search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Inauguration ceremony"

    • நிகழ்ச்சிக்கு கல்லூரி குழுமத்தின் நிறுவனர் தொழில் அதிபர் எஸ்.தங்கப்பழம் தலைமை தாங்கினார்.
    • சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் எஸ்.ரகுபதி, நீதிபதிகள் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரி திறப்பு விழா நடைபெற்றது. எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தில் பாலிடெக்னிக் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

    தற்போது எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரிக்கு மத்திய மாநில அரசுகள் அனுமதி வழங்கி உள்ளது. நேற்று தொடக்க விழா மற்றும் கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.

    கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி குழுமத்தின் நிறுவனர் தொழில் அதிபர் எஸ்.தங்கப்பழம் தலைமை தாங்கினார். கல்லூரியின் தாளாளர் எஸ்.டி.முருகேசன் முன்னிலை வகித்தார்.

    சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் பவானி சுப்புராயன், தாரணி மற்றும் பால்தாய் தங்கப்பழம், ரம்யாதேவி முருகேசன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

    சட்டக் கல்லூரியின் துணை முதல்வர் கலைச் செல்வி வரவேற்றார். சட்ட கல்லூரியினை தமிழக சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

    நூலகத்தை ஐகோர்ட் நீதிபதி பவானி சுப்புராயன், மூட் கோர்ட் ஐகோர்ட் நீதிபதி தாரணியும், முதல் மாணவர் சேர்க்கையினை தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதியும் தொடங்கி வைத்தனர். கல்லூரி கலையரங்கத்தினை தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் திறந்து வைத்தார். நிகழ்ச்சியை வி.எஸ்.ஆர்.ஜெகதீசன் தொகுத்து வழங்கினார்.


    தமிழக சட்டபேரவை சபாநாயகர் அப்பாவு, தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, நீதிபதிகள் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    திறப்பு விழாவில் நெல்லை மாவட்ட நீதிமன்ற நீதிபதி குமரகுரு, பன்னீர்செல்வம், சிவகிரி நீதிபதி பிரியங்கா, தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், தென்காசி தனுஷ்குமார் எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் வாசுதேவநல்லூர் சதன் திருமலைக்குமார், சங்கரன்கோவில் ராஜா, தென்காசி பழனி நாடார், கடையநல்லூர் குட்டியப்பா என்ற கிருஷ்ணமுரளி, ராஜ பாளையம் தங்க பாண்டியன், தென்காசி தெற்கு மாவட்ட செய லாளர் சிவபத்ம நாபன், வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், துணை சேர்மன் சந்திரமோகன், வாசுதேவநல்லூர் பேரூராட்சித் தலைவர் லாவண்யா ராமேஸ்வரன், மகாத்மா காந்தி சேவா சங்கம் தவமணி, சுமங்கலி சமுத்திரவேலு, சிவகிரி பேரூர் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு, சிவகிரி தாசில்தார் செல்வக்குமார், சிவகிரி நீதிமன்ற அலுவலர்கள், கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சட்டக் கல்லூரியின் பேராசிரியர் சரஸ்வதி நன்றி கூறினார்.

    • 1985-ம் ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையம் அருகில் சிலை அமைக்கப்பட்டது.
    • கருப்பசாமிபாண்டியன் முத்துராமலிங்க தேவரின் வெண்கல சிலை, மண்டபத்தை திறந்து வைத்தார்.

    தென்திருப்பேரை:

    ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையம் அருகில் கடந்த 1985-ம் ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு கெட்டியம்மாள்புரம் ராமையா தேவரால் சிலை அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலையை பராமரித்து வந்தனர்.

    இந்நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 38ஆண்டு கால பழமையான சிமென்ட் சிலையை அகற்றி, அதற்கு பதிலாக புதியதாக முழுஉருவ வெண்கல சிலையையும், மணிமண்டபத்தையும், அதே இடத்தில் புதுப்பித்து அமைத்திட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

    முதன்முதலில் சிலை அமைத்து கொடுத்த ராமையா தேவரின் மகன்களும், தொழிலதிபர்களுமான ஏ.ஆர்.காசிப்பாண்டியன், ஏ.ஆர்.ராமசுப்பிரமணியன் ஆகியோர் வெண்கல சிலை அமைப்பதற்கும், முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் முத்துராமலிங்கத்தேவருக்கு கற்களால் மணிமண்டபம் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    மேலும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினரின் தொடர் முயற்சிகளால் முத்துராமலிங்கத்தேவருக்கு கற்களால் மணிமண்டபமும், புதிய வெண்கல சிலையும் அமைக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து, பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை திறப்பு விழா நேற்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. மற்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் நடைபெற்றது.

    விழாவிற்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநில இளைஞரணி தலைவர் ஸ்ரீவை சுரேஷ் தேவர் தலைமை தாங்கினார். தொழிலதிபர்கள் ஏ.ஆர்.காசிப்பாண்டியன், ஏ.ஆர்.ராமசுப்பிரமணியன் வெள்ளூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் எஸ்.ஆர்.முத்தையா, ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் காசிராஜன், வியாபாரிகள் சங்க தலைவர் காளியப்பன், பார்வர்டு பிளாக் மூத்த உறுப்பினர்கள் ஆறுமுகம் என்ற மருதுபாண்டியன், கால்வாய் முத்துபாண்டியன், மாவட்ட தலைவர் சிவராமன்கார்த்திக், மாநில மாணவரணி செயலாளர் கொம்பையாபாண்டியன், தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் கால்வாய் முத்துராமலிங்கம், மாவட்ட பொருளாளர் துரைசரவணன், ஒன்றிய செயலாளர் சகாயம், நகர செயலாளர் விஜயன், நேதாஜி இளைஞர் படை தலைவர் ராமசாமி மற்றும் துரையப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத் தலைவர் திருப்பாற்கடல் அனைவரையும் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அதிமுக மாநில அமைப்பு செயலாளர் கருப்பசாமிபாண்டியன், முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் மற்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநில இளைஞரணி தலைவர் ஸ்ரீவை சுரேஷ்தேவர் ஆகியோர் முன்னிலையில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் வெண்கல சிலை, மண்டபத்தை திறந்து வைத்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

    விழாவில் முன்னாள் அமைச்சர்களும் மாநில அமைப்பு செயலாளர் களுமான தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., கடம்பூர்ராஜூ எம்.எல்.ஏ., இசக்கிசுப்பையா எம்.எல்.ஏ., மாநில அமைப்பு செயலாளர்கள் என்.சின்னத்துரை, சுதா பரமசிவம், முருகையாபாண்டியன், தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ., நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா, அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர்முத்தையா, முன்னாள் துணை மேயர் ஜெகநாதன் என்ற கணேசன், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

    விழாவில் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள், பார்வர்டு பிளாக் நிர்வாகிகள், தொண்டர்கள், அகில இந்திய பார்வர்டு பிளாக் நிர்வாகிகள், உறுப்பினர்கள், அனைத்து சமுதாய பிரமுகர்கள், வணிகர் சங்கத்தினர், தொழில்அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இறுதியில் ஸ்ரீவைகுண்டம் நகர அ.தி.மு.க. செயலாளர் காசிராஜன் நன்றி கூறினார்.

    • திருப்பூர் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும் .
    • தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் அழைப்பு விடுத்துள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் நாளை அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் உள்ளிட்டவைகளை திறக்க மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வருகிறார். இதில் திருப்பூர் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும் என தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சியின் 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை (சனிக்கிழமை) மதியம் 12 மணிக்கு திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நகராட்சிக்கு உட்பட்ட கரட்டுப்பாளையத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருப்பூர் மாவட்டத்தில் 12 இடங்களில் கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையங்கள், பிரசவ காத்திருப்பு அறை மற்றும் சித்தா பிரிவு ஆகிய கட்டிடங்களை திறந்து வைக்க உள்ளார்.

    அதன்படி உடுமலை தாலுகாவில் எரிசனம்பட்டி, வெங்கிட்டாபுரம், மானுப்பட்டி, சோமவாரப்பட்டி, ஆண்டியூர், கே.வல்லகொண்டாபுரம், அவினாசி தாலுகாவில் முறியாண்டம்பாளையம், தாராபுரம் தாலுகாவில் டி.ஆலம்பாளையம், வெள்ளகோவில் கரட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் ஆரம்ப துணை சுகாதார நிலையங்கள் திறக்கப்படுகிறது.

    உடுமலை தாலுகாவில் அமராவதிநகரில் பிரசவ காத்திருப்பு அறை மற்றும் மடத்துக்குளம், சாவடிபாளையத்தில் சித்தா பிரிவு கட்டிடங்கள் திறக்கப்படுகிறது. இதில் திருப்பூர் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளை நிர்வாகிகள், இன்னாள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட பிரதிநிதிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்திய கம்யூனிஸ்டு கட்சி புதிய கிளை தொடக்க விழா நடைபெற்றது.
    • அரசியல் பற்றி விளக்கி பேசினார்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள குண்டவெளி கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் புதிய கிளை தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயளாலர் ராஜாபெரியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயளாலர் ராமநாதன் முன்னிலை வகித்தார். மூத்த தோழர் உலகநாதன் கட்சியின் கொடியை ஏற்றிவைத்து இன்றைய அரசியல் பற்றி விளக்கி பேசினார். கூட்டத்தில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆறுநாட்டு வேளாளர் தலைமை சங்க 26-வது மகாசபை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்
    • தமிழ்நாட்டின் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக தமிழ்நாடு அரசால் தேர்வு செய்யப்பட்ட இந்திரா கணேசன் கல்வி குழும செயலாளர் ராஜசேகரை கெளரவித்தனர்

    திருச்சி:

    ஆறுநாட்டு வேளாளர் தலைமை சங்க 26-வது மகாசபையில் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா திருச்சி திருவானைக்கோவில் தலைமை சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சி.செந்தில்குமார் இறைவணக்கம் பாடினார். விழாவிற்கு ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். டி.ரமேஷ் வரவேற்றுப் பேசினார்.

    நிர்வாகிகள் பெரியசாமி, சுப்பையாபிள்ளை, தேவராஜன், ராஜசேகரன், லோகநாதன், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் மங்கள் அண்டு மங்கள் உரிமையாளர் பி.மூக்கப்பிள்ளை புதிய நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிய தலைவராக சிவானி கல்லூரி சேர்மன் டாக்டர் பி.செல்வராஜ், உபதலைவராக டி.சாத்தனூர் பி.புரவி, செயலாளராக ஆலம்பட்டி என்ஜினீயர் சதீஸ்வரன், பொருளாளராக புத்தனாம்பட்டி செந்தில்குமார் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

    அவர்களிடம் பொறுப்புகளை மூக்கப்பிள்ளை ஒப்படைத்து தலைவருக்கு செங்கோல் கொடுத்து கௌரவித்தார்.

    தமிழ்நாட்டின் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக தமிழ்நாடு அரசால் தேர்வு செய்யப்பட்ட இந்திரா கணேசன் கல்வி குழும செயலாளர் ராஜசேகரை கெளரவித்தனர். புதிதாக தலைவராக பதவியேற்றக் கொண்ட சிவானி கல்லூரி சேர்மன் டாக்டர் பி.செல்வராஜ் ஏற்புரை நிகழ்த்தினார்.

    விழாவில் இலங்கை புஷ்பநாதன், மூர்த்தி, நாமக்கல் செல்வராஜ், பெங்களூர் கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் சண்முகசுந்தரம், முசிறி ரமேஷ்பாபு, வி.சிதம்பரம், செந்தில் (எ) சுரேஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வாழ்த்துரை வழங்கினார்கள்.

    முடிவில் துணைத்தலைவர் புரவி நன்றி கூறினார்.

    • திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே பல்லடம் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது.
    • எப்.ஐ.இ.ஓ. தலைவர் சக்திவேல் கலந்து கொண்டு, புதிய கிளையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    திருப்பூர் :

    ஈரோடு மாநகரை தலைமையிடமாக கொண்டு எஸ்.ஆர்.எம். ஸ்வீட்ஸ் அண்ட் கேக்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் கிளைகள் ஈரோடு, பெருந்துறை, கோபி, நாமக்கல், திருச்செங்கோடு, குமாரபளையம், கரூர் போன்ற பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் எஸ்.ஆர்.எம். ஸ்வீட்ஸ் அண்ட் கேக் விற்பனையகத்தின் புதிய கிளையாக திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே பல்லடம் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது.

    இதன் துவக்க விழா நடந்தது. விழாவுக்கு எஸ்.ஆர்.எம். ஸ்வீட்ஸ்-கேக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.ஆர். மகுடீஸ்வரன் தலைமை தாங்கினார். திருப்பூர் கிளையின் இயக்குனர்கள் சுடர்வண்ணன், பரணிதரன் ஆகியோர் முன்னிலை வகித்து அனைவரையும் வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளராக எப்.ஐ.இ.ஓ. தலைவர் சக்திவேல் கலந்து கொண்டு, புதிய கிளையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    ஸ்டார் டைம் அப்பேரல்ஸ் நிறுவன உரிமையாளரான ஈஸ்வரமூர்த்தி-மகேஸ்வரி, சிவக்குமார்-சாந்தி, தாரணி, சுரசிந்து ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். முதல் விற்பனையை தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியம் துவக்கி வைக்க, அதனை சிவா புளுமெட்டல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆதியூர் மணி என்ற இளங்கோ பெற்றுக்கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம். ஸ்வீட்ஸ் அன்ட் கேக்ஸ் நிறுவனத்தின் வினோத்சிங்காரம், கோவிந்தராஜ், மோகன், மாஸ்டர் மதனகோபால், திருநகர் காலனி சிவக்குமார், சதீஷ், ஈரோடு இதயம் நற்பணி இயக்க தலைவர் மகாதேவன் மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கள்ளக்குறிச்சியில் ரூ.3.06 கோடியில் புதிய தாலுகா அலுவலக கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
    • கூட்ட அறை, நில அளவை பிரிவு ஆகிய அறைகள் கட்டப்பட்டு பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் தாசில்தார் அலுவலகம் மிக வும்பழுதடைந்த நிலையில் காணப்பட்டது. இதனால் புதிய வட்டா ட்சியர் அலுவலகம் கட்ட ரூ. 3 கோடியே 6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி தரைதளத்தில் காத்திருப்போர் கூடம், வருவாய் வட்டாட்சியர் (சமூக நலம்), அலுவலக அறை, தபால் வாங்குதல் மற்றும் அனுப்புதல் அறை, கணினி அறை, கழிவறை ஆகியஅறைகளும், முதல் தளத்தில் வருவாய் வட்டாட்சியர் அறை, வட்டாட்சியர்கள் ஆதிதி ராவிடம் மற்றும் வட்ட வழ ங்கல் அறை, அலுவலக அறை ஆகியவைகளும், 2-வது தளத்தில் பதிவறை, அலுவலக அறை, கூட்ட அறை, நில அளவை பிரிவு ஆகிய அறைகள் கட்டப்பட்டு பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இதையொட்டி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை யிலிருந்து காணொளி காட்சி மூலம் புதிய தாலுகா அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார். அதன்படி கள்ளக்குறிச்சி தாசில்தார் அலுவலகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வந்தது. இதைதொடர்ந்து கள்ளக்குறிச்சி சட்ட மன்ற உறுப்பினர் செந்தில்குமார் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, தாசில்தார் விஜய பிரபாகரன், குடிமை பொருள் தாசில்தார் வெங்கடேசன், ஆதிதிராவிட தனி தாசில்தார் நடராஜன், பாதுகாப்பு தனி தாசில்தார் மணிகண்டன், ரயில்வே தனி தாசில்தார் கமலம், வருவாய் ஆய்வாளர்கள் பாலு, சுகன்யா, ராமசாமி, ஜெயந்தி ஆகியோர் பங்கேற்றனர்.

    • அவரவர் திறமை உணர்ந்து வேலைகளை பகிர்ந்து அளித்தல், எந்த சூழ்நிலையிலும் தானும் களத்தில் இறங்கி வேலை செய்தல் போன்ற தலைமை பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
    • எதிர்கால சந்ததியினர் பள்ளி பருவத்திலேயே பிறரை தனக்கு சமமாக பாவித்தல், பாராட்டுதல், கண்டிப்பு, சரியான பாதையில் மாணவர்களை அழைத்துச் செல்லுதல் வேண்டும்

    திருச்சி;

    திருச்சி மாவட்டம் சௌடாம்பிகா மவுண்ட் லிட்ரா ஜீபள்ளியில் 2022-23 ஆம் ஆண்டிற்கான பள்ளி மாணவர்களுக்கு தலைமை பதவியேற்பு விழா நடைபெற்றது.

    விழாவில் சிறப்பு விருந்தினர்களாக லெப்டினல் கர்னல் அஜய்குமார் மற்றும் திருச்சி ஜி ஹெச் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அருள்ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பள்ளி செயலாளர் செந்தூர் செல்வன் தலைமை வகித்து பேசுகையில் , எதிர்கால சந்ததியினர் பள்ளி பருவத்திலேயே பிறரை தனக்கு சமமாக பாவித்தல், பாராட்டுதல், கண்டிப்பு, சரியான பாதையில் மாணவர்களை அழைத்துச் செல்லுதல், அவரவர் திறமை உணர்ந்து வேலைகளை பகிர்ந்து அளித்தல், எந்த சூழ்நிலையிலும் தானும் களத்தில் இறங்கி வேலை செய்தல் போன்ற தலைமை பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

    மாணவர்களுக்கான தலைவர் ஜாகிர் அகமதும், மாணவிகளுக்கான தலைவர் ஆன்டோட்ரியாவும், மாணவர் விளையாட்டுத் தலைவர் முகமது ரிலாவும், மாணவி விளையாட்டு தலைவி அஷ்விதாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    அவர்களுக்கு இந்நிகழ்ச்சியில் பள்ளியின் கல்வி ஆலோசகர் சிவகாமி ஜெயக்குமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். கல்வி ஆலோசகர் உறுதிமொழி கூற மாணவர்களுக்கு உற்சாகத்துடன் உறுதிமொழி ஏற்றனர்.

    மேலும் பள்ளியில் உருவாக்கப்பட்டுள்ள கிரிம்சன் , ப்ளூபெல்ஸ், ஜினியா, ட்ேபாடில் நிர்வாகிகள் தங்கள் இல்ல கொடிகளை ஏந்தி கம்பீரமாக அணிவகுத்து வந்து பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

    காவல் ஆய்வாளர் தனது சிறப்புரையில், திருச்சி நகரில் வைரம் போல் மிளிர்கின்ற ஒரு பள்ளி சௌடாம்பிகா மவுண்ட் லிட்ரா பள்ளி என்றும், அங்கு பயிலும் மாணவர்களும் வைரம் போல் மிளிர்வதை கண்டு மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.

    லெப்டினன்ட் கர்னல் சிறப்புரையில் ஆளுமை திறமை பள்ளி வயதினிலே பெறுவது பெருமைக்குரியது என்றார்.

    • அரியலூரில் ராயல் சென்டினியல் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா முன்னாள் தலைவர் சந்திரசேகர் தலைமையில நடை பெற்றது.
    • நிகழ்ச்சியில் துணை ஆளுநர் சவுரிராஜ், மாவட்ட உறுப்பினர் வளர்ச்சித் தலைவர் மகேந்திரன், மாவட்ட தலைவர் விஜயலட்சுமி சண்முகவேல், சரவணன், மண்டல தலைவர் டென்சி, வட்டாரத் தலைவர் சங்கர், கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

    அரியலூர்:

    அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ராயல் சென்டினியல் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா முன்னாள் தலைவர் சந்திரசேகர் தலைமையில், சாசன தலைவர் ராஜேந்திரன் முன்னிலையில் நடை பெற்றது. அனைவரையும் ஜெயராமன் வரவேற்று பேசினார்.

    2022 -23 புதிய நிர்வாகிகள், தலைவராக காமராஜ், செயலாளராக மாலா தமிழரசன், பொருளாளராக ஆனந்தன், நிர்வாக அலுவலராக சக்திவேல், இயக்குனர்களாக டில்லிராஜ், ராஜேந்திரன், கொளஞ்சிநாதன், முருகேசன், ராஜா, குமரன், நாகராஜன், சரவணன், பிரபாகரன், ஜெயராமன், மண்டல ஒருங்கிணைப்பாளர்களாக ராஜசேகரன், முரளிதரன், முத்துக்குமார், செந்தில்குமார், செல்வராஜ், மானக்ஷா, பாலசுப்பிரமணியன், மோகன்ராஜ் ஆகியோர்கள் பணியேற்று கொண்டனர்.

    நிகழ்ச்சியில் துணை ஆளுநர் சவுரிராஜ், மாவட்ட உறுப்பினர் வளர்ச்சித் தலைவர் மகேந்திரன், மாவட்ட தலைவர் விஜயலட்சுமி சண்முகவேல், சரவணன், மண்டல தலைவர் டென்சி, வட்டாரத் தலைவர் சங்கர், கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

    ×