என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » kidambi srikanth
நீங்கள் தேடியது "Kidambi Srikanth"
மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இன்று நடைபெற்ற அரையிறுதி சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் கிதாம்பி தோல்வியடைந்து கோப்பையை வெல்லும் வெற்றி வாய்ப்பை இழந்தனர். #MalaysianOpenBadminton #Pvsindhu #KidambiSrikanth
கோலாலம்பூர்:
மலேசிய ஓபன் பேட்மிண்டன் அரையிறுதி போட்டி கோலாலம்பூரில் இன்று நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து, உலகின் நம்பர் 1 வீராங்கனையான சீனாவின் தை டுசு யிங் மோதினர். மிகவும் சிறப்பாக விளையாடிய சீன வீராங்கனை சிந்துவை தோற்கடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார். சிந்து சிறப்பாக விளையாடினாலும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. இது தையுடன் மோதி சிந்து தோல்வியடையும் 5 வது போட்டி இதுவாகும்.
இதற்கிடையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிதாம்பி தோல்வியடைந்தார். இவர் ஜப்பானின் கெண்டோ மோமட்டவை எதிர்க்கொண்டார். ஸ்ரீகாந்த் 13-21, 13-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். இதன் மூலம் இந்தியாவைச் சேர்ந்த இருவரும் இறுதி போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தனர். #MalaysianOpenBadminton #Pvsindhu #KidambiSrikanth
மலேசிய ஓபன் பேட்மிண்டன் அரையிறுதி போட்டி கோலாலம்பூரில் இன்று நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து, உலகின் நம்பர் 1 வீராங்கனையான சீனாவின் தை டுசு யிங் மோதினர். மிகவும் சிறப்பாக விளையாடிய சீன வீராங்கனை சிந்துவை தோற்கடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார். சிந்து சிறப்பாக விளையாடினாலும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. இது தையுடன் மோதி சிந்து தோல்வியடையும் 5 வது போட்டி இதுவாகும்.
இதற்கிடையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிதாம்பி தோல்வியடைந்தார். இவர் ஜப்பானின் கெண்டோ மோமட்டவை எதிர்க்கொண்டார். ஸ்ரீகாந்த் 13-21, 13-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். இதன் மூலம் இந்தியாவைச் சேர்ந்த இருவரும் இறுதி போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தனர். #MalaysianOpenBadminton #Pvsindhu #KidambiSrikanth
மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடர் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், பிவி சிந்து ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். #MalaysiaOpenbadminton #PVSindhu #KidambiSrikanth
கோலாலம்பூர்:
மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடர் போட்டிகள் கோலாலம்பூர் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான இரண்டாவது சுற்று போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், தாய்வானின் வாங் சூ-வேவை எதிர்கொண்டார். இதன் முதல் செட்டை ஸ்ரீகாந்த் 22-20 என போராடி கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டில் அதிரடியாக விளையாடிய ஸ்ரீகாந்த் 21-12 என எளிதாக கைப்பற்றினார். இதன்மூலம் 22-20, 21-12 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற ஸ்ரீகாந்த் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். அவர் காலிறுதி போட்டியில் பிரான்சின் ரிரைஸ் லெவர்டெசை எதிர்கொள்ள இருக்கிறார்.
பெண்கள் பிரிவில் நடைபெற்ற இரண்டாவது சுற்று போட்டி ஒன்றில் மூன்றாம் நிலை வீராங்கனையான பிவி சிந்து, மலேசியாவில் லீ யிங் யிங்கை எதிர்கொண்டார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய சிந்து முதல் இரண்டு செட்டையும் 21-8, 21-14 என்ற நேர் செட்களில் கைப்பற்றி வெற்றி பெற்றார். அவர் காலிறுதி போட்டியில் ஸ்பெயினின் கரோலினா மரினை எதிர்கொள்கிறார்.
சாய்னா நேவால், பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த், எச்.எஸ். பிரனோய் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனையான சாய்னா நேவால், ஹாங்காங் வீராங்கனையான யிப் புய் யின்னை எதிர்கொண்டார்.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய சாய்னா முதல் செட்டை 21-12 என எளிதாக கைப்பற்றினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் இரண்டாவது செட்டையும் 21-16 என கைப்பற்றினார்.
இறுதியில் 21-12, 21-16 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற சாய்னா நேவால் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். சாய்னா தனது இரண்டாவது சுற்று ஆட்டத்தில் இரண்டாம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அகனே யமகுச்சியை எதிர்கொள்கிறார். #MalaysiaOpenbadminton #PVSindhu #KidambiSrikanth
கோலாலம்பூரில் நடைபெற்று வரும் மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு முன்னேறினார். #Srikanth
கோலாலம்பூர்:
மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-18, 21-9 என்ற நேர்செட்டில் டென்மார்க் வீரர் ஜான் ஜோர்ஜென்செனை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 26-24, 21-15 என்ற நேர்செட்டில் ஜப்பான் வீராங்கனை அயா ஒஹோரியை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத் 12-21, 7-21 என்ற நேர்செட்டில் சீன தைபே வீரர் வாங் சு வெய்யிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.
மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-18, 21-9 என்ற நேர்செட்டில் டென்மார்க் வீரர் ஜான் ஜோர்ஜென்செனை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 26-24, 21-15 என்ற நேர்செட்டில் ஜப்பான் வீராங்கனை அயா ஒஹோரியை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத் 12-21, 7-21 என்ற நேர்செட்டில் சீன தைபே வீரர் வாங் சு வெய்யிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.
எம்எஸ் டோனியின் கையெழுத்திட்ட பேட்டை வாங்கிய சந்தோசத்தில் முன்னணி பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி மிகுந்த சந்தோசத்தில் திளைக்கிறார். #MSDhoni
இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி. இவருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சமீபத்தில் எம்எஸ் டோனி அணியும் 7-ம் எண் ஜெர்ஸியில் வீரர்கள் கையெழுத்திட்டு வழங்கியது. இதனால் ஸ்ரீகாந்த் கிதாம்பி மிகுந்த சந்தோசம் அடைந்தார்.
இந்நிலையில் டோனி கையெழுத்திட்டு வழங்கிய பேட்டை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ஸ்ரீகாந்த் கிதாம்பி மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் ‘‘மிகவும் அற்புதமான பரிசை அளித்ததற்காக எம்எஸ் டோனிக்கு நன்றி. நான் எப்படி சந்தோசம் அடைகிறேன் என்பதை என்னால் சொல்ல முடியவில்லை’’ என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் டோனி கையெழுத்திட்டு வழங்கிய பேட்டை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ஸ்ரீகாந்த் கிதாம்பி மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் ‘‘மிகவும் அற்புதமான பரிசை அளித்ததற்காக எம்எஸ் டோனிக்கு நன்றி. நான் எப்படி சந்தோசம் அடைகிறேன் என்பதை என்னால் சொல்ல முடியவில்லை’’ என்று பதிவிட்டுள்ளார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X