search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லட்சதீபம்"

    • திருக்கழுக்குன்றத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, லட்ச தீபம் ஏற்றப்படுகிறது.
    • பத்மநாப சுவாமி ஆலயத்திலும், குருவாயூர் ஆலயத்திலும் லட்ச தீபம் ஏற்றப்படுகிறது.

    திருக்கழுக்குன்றத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, திருக்கோவில் வளாகங்களிலும்,

    மலைப்படிகளிலும், குளப்படிகளிலும், மற்ற இடங்களிலும் ஒரு லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்படும்.

    இதேபோல் சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் வைகாசி பவுர்ணமியன்று லட்சதீபம் ஏற்றப்படுகிறது.

    மற்றும் கேரளாவில் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி ஆலயத்திலும், குருவாயூர் ஆலயத்திலும் லட்ச தீபம் ஏற்றப்படுகிறது.

    அதற்கான அகவல்கள் அந்த ஆலயங்களில் நிரந்தரமாகவே பொருத்தப்பட்டுள்ளன.

    • திருக்குடமுழுக்கு விழா பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையே நிகழ்வதாகும்.
    • சங்குதீர்த்த புஷ்கரமேளா நிகழ்வும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையே நடத்தப்படுகிறது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தின் இதயமாய் விளங்கும் திருக்கழுக்குன்றத்தில் மிகவும் அரியதான விழா

    எல்லோரும் அறிந்த விழா பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் லட்சதீபப் பெருவிழா.

    திருக்குடமுழுக்கு விழா பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையே நிகழ்வதாகும்.

    குறிஞ்சி மலர் மலர்வதும், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையே ஆகும்.

    வட இந்தியாவில் நடைபெறும் கும்பமேளா திருவிழாவும் தென்னிந்தியாவில் நிகழும் கும்பகோணம் மகாமகம் திருவிழாவும்

    பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையே ஆகும்.

    திரு ஓங்கும் புண்ணியச் செயல் ஓங்கும் திருக்கழுக்குன்றத்தில் நடைபெறும் சங்குதீர்த்த புஷ்கரமேளா நிகழ்வும்

    பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையே நடத்தப்படுகிறது.

    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்
    • அம்மன் திருவீதி உலா நடந்தது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் நாராய ணமங்கலம் கிராமத்தில் பக்த ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று தமிழ் புத்தாண்டு பிறப்பு முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது.

    பக்தர்கள் ரூபாய் நோட்டுகளால் மாலை அணிவித்தனர். கோவில் வளாகத்தில் லட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

    இதேபோல் கண்ணமங்கலம் அருகே அழகுசேனை சூளைமேடு பகுதியில் ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோவிலில் 23ம்ஆண்டாக லட்சதீபம், ஆஞ்சநேயர் வீதி உலா நடைபெற்றது. இரவில் நாடகம் நடைபெற்றது.

    மேலும் 5புத்தூரில் அடங்கிய சின்னப் புத்தூரில் மாரியம்மன் கோவலில் அம்மனுக்கு பால்குட அபிஷேகம், தீபாராதணை நடைபெற்றது.

    மாலையில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் இரவில் ஆடல் பாடல் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மின் விளக்குகளால் அலங்காரம் செய்து அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாளித்தார்.

    உற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உட்பி ரகாரத்தில் வைக்க ப்பட்டிருந்தது.

    விழுப்புரம்: 

    மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொண்டா டப்பட்டது. விழாவை முன்னிட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும் சிவபெ ருமானுக்கும் பால்,தயிர், சந்தனம், மஞ்சள், விபூதி, குங்குமம், இளநீர், பஞ்சா மிர்தம்,தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். உற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உட்பி ரகாரத்தில் வைக்க ப்பட்டிருந்தது.

    மாலை 5 மணிக்கு அங்கிருந்த உற்சவ அம்மனை பம்பை, மேளம் முழங்க கொண்டு செல்லப்பட்டு கோவிலின் தென்மேற்கு மூலையில் அமர்த்தினர்.பின்பு திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்ட போது அந்த தீபத்தை அம்மன் தரிசனம் செய்தவுடன் அம்மனுக்கு தீபாரதனை காட்டப்பட்டு கோவிலின் உட்புறம் கொண்டு சென்றனர்.

    அதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் லட்சதீபம் ஏற்றப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத் தலைவர் சந்தானம் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று இரவு லட்சதீபம் நடக்கிறது.
    • ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை திருவிழா கடந்த ஒரு வார காலமாக நடந்து வருகிறது. கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் தினமும் சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்து வருகின்றனர்.

    திருவிழாவின் 5-ம் நாளான நேற்று இரவு, கோவில் மூலஸ்தானத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. தமிழகம் முழுவதும் இன்று கார்த்திகை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முத்தாய்ப்பாக இன்று இரவு மீனாட்சி கோவில் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்பட உள்ளது. குறிப்பாக பொற்றாமரை குளத்தை சுற்றியுள்ள படிகளில் தீபங்கள் ஏற்றுவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது.

    • திருவாவடுதுறை ஆதீன 24வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் குத்து விளக்கு ஏற்றி லட்சதீபத்தை துவக்கி வைத்தார்.
    • சுவாமி சன்னதி அம்பாள் சன்னதி வெளி பிரகாரம் சுற்றுப் பகுதி உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் லட்ச தீபங்களை ஏற்றினர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாயூரநாதர் கோவில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல்கள் பாடல் பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாத கடை வெள்ளியை முன்னிட்டு அபயாம்பிகை நற்பணி மன்றம் சார்பில் லட்சதீப திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அந்த வகையில் 35ம் ஆண்டு லட்சதீப திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமி அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டது. திருவாவடுதுறை ஆதீன 24வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் குத்து விளக்கு ஏற்றி லட்சதீபத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து மகா தீபாரதனை கான்பிக்கப்பட்டது. சுவாமி சன்னதி அம்பாள் சன்னதி வெளி பிரகாரம் சுற்றுப் பகுதி உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் லட்ச தீபங்களை ஏற்றினர்.

    ரிஷபக் குஞ்சரம் 75வது சுதந்திர கொடியை விநாயகர் ஏற்றுவது போன்று வரைந்த ஓவியங்கள் மற்றும் பலவிதமான மந்திர எழுத்துக்கள் தீப ஒளியில் பிரகாசித்தது பக்தர்களை கவர்ந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று விளக்குகளை ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கணேசன், கேசியர் வெங்கடேசன், ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
    • இரவு 7 மணிக்கு கேந்திர சங்கீத நாடக அகாடமி தேசிய விருது பெற்ற கலைமாமணி ஸ்ரீமதி கோபிகாவர்மா மோகினியாட்டம் நடைபெறுகிறது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவட்டார் ஆதிகேசவன் பெருமாள் கோவில் 418 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மஹா கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றது. தமிழகம், கேரளா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் லட்சகணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் ‍ செய்தார்கள்.

    நேற்று மாலை 6-மணி அளவில் கோவிலை சுற்றி லட்சதீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று காலை 5 மணிக்கு கணபதிஹோமம், கொடிமரம் பிரதிஷ்டை, முள பூஜை, சதுர்த்த கலசத்திற்கு பத்மமிடல் அதை தொடர்ந்து அபிஷேகம் மாலை 5 மணிக்கு ஹோமகுண்ட சுத்தி, வாஹன பரிக்கிரகம், ஜலாதிவாசம் மாலை 6.30 மணிக்கு தீபாராதனை இரவு 7 மணிக்கு திருவனந்தபுரம் கவடியார் கொட்டாரம் கேந்திர சங்கீத நாடக அகாடமி தேசிய விருது பெற்ற கலைமாமணி ஸ்ரீமதி கோபிகாவர்மா மோகினியாட்டம் நடைபெறுகிறது.

    ×