search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "list"

    • 10 முக்கிய திட்டங்கள் குறித்த பட்டியலை அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் அளிக்கலாம்.
    • செயல்படுத்த இயலாத திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    நாகப்பட்டினம்:

    உங்கள் தொகுதியில் முதல-அமைச்சர் திட்டத்தின் கீழ் தொகுதி மக்களின் பல்வேறு தேவைகளை அறிந்து, அவற்றில் மிக முக்கியமானது என்று எம்.எல்.ஏ. கருதும் 10 முக்கியத் திட்டங்கள் குறித்த பட்டியலை அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் அளிக்கலாம்.

    மிக முக்கியமான திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு, தற்போது நடைமுறையில் உள்ள அரசுத் திட்டங்களின் கீழ் செயல்படுத்த இயலாத திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

    அதன்படி, நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்து, அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் ஷா நவாஸ் எம்.எல்.ஏ. முன்னிலையில் நடைபெற்றது. அதில், நாகப்பட்டினம் தொகுதியின் முக்கிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மறுசீரமைக்கப்பட்ட வாக்குசாவடிகளின் பட்டியலை ராமநாதபுரம் கலெக்டர் வெளியிட்டார்.
    • வருகிற 14-ந் தேதிக்குள் அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் வழங்கலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரக் கிடங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான மறு சீரமைக்கப்பட்ட வாக்குச் சாவடிகளின் பட்டியலை வெளியிட்டார்.

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்றத் தொகுதியில் 303 வாக்குச் வாக்குச்சாவடிகளும், திருவாடானை சட்டமன்றத் தொகுதியில் 346 வாக்குச் வாக்குச்சாவடிகளும், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் 336 வாக்குச் வாக்குச்சாவடிகளும், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 385 வாக்குச் வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 1370 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    நேற்று வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் கலெக்டர் அலுவலகம், அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து நகராட்சி அலுவலகங்கள் மற்றும் அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.

    1500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச் சாவடிகளை பிரிக்கவும், வாக்குச்சாவடிகளின் பெயர் மாற்றம், இடமாற்றம் தொடர்பான கோரிக்கைகளை வருகிற 14-ந் தேதிக்குள் அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் வழங்கலாம்.

    மேலும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடமிருந்து வரப்பெறும் கருத்துகள், கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி உரிய முறையில் பரிசீலனை செய்து மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

    இந்த நிகழ்வில் ராமநாதபுரம் கோட்டாட்சியர் சேக்மன்சூர், வட்டாட்சியர்கள் கார்த்திகேயன் (தேர்தல்), முருகேசன (ராமநாதபுரம்) உள்ளிட்ட அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • அகில இந்திய அளவில் 251 - 300 போர்டு இடம்பெற்று இரண்டாவது முறையாக சாதனை புரிந்துள்ளது.
    • பட்டியலில் கல்லூரி இடம் பெற அயராது பாடுபட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரி தன்னாட்சி - மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தர மதிப்பீட்டு பட்டியலில் அகில இந்திய அளவில் 251 - 300 போர்டு இடம்பெற்று இரண்டாவது முறையாக சாதனை புரிந்துள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற சான்றிதழ் வெளியீட்டு விழாவில் இ.ஜி.எஸ். பிள்ளை கல்வி குழுமத்தின் தலைவர் ஜோதிமணி அம்மாள் தலைமை வகித்தார். கல்லூரியின் செயலர் செந்தில்குமார் மற்றும் இணைச் செயலர் சங்கர் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கல்வி குழுமத்தின் ஆலோசகர் பரமேஸ்வரன் மற்றும் கல்லூரி முதல்வர்கள் வாழ்த்துரை வழங்கினர். கல்வி குழுமத்தில் இணை செயலர் தரவரிசை பட்டியல் நகலை கல்லூரி முதல்வரிடம் வழங்கினார். கல்லூரியின் தேர்வு துறை நெறியாளர் சின்னதுரை தேசிய தர மதிப்பீடு பட்டியல் பற்றி விளக்க உரை வழங்கினார். கல்வி குழுமத்தின் செயலர் தேசிய தரவரிசை பட்டியலில் கல்லூரி இடம் பெற அயராது பாடுபட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் மற்றும் பணியாளர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் அனைத்து கல்லூரியை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை மாணவர் சேர்க்கை குழு தலைவர் மணிகண்ட குமரன் மற்றும் ஊடகம் மக்கள் தொடர்பு இயக்குனர் ஆனந்தராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து தற்போதைய தொடர் திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர், முகவரி இவற்றில் ஏதேனும் பிழை இருப்பின் படிவம் எண் 8 பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி தஞ்சை மாவட்டத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து அங்கீகரி க்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டரால் வெளியிடப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து தற்போதைய தொடர் திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    எனவே 1-1-2004 அன்றோ அல்லது அதற்கு முன்போ பிறந்த தகுதியுடைய மற்றும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமல் உள்ளவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட படிவம் எண் 6-ஐ அந்தந்த வட்ட அலுவலகங்களில் பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதனுடன் வயது மற்றும் இருப்பிடத்திற்கான ஆதார ஆவண நகல்களை இணைத்து தங்கள் பாஸ்போர்ட் சைஸ்புகைப்ப டத்தை படிவத்தில் ஒட்டி அந்தந்த தாசில்தார் அலுவ லகங்களில் வழங்கலாம்.

    வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர், முகவரி இவற்றில் ஏதேனும் பிழை இருப்பின் படிவம் எண் 8 பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.இறந்த மற்றும் வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் பெயர் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் குறித்து படிவம் எண் 7 அளிக்கலாம்.

    ஒரே சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் குடி பெயர்ந்த வாக்காளர்கள் படிவம் எண் 8ஏ பெற்று பூர்த்தி செய்து முகவரி மாற்றம் செய்து கொள்ளலாம்.

    வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் புதிய வாக்காளர்களுக்கு அஞ்சல் துறை மூலம் விரைவு தபால் மூலமாக வாக்காளர் அடையாள அட்டை கட்டணம் இன்றி நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் www.nvsb.in என்ற இணையதளம் மற்றும் voters help line என்ற மொபைல் ஆப் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் விவரங்கள் அறிய 1950 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    தொலைந்த , காணாமல் போன வாக்காளர் அட்டைக்கு மாற்று அட்டையினை படிவம் 1-ஐ பூர்த்தி செய்து தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தானியங்கி எந்திரத்தின் வாயிலாக கட்டணம் இன்றி பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான மாநில உறுப்பினர்களின் பட்டியலை கர்நாடக அரசு வரும் 12-ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. #CauveryManagementAuthority
    புதுடெல்லி:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டு சட்டப் போராட்டத்திற்கு பிறகு சமீபத்தில் உச்சநீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த அமைப்பின் பெயர் காவிரி மேலாண்மை ஆணையம் என மத்திய அரசு தெரிவித்து, அதனை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது. பின்னர், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து அதற்கான அரசாணையையும் சமீபத்தில் வெளியிட்டது.

    இதையடுத்து, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான மாநில உறுப்பினர்களை மாநில அரசு தேர்வு செய்து பட்டியல் அனுப்புமாறு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதுதொடர்பாக தமிழக அரசும் உறுப்பினர் பட்டியலை தயார் செய்து நீர்வளத்துறைக்கு அனுப்பியது. மேலும், இதர மாநிலங்களான கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களும் தங்களது உறுப்பினர் பட்டியலை அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் கர்நாடக அரசு உறுப்பினர் பட்டியலை அனுப்பவில்லை.

    சமீபத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான தலைவராக மத்திய நீர்வளத்துறை ஆணைய தலைவர் மசூத் உசேன் நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர் பட்டியலை அளிக்காமல் கர்நாடக அரசு காலம் தாழ்த்தி வருவதாக மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.



    மேலும், வரும் 12-ம் தேதிக்குள் கர்நாடக மாநிலத்துக்கான காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர்களை தேர்வு செய்து, அந்த பட்டியலை மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    மத்திய அரசின் இந்த அதிரடி உத்தரவால் கர்நாடக அரசு விரைவில் உறுப்பினர் பட்டியலை தாக்கல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #CauveryManagementAuthority
    ×