search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "T20I Series"

    • நேபாள் நாட்டில் முத்தரப்பு தொடர் நடைபெற்று வருகிறது.
    • இந்த தொடரில் நேபாள், நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகள் மோதுகிறது.

    நேபாள் நாட்டில் முத்தரப்பு தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேபாள், நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகள் மோதுகிறது. இதன் முதல் போட்டி இன்று நடைபெற்றது. இதில் நமீபியா - நேபாள் மோதின. இதில் டாஸ் வென்ற நமீபியா பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய நமீபியா 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக லோஃப்டி ஈடன் 101 ரன்கள் குவித்தார். இதனையடுத்து களமிறங்கிய நேபாள் அணி 18.5 ஓவர்களில் 186 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக லோஃப்டி ஈடன் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்த போட்டியில் அதிவேக சதம் அடித்து லோஃப்டி ஈடன் வரலாற்று சாதனை படைத்துள்ளார். அவர் 33 பந்துகளில் சதம் அடித்து அசத்தியுள்ளார். இதில் 11 பவுண்டரி, 8 சிக்சர்கள் அடங்கும்.

    இதற்கு முன்னதாக 34 பந்துகளில் சதம் அடித்து கௌசல் மல்லா அதிவேகமாக சதம் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். இவரைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லர் (35 பந்துகள்) 2-வது இடத்திலும், ரோகித் சர்மா (35 பந்துகள்) 3-வது இடத்திலும் இடம் பெற்றிருந்தனர்.

    இவர்கள் அனைவரையும் பின்னுக்கு தள்ளி, அதிவேகமாக சதம் அடித்தவர்களின் பட்டியலில் நம்பர் 1 இடத்தை ஈடன் பிடித்துள்ளார்.

    • சிறந்த அணியாக செயல்படவே விருப்பம் என ஹர்திக் பாண்ட்யா தகவல்.
    • கிரிக்கெட் போன்ற விளையாட்டில் எந்த சூழ்நிலைகளில் வலுவாக இருப்பது மிகவும் முக்கியம்.

    டப்ளின்:

    அயர்லாந்து சென்றுள்ள ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி, அந்நாட்டு அணியுடன் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் இருபது ஓவர் போட்டி டப்ளின் நகரில் இந்திய நேரப்படி இன்று இரவு 9 மணிக்கு தொடங்குகிறது.

    இந்திய அணியில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா இஷான்கிஷன், சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக், சஞ்சு சாம்சன், புவனேஷ்வர் குமார், சாஹல், அவேஷ் கான் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர். பால்பரீன் தலைமையிலான அயர்லாந்து அணியும் இந்தியாவுக்கு எல்லா வகையிலும் சவால் கொடுத்து விளையாடும் என கருதப்படுகிறது.

    இந்நிலையில், மலாஹிட் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்திய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளதாவது:

    நாங்கள் அனைவருக்கும் வாய்ப்பளிக்க விரும்புகிறோம், ஆனால் சிறந்த 11 வீரர்களுடன் விளையாட விரும்புகிறோம். எங்களிடம் சிறந்த லெவன் அணி இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம்.

    நான் யார் என்பதை காட்ட இங்கு வரவில்லை, இந்தியாவை வழிநடத்த எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவே எனக்கு பெரிய விஷயம். நான் சிறப்பான விளையாட்டை வெளிபடுத்துவேன். இந்தத் தொடரில் நான் எப்படி செயல்பட வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறேன்.

    முன்பை விடஇப்போது அதிக பொறுப்பு. நான் பொறுப்பை ஏற்கும்போது சிறப்பாக செயல்பட்டேன் என்றே நான் எப்போதும் நம்பினேன். கிரிக்கெட் போன்ற ஒரு விளையாட்டில் எந்த சூழ்நிலைகளில் வலுவாக இருப்பது மிகவும் முக்கியம்.

    தோனி மற்றும் விராட் கோலியிடம் இருந்து அணியை வழி நடத்துவது குறித்து நிறைய கற்றுக்கொண்டேன். ஆனால் அதே நேரத்தில், நான் நானாக இருக்க விரும்புகிறேன், எந்த நேரத்தில், அணிக்கு என்ன முடிவு தேவை என்பதில் கவனம் செலுத்துகிறேன்

    • மார்க்ரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.
    • இந்தியாவுக்கு எதிராக மூன்று போட்டிகளில் அவர் விளையாடவில்லை.

    பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.

    இதுவரை நடைபெற்றுள்ள 3 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 2 போட்டியிலும் ,இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 4வது போட்டி நாளை நடைபெறுகிறது.

    இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா அணியின் பேட்ஸ்மேன் மார்க்ரம் தொடரில் இருந்து விலகியுள்ளார் முதல் 20 ஓவர் போட்டிக்கு முன்பாக அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவர் 7 நாட்கள் தனிமைபடுத்துலில் இருந்தார்.

    இதனால் 3 போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை. இந்த நிலையில் தற்போது மீதமுள்ள 2 போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளார்

    தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காவிட்டால் 3 நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரை புறக்கணிக்க போவதாக ஜிம்பாப்வே அணி வீரர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
    ஹராரே:

    ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் அந்த நாட்டு அணியில் இடம் பிடித்துள்ள வீரர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் எதுவும் கொடுக்கப்படவில்லை. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த இலங்கை தொடரில் இருந்து ஜிம்பாப்வே அணி வீரர்களுக்கு போட்டி கட்டணம் கூட வழங்கப்படவில்லை. இதனால் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

    தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை வருகிற 25-ந் தேதிக்குள் வழங்காவிட்டால், ஜிம்பாப்வேயில் அடுத்த மாதம் (ஜூலை 1-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை) நடைபெறும் 3 நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரை புறக்கணிக்க போவதாக ஜிம்பாப்வே அணி வீரர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த போட்டி தொடருக்கான பயிற்சி முகாமை வீரர்கள் ஏற்கனவே புறக்கணித்து விட்டனர். வீரர்களின் பிரச்சினையை விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. 
    ×