search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kozhukattai"

    மாலையில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஓர் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால், கேழ்வரகு கொழுக்கட்டை செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - ஒரு கப்
    பாசிப் பருப்பு - ஒரு கைப்பிடி
    தேங்காய்த் துருவல் - கால் கப்
    நாட்டுச் சர்க்கரை - கால் கப்
    ஏலக்காய் - 2
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    பாசிப்பருப்பை ஒரு வாணலியில் போட்டு சிறிது நேரம் வறுத்த பின்னர் குக்கரில் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும், குக்கரைத் திறந்து நீரை வடித்து, பருப்பை தனியாக வைத்துக் கொள்ளவும்.

    அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ராகி மாவைப் போட்டு 2 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு 1/2 கப் நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, வெல்லம் கரைந்ததும், இறக்கி குளிர வைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

    ஒரு அகன்ற பாத்திரத்தில் வறுத்த ராகி மாவு, பாசிப்பருப்பு, தேங்காய், வெல்லத் தண்ணீர், ஏலக்காய் பொடி சேர்த்து தண்ணீர் தெளித்து, மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.

    இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடேற்ற வேண்டும். தண்ணீர் சூடாவதற்குள், இட்லி தட்டில் பிசைந்து வைத்துள்ள மாவை கொழுக்கட்டைகளாகப் பிடித்து வைக்க வேண்டும்.

    தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், இட்லி தட்டை இட்லி பாத்திரத்தினுள் வைத்து, மூடி வைத்து 15 நிமிடம் வேக வைத்து இறக்கினால், கேழ்வரகு இனிப்பு கொழுக்கட்டை ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று குதிரைவாலி அரிசி, காராமணி சேர்த்து கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    குதிரைவாலி அரிசி - 1 கப்,
    காராமணி  - 2 டேபிள் ஸ்பூன்,
    துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்,
    சீரகம் - 1/2 டீஸ்பூன்,
    மிளகு - 1/4 டீஸ்பூன்,
    துருவிய தேங்காய் - 1/2 கப்,
    உப்பு - சுவைக்கேற்ப,
    தண்ணீர் - 2 1/4 கப்.

    தாளிக்க…

    எண்ணெய் - 1 1/2 டேபிள்ஸ்பூன்,
    கடுகு - 1/4 டீஸ்பூன்,
    உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்,
    பெருங்காயம் - ஒரு சிட்டிகை,
    பச்சை மிளகாய் - 1,
    கறிவேப்பிலை - தேவையான அளவு.



    செய்முறை :

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    காராமணியை 1/2 மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

    மிக்சியில் துவரம் பருப்பு, சீரகம், மிளகை போட்டு கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.

    அடுத்து அதில் குதிரைவாலி அரிசியை சேர்த்து ரவையாகப் பொடிக்கவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு, தாளித்த பின்னர் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

    நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் உடைத்த ரவை, வேக வைத்த காராமணி, துருவிய தேங்காய் போட்டு நன்கு கட்டியில்லாமல் கிளறவும். மிதமான தீயில் கிளறி, சேர்ந்து கெட்டியாக வந்ததும் இறக்கவும்.

    பொறுக்கும் சூடு வந்ததும் உருண்டைகளாகப் பிடித்து, இட்லி தட்டில் வைத்து, 15 நிமிடங்கள் வரை ஆவியில் வேக வைத்து எடுத்து சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.

    சூப்பரான குதிரைவாலி காராமணி பிடி கொழுக்கட்டை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையாருக்கு இன்று 150 கிலோ கொழுக்கட்டை படையலிடப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். #VinayagarChathurthi
    மலைக்கோட்டை:

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் இன்று காலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் மலைக்கோட்டையின் மேல் உள்ள உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகருக்கு படைப்பதற்காக 150 கிலோவில் பிரம்மாண்ட கொழுக்கட்டை தயாரிக்கப்பட்டது. அந்த கொழுக்கட்டையை இரண்டாக பிரித்து, உச்சிபிள்ளையாருக்கு 75 கிலோ, மாணிக்க விநாயகருக்கு 75 கிலோ என படைக்கப்பட்டது.

    முன்னதாக இன்று காலை 9மணியளவில் மடப்பள்ளியில் இருந்து தொட்டில் கட்டி கொழுக்கட்டையை மலை உச்சிக்கும், அடிவாரத்திற்கும் தூக்கி சென்று உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகருக்கு வைத்து படையல் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக கொழுக்கட்டைகள் வழங்கப்பட்டது. விழாவையொட்டி மலைக்கோட்டை கோவிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    வருகிற 26-ந்தேதி வரை விநாயகர் சதுர்த்தி விழா நடக்கிறது. இதில் தினமும் விநாயகர் வெவ்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இதே போல் திருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு கோவில்களில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவில்களுக்கு சென்று வழிபட்டனர். #VinayagarChathurthi #GaneshChathurthi
    இந்த விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு வகையான கொழுக்கட்டைகள் செய்வதை பார்த்து வருகிறோம். இன்று பேரீச்சம்பழ கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    நவீன மருத்துவ ஆய்வுகள் பேரிச்சம்  பழத்தை உணவில் சேர்ப்பது, உடல் வழியாக மூளையை ஊடுருவி நியூரோ டீஜெனெரேட்டிவ் எனப்படும் ஞாபக மறதி/மூளை சிதைவை உண்டாக்கும் இன்டெர்லுக்கின் (I L- 6)  போன்ற குறிப்பான்களை தடுத்து,  மூளை செல்களில் உண்டாகும் படலங்கள்  செல்களின் தொடர்பை வலுவிழக்க செய்து செல் சாவிற்கு  வழிவகுத்துவிடாமல் தடுக்கிறது. பேரீச்சம்பழத்தை பூரணமாக வைத்து கொழுக்கட்டைகளாக செய்து குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கொடுப்பது சிறந்த ஆரோக்கியமான தின்பண்டமாகவும் மூளை வளர்ச்சி மற்றும் ஞாபக சக்தியையும் அதிகரிக்கும் இயற்கை உணவாகும்.

    தேவையான பொருட்கள் :

    கிளறிய அணில் கொழுக்கட்டை மாவு 
    அரிந்த பேரிச்சம்பழம் - 50 கிராம் 
    அரிந்த பிஸ்தா/பாதம்
    முந்திரி 
    நெய் -1/2 டீ  ஸ்பூன் 
    தேங்காய் துருவல் 1/2 கப்  

    செய்முறை :

    பேரீச்சம்பழத்தை வாணலியில் போட்டு லேசாக  இளகியவுடன், மசித்து, அரிந்து வைத்துள்ள பாதம், பிஸ்தா, முந்திரி பருப்பு வகைகள் கலந்து இறக்கி நெய், தேங்காய் துருவல் சேர்த்து பூரணமாக்கி கொள்ளவும், அதை மேல் மாவுடன் சேர்த்து அச்சில் வைத்து பிடித்து 6-7 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.

    அணில் தயாரிப்புகளை ஆன்லைனில் பெற, இந்த லிங்க்கை கிளிக் செய்யவும் - https://shop.theanilgroup.com/
    இந்த விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு வகையான கொழுக்கட்டைகள் செய்வதை பார்த்து வருகிறோம். இன்று சாக்லேட் பனீர் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    திகட்டாத தின்பண்டத்தில் குழந்தைகளின் பட்டியலில் சாக்லேட்டிற்கே முதலிடம், அதிகமாக செயற்கை இனிப்பு மற்றும் ரசாயனங்கள் சேர்க்கப்படுவதால் உடல் நலம் கருதி பெற்றோர்கள் அதை வெகுவாக தவிர்த்தும் குழந்தைகளை கண்டித்தும் வருகின்றனர். ஆனால் சாக்லேட்டின் நன்மைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு? அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ள தூய கோகோ பவுடர் இருதய நோய்கள் வராமல் காத்து, தோலுக்கு ஊட்டமளிக்கும். அதனுடன் பனீர் சேர்த்து கொழுக்கட்டையாக, குழந்தைகளுக்கும் பெரியவர்களும் ஆரோக்கியமான இனிப்பாக சாப்பிட தரலாம். பன்னீரில் உள்ள புரோட்டீன் எலும்பு, பற்களுக்கு ஊட்டமளித்து, நல்ல எதிர்ப்புசக்தியை தூண்டுவதாகவும் வளர்ச்சிக்கும் உதவுகிறது.

    தேவையான பொருட்கள்:

    கிளறிய அணில் கொழுக்கட்டை மாவு 
    கோகோ பவுடர் - 1டேபிள் ஸ்பூன் 
    பனீர் துருவல் - 1 கப் 
    சர்க்கரை போடாத பால்கோவா -50 கிராம் 
    பொடித்த சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன் 
    பிஸ்தா, பாதம் சிறிதளவு

    செய்முறை :

    பனீர் துருவல், சர்க்கரை போபோடாத பால்கோவா, பொடித்த சர்க்கரை, பாதம் மற்றும் பிஸ்தாவை ஒன்றாக சேர்த்து பிசைந்து பூரணமாக தயார்செய்து கொள்ளவும். 

    மேல் மாவுடன் கோகோ பவுடரை சேர்த்து நன்றாக பிசைந்து தயாராக உள்ள பூரணத்தை அதனுள் வைத்து கொழுக்கட்டை அச்சில் பிடித்து 6-7 நிமிடங்கள்  வேகவைக்கவும். அணில் தயாரிப்புகளை ஆன்லைனில் பெற, இந்த லிங்க்கை கிளிக் செய்யவும் - https://shop.theanilgroup.com/
    இந்த விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு வகையான கொழுக்கட்டைகள் செய்வதை பார்த்து வருகிறோம். இன்று பால் கோவா கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :  

    மேல் மாவு செய்ய:


    கொழுக்கட்டை மாவு - ஒரு கப்,
    தண்ணீர் - ஒன்றே கால் கப்,
    உப்பு - சிட்டிகை,
    எண்ணெய் ஒரு டீஸ்பூன்.

    பூரணம் செய்ய:

    இனிப்பு கோவா - ஒரு கப்,
    உடைத்த பாதாம், முந்திரி - தலா 3 டீஸ்பூன்.



    செய்முறை :

    தண்ணீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். அதனுடன் கொழுக்கட்டை மாவை சேர்த்து கிளறி இறக்கவும். ஆறியதும் கைகளால் கட்டியில்லாமல் நன்கு அழுத்தி பிசையவும். இதுவே மேல் மாவு. பூரணம்

    ஒரு பாத்திரத்தில் இனிப்பு கோவா, உடைத்த பாதாம், முந்திரியை போட்டு ஒன்றாக சேர்த்து கலக்கவும். இதுவே பூரணம்.

    மேல் மாவை சிறிய கிண்ணங்களாக்கி நடுவே சிறிதளவு பூரணம் வைத்து மூடி ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.  

    சூப்பரான பால் கோவா கொழுக்கட்டை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு வகையான கொழுக்கட்டைகள் செய்வதை பார்த்து வருகிறோம். இன்று கேரட் அல்வா கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :  

    மேல் மாவு செய்ய:


    கொழுக்கட்டை மாவு - ஒரு கப்,
    தண்ணீர் - ஒன்றே கால் கப்,
    உப்பு - சிட்டிகை,
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

    அல்வா செய்ய :


    கேரட் துருவல் - அரை கப்,
    வெல்லத்தூள் - அரை கப்,
    தேங்காய்த் துருவல் - கால் கப்,
    நெய் - தேவைக்கு,
    ஏலக்காய்த்துள் - சிட்டிகை.



    செய்முறை :

    தண்ணீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். அதனுடன் கொழுக்கட்டை மாவை சேர்த்து கிளறி இறக்கவும். ஆறியதும் கைகளால் கட்டியில்லாமல் நன்கு அழுத்தி பிசையவும். இதுவே மேல் மாவு.

    அடிகனமான பாத்திரத்தில் சிறிதளவு நெய் விட்டு கேரட் துருவல் சேர்த்து வதக்கவும்.

    அதனுடன் தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கவும்.

    பிறகு வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி வேக விடவும். மேலே சிறிதளவு நெய் விட்டு சுருள கிளறி இறக்கவும். இதுவே பூரணம்.

    மேல் மாவை சிறிய கிண்ணங்களாக்கி நடுவே சிறிதளவு பூரணம் வைத்து மூடி ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.

    கேரட் அல்வா கொழுக்கட்டை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மகாராஷ்டிராவில் மோதகத்தை பொரித்து, விநாயகருக்கு படைப்பார்கள். இந்த வருடம் விநாயகருக்கு எப்போதும் செய்யப்படும் கொழுக்கட்டையை மட்டும் செய்யாமல், சற்று வித்தியாசமாக மோதகம் செய்து படைக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 2 கப்
    மைதா மாவு - 1/2 கப்
    நாட்டுச்சர்க்கரை - 1 கப்
    தேங்காய் - 1 கப் (துருவியது)
    ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
    நெய் - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)



    செய்முறை:

    கோதுமை மாவு மற்றும் மைதா மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, வெதுவெதுப்பான நீர் மற்றும் நெய் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து. 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும், தீயை குறைவில் வைத்து, தேங்காயைப் போட்டு பொன்னிறமாக வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு பௌலில் நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய் மற்றும் வதக்கி வைத்துள்ள தேங்காயைப் போட்டு, கிளறி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி, கையால் தட்டையாக தட்டி, அதன் நடுவே தேங்காய் கலவையை சிறிது வைத்து, நன்றாக மூடி தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    இதேப் போன்று அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும்.

    இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிடித்து வைத்துள்ள கொழுக்கட்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

    இப்போது சூப்பரான தேங்காய் வெல்ல மோதகம் ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று கேழ்வரகில் கார கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ராகி (கேழ்வரகு) மாவு - 2 கப்,
    அரிசி மாவு - ஒரு கப்,
    பச்சை மிளகாய் - 4,
    வெங்காயம் - ஒன்று,
    கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்,
    உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    எண்ணெய் - 4 டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:


    வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேழ்வரகு மாவு, அரிசி மாவை சேர்த்து வெறும் கடாயில் சூடுபட வறுக்கவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் தாளிக்கவும்.

    அடுத்து அதில் வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு புரட்டவும்.

    உப்பு சேர்த்துக் கிளறவும்.

    தேவையான அளவு தண்ணீர் விட்டு, கொதி வந்தவுடன் மாவு சிறிது சிறிதாக சேர்த்து கைவிடாமல் கிளறவும். கெட்டியானதும் இறக்கி ஆறவிடவும்.

    ஈரக் கையினால் மாவை சிறிது எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தட்டி வைக்கவும். தயாரித்தவற்றை இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

    சத்து நிறைந்த கேழ்வரகு கார கொழுக்கட்டை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    விநாயகர் சதுர்த்தி என்றாலே விதவிதமான கொழுக்கட்டை தான் ஸ்பெஷல். இன்று இனிப்பு பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - இரண்டு கப்
    வெல்லம் - ஒன்றை கப்
    ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்
    தண்ணீர் - நான்கு கப்
    துருவிய தேங்காய் - அரை மூடி



    செய்முறை :


    ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் மற்றும் வெல்லம் ஊற்றி அடுப்பில் வைத்து வெல்லம் கரைந்ததும் இறக்கி, வடிகட்டி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து அதில் வடிகட்டிய வெல்லக்கரைசலை ஊற்றி கைவிடாமல் கெட்டியாக கிளறவும்.

    ஆறியதும், மாவை கையால் கொழுக்கட்டை போல் பிடித்து வைக்கவும்.

    பிடித்த கொழுக்கட்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவி கட்டி வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான இனிப்பு பிடி கொழுக்கட்டை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிறுதானியங்களில் கொழுக்கட்டை செய்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று வரகு அரிசியில் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வரகு அரிசி - 250 கிராம்
    கருப்பட்டி - 100 கிராம்
    தண்ணீர் - 1/8 டம்ளர்
    உப்பு - மிகவும் சிறிதளவு (ஒரு பிஞ்ச்)
    ஏலக்காய் - 4 எண்ணம்
    தேங்காய் - ¼ மூடி


     
    செய்முறை :

    வரகு அரிசியை வெறும் வாணலியில் போட்டு நன்கு வறுத்து கொள்ளவும். அரிசியின் நிறம் மாறி வறுத்த வாசனை வந்ததும் இறக்கி ஆறயதும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.

    கருப்பட்டியை சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

    ஏலக்காயை தூளாக்கிக் கொள்ளவும்.

    தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.

    அரைத்த வரகு அரிசியுடன் சிறிதளவு உப்புச் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.

    அதனுடன் ஏலக்காய் தூள், துருவிய தேங்காய் ஆகியவற்றைச் சேர்க்கவும்.

    அடிகனமான பாத்திரத்தில் தூளாக்கிய கருப்பட்டியைப் போட்டு 1/8 டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். கருப்பட்டி கரைசல் கொதித்தவுடன் இறக்கி வடிட்டி வரகு அரிசி மாவில் ஊற்றி ஒரு கரண்டியால் நன்றாக கிளறவும்.

    இந்த மாவை கொழுக்கட்டைகளாக பிடித்து வைக்கவும்.

    பிடித்த வைத்த கொழுக்கட்டைகளை இட்லி பானையில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.

    சுவையான வரகு கருப்பட்டி கொழுக்கட்டை தயார்.

    விருப்பமுள்ளவர்கள் தேங்காயை பற்களாகக் கீறிப் போட்டு கொழுக்கட்டை தயார் செய்யலாம். விருப்பமுள்ளவர்கள் சுக்குப் பொடி சேர்த்து கொழுக்கட்டை தயார் செய்யலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு வகையான கொழுக்கட்டைகள் செய்வதை பார்த்து வருகிறோம். இன்று நட்ஸ் பூரண கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :  

    மேல் மாவு செய்ய:

    கொழுக்கட்டை மாவு - ஒரு கப்,
    தண்ணீர் - ஒன்றே கால் கப்,
    உப்பு - சிட்டிகை,
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

    பூரணம் செய்ய :

    பாதாம், முந்திரி, பிஸ்தா - தலா 20,
    சர்க்கரை - கால் கப்,
    ஏலக்காய் - 3.



    செய்முறை :

    தண்ணீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும்.

    அதனுடன் கொழுக்கட்டை மாவை சேர்த்து கிளறி இறக்கவும். ஆறியதும் கைகளால் கட்டியில்லாமல் நன்கு அழுத்தி பிசையவும். இதுவே மேல் மாவு.

    வெறும் வாணலியில் பாதாம், முந்திரி, பிஸ்தா ஆகியவற்றை தனித்தனியாக வறுத்தெடுக்கவும்.

    ஆறியதும் அதனுடன் சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக பொடித்த கொள்ளவும். இதுவே பூரணம்.

    மேல் மாவை சிறிய கிண்ணங்களாக்கி நடுவே சிறிதளவு பூரணம் வைத்து மூடி ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.

    நட்ஸ் பூரண கொழுக்கட்டை ரெடி.

    சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தையும் பயன்படுத்தலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×