என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "lakh seized"
வேலூர்:
தமிழகத்தில் பாராளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற இடைதேர்தல் அறிவிக்கப்பட்டதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லபடுவதை தடுக்கும் பொருட்டு நிலை கண்காணிப்பு குழுக்கள் மற்றும் பறக்கும் படை அமைக்கப்பட்டு தீவிரவாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் பறக்கும்படை தாசில்தார் ரூபிபாய் தலைமையிலான போலீசார் இன்று காலை வாகன சோதனை செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது காட்பாடி வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். காரில் இருந்த ஒரு பேக்கில் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பணம் எடுத்து வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் காட்பாடி காந்தி நகரை சேர்ந்த பிரசாத் (வயது 44) என்பதும் காண்ட்ராக்ட் தொழில் செய்வதும் தெரியவந்தது.
தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க சென்னைக்கு பணத்தை கொண்டு சென்றது தெரியவந்தது. பறிமுதல் செய்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை வேலூர் தாசில்தார் பழனியிடம் பறக்கும் படை போலீசார் ஒப்படைத்தனர். #LSPolls
தொண்டி:
பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளதால் பணம் கொண்டு செல்வதற்கான விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக பணம் கொண்டு செல்பவர்கள் அதற்குரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சோதனைச்சாவடியில் நள்ளிரவில் தேர்தல் பறக்கும் படையினர் தாசில்தார் ராமசாமி தலைமையில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் பயணம் செய்தவரிடம் ரூ. 2 லட்சம் ரொக்கம் இருந்தது. அதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை. எனவே ரூ. 2 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். காரில் பயணம் செய்தவர் கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மீன் வியாபாரி ஆண்டோ (45) என்பது தெரியவந்துள்ளது. #LSPolls
தக்கலை:
பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.
குமரி மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் 6 சட்டமன்ற தொகுதிகளிலும், பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
மாவட்டம் முழுவதும் 18 பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையை மேற்கொண்டு வருகிறார்கள். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா? என்பதையும் கண்காணித்து வருகிறார்கள்.
குளச்சல் பகுதியில் நேற்று சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் நாகர்கோவில் அருகே தம்மத்துகோணம் ஞானம் நகரைச் சேர்ந்த ஆசிரியர் ரொனால்டு மேரி என்பவரிடம் இருந்து ரூ.5 லட்சம் பணம் பறிமுதல் செய்தனர்.
அவரிடம் பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததையடுத்து கருவூலகத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணத்தை காட்டி பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தக்கலை அருகே பரைக்கோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் தண்டன் கோணம் பகுதியைச்சேர்ந்த ஆசிரியை ஒருவரிடம் இருந்து ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனர். அதை தாசில்தார் ஷீலாவிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல் மேக்காமண்ட பத்தில் தாசன் என்பவரிடம் இருந்து ரூ.85 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேட்டுக்கடை பகுதியில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்க கொண்டு சென்ற 11 மிக்சிகளையும் பறிமுதல் செய்தனர்.
குமரி மாவட்டம் முழுவதும் இன்று காலையிலும் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். சுசீந்திரம், ஆரல்வாய்மொழி பகுதியில் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கும் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. கடந்த 3 நாட்களில் 35-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளது.
குறிப்பாக சுவர் விளம்பரம், கொடிக்கம்பங்கள் தொடர்பாகவே புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்கள் மீது உடனடி நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
ரிஷிவந்தியம்:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் மற்றும் பரிசு பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் பொருட்டு விழுப்புரம் மாவட்டத்தில் 33 பறக்கும்படை குழுவினர்கள், 33 நிலையான கண்காணிப்பு குழுவினரும் நெடுஞ்சாலைகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று இரவு சங்கராபுரம் மூரார்பாளையம் பகுதியில் உள்ள கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படை தாசில்தார் ராஜகோபால் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராயப்பன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குபின் முரணான தகவலை தெரிவித்தார்.
இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் இருந்து ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. அந்த பணத்திற்கான ஆவணங்கள் எதுவும் டிரைவரிடம் இல்லை.
இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் கார் டிரைவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் சேலம் மாவட்டம் ஆரகனூர் அண்ணாமலைநகர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(வயது 35) என்பதும் குளிர்பானங்கள் மொத்தமாக எடுத்து சென்று பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் விற்பனை செய்வார்.
அவர் கடைகளில் குளிர்பானங்கள் விற்ற தொகை ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தினை வசூலித்து செல்வது தெரியவந்தது. இருப்பினும் சதீஷ்குமார் வைத்திருந்த பணத்திற்கு ஆவணங்கள் எதுவும் இல்லாததால் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அந்த பணத்தை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரெத்தின மாலாவிடம் ஒப்படைத்தனர். #LSPolls
திருச்சி:
பாராளுமன்ற தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில் திருச்சி மத்திய மண்டலத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் படைகாத்து தலைமையில், பறக்கும் படையினர் பெரம்பலூர், அரியலூர் பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செந்துறையில், சேலம் மாவட்டம் சொர்ணபுரியை சேர்ந்த பாஸ்கர் என்பவர் தனது காரில் உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்ற 16¼ கிலோ வெள்ளி கொலுசுகள் மற்றும் ரூ.96 ஆயிரத்து 500-ஐ பறிமுதல் செய்தனர்.
அதேபோல் பேரளி கிராமத்தில் உள்ள சுங்கச்சாவடியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஆசிக்கான் தனது காரில் எடுத்து சென்ற ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பிலான எல்.இ.டி. டிவி, ஹோம் தியேட்டர் மற்றும் கியாஸ் அடுப்புகள் ஆகியவற்றை குன்னம் துணை வட்டாட்சியர் பழனிசெல்வன் தலைமையில் கைப்பற்றப்பட்டு பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மஞ்சுளாவிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து தேர்தல் அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மதனத்தூர் கொள்ளிடம் பாலம் அருகே தேர்தல் நிலையான கண்காணிப்புக்குழுவை சேர்ந்த கூட்டுறவு சார்பதிவாளர் சசிக்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கும்பகோணத்தில் இருந்து வேலூர் நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டபோது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வேலூர் கிராமத்தை சேர்ந்த அமுதா தியோஸ் என்பவர் தனது காரில் உரிய ஆவணங்களின்றி ரூ.12 லட்சத்து 76 ஆயிரத்து 500 எடுத்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த தொகையை பறிமுதல் செய்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதியிடம் ஒப்படைத்தனர். பின்னர் கோட்டாட்சியர் அந்த தொகையினை ஜெயங்கொண்டம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தார்.
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எடமலைப்பட்டிபுதூர் கிருஷ்ணாபுரம் சோதனைச்சாவடியில் பறக்கும்படை தாசில்தாரும் மணப்பாறை நத்தம் தனிதாசில்தாருமான இளவரசி தலைமையிலான குழுவில் இடம்பெற்ற ராஜேந்திரன், தேவசேனாபதி உள்ளிட்ட 5 பேர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக காரில் வந்த கருமண்டபத்தை சேர்ந்த அந்தோணி நவீன் என்பவர் ரூ.7 லட்சத்து 40 ஆயிரத்து 400 ரொக்கமாக எடுத்து சென்றார். அந்த பணத்திற்காக உரிய ஆவணமோ அல்லது ரசீதோ அவரிடம் இல்லை. விசாரணையில், எடமலைப்பட்டி புதூர்- மதுரை ரோட்டில் அவர் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருவதாகவும், வங்கியில் செலுத்த பணம் எடுத்து செல்வதாகவும் தெரிவித்தார். ஆனால், உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை என்பதால் அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
இதுபோன்று, திருச்சி வயலூர் ரோட்டில் ரெங்காநகர் சோதனைச்சாவடியில் தனிதாசில்தார் (மணப்பாறை சிப்காட்) வசந்தா தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சண்முகாநகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கருணாகரன் அவ்வழியாக காரில் வந்தார். அவரது காரை சோதனை செய்தபோது, ஒரு பையில் ரூ.1 லட்சம் இருந்தது. அந்த தொகைக்கான ஆவணம் ஏதும் அவரிடம் இல்லை. விசாரணையில், நாச்சிக்குறிச்சி பஞ்சாயத்தில் கட்டுவதற்காக பணத்தை எடுத்து செல்வதாக கருணாகரன் தெரிவித்தார். ஆனால், உரிய ஆவணம் ஏதும் இல்லை என்பதால் பறக்கும் படையினர் ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடத்தில் 2 பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தொகையான ரூ.8 லட்சத்து 40 ஆயிரத்து 400-ஐ திருச்சி மேற்கு தாசில்தார் ராஜவேலுவிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். பின்னர் அந்த தொகை ஒரு கவரில் ‘சீல்’ வைக்கப்பட்டு கருவூலத் தில் ஒப்படைக்கப்பட்டது. திருச்சி மத்திய மண்டலத்தில் மட்டும் ஒரே நாளில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள ரொக்கம், வெள்ளி நகை உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சேலம்:
தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதி முறைகள் அமுலுக்கு வந்துள்ளதால் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் மேற்கு தாசில்தார் வள்ளி தலைமையிலான பறக்கும் படையினர் சேலம் திருவாக்கவுண்டனூர் ரவுண்டானா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அந்த காரில் ரூ.3 லட்சம் இருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக காரில் வந்த ஈரோட்டை சேர்ந்த சண்முகம் (வயது 50) என்பவரிடம் நடத்திய விசாரணையில் மருத்துவ மனையில சேர்த்துள்ள தாயின் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் இருந்து நண்பரிடம் அந்த பணத்தை வாங்கி வந்ததாக கூறினார்.
ஆனால் அதற்கான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதுகுறித்து தாசில்தார் வள்ளி மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் ரோகிணிக்கு தகவல் தெரிவித்தார். உடனே கலெக்டர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். பின்னர் போதிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை கருவூலத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார். பணத்தை கொண்டு வந்தவர் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று கலெக்டர் கூறினார்.
இதேபோல் வீரபாண்டி பகுதியில் பறக்கும் படை அதிகாரி செல்வகுமார் தலைமையிலான போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த காரை மறித்து சோதனை செய்தபோது அதில் ரூ.73 ஆயிரம் பணம் இருந்தது. இது தொடர்பாக காரை ஓட்டி வந்த சேலம் பேர்லேண்ட்ஸ் பகுதியை சேர்ந்த சேகர் (வயது 59) என்பவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் பவர்லூம் வைத்திருப்பதாகவும், தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக கொண்டு செல்வதாகவும் கூறினார். ஆனால் அவரிடம் ஆவணங்கள் ஏதும்இல்லாததால் அந்த பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் 33 பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் வியாபாரிகள் தொழில் அதிபர்கள் அத்தியாவசிய தேவைக்குகூட பணத்தை கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்