search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kn nehru"

    திருவாரூர் இடைத்தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கி விட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கேஎன் நேரு பேசினார். #thiruvarurelection #dmk

    திருவாரூர்:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் விரைவில் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்திய தேர்தல் ஆணையம் எப்போது இடைத்தேர்தல் தேதி அறிவித்தாலும் அதனை நடத்துவதற்கு தயாராக உள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் அதிமுக, தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர். அரசியல் கட்சிகள் தொகுதி முழுவதும் தேர்தல் வாக்குசாவடி முகவர் அமைத்தல் தொடர்பான ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றன.

    இதன்படி கொரடாச்சேரி நகர, ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தி.மு.க. மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமை வகித்தார். கூட்டத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, உ.மதிவாணன், முன்னாள் எம்பி ஏ.கே.எஸ் விஜயன், தொ.மு.ச பொதுச்செயலாளர் சண்முகம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

    கூட்டத்தில் தி.மு.க. மாவட்டப் பொருளாளர் வெங்கடேசன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பாலச்சந்தர், சேகர் கலியபெருமாள், தேவா, நகர செயலாளர் பிரகாஷ், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் தாழை அறிவழகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சேசுராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நேரு பேசும்போது கூறியதாவது:-

    திருவாரூர் சட்டமன்ற தொகுதியானது தி.மு.க. தொடர்ந்து வெற்றி பெற்றுவரும் தொகுதியாகும். திருவாரூர் தொகுதிக்கு மருத்துவக்கல்லூரி, மத்திய பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பயன்தர தக்க பணிகளை தலைவர் கருணாநிதி செய்துள்ளார். வரவுள்ள இடைத்தேர்தலிலும் தி.மு.க. அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். எப்போது தேர்தல் அறிவித்தாலும் வெற்றியை எளிதாக பெறும் வகையில் தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கி விடவேண்டும். வாக்குசாவடி முகவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வாக்காளர்களை சந்தித்து நமது வெற்றியை உறுதி செய்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #thiruvarurelection #dmk

    திருவாரூர் இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற பாடுபடுவோம் என்று நிர்வாகிகள் கூட்டத்தில் கே.என்.நேரு பேசினார். #thiruvarurelection #dmk

    திருவாரூர்:

    திருவாரூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களாக திருச்சி மாவட்ட செயலாளர் கே.என்.நேரு முன்னாள் அமைச்சர் உ.மதிவாணன் எம்எல்ஏ, முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ். விஜயன் உள்ளிட்டோரை திமுக தலைமை கழகம் நியமித்துள்ளது.

    இதனையடுத்து முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தேர்தல் பொறுப்பாளர்கள் முன்னாள் அமைச்சர் மதிவாணன், முன்னாள் எம்பி விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் மற்றும் ஒன்றிய, நகர, ஊராட்சி, பேரூராட்சி, ஊராட்சி செயலாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் இடைத்தேர்தலை சந்திப்பது குறித்து கருத்துகளையும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    கூட்டத்தில் பேசிய தேர்தல் பொறுப்பாளர் கே.என்.நேரு பேசியபோது கூறியதாவது, திருவாரூர் சட்டமன்ற தொகுதி மறைந்த திமுக தலைவரை தமிழகத்தில் அதில் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த தொகுதி, எனவே இடைத்தேர்தலில் அயராது பாடுபட்டு எந்த தயக்கமின்றி நேர்மையாக சந்தித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று வெற்றியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் சமர்ப்பிக்க பாடுபடுவோம் என தெரிவித்தார். #thiruvarurelection #dmk

    திருச்சியில் 14-ந் தேதி திமுக செயற்குழு கூட்டம் நடக்கிறது. என்று மாவட்ட செயலாளர் கேஎன் நேரு எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #knnehrumla
    திருச்சி:

    திருச்சியில் மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 14-ந் தேதி நடக்கிறது. இது குறித்து திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் ஆகியோர் கூட்டாக  வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது:-

    திருச்சி மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 14-ந் தேதி காலை 9 மணிக்கு  திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடக்கிறது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம், அம்பிகாபதி ஆகியோர் தலைமை தாங்குகின்றனர். இந்த கூட்டத்தில் மாவட்ட,மாநகர நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து ஒன்றிய நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் அமைப் பாளர்கள், துணை அமைப் பாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், கழக முன்னோடிகள் உள்ளிட்ட அனை வரும் தவறாமல் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும். 

    விழுப்புரத்தில் வருகிற 15-ந் தேதி நடக்கும் முப்பெரும் விழா, 18-ந் தேதி ஊழல் அ.தி.மு.க. அரசை கண்டித்து நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டம், கழக ஆக்கப் பணிகள் குறித்து ஆலோசிக்க இந்த கூட்டம் நடைபெறுகிறது.

    இவ்வாறு அந்த அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. #knnehrumla
    சொத்து வரி உயர்வை கண்டித்து வருகிற 27-ந்தேதி திருச்சி மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

    திருச்சி:

    முன்னாள் அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.என்.நேரு எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை திடீரென உயர்த்திய அ.தி.மு.க. அரசு மக்களை பேரதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

    எனவே கடுமையான இந்த சொத்து வரி உயர்வை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும், வருகிற 27.7.2018 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10 மணியளவில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை, துவாக்குடி நகராட்சி, மணப்பாறை நகராட்சி, துறையூர் நகராட்சி ஆகிய நகராட்சி அலுவலகங்கள் முன்பு (காவல்துறை அனுமதிக்கும் இடம்) திருச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற இருக்கிறது.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, மாநகர கழக நிர்வாகிகள், அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளைக்கழக செயலாளர்கள், முன்னாள், இந்நாள் சட்ட மன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக முன்னோடிகள், செயல்வீரர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு இக்கண்டன ஆர்ப்பாட்டத்தை மாபெரும் வெற்றியடைய செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

    தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் 3-வது கட்டமாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. #DMK #CBI #Ramajeyam
    திருச்சி:

    திருச்சியை சேர்ந்த தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு எம்.எல்.ஏ.வின் சகோதரர் ராமஜெயம். தொழிலதிபரான இவர் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29-ந்தேதி அதிகாலை வீட்டில் இருந்து நடைபயணம் சென்ற போது கடத்தி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக முதலில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால் விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது.

    சம்பவம் நடந்து 6 ஆண்டுகளை கடந்தும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் ராமஜெயம் மனைவி லதா, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சில ஆண்டுகளுக்கு முன் தாக்கல் செய்த மனுவில், சம்பவம் நடந்து 32 மாதங்களாகியும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதன் காரணமாக குடும்பத்தினர் அனைவரும் மிகவும் மன வருத்தத்தில் இருக்கிறோம். எனவே இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என கூறியிருந்தார்.

    மனுவை விசாரித்த நீதிமன்றம், 2015 ஜனவரி 8-ந்தேதிக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டது. அதன்பின் விசாரணை சூடுபிடித்தது. ஆனாலும் குற்றவாளிகளை பிடிக்க முடியவில்லை.

    இருப்பினும் சி.பி.சி.ஐ.டி.க்கு பல முறை கோர்ட்டு அவகாசம் அளித்தது. எனினும் இதில் முன்னேற்றம் ஏற்படாததால் வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 7-ந்தேதி மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


    இதைத்தொடர்ந்து திருச்சியில் ராமஜெயம் கொலை வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து சி.பி.ஐ. இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் , முதல் கட்ட விசாரணையை கடந்த ஜனவரி மாதம் 26-ந்தேதி தொடங்கினார். ராமஜெயம் உடல் கிடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அதன்பின்னர் மார்ச் மாதம் அதிகாரிகள் திருச்சி வந்து விசாரணை நடத்தினர். தற்போது கடந்த 16-ந்தேதி திருச்சி வந்த சி.பி.ஐ. அதிகாரிகள், சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் அளித்த ஆவணங்களை கொண்டு ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாக்கிங் சென்றதாக கூறப்படும் இடங்கள் மற்றும் வீடு அமைந்துள்ள இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் தொடர்ந்து ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக 3-வது கட்டமாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #DMK #CBI #Ramajeyam

    நிர்வாகிகள் கடுமையாக உழைத்தால் வருகிற தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்று முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.என்.நேரு பேசினார். #knnehru
    திருச்சி:

    திருச்சி உள்ள கலைஞர் அறிவாலயத்தில் வருகின்ற தேர்தலில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் அமைப்பது குறித்து மாவட்ட,  மாநகர,  ஒன்றிய, பகுதி, பேரூர் கழக, ஆலோசனைக்கூடம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட தி.மு. க. செயலாளருமான கே.என். நேரு பேசியதாவது:-

    டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் பாராளுமன்ற தேர்தல் வர வாய்ப்பிருக்கிறது. அ.தி.மு.க.வை பற்றி நாம் கவலை பட வேண்டியதில்லை. அவர்களுக்குள்ளாகவே ஓட்டுக்களை பிரித்துக் கொள்வார்கள். பாரதிய ஜனதா கட்சி  கூட்டணிக்காக  மற்ற கட்சிகளை தேடிக் கொண்டிருக்கிறது. நாம் அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை. நாம் ஒவ்வொரு பூத்திற்கும் உணர்வுப்பூர்வமாக, உண்மையாக உழைக்க கூடிய கழக உறுப்பினர்களை தேடி அவர்களை  தயார் செய்ய வேண்டும். 

    அதற்கான வேலைகளை உடனடியாக தொடங்க வேண்டும். இதில் தாமதம் கூடாது. உடனடியாக பூத் கமிட்டி அமைக்க வேலைகளை  தொடங்க வேண்டும். இந்த  தேர்தலில் கடுமையாக, உண்மையாக, உணர்வு பூர்வமாக உழைத்தால் வெற்றி நிச்சயம் என்று கூறினார். அனைத்து  நிர்வாகிகளுக்கும் பூத்  கமிட்டி விண்ணப்ப படிவங்களை நேரடியாக வழங்கி உற்சாகப்படுத்தினார். கூட்டத்தில் எம்.எல்.ஏ. ஸ்டாலின் குமார், மாநகர செயலாளர் அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன், தொழிலதிபர் ஜான்சன்குமார், அபூர்வா மணி, மாவட்ட துணை செயலாளர் குடமுருட்டி சேகர், அவைத் தலைவர்  பேரூர் தர்மலிங்கம், அம்பிகாபதி, ஒன்றி செயலாளர் குண்டூர் மாரியப்பன், பகுதி செயலாளர் மோகன்தாஸ் உள்பட நிர்வாகிகள்  பலர் கலந்து கொண்டனர். #knnehru #tamilnews
    கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின் போது விதிமீறிய வழக்கில் கே.என்.நேரு, 3 எம்எல்ஏக்கள் திருச்சி கோர்ட்டில் ஆஜராகினர்.

    திருச்சி:

    கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க. வேட்பாளர் பட்டியல் மே மாதம் வெளியிடப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட தி.மு.க. மாவட்ட செயலாளர் கே.என்.நேரு, மற்றும் மகேஷ் பொய்யாமொழி, சவுந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், கணேசன் உள்ளிட்டவர்கள் சத்திரம் பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    அப்போது அனுமதி பெறாமல் மாலை அணிவித்ததால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக கே.என்.நேரு உள்ளிட்ட 9 பேர் மீது கோட்டை போலீஸ் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    இந்த வழக்கில் கடந்த 4-ந்தேதி விசாரணை நடைபெற்ற போது தி.மு.க.வினர் ஆஜராகவில்லை. இன்று மீண்டும் விசாரணை நடை பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, எம்.எல்.ஏக்கள் மகேஷ் பொய்யாமொழி, சவுந்திரபாண்டியன், ஸ்டாலின்குமார், வடக்கு மாவட்ட செலாளர் காடு வெட்டி தியாகராஜன், திருச்சி மாநகர செயலாளர் அன்பழகன், அப்போதைய வேட்பாளர்கள் பழனியாண்டி, கணேசன் ஆகியோர் ஆஜராகினர்.

    அப்போது சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் வழக்கு தொடர்பாக என்ன கூறுகிறீர்கள் என்று கே. என்.நேரு உள்ளிட்டவர்களிடம் நீதிபதி கவுதமன் கேட்டார். அதற்கு அவர்கள் இதில் உண்மையில்லை என்று கூறினர்.

    இதை தொடர்ந்து இந்த வழக்கில் விசாரணை வருகிற 30.5.2018 அன்று நீதிபதி கவுதமன் ஒத்தி வைத்தார். இன்று கே.என்.நேரு உள்ளிட்டவர்கள் ஆஜராக வந்த போது அவர்களுடன் முன்னாள் எம்.எல்.ஏக்கள் அன்பில் பெரியசாமி, கே. என்.சேகரன், வக்கீல்கள் பாஸ்கர், ஓம்.பிரகாஷ், தி.மு.க. பகுதி செயலாளர்கள் கண்ணன், மோகன்தாஸ், தர்மராஜ், இளங்கோவன், பாலமுருகன், முத்துசெல்வம், கிராப்பட்டி செல்வம், ராமதாஸ், வட்ட செயலாளர் நாகராஜ், மற்றும் பலர் உடன் வந்தனர். 

    ×