search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னுரிமை"

    • ஏழை, எளியவர்களுக்கு அனைவரும் உதவி செய்ய வேண்டும்.
    • இளைஞர்கள் உதவி செய்வதில் முன்னுரிமை வகிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆட்டோ டிரைவர்கள், சமையல் கலைஞர்களுக்கு இன்று பொதுநலன் மனித உரிமை காப்பாளர் பாரத சிற்பி டாக்டர் இரா.பிரனேஷ் இன்பென்ட் ராஜ் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட இனிப்புகள், ரொக்க பணம் ஆகியவற்றை வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.இதுகுறித்து அவர் கூறும் போது:

    இரவு பகல் பாராமல் உழைக்கும் ஆட்டோ டிரைவர்கள், மக்களின் பசியை போக்கி தரமான உணவை தயார் செய்யும் சமையல் கலைஞர்கள் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட நலத்திட்ட உதவிகள் வழங்கினேன்.

    ஏழை எளியவர்களுக்கு அனைவரும் உதவி செய்ய வேண்டும்.

    குறிப்பாக இளை ஞர்கள் உதவி செய்வதில் முன்னுரிமை வகிக்க வேண்டும்.

    இதன் பலன் அனைவருக்கும் கிடைக்கும் என்றார்.

    • மழைநீர், கழிவு நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.

    சீர்காழி:

    சீர்காழி நகர்மன்ற சாதாரணக்கூட்டம் நகரமன்ற தலைவர் துர்கா ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் ஹேமலதா, துணைத்தலைவர் சுப்பராயன், பொறியாளர் குமார், நகர அமைப்பு ஆய்வாளர் மரகதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பின்னர் உறுப்பினர்கள் பேசுகையில்,

    ரமாமணி (அ.தி.மு.க): சீர்காழி எரிவாயு தகணமேடை முன்பு நிர்வகித்த வந்த பாபு என்பவருக்கு வழங்கிடவேண்டும்.

    ஏ.பி.எஸ். பாஸ்கரன் (தி.மு.க): சீர்காழி நகராட்சி சார்பில் 16 பேட்டரி வண்டிகள் மற்றும் டாட்டா ஏசி வாகனங்கள் குப்பை அல்ல வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் செயல்பாட்டில் உள்ளதா? குப்பைகள் சேகரிக்கப்பட்டு எடை போடுவதை யார் கண்காணிக்கின்றனர்.

    ராஜசேகரன் (தே.மு.தி.க): உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்காமல் தமிழக முதல்வரை அவமதிப்பு செய்யும் கர்நாடகா அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

    சாமிநாதன் (தி.மு.க): எனது வார்டு பகுதியில் மழைநீர், கழிவு நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். வேல்முருகன் (பா.ம.க): சீர்காழி நகராட்சி கடந்த 50 ஆண்டுகளாக இதே நிலையில் உள்ளது. நகராட்சி தரம் உயர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தேவதாஸ் (தி.மு.க): எனது பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். கொசு மருந்து அடிக்க வேண்டும். கஸ்தூரிபாய் (தி.மு.க): எனது பகுதியில் கூடுதலாக தெரு விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

    தலைவர் துர்கா ராஜசேகரன்: எரிவாயு தகணமேடை அறக்கட்டளை மூலம் நிர்வகித்திட அறிவிப்பு வெளியிடப்படும். தகுதியுடைய அறக்கட்டளையினர் விண்ணப்பம் செய்து ஒப்புதல் பெற்று நிர்வகிக்கலாம். தனிநபர் மேற்கொள்ளமுடியாது. அயோத்திதாஸ் திட்டத்தின் தமிழகம் முழுவதும் ரூ.1000 கோடி நதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் எஸ்.சி, எஸ். டி பகுதி மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து அந்தந்த பகுதியை சேர்ந்த உறுப்பினர்கள் பணிகளை தேர்வு செய்து எழுத்துப் பூர்வமாக கொடுக்க வேண்டும் என்றார்.

    முன்னதாக சீர்காழி நகர மன்ற கூட்ட அரங்கில் சி.சி.டி.வி கேமரா வைப்பதற்கு நகர மன்ற உறுப்பினரிடம் நகர சபை தலைவர் முன் அனுமதி பெறவில்லை. பொருத்தப்பட்டுள்ள கேமராக்களின் விலை மதிப்பு கூடுதலாக உள்ளது. இந்தப் பணிகள் தரம் இல்லைஎனக்கூறியும், செய்யாத பணிகளை மன்ற பொருளில் வைத்து மக்கள் வரிபணத்தை வீணடிப்பதாகவும் குற்றம் சாட்டி நகர்மன்ற உறுப்பினர்கள் தி.மு.க.வை சேர்ந்த ரம்யா, வள்ளி , ரேணுகாதேவி, அ.தி.மு.க.வை சேர்ந்த ரமாமணி, முழுமதி, பாலமுருகன், நித்யா தேவி, சூரிய பிரபா, கலைச்செல்வி, ராஜேஷ் ஆகிய 10 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    • கன்னியாகுமரி களியக்காவிளை சோதனைச் சாவடியில் உதவி ஆய்வாளா் வில்சன் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
    • 11 இஸ்லாமிய அமைப்புகளில் 5 அமைப்புகள் மீதான தடையை இலங்கை அரசு விலக்கியுள்ளது.

    திருப்பூர்:

    தமிழகத்தின் பாதுகாப்புக்கு காவல் துறை நுண்ணறிவுப் பிரிவு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

    இலங்கை செயின்ட் ஆண்டனி தேவாலயத்தில் கடந்த 2019-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதைத்தொடா்ந்து 3 தேவாலயங்கள், 4 நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 400-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். 500-க்கும் மேற்பட்டோா் படுகாயம் அடைந்தனா்.

    இந்த தாக்குதல் கிறிஸ்தவா்களை குறிவைத்து ஜிகாதி அமைப்பால் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்கள் தமிழகத்திலும் கைது செய்யப்பட்டனா். இதையடுத்து, 2020-ம் ஆண்டு கன்னியாகுமரி களியக்காவிளை சோதனைச் சாவடியில் உதவி ஆய்வாளா் வில்சன் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

    இந்நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக தடை செய்யப்பட்ட 11 இஸ்லாமிய அமைப்புகளில் 5 அமைப்புகள் மீதான தடையை இலங்கை அரசு விலக்கியுள்ளது.கேரளாவில் ஜிகாதி பயங்கரவாதிகள் ஆயுதப் பயிற்சி செய்து வந்த 24 ஏக்கா் இடத்தை என்ஐஏ .,கையகப்படுத்தியுள்ளது. தமிழகத்திலும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஆயுதப் பயிற்சி செய்த இடத்தை என்ஐஏ., அடையாளம் கண்டுள்ளது. தமிழக கடல் எல்லைப்பகுதியில் போதை மருந்து கடத்தல், ஆயுதக் கடத்தல் நடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    எனவே தமிழகத்தின் பாதுகாப்பில் காவல் துறை நுண்ணறிவுப் பிரிவு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கடை வழங்க முன்னுரிமை கேட்டு வியாபாரிகள் வெளிநடப்பு செய்தனர்.
    • நாளை முதல் தற்காலிக பஸ் நிலையம் செயல்படும்

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து புதுப்பிக்க அரசு ரூ.8 கோடி நிதியுதவி வழங்கி உள்ளது. இந்த நிலையில் பழைய பஸ் நிலையத்தின் ஒரு பகுதி அடைக்கப்பட்டது. இதையடுத்து அய்யப்பன்எம்.எல்.ஏ. தலைமையில் கடைக் காரர்கள் போராட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் சமரச கூட்டம் நகராட்சி அலுவ லகத்தில் உசிலம்பட்டி ஆர்.டி.ஒ. ரவிச்சந்திரன், எம்.எல்.ஏ. அய்யப்பன், நகராட்சித் தலைவர் சகுந்தலா, நக ராட்சி கமிஷனர் (பொறுப்பு) பாண்டித்தாய் ஆகிய அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது.

    அப்போது நகராட்சி கமிஷனர் தற்போது உள்ள பஸ் நிலையம் 1½ ஏக்கரில் உள்ளது. கூடுதலாக ஒரு ஏக்கர் விரிவாக்கம் செய்து 2½ ஏக்கரில் 18 பஸ்கள் நிற்கும் வகையில் புதுப்பிக்க அரசு ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நாளை முதல் தற்காலிக பஸ் நிலையம் செயல்படும் என தெரிவித்தார்.

    இதையடுத்து புதிதாக கட்டப்படும் பஸ் நிலையத்தில் தற்போது கடை வைத்துள்ள வியா பாரிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிகாரிகள் அது போன்று முன்னுரிமை வழங்க முடியாது எனவும் அதற்கு உத்தரவாதம் தரமுடியாது எனவும் தெரிவித்தனர். இதனால் கடை வியாபாரிகள் கூட்டத்தை புறக்கணித்துச் சென்றனர்.

    தற்காலிக பஸ் நிலையம் உசிலம்பட்டி-தேனி ரோடு ஹவுசிங் போர்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையத்தில் இருந்து இன்று முதல் பஸ்கள் இயங்குகின்றன.

    • துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டம் ஊட்டியில் நடத்த அனைவருக்கும் வேந்தர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
    • பல்கலைக்கழகங்களில் சிண்டிகேட் கூட்டம் கடைசியாக கடந்த 20.4.2023-ல் நடைபெற்றது.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வரலாறு தெரியாமல் அரைகுறையாக படித்ததை வைத்து, நடப்பு நிகழ்வுகள் தெரியாமல் பேட்டி அளித்து வருகிறார். அண்ணாமலை விரும்பினால் அவர் சென்னையில் எந்த இடத்தில், எப்போது சந்தித்து விவாதிக்க வேண்டும் என்று சொல்கிறாரோ, அங்கு நான் அவரோடு கலந்து கொண்டு விவாதிக்க தயாராக உள்ளேன். வருகிற 5-ந் தேதி துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டம் ஊட்டியில் நடத்த அனைவருக்கும் வேந்தர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் மும்மொழி கல்வி திட்டம் குறித்து விவாதிப்பதற்காக அனைவரும் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இணை வேந்தரான எனக்கோ, தமிழக அரசுக்கோ இதுவரை இது தொடர்பாக தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அண்ணாமலை பேசும்போது இது எல்லாம் அரசுக்கு தெரியும் என்று தவறான தகவலை தெரிவித்து வருகிறார். பல்கலைக்கழகங்களில் சிண்டிகேட் கூட்டம் கடைசியாக கடந்த 20.4.2023-ல் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் சிண்டிகேட் உறுப்பினர் பரந்தாமன் கலந்து கொள்ளவில்லை.

    ஆனால் அண்ணாமலை தவறான தகவலை தெரிவித்து வருகிறார்.இந்த கூட்டத்திற்கு பின்பு தான் அந்த பொறுப்பில் சிண்டிகேட் உறுப்பினராக அவரை இணைத்துக் கொண்டார். தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் எங்களுடைய பிரதான நோக்கமாக உள்ளது. எப்போதும் தமிழகத்தில் இரு மொழி கொள்கையை நாங்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம். நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. ஆனால் பல மொழிகளை படிக்கும் போது மாணவர்கள் தேர்வு எழுதுவதில் பல சங்கடங்கள் ஏற்படுகிறது. அவற்றை தவிர்ப்பதற்காகத்தான் இரு மொழி கொள்கையை நாங்கள் கட்டாயப்படுத்தி வருகிறோம். சமஸ்கிருதம், இந்தி படித்தால் அதிக ஊக்கத்தொகை கொடுக்கப்படும் என்று புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. வேறு எந்த மாநில மொழிகளுக்கும் இந்த சலுகை அறிவிக்கப்படவில்லை. தமிழுக்கு எந்த சலுகையும் புதிய கல்விக் கொள்கையில் இடம் பெறவில்லை. ஆனால் அண்ணாமலை தமிழுக்கு நாங்கள் என்ன செய்து விட்டோம் என்று எங்களை பார்த்து கேட்கிறார்.

    தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை தி.மு.க. அரசு தொடர்ந்து அளித்து வருகிறது. கோவிலில் சமஸ்கிருதம் வேண்டாம் தமிழ் போதும் என்று அண்ணாமலை சொல்வாரா? இவர்கள் நோக்கம் எல்லாம் இந்தியாவில் சமஸ்கிருதமும், இந்தியும் திணிக்கப்பட வேண்டும் என்பதே ஆகும். சி.பி. எஸ்.இ. பாடத்திட்டத்தில் கூட ஆங்கிலம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஆனால் தமிழ்ெமாழிக்கு எந்த முன்னுரிமையும் அளிக்கப்படவில்லை. 3-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது . இவ்வாறு பொது தேர்வு வைப்பதால், அதிக அளவு மாணவர்கள் பள்ளி இடைநிறுத்தல் ஏற்படும். இதனை தவிர்க்கவே நாங்கள் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். கல்வி வளர்ச்சியில் திராவிட மாடல் ஆட்சியில் சாதனைகள் அதிகம். கடந்த 2 ஆண்டுகளில் பல சாதனைகளை தி.மு.க. அரசு செய்து வருகிறது. ஆனால் அண்ணாமலை அவற்றையெல்லாம் மறந்து தவறான தகவல்களை பரப்பி வருகிறார். அண்ணாமலை விரும்பினால் நான் அவருடன் சென்னையில் ஒரே இடத்தில் பட்டிமன்றம் நடத்தவும் தயாராக இருக்கிறேன். எல்லாவற்றையும் தி.மு.க. சந்திக்க தயாராக உள்ளது. இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.

    • மூப்பு நிலை அடிப்படையில், முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்படும்.
    • வயது குறித்த ஆவண நகல்களுடன் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் அறிவிக்கையின் படி மத்திய அரசின் நிதி உதவி திட்டத்தின் கீழ் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கடலோர மீனவ கிராமங்களில் சாகர் மித்ரா என்கிற முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் ஆன பணிக்கு பட்டுக்கோட்டை தாலுகாவை சேர்ந்த பகுதியில் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 19 -ந் தேதி ஆகும்.

    இப்பணியில் சேர்வதற்கு இளங்கலை மீன்வள அறிவியல், கடல் உயிரியல், விலங்கியல் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் தகுதியாகும். விண்ணப்பதாரர்கள் மேற்கூறிய தகுதியுடன் கிடைக்கவில்லை என்றால், மற்ற பட்டதாரிகள் அதாவது, வேதியியல், தாவரவியல், உயிர்வேதியியல், நுண்ணுயிரியல், இயற்பியல் ஆகியவை பரிசீலிக்கப்படும். கூடுதலாக, தகவல் தொழில்நுட்பத்தில் (ஐ.டி) படிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    விண்ணப்பிக்கும் நபர் தொடர்புடைய வட்டத்தில் உள்ள மீனவர் கிராமம், வருவாய் கிராமத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மீனவ கிராமத்தில் தகுதியானவர்கள் இல்லை என்றால், சம்பந்தப்பட்ட வட்டத்தில் உள்ள அண்டை கிராமத்தினரை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

    வயது வரம்பு, 01.01.2023 இல் உள்ளவாறு 35 வயதுக்கு மேற்படக்கூடாது. தேர்வு செய்யப்படுபவருக்கு மாத ஊதியம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.

    தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாகர் மித்ர பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய மீனவ கிராமங்கள் ஏரிப்புறக்கரை, கரையூர் தெரு ஆகிய மீனவ கிராமங்களாகும். விண்ணப்பதாரர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள், தகுதி மற்றும் மூப்பு நிலை அடிப்படையில், முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்படும்.

    எனவே, விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் உதவி இயக்குனர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, எண்:873/4, அண்ணா சாலை, கீழவாசல், தஞ்சாவூர்-613001 .

    தொலைபேசி எண் :04362-235389 என்ற முகவரியில் இயங்கும் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை, வயது குறித்த ஆவண நகல்களுடன் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒரு நாளைக்கு ரூ. 214 ஊதியம் வழங்கப்–படுகிறது.
    • 6அடி நீளம், 2.5 அடி அகலம் என்ற அளவில் நிலத்தடி நீர் சேமிப்பு கட்டமைப்புகள்.

    திருவாரூர்:

    மத்திய அரசின் மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு ஆண்டுதோறும் 100 நாட்கள் வேலை வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

    இத்திட்டத்தின்படி குறிப்பிட்ட அளவிலான பணிகளை முடிக்கும் நிலையில் ஒரு நாளைக்கு ரூ.214 ஊதியம் வழங்கப்படுகிறது.

    இப்பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மூலம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை தேர்வு செய்கிறார்கள்.

    திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளில் வாய்க்கால் தூர்வாருவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

    ஆறுகளில் இருந்து வாய்க்கால் வழியாகவே பாசன நீர் விவசாய வயல்களுக்கு கொண்டு செல்லப்படும்.

    அதற்கேற்ற வகையில் தடையின்றி பாசனம் மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் வாய்க்கால்களை தூர்வார இப்பணியில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

    வாய்க்கால்களை தூர் வரும்போது குறிப்பிட்ட இடைவெளிகள் இரண்டடி ஆழத்திற்கு, 6அடி நீளம், 2.5 அடி அகலம் என்ற அளவில் நிலத்தடி நீர் சேமிப்பு கட்டமைப்புகள் பணியாளர்கள் மூலமாக மேற்கொள்ளப்படுகிறது.

    திருவாரூர் மாவட்டத்தில் பெரும்புகழூர், அம்மையப்பன், வண்டாம்பாளை ஆகிய 430 ஊராட்சிகளிலும் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    • 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுப் பணிக்கு ஆசிரியர்களை முன்னுரிமைப்படி நியமிக்க வேண்டும்.
    • தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டத்தலைவரும், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு மாணவர்க ளுக்கான ஆண்டு பொதுத் தேர்வு வருகிற ஏப்ரல் 6-ந் தேதி தொடங்க இருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.

    பொதுத் தேர்வுவை நடத்துவதற்கு ஆசிரியர்க ளை துறை அலுவலர், வழித்தட அலுவலர், பறக்கும் படை அலுவலர், நிற்கும் படை அலுவலர் மற்றும் அறை கண்காணிப்பா ளர் என பிரிக்கப்பட்டு அவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலரால் தேர்வுப் பணி ஒதுக்கப்படுகிறது.

    ஆசிரியர்களை துறை அலுவலர், வழித்தட அலுவலர் மற்றும் நிற்கும் படை போன்ற தேர்வுப்ப ணிக்கு ஆசிரியர்களை பணி மூப்பு அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும். இளையோரை துறை அலுவலராகவும், பணியில் மூத்தோரை கீழ்நிலைப் பணியில் நியமிக்கும் போது மூத்த ஆசிரியர்கள் மன உளைச்சல் அடைகிறார்கள். இதனால் அவர்களுக்கு கொடுக்கப்படும் பணியில் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது.

    எனவே அறை கண்காணிப்பாளர் பணியைத் தவிர மற்ற தேர்வுப் பணிகளில் பணிநியமன முன்னுரிமை படி நியமனம் செய்ய வேண்டும். அதே போல் ஆசிரியர்கள் பணிபுரியும் வட்டாரத்திலேயே தேர்வுப் பணி வழங்க வேண்டும்.

    பெண் ஆசிரியர்களுக்கு பேருந்து வசதியுள்ள தேர்வு மையங்களுக்கு தேர்வுப் பணி வழங்க வேண்டும். மாவட்டத்தில் பணிபுரியும் ஒரு சில ஆசிரியர்கள் சொந்த வசிப்பிடத்தில் தங்கி நீண்ட தூரம் பயணம் செய்து பள்ளிக்கு வருகிறார்கள். அவர்களுக்கு தேர்வுப்பணி ஒதுக்கும் போது வசிப்பிடத்தை கணக்கில் கொள்ள வேண்டும்.

    மேலும் கர்ப்பிணி பெண்கள், மாற்றுத் திறனாளிகள், நீண்ட நாள் மருத்துவம் செய்து வருபவர் போன்ற ஆசிரியர்களுக்கு தேர்வுப் பணியிலிருந்து விலக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இன்று பொறுப்பு ஏற்பு
    • கலெக்டர் ஸ்ரீதர் பேட்டி

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டராக இருந்த அரவிந்த் மருத்துவ சேவை கழக மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    குமரி மாவட்ட புதிய கலெக்டராக சென்னை- கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்ட இயக்குனராக இருந்த பி.என். ஸ்ரீதர் நிய மிக்கப்பட்டார். புதிதாக நியமிக்கப்பட்ட கலெக்டர் பி.என். ஸ்ரீதர் இன்று 6-ந்தேதி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார். பொறுப்புகளை கலெக்டர் அரவிந்த் அவரிடம் ஒப்படைத்தார்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அதி காரி சிவப்பிரியா, ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், பத்மநாபபுரம் சப் கலெக் டர் கவுசிக், கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் வீராசாமி மற்றும் அதிகாரிகள் புதிய கலெக் டர் பி.என். ஸ்ரீதருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து கலெக்டர் பி.என். ஸ்ரீதர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள் சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து அந்த திட்டங் களை செயல்படுத்த தனி கவனம் செலுத்தி நடவ டிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் குறைகளை தீர்க்க முன்னுரிமை அளிக் கப்படும். அனைத்து துறை அதிகாரிகளுடன் இணைந்து பொதுமக்களின் பிரச்சினைகள் குறைகள் தீர்க்க நடவடிக்கை மேற் கொள்வேன். குமரி மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக் கப்படும். நகரப்புறம் அதிகம் உள்ள மாவட்டமாகும்.

    சுற்றுலாத்துறை சுற்றுச்சூழல் மீனவர் பிரச்சனை வனத் துறை உள்ளிட்ட திட்டங்க ளுக்கு முன்னுரிமை அளிக் கப்படும். சென்னை-கன்னியாகுமரி தொழில் வரி சாலை திட்டத்தை பொருத்தமட்டில் தற்பொ ழுது தென்காசி நெல்லை மாவட்டத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்தில் அதற் கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    புதிதாக பொறுப் பேற்றுக் கொண்ட கலெக் டர் பி.என். ஸ்ரீதர் குமரி மாவட் டத்தின் 52-வது கலெக்டர் ஆவார். கலெக்டர் பி.என் ஸ்ரீதருக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகள் தெரியும்.

    ஏற்கனவே திண்டி வனத்தில் சப்-கலெக்டராக 2 ஆண்டுகள் பணிபுரிந்த பி.என்.ஸ்ரீதர் தொடர்ந்து பெருநகர சென்னை மாநக ராட்சி மத்திய வட்டார இணை இயக்குனராக 2 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.

    • பெண்களுக்கு 60 சதவீதம் மானியமாக ரூ.3.60 லட்சமும் வழங்கப்படும்.
    • மூப்பு நிலையின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்படும்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாட்டில் இறால் உற்பத்தினை அதிகரிக்கவும் மற்றும் புதியதாக இறால் பண்ணை தொழிலில் ஈடுபட விரும்புவோர் பயன்பெறும் வகையில் உவர் நீர் இறால் வளர்ப்பிற்காக புதிய குளங்கள் அமைத்தல் மற்றும் உள்ளீடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    உவர் நீர் இறால் வளர்ப்பி ற்காக புதிய குளங்கள் அமைத்தல் திட்டத்தில் 1 ஹெக்டேர் பரப்பிற்கு மொத்த செலவினம் ரூ.8 லட்ச த்தில் பொது பிரிவினருக்கு 40 சதவீதம் மானியமாக ரூ.3.20 லட்சமும் மற்றும் பெண்களுக்கு 60 சதவீதம் மானியமாக ரூ.4.80 லட்சம் வழங்கப்படும்.

    மேலும் இக்குளங்களுக்கு இறால் வளர்க்க உள்ளீடுகள் வழங்கும் திட்டத்தில் மொத்த செலவினம் ரூ.6 லட்சத்தில் பொதுப் பிரிவினருக்கு 40 சதவீதம் மானியமாக ரூ.2.40 லட்சமும் மற்றும் பெண்களுக்கு 60 சதவீதம் மானியமாக ரூ.3.60 லட்சமும் வழங்கப்படும்.

    மேற்படி திட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பொது பிரிவினருக்கு 6 ஹெக்டேர் மற்றும் பெண்களுக்கு 2 ஹெக்டேர் என மொத்தம் 8 ஹெக்டேர் இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மேற்படி திட்டங்களில் பெறப்படும் விண்ணப்ப ங்கள் தகுதி மற்றும் மூப்பு நிலையின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்படும்.

    எனவே விண்ணப்பிக்க விரும்பும் இறால் வளர்ப்பு விவசாயிகள் எண்.873/4, அறிஞர் அண்ணா சாலை, கீழவாசல், தஞ்சாவூர் என்ற முகவரியில் இயங்கும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பம் பெற்று பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முன்னுரிமை அடிப்படையில் விருப்பத்திற்கு ஏற்ற இடம் வழங்க வலியுறுத்தினர்.
    • அலுவலகங்களில் அலுவலக பணியாளர்களுக்கு பொது கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம் , வட்டார வளர்ச்சி கல்வி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு கல்வித் துறை அலுவலகங்களில் அலுவலக பணியாளர்களுக்கு பொது கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்தவர்களுக்கு இந்த கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து இளநிலை உதவியாளர், தட்டச்சர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் பணிபுரிந்த 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ஆனால் இந்த பொது கலந்தாய்வில் முன்னுரிமை அடிப்படையில் தகுதியானவர்களுக்கு அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப உள்ள இடங்களில் பணியிட மாறுதல் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

    பெரும்பாலானவர்களுக்கு அவர்கள் கேட்ட இடம் வழங்கவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் சிலருக்கு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இடம் வழங்கப்பட்டது.

    எனவே சரியான முறையில் முன்னுரிமை அடிப்படையில் தகுதியானவர்களுக்கு பாராபட்சமின்றி அவர்கள் கேட்கும் இடத்திற்கே பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

    • தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
    • குழுவில் உள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினரின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப நவீன சலவையகங்கள் அமைக்கப்பட உள்ளது. இதன்படி நவீன சலவையகங்கள் ஏற்படுத்த சலவைத் தொழில் தெரிந்த 10 நபர்களைக் கொண்ட குழு ஒன்றுக்கு ரூ.3 லட்சம் வீதம் வழங்கப்பட உள்ளது.

    இந்த குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சீர் மரபினர் இனத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். உறுப்பினர்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களைக் கொண்ட குழுவுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    10 நபர்களை கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும். குழுவில் உள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இந்தத் திட்டத்தில் பங்கு கொள்ள ஆர்வமாக உள்ள இத்தொழிலில் முன் அனுபவம் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் வகுப்பை சேர்ந்த மக்கள் ஒரு குழுவாக தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×