search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Liquor sale"

    • சங்கராபுரம் அருகே சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் தியாகராஜபுரம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்துகொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த மொட்டையம்மாள் (வயது 60) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    20 சாராயப்பாக்கெட்களை பறிமுதல் செய்தனர்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே வடகோட்டிப்பாக்கம் கிராமத்தில் அம்பேத்கார் தெருவில் வசிப்பவர் கிருஷ்ணன் (வயது 45). இவர் வீட்டின் பின்புறம் உள்ள கருமாரி கொட்டகையில் சாராயம் விற்பதாக மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது. அதன் பேரில் மரக்காணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபன் மற்றும் போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது அங்கு சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த கிருஷ்ணனை பிடித்து, அவர் வைத்திருந்த 20 லிட்டர் சாராயம், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்து, வழக்குப்பதிந்து கைது செய்தனர். அது போல் நடுக்குப்பம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவில் பெரிய காலனி பகுதியை சேர்ந்த சேகர் (57) என்பவர் வீட்டின் எதிரே சாராயம் விற்பனை செய்து கொண்டிருதார். அவரிடம் இருந்து 20 சாராயப்பாக்கெட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • பண்ருட்டியில் சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
    • சரண்யா மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, பண்ருட்டி டி.எஸ்.பி., ஆகியோர் உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போதுபண்ருட்டி அடுத்த சூரக்குப்பம் பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக சாராயம் விற்பனையில் ஈடுபட்ட சூரக்குப்பம் அங்காளம்மன் கோவில் தெரு பழனி என்பவரது மனைவி இந்திரா (55)என்பவரை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மரக்காணம் அருகே மதுபானம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர் வைத்திருந்த 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே அனுமந்தை கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 45). இவர் தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தின் மதுபாட்டில் விற்பனை செய்தார். இதனை அறிந்த மரக்காணம் சப்-இன்ஸ்பெக்டர் தீபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர் வைத்திருந்த 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து முருகனை கைது செய்தனர். மரக்காணம் அருகே கழிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அம்சா. இவர் வீட்டு தோட்டத்தின் மது விற்றார். இவரையும் போலீசார் கைது செய்தனர். 

    55 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி தலைமையிலான போலீசார் மோட்டாம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டின் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த மோட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்த விஜயகாந்த்(30), கார்த்திகேயன்(42) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 55 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல் குச்சி காட்டில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த ஆண்டி(25) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 20 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • 4 டாஸ்மாக் பார்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் அவர்களிடம் இருந்து 79 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுப்புற வட்டாரங்களில் டாஸ்மாக் பார்களில் சட்டவிரோதமாக மதுவை பதுக்கி விற்பனை செய்வதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து விருத்தாசலம் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் சக்தி மற்றும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மாவட்ட மேலாளர் பியோ தங்கதுரை தலைமையிலான மதுவிலக்கு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் 4 டாஸ்மாக் பார்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். விருத்தாசலம் பகுதியில் சதீஷ் மற்றும் ஆனந்த், கச்சிராயநத்தம் பகுதியை சேர்ந்த குமார் மற்றும் பாலகொல்லையை சேர்ந்த துரைசாமி ஆகியோர் சட்ட விரோதமாக மதுவை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களை அதிரடியாக கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 79 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • கண்டரக்கோட்டை சக்தி நகரில் சாராய விற்பனையில் பிரபாகரன் ஈடுபட்டார்.
    • சாராய பாக்கெட்களை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டிபோலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ)நந்தகுமார்,சப்இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் இன்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பண்ருட்டி அருகே கண்டரக்கோட்டை சக்தி நகரில் சாராய விற்பனையில் ஈடுபட்டபிரபாகரன், வரது மனைவி பிரபாகரன் மனைவி ராஜேஸ்வரி ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து ஏராளமான சாராய பாக்கெட்களை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தனது வீட்டின் அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் ரோந்துபணியில் ஈடுபட்டனர். அப்போது புதுப்பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த பூபதி (21) என்பவர் தனது வீட்டின் அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். இதேபோல் சாராயம் விற்றதாக அரசராம்பட்டு கிராமத்தை சேர்ந்த அஜீத்குமார் (21), குளத்தூர் மாரிமுத்து (49) அரசம்பட்டு செல்வி (35) ஆகியோரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    • சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மொத்தம் 30 லிட்டர் சாராயம் பறி முதல் செய்யப்பட்டது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் நரசிம்மஜோதி தலைமை யிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேலேரியில் சக்கரபாணி (வயது 35) என்பவர் தனது வீட்டின் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். உடன் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். 

    இதேபோல் அரசராம்பட்டு கிராமத்தில் சாராயம் விற்றதாக அதே பகுதியை சேர்ந்த நாகமணி (50) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் 2 பேரிடம் இருந்து மொத்தம் 30 லிட்டர் சாராயம் பறி முதல் செய்யப்பட்டது.

    • சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தனது வீட்டின் அருகில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் ரோந்துபணி மேற்கொண்டனர். அப்போது அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த விருதாம்பாள் (35) என்பவர் தனது வீட்டின் அருகில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைபார்த்த போலீசார், அவரை கைது செய்தனர். இதேபோல் ஜவுளிகுப்பம் கிராமத்தை சேர்ந்த தனபாக்கியம் (58) என்பவர் சாராயம் விற்றதாக அவரையும் போலீசார் கைது செய்தனர்.

    சங்கராபுரம் அருகே சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கொசப்பாடி ஏரிக்கரை வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்த போது லாரி டியூப்பில் 55 லிட்டர் சாராயம் வைத்திருந்தார். விசாரணையில் அவர், புதுப்பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த சக்திவேல்(23) என்பதும், சாராயத்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சக்திவேலை கைது செய்து அவரிடம் இருந்த சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் குளத்தூர் பகுதியில் ரோந்துபணி ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் பின்புறம் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த அதேஊரை சேர்ந்த சுரேந்திரன்(27) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.

    ×