search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மலேசியா ஓபன் பேட்மிண்டன் - ஸ்ரீகாந்த், சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்
    X

    மலேசியா ஓபன் பேட்மிண்டன் - ஸ்ரீகாந்த், சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்

    மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடர் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், பிவி சிந்து ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். #MalaysiaOpenbadminton #PVSindhu #KidambiSrikanth

    கோலாலம்பூர்:

    மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடர் போட்டிகள் கோலாலம்பூர் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான இரண்டாவது சுற்று போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், தாய்வானின் வாங் சூ-வேவை எதிர்கொண்டார். இதன் முதல் செட்டை ஸ்ரீகாந்த் 22-20 என போராடி கைப்பற்றினார்.

    இரண்டாவது செட்டில் அதிரடியாக விளையாடிய ஸ்ரீகாந்த் 21-12 என எளிதாக கைப்பற்றினார். இதன்மூலம் 22-20, 21-12 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற ஸ்ரீகாந்த் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். அவர் காலிறுதி போட்டியில் பிரான்சின் ரிரைஸ் லெவர்டெசை எதிர்கொள்ள இருக்கிறார்.

    பெண்கள் பிரிவில் நடைபெற்ற இரண்டாவது சுற்று போட்டி ஒன்றில் மூன்றாம் நிலை வீராங்கனையான பிவி சிந்து, மலேசியாவில் லீ யிங் யிங்கை எதிர்கொண்டார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய சிந்து முதல் இரண்டு செட்டையும் 21-8, 21-14 என்ற நேர் செட்களில் கைப்பற்றி வெற்றி பெற்றார். அவர் காலிறுதி போட்டியில் ஸ்பெயினின் கரோலினா மரினை எதிர்கொள்கிறார்.

      சாய்னா நேவால், பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த், எச்.எஸ். பிரனோய் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனையான சாய்னா நேவால், ஹாங்காங் வீராங்கனையான யிப் புய் யின்னை எதிர்கொண்டார்.

    இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய சாய்னா முதல் செட்டை 21-12 என எளிதாக கைப்பற்றினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் இரண்டாவது செட்டையும் 21-16 என கைப்பற்றினார். 

    இறுதியில் 21-12, 21-16 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற சாய்னா நேவால் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். சாய்னா தனது இரண்டாவது சுற்று ஆட்டத்தில் இரண்டாம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அகனே யமகுச்சியை எதிர்கொள்கிறார். #MalaysiaOpenbadminton #PVSindhu #KidambiSrikanth
    Next Story
    ×