search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IREvIND"

    • இந்திய அணி அடுத்த மாதம் அயர்லாந்து சென்று 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.
    • இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார்

    வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இந்த தொடர் முடிந்ததும் அடுத்த மாதம் அயர்லாந்து சென்று 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் புதுமுக வீரர்களை கொண்டே இந்த தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.

    இந்நிலையில் இந்த தொடரில் 2 இந்திய வீரர்களுடன் டி20-யில் ரிங்கு சிங் அறிமுக போட்டியில் விளையாடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த பட்டியலில் முதல் வீரராக ரிங்கு சிங் உள்ளார். இடது கை பேட்ஸ்மேனான இவர், இதுவரை எந்த சர்வதேச ஆட்டத்திலும் விளையாடவில்லை. ஐபிஎல் 2023-ல் தனது அசாத்திய பேட்டிங் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.

    2-வது வீரராக பேக்அப் விக்கெட் கீப்பராக ஜிதேஷ் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சஞ்சு சாம்சன் முதன்மை கீப்பராக இருப்பார். இருப்பினும், தொடரில் மூன்று ஆட்டங்கள் உள்ளதால், ஜிதேஷ் ஷர்மா ஒரு ஆட்டத்தில் விளையாட வாய்ப்புள்ளது.

    தொடை காயத்தில் இருந்து மீண்ட பிரசித் கிருஷ்ணா மீண்டும் களம் இறங்கியுள்ளார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் மார்ச் 2021-ல் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியுடன் சர்வதேச அரங்கில் அறிமுகமானார்.

    இவர்கள் மூவரும் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் களமிறங்க உள்ளனர்.

    அணியின் விவரம்: ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்) யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (வி.கீப்பர்), ஜிதேஷ் சர்மா, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஆவேஷ்கான்.

    • அயர்லாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இந்திய அணியின் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    மும்பை:

    இந்திய அணி அயர்லாந்துக்கு சென்று 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஆகஸ்ட் 18-ம் தேதி டி20 தொடர் தொடங்குகிறது.

    இந்நிலையில், அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர் பும்ரா சேர்க்கப்பட்டிருக்கிறார். சீனியர் வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய கேப்டனாக பும்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சி.எஸ்.கே. வீரர் ருத்ராஜ் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் சி.எஸ்.கே. அணியின் ஷிவம் துபேவிற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

    ஜெய்ஸ்வால், திலக் வர்மா, விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன், ஜித்தேஷ் சர்மா, சுழற்பந்து வீச்சாளராக வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமத், ரவி பிஷ்னோய் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

    அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம்பிடித்துள்ள இந்திய வீரர்களின் விவரம் வருமாறு:

    ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்) யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (வி.கீப்பர்), ஜிதேஷ் சர்மா, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஆவேஷ்கான்.

    • இந்திய அணியில் தீபக் ஹூடா சதமடித்தார்.
    • அயர்லாந்து கேப்டன் 60 ரன்கள் குவித்தார்.

    டப்ளின்:

    அயர்லாந்து சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. முதல் டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி டப்ளினில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் 3 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    அடுத்து களம் இறங்கிய தீபக் ஹூடா சஞ்சு சாம்சனுடன் இணைந்து அயர்லாந்து பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். பவுண்டரிகள், சிக்சர்களாக பறக்கவிட்ட இந்த ஜோடி, 2வது விக்கெட்டுக்கு 176 ரன்கள் குவித்து அசத்தியது.

    சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 4 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 77 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். தொடர்ந்து அதிரடி காட்டிய தீபக் ஹூடா 57 பந்துகளில் 6 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 104 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் 15 ரன்னில் வெளியேறினார். தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஹர்ஷல் படேல் ஆகியோர் டக் அவுட்டாகினர்.

    இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 227 ரன்களை குவித்தது. இதையடுத்து, 228 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் பால் ஸ்டிர்லிங் 40 ரன்கள் அடித்தார். அதிகபட்சமாக கேப்டன் ஆன்டி பால்பிர்னி 60 ரன்கள் குவித்தார்.

    ஹாரி டெக்டர் 39 ரன்களும், ஜார்ஜ் டாக்ரெல் 34 ரன்களும் எடுத்தனர். வெற்றி பெற கடைசி வரை அந்த அணி வீரர்கள் போராடினர். கடைசி ஓவரில் 1 பந்துக்கு 6 ரன் தேவைப்பட்ட நிலையில், அயர்லாந்து 2 ரன் மட்டுமே எடுத்து. 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு அந்த அணி 221 ரன்கள் அடித்தது. இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

    • இந்தியாவின் தீபக் ஹூடா அதிரடியாக ஆடி 55 பந்துகளில் சதமடித்தார்.
    • தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 176 ரன்களை குவித்தது.

    டப்ளின்:

    அயர்லாந்து சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகள் மோதும் 2வது டி20 போட்டி டப்ளினில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் களமிறங்கினர். அணியின் எண்ணிக்கை 13 ஆக இருக்கும்போது இஷான் கிஷன் 3 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    அடுத்து இறங்கிய தீபக் ஹூடா சஞ்சு சாம்சனுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இருவரும் அயர்லாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். பவுண்டரிகள், சிக்சர்களாக பறக்கவிட்டனர்.

    சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா ஜோடி 2வது விக்கெட்டுக்கு 176 ரன்கள் குவித்து அசத்தியது. சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 4 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 77 ரன்கள் எடுத்தார். சூர்யகுமார் யாதவ் 15 ரன்னில் வெளியேறினார்.

    அயர்லாந்து பந்துவீச்சை நாலாபுறமும் விரட்டிய தீபக் ஹூடா 57 பந்துகளில் 6 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 104 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஹர்ஷல் படேல் ஆகியோர் டக் அவுட்டாகினர்.

    இறுதியில், இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 227 ரன்களை குவித்தது. இதையடுத்து, 228 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்குகிறது.

    • அயர்லாந்துக்கு எதிராக 20 ஓவர் போட்டியில் இதுவரை 4 முறை மோதி இருக்கும் இந்திய அணி அந்த 4 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளது.
    • இந்திய அணி 2 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

    டப்ளின்:

    இந்தியா-அயர்லாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டப்ளினில் நேற்று முன்தினம் நடந்தது. 'டாஸ்' ஜெயித்த இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பீல்டிங்கை தேர்வு செய்தார். ஆட்டம் தொடங்கும் முன்பே மழை குறுக்கிட்டதால் 2 மணி நேரம் தாமதமாக ஆரம்பமானது. அத்துடன் போட்டி 12 ஓவர்கள் கொண்டதாக குறைக்கப்பட்டது.

    முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவர்களில் அயர்லாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்தது. ஹாரி டெக்டர் 64 ரன்களுடனும் (33 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), ஜார்ஜ் டாக்ரெல் 4 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்ட்யா, அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். பின்னர் 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடியது இந்திய அணி.

    9.2 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தீபக் ஹூடா 47 ரன்னும் (29 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 5 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர். 11 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ஆட்டநாயகன் விருது பெற்றார். அறிமுக வீரராக இடம் பிடித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் ஒரு ஓவர் வீசி 14 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அவர் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.

    இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இதே மைதானத்தில் இன்று நடக்கிறது. அயர்லாந்துக்கு எதிராக 20 ஓவர் போட்டியில் இதுவரை 4 முறை மோதி இருக்கும் இந்திய அணி அந்த 4 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளது.

    அந்த வெற்றியை தொடருவதுடன் தொடரை கைப்பற்றவும் இந்திய அணி தீவிரம் காட்டும். அதேநேரத்தில் உள்ளூர் அனுகூலத்தை பயன்படுத்தி ஆறுதல் வெற்றியை பெற அயர்லாந்து அணி போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்பு குறைவு இருக்காது. இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென் 3, சோனி டென் 4 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • மழையால் தாமதமாக தொடங்கிய ஆட்டம் 12 ஓவராக குறைக்கப்பட்டது.
    • முதலில் விளையாடிய அயர்லாந்து அணியில் ஹாரி டெக்டர் 64 ரன்கள் குவித்தார்.

    டப்ளின்:

    ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடரில் ரோகித் சர்மா, விராட்கோலி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெறவில்லை.

    இந்தியா, அயர்லாந்து அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி டப்ளினில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய இருந்த நிலையில் மழை பெய்ததால்,  தாமதமாக தொடங்கிய ஆட்டம் 12 ஓவராக குறைக்கப்பட்டது.

    முதலில் விளையாடிய அயர்லாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணி வீரர் ஹாரி டெக்டர் 33 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார்.

    பின்னர் 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் தீபக் ஹுடா 29 பந்துகளில் 47 ரன்களை எடுத்ததுடன், கடைசிவரை களத்தில் இருந்தார். மற்றொரு வீரர் இஷான் கிஷன் 26 ரன்களும், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 24 ரன்களும் அடித்தனர்.

    9.2 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்களை இழந்து 111 ரன்களை குவித்தது. இதையடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

    • மழையால் தாமதமாக தொடங்கிய ஆட்டம் 12 ஓவராக குறைக்கப்பட்டது.
    • முதலில் விளையாடிய அயர்லாந்து அணியில் ஹாரி டெக்டர் 64 ரன்கள் குவித்தார்.

    டப்ளின்:

    ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக இரண்டு டி 20 போட்டிகளில் விளையாடுகிறது.

    இந்த தொடரில் ரோகித் சர்மா, விராட்கோலி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெறவில்லை.

    இந்தியா, அயர்லாந்து அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி டப்ளினில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய இருந்த நிலையில் மழை பெய்ததால், ஆட்டம் தாமதமாக தொடங்கியது. இதையடுத்து 12 ஓவர் என்ற அளவில் ஆட்டம் குறைக்கப்பட்டது.

    பின்னர் விளையாடிய அயர்லாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணி வீரர் ஹாரி டெக்டர் 33 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். இதையடுத்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கி விளையாடியது.

    • இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 2 டி 20 போட்டியில் ஆடுகிறது.
    • இந்திய அணியில் இன்று அறிமுக வீரராக இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் களம் இறங்குகிறார்.

    டப்ளின்:

    ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக இரண்டு டி 20 போட்டியில் ஆடுகிறது.

    இந்த தொடரில் ரோகித் சர்மா, விராட்கோலி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெறவில்லை.

    இந்தியா, அயர்லாந்து அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி டப்ளினில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

    இந்திய அணியில் அறிமுக வீரராக இன்று உம்ரான் மாலிக் களம் இறங்குகிறார்.

    இந்நிலையில், மழை பெய்ததால் ஆட்டம் தாமதமாக தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சிறந்த அணியாக செயல்படவே விருப்பம் என ஹர்திக் பாண்ட்யா தகவல்.
    • கிரிக்கெட் போன்ற விளையாட்டில் எந்த சூழ்நிலைகளில் வலுவாக இருப்பது மிகவும் முக்கியம்.

    டப்ளின்:

    அயர்லாந்து சென்றுள்ள ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி, அந்நாட்டு அணியுடன் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் இருபது ஓவர் போட்டி டப்ளின் நகரில் இந்திய நேரப்படி இன்று இரவு 9 மணிக்கு தொடங்குகிறது.

    இந்திய அணியில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா இஷான்கிஷன், சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக், சஞ்சு சாம்சன், புவனேஷ்வர் குமார், சாஹல், அவேஷ் கான் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர். பால்பரீன் தலைமையிலான அயர்லாந்து அணியும் இந்தியாவுக்கு எல்லா வகையிலும் சவால் கொடுத்து விளையாடும் என கருதப்படுகிறது.

    இந்நிலையில், மலாஹிட் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்திய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளதாவது:

    நாங்கள் அனைவருக்கும் வாய்ப்பளிக்க விரும்புகிறோம், ஆனால் சிறந்த 11 வீரர்களுடன் விளையாட விரும்புகிறோம். எங்களிடம் சிறந்த லெவன் அணி இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம்.

    நான் யார் என்பதை காட்ட இங்கு வரவில்லை, இந்தியாவை வழிநடத்த எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவே எனக்கு பெரிய விஷயம். நான் சிறப்பான விளையாட்டை வெளிபடுத்துவேன். இந்தத் தொடரில் நான் எப்படி செயல்பட வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறேன்.

    முன்பை விடஇப்போது அதிக பொறுப்பு. நான் பொறுப்பை ஏற்கும்போது சிறப்பாக செயல்பட்டேன் என்றே நான் எப்போதும் நம்பினேன். கிரிக்கெட் போன்ற ஒரு விளையாட்டில் எந்த சூழ்நிலைகளில் வலுவாக இருப்பது மிகவும் முக்கியம்.

    தோனி மற்றும் விராட் கோலியிடம் இருந்து அணியை வழி நடத்துவது குறித்து நிறைய கற்றுக்கொண்டேன். ஆனால் அதே நேரத்தில், நான் நானாக இருக்க விரும்புகிறேன், எந்த நேரத்தில், அணிக்கு என்ன முடிவு தேவை என்பதில் கவனம் செலுத்துகிறேன்

    • இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி டுப்ளினில் நாளை நடக்கிறது.
    • அயர்லாந்து அணி இந்தியாவுக்கு எல்லா வகையிலும் சவால் கொடுத்து விளையாட கடுமையாக போராடும்.

    டுப்ளின்:

    இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்று பயணம் செய்து இரண்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாட திட்டமிட்டது.

    அதன்படி ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்து சென்றடைந்தது.

    இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி டுப்ளினில் நாளை நடக்கிறது.

    கேப்டன் ரோகித் ஷர்மா, விராட் கோலி, ரிஷப்பன்ட், ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இங்கிலாந்தில் விளையாட சென்று விட்டதால் அடுத்த கட்ட வீரர்கள் அயர்லாந்து போட்டியில் விளையாடுகிறார்கள். இதனால் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    இந்திய அணியில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா இஷான்கிஷன், சூர்யகுமார் யாதவ், தினேஷ்கார்த்திக், சஞ்சு சாம்சன், புவனேஷ்வர் குமார், சாஹல், அவேஷ் கான் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர். வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் இந்திய அணி உள்ளது.

    பால்பரீன் தலைமையிலான அயர்லாந்து அணி இந்தியாவுக்கு எல்லா வகையிலும் சவால் கொடுத்து விளையாட கடுமையாக போராடும்.

    இரு அணிகள் இடையே நடந்த 3 ஆட்டத்திலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது. 2009-ல் நடந்த முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த 2-வது போட்டியில் 76 ரன் வித்தியாசத்திலும், 3-வது ஆட்டத்தில் 143 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

    இந்தியா-அயர்லாந்து இடையேயான நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு தொடங்குகிறது. சோனி சிக்ஸ் டெலிவிஷனில் இந்த போட்டி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இந்தியா: ஹர்த்திக் பாண்ட்யா, இஷான்கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சுசாம்சன், சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் குமார், அவேஷ்கான், யசுவேந்திர சாஹல், தீபக் ஹூடா, வெங்கடேஷ் அய்யர், அக்‌ஷர் படேல், ஹர்ஷல்படேல், ரவி பிஷ்னாய், ராகுல் திரிபாதி, உம்ரான் மாலிக்.

    அயர்லாந்து: பால்பரின் (கேப்டன்), டோகேணி, பால் ஸ்டிர்லிங், ஹேரி டெக்டர், டெக்சர், கிரேக் யங், மெக்கார்த்தி, மார்க் ஆதர், கேம்ப்பெரி, டெலனே, டாக்ரெல், ஜோஸ் லிட்டில், மெக்பிரின், ஆல்ப்ஹெர்ட். 

    • ரிஷப்பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோருக்கு அயர்லாந்து தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
    • அயர்லாந்து தொடரில் விளையாடும் ஒரே புதுமுக வீரர் ராகுல் திரிபாதி ஆவார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுடன் 5 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடியது.

    முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்திலும், தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. 3-வது போட்டியில் 48 ரன்னிலும், 4-வது ஆட்டத்தில் 82 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.

    தொடரை நிர்ணயம் செய்வதற்கான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூரில் நேற்று நடந்தது. இந்த ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. இதனால் இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. இரு அணிகளும் கூட்டாக கோப்பையை பகிர்ந்து கொண்டன.

    இந்திய அணி அடுத்து அயர்லாந்துக்கு சென்று இரண்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்காக ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி வருகிற 24- ந் தேதி அயர்லாந்து புறப்பட்டு செல்கிறது.

    முதல் போட்டி 26-ந் தேதியும், 2-வது ஆட்டம் 28-ந் தேதியும் டூப்ளின் நகரில் நடக்கிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள 20 ஓவர் உலக கோப்பைக்கு வீரர்களை தேர்வு செய்வதில் இந்த தொடரும் முக்கிய பங்கு வகிக்கும்.

    ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணியினரின் விளையாட்டு திறனை நேரில் பார்வையிடுவது, தேர்வு குழு தலைவரும், முன்னாள் வேகப்பந்து வீரருமான சேட்டன் சர்மாவும் வீரர்களோடு செல்கிறார். இதை கிரிக்கெட் வாரிய நிர்வாகி தெரிவித்தார்.

    தென் ஆப்பிரிக்க தொடரில் ஆடிய ரிஷப்பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோருக்கு அயர்லாந்து தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

    தென் ஆப்பிரிக்க தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட கேப்டன் ரோகித்சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, பும்ரா, முகமது ஷமி ஆகியோர் இந்த தொடரில் ஆடவில்லை. காயத்தில் இருந்து குணமடையாததால் லோகேஷ் ராகுலும் ஆடவில்லை. இதனால் அயர்லாந்து பயணத்துக்கு ஹர்த்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த தொடரில் விளையாடும் ஒரே புதுமுக வீரர் ராகுல் திரிபாதி ஆவார். அயர்லாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் வருமாறு:-

    ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), புவனேஷ்குமார் (துணை கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், தினேஷ் கார்த்திக், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ராகுல் திரிபாதி, வெங்கடேஷ் அய்யர், ரவி பிஷ்னோய், அவேஷ்கான், யசுவேந்திர சாஹல், அக்ஷர் படேல், உம்ரான் மாலிக். 

    அடுத்துவரும் போட்டிகளில் ஏராளமான பரிசோதனைகளை செய்ய இருக்கிறோம் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். #IREvIND
    இந்திய கிரிக்கெட் அணி சுமார் இரண்டரை மாத சுற்றுப் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளது. இங்கிலாந்து தொடருக்கு முன்பு இரண்டு டி20 போட்டிகளில் அயர்லாந்தை எதிர்கொள்கிறது. முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 208 ரன்கள் குவித்து 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    வழக்கமாக 3-வது இடத்தில் இறங்கும் கோலி 6-வது வீரராக களம் இறங்கினார். அவர் இரண்டு பந்துகளை சந்தித்து ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

    அயர்லாந்துக்கு எதிரான 2-வது ஆட்டம் நாளை நடைபெறுகிறது. அதன்பின் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த நான்கு போட்டிகளிலும் ஏராளமான பரிசோதனை முயற்சிகளை செய்ய இருக்கிறோம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘எதிரணிகளுக்கு ஆச்சர்யம் அளிக்க இருக்கிறோம். அதேபோல் மிடில் ஆர்டரில் மாற்றங்கள் செய்த பார்க்க இருக்கிறோம். தொடக்க பேட்ஸ்மேன்களை தவிர்த்து மிடில் ஆர்டரில் ஏராளமான பரிசோதனைகளை செய்து பார்க்க இருக்கிறோம் என்று ஏற்கனவே நாங்கள் சொல்லியிருக்கிறோம். அடுத்த சில டி20-யில் தேவைக்கேற்ப வீரர்களை களம் இறக்க திட்டமிட்டுள்ளோம்.



    சூழ்நிலைக்கு ஏற்ப யாரை களம் இறக்குவது என்று பார்த்து, அதற்கேற்றபடி வீரர்களை களம் இறக்கி எதிரணிக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்த முயற்சி செய்வோம். இன்று மிடில் ஆர்டர் வரிசையில் பேட்டிங் செய்தவர்களுக்கு அடுத்த போட்டியில் வாய்ப்பு கொடுக்கப்படாது. வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியுள்ளனர். ஆனால், சர்வதேச போட்டியில் ஆடுகளத்தில் நீண்ட நேரம் நிற்க வேண்டியது அவசியமானது’’ என்றார்.
    ×