search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "inquiry commission"

    ஜெயலலிதாவை சசிகலா பாசமாக பார்த்துக்கொண்டார் என்றும், அவரது மரணத்தில் சந்தேகம் இல்லை என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் விசாரணை ஆணையத்தில் பதில் அளித்துள்ளார். #Jayalalithaa #JayalalithaaDeath #InquiryCommission
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஆணையத்தில் ஏற்கனவே ஆஜராகி சாட்சியம் அளித்தவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை நடத்தி வருகிறார்.

    அதன்படி, ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது அவரிடம் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமலிங்கம்(இவர், தற்போது கலை மற்றும் பண்பாட்டுத்துறை ஆணையராக உள்ளார்), ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஆகியோரிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.



    தீபா குறித்து ஏற்கனவே ஆணையத்தில் அளித்திருந்த வாக்குமூலம் தொடர்பாக தீபக்கிடம் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்த போது, தீபா ஜெயலலிதாவை எதிர்த்து பேசியதால் அவரை ஜெயலலிதாவுக்கு பிடிக்காமல் போனதாகவும், இதன்காரணமாக அவரை போயஸ் கார்டனுக்குள் அனுமதிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

    சசிகலா குறித்து கேள்வி எழுப்பிய போது, சசிகலாவையும் அத்தை என்று தான் அழைப்பேன் என்றும், சசிகலா மிகப்பிரியமாக பாசமாக ஜெயலலிதாவை பார்த்துக்கொண்டார் என்றும் கூறி உள்ளார்.

    மேலும், 4.12.2016 அன்று மாலை 4.30 மணிக்கு ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதில் எந்தவித மாறுபட்ட கருத்தும் இல்லை என்றும், ஜெயலலிதா மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் குறுக்கு விசாரணையின் போது பதில் அளித்துள்ளார்.



    குறுக்கு விசாரணை முடிவடைந்து ஆணையத்தில் இருந்து வெளியே வந்த பூங்குன்றன் நிருபர்களிடம், ‘குறுக்கு விசாரணையின் போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தேன் என்றார்.

    குறுக்கு விசாரணை முடித்துக்கொண்டு வெளியே வந்த வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் நிருபர்களிடம் கூறும்போது, ‘ஜெயலலிதா பேசிய ஆடியோவை ஆணையம் வெளியிட்டது அதிர்ச்சியாகவே இருந்தது. ஆணையம் ஒரு முடிவு எடுக்கும்போது அதில் தலையிட முடியாது.

    ஆணையம் அனைத்து தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடித்த பின்பு தான் நாங்கள் யார், யாரை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்போம். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தவர்களில் முக்கியமானவர்கள் எய்ம்ஸ் மருத்துவர்கள். அவர்களைத் தான் ஆணையம் முதலில் விசாரித்து இருக்க வேண்டும். இதுவரை அவர்களை விசாரிக்கவில்லை. இருந்தபோதிலும் அதற்கான காலம் ஆணையத்துக்கும் உள்ளது. எங்களுக்கும் உள்ளது’ என்றார்.

    ஜெயலலிதாவின் உதவியாளர் கார்த்திகேயன் ஏற்கனவே ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார். அவரிடம் ஏற்கனவே சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை நடத்தினார். இந்தநிலையில் மீண்டும் விசாரணைக்காக அழைக்கப்பட்டதை தொடர்ந்து கார்த்திகேயன் நேற்று ஆணையத்தில் ஆஜரானார். அவரிடம் ஆணையத்தின் வக்கீல் மதுரை பார்த்தசாரதி பல்வேறு கேள்விகளை கேட்டார். அவர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் கார்த்திகேயன் பதில் அளித்துள்ளார்.

    விசாரணையின் போது அவர், சசிகலா மூலம் தான் ஜெயலலிதாவின் உதவியாளராக பணியில் சேர்ந்ததாகவும், ஜெயலலிதா, சசிகலாவை சொல்வதை மட்டும் தான் செய்வேன் என்று கூறி உள்ளார். அதற்கு ஆணையத்தின் வக்கீல், ஜெயலலிதா தற்போது உயிரோடு இல்லை. அப்படியென்றால் தற்போது சசிகலா சொல்வதுபடி தான் செயல்படுவீர்கள், செயல்பட்டுக் கொண்டு இருக்கிறீர்கள் என்றால் சரிதானா என்று கேட்டார். அதற்கு ஆமாம் என்று பதில் அளித்த கார்த்திகேயன், தனக்கு சசிகலா தான் சம்பளம் கொடுப்பதாகவும் கூறி உள்ளார்.

    ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் மேற்கொண்டு விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆணையத்தின் வக்கீல், நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு நீதிபதி அனுமதி அளித்தார். இதைத்தொடர்ந்து பூங்குன்றனை வேறொரு தேதியில் மீண்டும் விசாரிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது.  #Jayalalithaa #JayalalithaaDeath #InquiryCommission 
    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் கார்த்திகேயன், தீபக், பூங்குன்றன் ஆகியோர் ஆஜர் ஆனார்கள். #Jayalalithaa #JayalalithaaDeath #InquiryCommission
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இதுவரை சுமார் 40-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    தற்போது ஓரளவு விசாரணை முடிந்த நிலையில் ஏற்கனவே ஆணையத்தில் சாட்சியம் அளித்தவர்களிடம் குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதற்காக ஒவ்வொரு வருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு அதன் அடிப்படையில் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ஜெயலலிதான் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமலிங்கம் இன்று காலை விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அவரிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜ்குமார் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.

    இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், ஆகியோர் ஆஜரானார்கள். அவர்களிடமும் வக்கீல் ராஜ்குமார் குறுக்கு விசாரணை செய்தார்.

    சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன் ஏற்கனவே ஆணையத்தில் ஆஜராகி இருந்த நிலையில் இன்று மீண்டும் ஆஜர் ஆனார். அவரிடம் மறு விசாரணை நடத்தப்பட்டது.



    விசாரணை ஆணையத்தில் இவர்கள் சொன்ன தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டது.

    அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது அவரது குரல் பதிவு விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று பூங்குன்றன், ராமலிங்கம் உள்பட 4 பேரிடம் விசாரணை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Jayalalithaa #JayalalithaaDeath #InquiryCommission
    தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியது தொடர்பாக விசாரிக்க ஒரு நபர் கமிஷனை அரசு அமைத்துள்ளது. #ThoothukudiFiring #SterliteInquiryCommission
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், போராட்டக்காரர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியது. போராட்டக்காரர்களை கலைக்க எவ்வளவோ யுக்திகள் இருந்தும், தேச விரோதிகளை சுடுவது போன்று சரமாரியாக சுட்டது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், தூத்துக்குடி கலவரம், துப்பாக்கி சூடு தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.


    போராட்டக்காரர்களை போலீசார் துப்பாக்கியால் குறிபார்த்து சுடும் காட்சி அடங்கிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதனைப்பார்த்த பலரும் காவல்துறையின் அடக்குமுறையை கண்டித்து கருத்துக்களை பதிவு செய்தவண்ணம் உள்ளனர். சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். துப்பாக்கி சூட்டைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

    துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தொடர்ந்து தூத்துக்குடியில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், இது தொடர்பாக தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #ThoothukudiFiring #SterliteInquiryCommission
    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த கூடுதலாக 6 மாத அவகாசம் கேட்டு ஆறுமுகசாமி விசாரணை கமி‌ஷன் சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. #JayalalithaDeath

    சென்னை:

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு முன்னாள் மற்றும் இந்நாள் அதிகாரிகள், அப்பல்லோ டாக்டர்கள் என பலரிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த குழுவின் பதவி காலம் ஜூன் 24-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.

    இந்த நிலையில் கூடுதலாக 6 மாத அவகாசம் கேட்டு ஆறுமுகசாமி விசாரணை கமி‌ஷன் சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. #JayalalithaDeath

    ×