தாண்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் இந்தப்படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதோடு வெளிநாட்டு உரிமை, தொலைக்காட்சி வியாபாரம் என்று மொத்தமாக மாதவனின் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' திரைப்படம் ரூ. 50 கோடியை வசூல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'.
- இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் கதையை மையமாகக் கொண்டு இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்
சாம் சிஎஸ் பின்னணி இசையமைத்துள்ள இப்படத்தை ட்ரைகலர் பிலிம்ஸ், வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ், 27 இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளது. இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலர் இந்த படத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் படத்தைப் பார்த்து மாதவனுக்கு பாராட்டைத் தெரிவித்திருந்தார் இந்நிலையில், இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் மாதவன், விஞ்ஞானி நம்பி நாராயணனுடன் ரஜினியை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். மேலும், இந்த வீடியோவை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
When you get the blessings from a one man industry & the Leagend himself in the presence on @NambiNOfficial -it's a moment etched for eternity-Thank you for you kindest words on #Rocketry & the affection @rajinikanth sir.This motivation has completely rejuvenated us. We love you pic.twitter.com/ooCyp1AfWd
— Ranganathan Madhavan (@ActorMadhavan) July 31, 2022
- நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'.
- இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் கதையை மையமாகக் கொண்டு இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி ஸ்ரீ நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்
சாம் சிஎஸ் பின்னணி இசையமைத்துள்ள இப்படத்திற்கு சிர்ஷா ரே ஒளிப்பதிவு செய்துள்ளார். பிஜித் பாலா படத்தொகுப்பைக் கவனித்துள்ளார். ட்ரைகலர் பிலிம்ஸ், வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ், 27 இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்திற்கு திரைப்பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன் படி இப்படம் வருகிற ஜூலை 26-ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது.
நம்பி நாராயணன் குடும்பம்
இதனை அமேசான் நிறுவனம் தங்களது சமூக வலைதளப்பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. மேலும், படத்தின் வெற்றியை நம்பி நாராயணன் அவரது குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை நடிகர் மாதவன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
When the Success translates to Happiness and the whole family celebrates together.The true meaning of this photo will only be realized by those who know Nambi sirs family and what they went thru.For me - Mission accomplished with gods grace 🚀🚀❤️❤️🙏🙏 @NambiNOfficial pic.twitter.com/FYYXe4W8Uj
— Ranganathan Madhavan (@ActorMadhavan) July 20, 2022
- 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார்.
- இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாதவன் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.
இப்படம் குறித்து நேற்று நடிகர் ரஜினிகாந்த் சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில், ராக்கெட்ரி திரைப்படம் - அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும் - குறிப்பாக இளைஞர்கள். நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சிக்காக பல துன்பங்களுக்கு உள்ளாகி, தியாகங்கள் செய்து அரும்பாடுப்பட்ட பத்ம பூஷன் திரு.நம்பி நாராயணன் அவர்களின் வரலாறை மிகத் தத்ரூபமாக நடித்துப் படமாக்கி, இயக்குனராக தனது முதல் படத்திலேயே தலை சிறந்த இயக்குனர்களுக்கு இணையாக தானும் நிரூபித்திருக்கிறார் மாதவன். இப்படி ஒரு திரைப்படத்தைக் கொடுத்ததற்காக அவருக்கு என்னுடைய நன்றிகளும், பாராட்டுகளும் என்று ரஜினி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவிக்கு வகையில் மாதவன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "என்ன சொல்றது, எப்படி சொல்றதுன்னு தெரியல. இந்த பாராட்டு நம்பி நாராயணன் மற்றும் கடைசி வரைக்கும் போராடிய நம் படக்குழுவுக்கு தான் சேரும். ரஜினி சார் ரொம்ப நன்றி" என்று உருக்கமாக வீடியோ பகிர்ந்துள்ளார்.
@rajinikanth. Indebted for life. 🙏🙏🚀🚀❤️❤️ on behalf of the whole team .. our heartfelt Gratitude .. 🚀🚀🙏🙏❤️❤️ @soundaryaarajni https://t.co/v7dBEYKnSn pic.twitter.com/JUrLUo8CBD
— Ranganathan Madhavan (@ActorMadhavan) July 4, 2022
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்