search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "karnataka CM"

    கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்கும் விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் கலந்துகொள்ள இருக்கிறார். #Kumaraswamy #KarnatakaCM #MKStalin #PinarayiVijayan

    புதுடெல்லி :

    கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே எடியூரப்பா தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி சார்பில் ஆட்சி அமைக்க உள்ளது. ஆட்சியமைக்க உரிமை கோரி மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி கவர்னரை சந்தித்து பேசினார். அப்போது ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார்.

    அதன் அடிப்படையில் நாளை (23-ந்தேதி) கர்நாடக முதல்- மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்க உள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். இந்த பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒத்த கருத்துடைய கட்சி தலைவர்கள் பங்கேற்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. 



    அந்த வகையில் கேரள முதல்வர் பினராயி விஜயன், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை ஏற்று பினராயி விஜயனும், ஸ்டாலினும் நாளை பெங்களூரு சென்று பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க உள்ளனர். 

    இதுதவிர காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திரப்பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், நடிகர் கமல்ஹாசன் ஆகியோரும் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டுள்ளது. #Kumaraswamy #KarnatakaCM #MKStalin #PinarayiVijayan
    கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும் சூழல் உள்ளது. முதலமைச்சராக எடியூரப்பா 17-ம் தேதி பதவியேற்க உள்ளார். #KarnatakaElections #KarnatakaVerdict #Yeddyurappa
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் கடந்த 12-ம்தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவான நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

    தொடக்கத்தில் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. இரு கட்சிகளும் மாறிமாறி முன்னிலை பெற்றன. 9 மணிக்குப் பிறகு நிலைமை மாறியது. ஆட்சியமைக்க 112 இடங்கள் தேவை என்ற நிலையில், பா.ஜ.க அந்த மேஜிக் எண்ணை நெருங்கியது. 11.30 மணி நிலவரப்படி பா.ஜ.க. 114 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. இதன்மூலம் பா.ஜ.க. அதிக தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கிறது. கர்நாடகா முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க உள்ளார்.

    தேர்தல் அன்றே செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா, கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். 17-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என்றும், விழாவிற்கு பிரதமர் மோடியை அழைப்பதற்காக 15ம் தேதி டெல்லி செல்ல உள்ளதாகவும் கூறினார்.



    அவர் கூறியபடி இன்று தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு சாதகமாக உள்ளதால் எடியூரப்பா மிகுந்த உற்சாகத்தில் உள்ளார்.  தனது இல்லத்தில் வழிபாடு நடத்திய அவர், நிருபர்களிடம் கூறும்போது, 17-ம் தேதி பதவியேற்பு விழா நடக்கும் என்று தகவல் தெரிவித்து உள்ளார். பதவியேற்பு விழாவுக்காக கன்டீராவா ஸ்டேடியத்தை முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன. #KarnatakaElections #KarnatakaVerdict #Yeddyurappa
    ×