search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்எஸ் டோனியின் கையெழுத்திட்ட பேட்டை வாங்கிய சந்தோசத்தில் பேட்மிண்டன் வீரர்
    X

    எம்எஸ் டோனியின் கையெழுத்திட்ட பேட்டை வாங்கிய சந்தோசத்தில் பேட்மிண்டன் வீரர்

    எம்எஸ் டோனியின் கையெழுத்திட்ட பேட்டை வாங்கிய சந்தோசத்தில் முன்னணி பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி மிகுந்த சந்தோசத்தில் திளைக்கிறார். #MSDhoni
    இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி. இவருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சமீபத்தில் எம்எஸ் டோனி அணியும் 7-ம் எண் ஜெர்ஸியில் வீரர்கள் கையெழுத்திட்டு வழங்கியது. இதனால் ஸ்ரீகாந்த் கிதாம்பி மிகுந்த சந்தோசம் அடைந்தார்.



    இந்நிலையில் டோனி கையெழுத்திட்டு வழங்கிய பேட்டை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ஸ்ரீகாந்த் கிதாம்பி மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார்.



    இதுகுறித்து டுவிட்டரில் ‘‘மிகவும் அற்புதமான பரிசை அளித்ததற்காக எம்எஸ் டோனிக்கு நன்றி. நான் எப்படி சந்தோசம் அடைகிறேன் என்பதை என்னால் சொல்ல முடியவில்லை’’ என்று பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×