search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடுமையாக உழைத்தால் வரும் தேர்தலில் வெற்றி நிச்சயம்: கே.என்.நேரு பேச்சு
    X

    கடுமையாக உழைத்தால் வரும் தேர்தலில் வெற்றி நிச்சயம்: கே.என்.நேரு பேச்சு

    நிர்வாகிகள் கடுமையாக உழைத்தால் வருகிற தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்று முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.என்.நேரு பேசினார். #knnehru
    திருச்சி:

    திருச்சி உள்ள கலைஞர் அறிவாலயத்தில் வருகின்ற தேர்தலில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் அமைப்பது குறித்து மாவட்ட,  மாநகர,  ஒன்றிய, பகுதி, பேரூர் கழக, ஆலோசனைக்கூடம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட தி.மு. க. செயலாளருமான கே.என். நேரு பேசியதாவது:-

    டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் பாராளுமன்ற தேர்தல் வர வாய்ப்பிருக்கிறது. அ.தி.மு.க.வை பற்றி நாம் கவலை பட வேண்டியதில்லை. அவர்களுக்குள்ளாகவே ஓட்டுக்களை பிரித்துக் கொள்வார்கள். பாரதிய ஜனதா கட்சி  கூட்டணிக்காக  மற்ற கட்சிகளை தேடிக் கொண்டிருக்கிறது. நாம் அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை. நாம் ஒவ்வொரு பூத்திற்கும் உணர்வுப்பூர்வமாக, உண்மையாக உழைக்க கூடிய கழக உறுப்பினர்களை தேடி அவர்களை  தயார் செய்ய வேண்டும். 

    அதற்கான வேலைகளை உடனடியாக தொடங்க வேண்டும். இதில் தாமதம் கூடாது. உடனடியாக பூத் கமிட்டி அமைக்க வேலைகளை  தொடங்க வேண்டும். இந்த  தேர்தலில் கடுமையாக, உண்மையாக, உணர்வு பூர்வமாக உழைத்தால் வெற்றி நிச்சயம் என்று கூறினார். அனைத்து  நிர்வாகிகளுக்கும் பூத்  கமிட்டி விண்ணப்ப படிவங்களை நேரடியாக வழங்கி உற்சாகப்படுத்தினார். கூட்டத்தில் எம்.எல்.ஏ. ஸ்டாலின் குமார், மாநகர செயலாளர் அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன், தொழிலதிபர் ஜான்சன்குமார், அபூர்வா மணி, மாவட்ட துணை செயலாளர் குடமுருட்டி சேகர், அவைத் தலைவர்  பேரூர் தர்மலிங்கம், அம்பிகாபதி, ஒன்றி செயலாளர் குண்டூர் மாரியப்பன், பகுதி செயலாளர் மோகன்தாஸ் உள்பட நிர்வாகிகள்  பலர் கலந்து கொண்டனர். #knnehru #tamilnews
    Next Story
    ×