search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கே.என்.நேரு"

    • நகராட்சித்துறை சார்பில் நிறைவடைந்த பாதாள சாக்கடை திட்டப்பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நிறைவடைந்த பாதாள சாக்கடை திட்டப்பணிகளின் தொடக்க விழா நடந்தது.

    கலெக்டர் ஆஷாஅஜீத் தலைமை தாங்கினார். காரைக்குடி நகரசபை தலைவர் முத்து துரை முன்னிலை வகித்தார். மாங்குடி எம்.எல்.ஏ. வரவேற்றார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ தாஸ்மீனா, குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா ஆகியோர் திட்ட விளக்கவுரை யாற்றினர்.

    புதிய பாதாள சாக்கடை திட்டப்பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, ெபரியகருப்பன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பின்னர் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், காரைக்குடி நகராட்சிப் பகுதிக்கென நகராட்சி நிர்வாகத்துறையின் மூலம் தற்போது ரூ.140.13 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களிடம் இருந்து சேகரிக்கப்படும் வீட்டு கழிவுநீர் நாளொன்றுக்கு நபர் ஒன்றுக்கு 110 லிட்டர் என்ற அளவில் கணக்கிடப்பட்டு, அதனடிப்படையில் கழிவுநீர் சேகரிப்பு குழாய்கள் வலை அமைப்பு வடிவ மைக்கப்பட்டு திட்ட செயலாக்கம் மற்றும் பராமரிப்புக்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப் பட்டு பணிகள் நிறைவு பெற்றுள்ளது என்றார்.

    அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில், காரைக்குடி நகராட்சி பகுதியில் உள்ள ஒவ்வொரு வார்டுகளிலும் பொதுமக்களுக்கு தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி, மின் வசதி, சுகாதார வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கைகளின் அடிப்படையில் கூடுதலாகவும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் கோரிக்கைகள் தொடர்பாக, கலெக்டர் அலுவலகத்திலோ அல்லது தங்களது பகுதி களுக்குட்பட்ட மக்கள் பிரதிநிதிகள் வாயிலாகவோ அல்லது முதல்வரின் முகவரி என்ற இணையதளத்தின் வாயிலாகவோ, இ.சேவை மையம் மூலமாகவோ மனுக்கள் அளித்து, அதன்மூலம் தீர்வு பெற்று, பயன்பெறலாம் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில், காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துத்துரை, துணைத்தலைவர் குணசேகரன், திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முதல்வா் மு.க.ஸ்டாலின் நகராட்சி நிா்வாகத் துறைக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா்.
    • பொதுமக்களின் குறைதீா்க்கும் கட்டணமில்லா தொலைபேசி எண் 155304 சேவை ஆகியவற்றை அமைச்சா்கள் தொடக்கிவைத்தனா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நகராட்சி நிா்வாகத் துறையின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி திட்டப்பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமை வகித்து நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு பேசியதாவது:-

    முதல்வா் மு.க.ஸ்டாலின் நகராட்சி நிா்வாகத் துறைக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் பொலிவுறு நகரத் திட்டத்தின்கீழ் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீா் அபிவிருத்தித் திட்டம், ஒருங்கிணைந்த மேலண்மை மற்றும் கட்டுப்பாட்டு மையம், புதிய குடிநீா்த் திட்டப் பணிகள், பாதாள சாக்கடை திட்டப் பணிகள், மாநாட்டு அரங்கம் கட்டுதல், நவீன பேருந்து நிலையம், பல அடுக்கு வாகன நிறுத்துமிடம், தினசரி மற்றும் வாரசந்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேவேளையில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான சாலை அமைத்தல், தெருவிளக்கு அமைத்தல், குடிநீா் வசதி உள்ளிட்டவற்றை உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

    இதைத் தொடா்ந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சோ்ந்த சாலையோர வியாபாரிகள் 17 பேருக்கு தொழில் தொடங்க ரூ.24 லட்சம் மதிப்பிலானவங்கிக் கடனுதவி, ஒரு குரல் புரட்சி திட்டத்தின்கீழ் பொதுமக்களின் குறைதீா்க்கும் கட்டணமில்லா தொலைபேசி எண் 155304 சேவை ஆகியவற்றை அமைச்சா்கள் தொடக்கிவைத்தனா்.

    கூட்டத்தில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் (நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல்) சிவ்தாஸ் மீனா, மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத், திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் கு.சண்முகசுந்தரம், மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், துணைமேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், நகராட்சி நிா்வாக இயக்குநா் பி.பொன்னையா, மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    • கட்டணம் இல்லா தொலைபேசி சேவை எண் 155304 திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • புகார் தெரிவித்ததும் அது தொடர்பான குறுஞ்செய்தி அவர்களின் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியில் 'ஒரு குரல் புரட்சி' என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதனை இன்று நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

    மாநகராட்சியில் உள்ள மக்களின் அடிப்படை தேவைகள் குறித்த 300-க்கும் மேற்பட்ட பிரிவு புகார்களை தெரிவித்து உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில் கட்டணம் இல்லா தொலைபேசி சேவை எண் 155304 திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார். பல்துறைகள் இதில் இணைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் புகார் தெரிவித்ததும் அது தொடர்பான குறுஞ்செய்தி அவர்களின் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும். குறிப்பிட்ட கால அளவுக்கு அந்த குறைகள் நிவர்த்தி செய்து அது தொடர்பாகவும் குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும். குறிப்பிட்ட கால அளவுக்கு மேல் அந்தப் புகார் நிவர்த்தி செய்யாத பட்சத்தில் மேயர் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வை வரை அந்த புகார் சென்று விரைந்து நடவடிக்கை எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் கீழ் இந்த சேவை தொடங்கி உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், க.செல்வராஜ் எம்.எல்.ஏ., கலெக்டர் வினீத், மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் பங்கேற்றனர்.

    இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகம், நகர் பகுதி மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக பணி ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.என். நேரு பங்கேற்று ஆய்வு செய்தார்.திருப்பூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்ட பணிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    ×