என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Lakshadweep"
விழுப்புரம்:
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொண்டா டப்பட்டது. விழாவை முன்னிட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும் சிவபெ ருமானுக்கும் பால்,தயிர், சந்தனம், மஞ்சள், விபூதி, குங்குமம், இளநீர், பஞ்சா மிர்தம்,தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். உற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உட்பி ரகாரத்தில் வைக்க ப்பட்டிருந்தது.
மாலை 5 மணிக்கு அங்கிருந்த உற்சவ அம்மனை பம்பை, மேளம் முழங்க கொண்டு செல்லப்பட்டு கோவிலின் தென்மேற்கு மூலையில் அமர்த்தினர்.பின்பு திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்ட போது அந்த தீபத்தை அம்மன் தரிசனம் செய்தவுடன் அம்மனுக்கு தீபாரதனை காட்டப்பட்டு கோவிலின் உட்புறம் கொண்டு சென்றனர்.
அதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் லட்சதீபம் ஏற்றப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத் தலைவர் சந்தானம் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று இரவு லட்சதீபம் நடக்கிறது.
- ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது.
மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை திருவிழா கடந்த ஒரு வார காலமாக நடந்து வருகிறது. கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் தினமும் சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்து வருகின்றனர்.
திருவிழாவின் 5-ம் நாளான நேற்று இரவு, கோவில் மூலஸ்தானத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. தமிழகம் முழுவதும் இன்று கார்த்திகை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முத்தாய்ப்பாக இன்று இரவு மீனாட்சி கோவில் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்பட உள்ளது. குறிப்பாக பொற்றாமரை குளத்தை சுற்றியுள்ள படிகளில் தீபங்கள் ஏற்றுவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது.
- திருவாவடுதுறை ஆதீன 24வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் குத்து விளக்கு ஏற்றி லட்சதீபத்தை துவக்கி வைத்தார்.
- சுவாமி சன்னதி அம்பாள் சன்னதி வெளி பிரகாரம் சுற்றுப் பகுதி உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் லட்ச தீபங்களை ஏற்றினர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாயூரநாதர் கோவில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல்கள் பாடல் பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாத கடை வெள்ளியை முன்னிட்டு அபயாம்பிகை நற்பணி மன்றம் சார்பில் லட்சதீப திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் 35ம் ஆண்டு லட்சதீப திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமி அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டது. திருவாவடுதுறை ஆதீன 24வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் குத்து விளக்கு ஏற்றி லட்சதீபத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து மகா தீபாரதனை கான்பிக்கப்பட்டது. சுவாமி சன்னதி அம்பாள் சன்னதி வெளி பிரகாரம் சுற்றுப் பகுதி உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் லட்ச தீபங்களை ஏற்றினர்.
ரிஷபக் குஞ்சரம் 75வது சுதந்திர கொடியை விநாயகர் ஏற்றுவது போன்று வரைந்த ஓவியங்கள் மற்றும் பலவிதமான மந்திர எழுத்துக்கள் தீப ஒளியில் பிரகாசித்தது பக்தர்களை கவர்ந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று விளக்குகளை ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கணேசன், கேசியர் வெங்கடேசன், ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் தமிழகம், கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் அடுத்த நான்கைந்து நாட்களுக்கு மழை மற்றும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழக மலைப்பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள பகுதிகளில் 7-ம் தேதி அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்து உள்ளது.
இதன்காரணமாக அரபிக்கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் கடல் காற்று பலமாக வீசும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் மீனவர்கள் குமரி, அரபிக்கடல் பகுதியில் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. #TNRain #RedAlert
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்