search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New Branch"

    • பங்குச் சந்தைகளில் பட்டியலிட்ட பிறகு வங்கியானது அதனை நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் வேகம் காட்டும் விதமாக தனது செயல்பாடுகளை செய்து வருகிறது.
    • தூத்துக்குடியை தலைமை அலுவலகம் கொண்ட இந்த வங்கி 100 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர் சேவையிலும் அதன் கோட்பாடுகள் மற்றும் வரை முறைகளிலும் போற்றுதலுக்குரிய சரித்திரம் படைத்து வருகிறது.

    தூத்துக்குடி:

    தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஒரு தலை சிறந்த ஷெட்யூல்டு கமர்சியல் வங்கி. பங்கு சந்தைகளில் தனது பங்கி னை பட்டியலிட்டதை அடுத்து தனது தொலை நோக்கு பார்வையாக மீண்டும் இந்தியா முழுவது மான விரிவாக்க நடவடிக் கைகளில் ஈடுபட்டு வருகிறது.

    புதிய கிளைகள் திறப்பு

    வங்கியானது 537 மற்றும் 538-வது கிளைகளை ஆந்திர பிரதேசம் ஸ்ரீசத்யசாய் மாவட்டம் தர்மாவரம், தமிழ்நாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஆகிய இடங்களில் ஏ.டி.எம், சி.ஆர்.எம் வசதியுடன் வங்கியின் கிளைகளை நேற்று தொடங்கியது. தர்மாவரத்தில் 537-வது கிளையை ஜவுளி அமைச்சக மத்திய பட்டு வாரியத்தை சேர்ந்த பிரகாஷ் பட் திறந்து வைத்தார்.

    உளுந்தூர்பேட்டையில் 538-வது கிளையை உளுந்தூர்பேட்டை வியா பாரிகள் சங்க தலைவர் முகமது கனி திறந்து வைத்தார். விழாவில் வங்கி யின் ஊழியர்கள், அலு வலர்கள், வாடிக்கை யாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். விழாவில் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணன் பேசியதாவது:-

    50 லட்சம் வாடிக்கையாளர்கள்

    பங்குச் சந்தைகளில் பட்டியலிட்ட பிறகு வங்கியானது அதனை நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் வேகம் காட்டும் விதமாக தனது செயல்பாடுகளை செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக 537 மற்றும் 538-வது புதிய கிளைகளை ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ் நாட்டில் தொடங்கி உள்ளது. மேலும் இன்னும் அதிகமான கிளைகளை இந்தியா முழுவதும் திறந்திட திட்டமிட்டிருக்கிறது.

    தமிழ்நாடு மெர்க் கன்டைல் வங்கி லிமிடெட் ஒரு பெயர்பெற்ற பழைய தனியார் துறை வங்கியாகும். தூத்துக்குடியை தலைமை அலுவலகம் கொண்ட இந்த வங்கி 100 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர் சேவையிலும் அதன் கோட்பாடுகள் மற்றும் வரை முறைகளிலும் போற்றுதலுக்குரிய சரித்திரம் படைத்து வருவ தோடு, தொடர்ந்து லாபம் ஈட்டியும் வருகிறது. இந்த வங்கியானது, இந்தியா முழுவதிலும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 538 கிளைகள் மற்றும் 12 மண்டல அலு வகங்களை கொண்டு சுமார் 50 லட்சத்துக்கும் மேலான வாடிக்கை யாளர்களுக்கு நிறைவான சேவை ஆற்றி வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வங்கியின் 532-வது கிளை திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை யில் சி.ஆர்.எம். வசதியுடன் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.
    • விழாவில் வங்கி ஊழியர்கள், அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி:

    தமிழநாடு மெர்க்கன்டைல் வங்கி பங்கு சந்தைகளில் பட்டியலிடப்பட்டதை தொடர்ந்து தொலைநோக்கு திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

    முத்துப்பேட்டை

    கிளை திறப்பு

    அதன்படி நாடு முழுவதும் வங்கி விரிவாக்க நடவடிக்கைகளில் நிர்வாகம் கவனம் செலுத்தி வருகிறது. தமிழ் நாடு மெர்க்கன்டைல் வங்கி ஏற்கனவே நாடு முழுவதும் 16 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 531 கிளைகள், 12 மண்டல அலுவலகங்களுடன் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் வங்கியின் 532-வது கிளை திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை யில் சி.ஆர்.எம். வசதியுடன் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. வங்கி பொதுமேலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக முத்து பேட்டை அனைத்து முஹல்லா தலைவர் முகம்மது அலி என்ற ஜெர்மன் அலி கலந்து கொண்டு புதிய கிளையை திறந்து வைத்தார்.

    விழாவில் வங்கி ஊழியர்கள், அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    533-வது கிளை

    இதேபோல் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 533-வது கிளை கோவை மாவட்டம் ஆவல் சின்னாம்பாளையத்தில் சி.ஆர்.எம்.வசதியுடன் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. இதனை ஜமீன் கொட்டாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் பாலசுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

    நாடு முழுவதும் கிளைகள் திறக்க திட்டம்

    இதுகுறித்து வங்கி நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான எஸ்.கிருஷ்ணன் கூறுகையில், பங்கு சந்தையில் பட்டிய லிட்ட பிறகு வங்கியானது நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அதன்படி 532-வது கிளை முத்துப்பேட்டையிலும், 533-வது கிளை ஆவல் சின்னாம்பாளையத்திலும் திறக்கப்பட்டு உள்ளது.

    இன்னும் அதிகமான கிளை களை நாடு முழுவதும் திறக்க திட்டமிட்டு இருக்கிறோம். திறப்பு விழாவை வங்கியின் அனைத்து உடைமை தாரர்களுக்கும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

    • மெர்க்கன்டைல் வங்கியின் 531-வது கிளை தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் அமைக்கப்பட்டு உள்ளது.
    • சிறப்பு அழைப்பாளராக ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டியன் கலந்து கொண்டு புதிய கிளையை திறந்து வைத்தார்.

    தூத்துக்குடி:

    தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பங்கு சந்தைகளில், தனது பங்கு பட்டியலிட்டதை தொடர்ந்து, தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, மீண்டும் நாடு முழுவதும் வங்கி விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளது. இந்த வங்கி ஏற்கனவே 16 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 530 கிளைகள், 12 மண்டல அலுவலகங்களுடன் செயல்பட்டு வருகிறது.

    வங்கியின் 531-வது கிளை தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. வங்கி பொதுமேலாளர் பி.சூரியராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டியன் கலந்து கொண்டு புதிய கிளையை திறந்து வைத்தார். விழாவில் வங்கி ஊழியர்கள், அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து வங்கி நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான எஸ்.கிருஷ்ணன் கூறியதாவது:-

    பங்குசந்தைகளில் பட்டியலிட்ட பிறகு வங்கியானது, நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அதன்படி, இந்த நிதியாண்டின் முதல் புதிய கிளையாக 531-வது கிளை ஏரலில் திறக்கப்பட்டு உள்ளது. இன்னும் அதிகமான கிளைகளை இந்தியா முழுவதும் திறக்க திட்டமிட்டு இருக்கிறோம். திறப்பு விழாவை வங்கியின் அனைத்து உடைமைதாரர்களுக்கும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே பல்லடம் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது.
    • எப்.ஐ.இ.ஓ. தலைவர் சக்திவேல் கலந்து கொண்டு, புதிய கிளையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    திருப்பூர் :

    ஈரோடு மாநகரை தலைமையிடமாக கொண்டு எஸ்.ஆர்.எம். ஸ்வீட்ஸ் அண்ட் கேக்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் கிளைகள் ஈரோடு, பெருந்துறை, கோபி, நாமக்கல், திருச்செங்கோடு, குமாரபளையம், கரூர் போன்ற பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் எஸ்.ஆர்.எம். ஸ்வீட்ஸ் அண்ட் கேக் விற்பனையகத்தின் புதிய கிளையாக திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே பல்லடம் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது.

    இதன் துவக்க விழா நடந்தது. விழாவுக்கு எஸ்.ஆர்.எம். ஸ்வீட்ஸ்-கேக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.ஆர். மகுடீஸ்வரன் தலைமை தாங்கினார். திருப்பூர் கிளையின் இயக்குனர்கள் சுடர்வண்ணன், பரணிதரன் ஆகியோர் முன்னிலை வகித்து அனைவரையும் வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளராக எப்.ஐ.இ.ஓ. தலைவர் சக்திவேல் கலந்து கொண்டு, புதிய கிளையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    ஸ்டார் டைம் அப்பேரல்ஸ் நிறுவன உரிமையாளரான ஈஸ்வரமூர்த்தி-மகேஸ்வரி, சிவக்குமார்-சாந்தி, தாரணி, சுரசிந்து ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். முதல் விற்பனையை தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியம் துவக்கி வைக்க, அதனை சிவா புளுமெட்டல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆதியூர் மணி என்ற இளங்கோ பெற்றுக்கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம். ஸ்வீட்ஸ் அன்ட் கேக்ஸ் நிறுவனத்தின் வினோத்சிங்காரம், கோவிந்தராஜ், மோகன், மாஸ்டர் மதனகோபால், திருநகர் காலனி சிவக்குமார், சதீஷ், ஈரோடு இதயம் நற்பணி இயக்க தலைவர் மகாதேவன் மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆயக்காரன்புலத்தில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளையை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் திறந்து வைத்தார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலத்தில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளையினை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன், வேதாரண்யம் மேற்கு ஒன்றிய தி.மு.க செயலாளரும், மருதூர் கூட்டுறவு சங்க இயக்குனருமான உதயம் முருகையன், வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு சட்டமன்றம் 2021-22ம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது பேரவை விதிகள் விதி 110ன் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் வட்டம் ஆயக்காரன்புலம் பகுதியில் புதிதாக கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு ஒரு வங்கி கிளை ரூ.22.00 லட்சம் மதிப்பில் புதிதாக துவங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். தொடர்ந்து ஆயக்காரன்புலத்தில் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பயனாளிக்கு வைப்பு தொகைக்கான சேமிப்பு பத்திரத்தினை வழங்கினார்.

    இந்த வங்கி கிளை துவங்குவதன் மூலம் ஆயக்காரன்புலம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு பயிர்க்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்கப்படுவதுடன், வங்கிக் கிளை மூலம் வழங்கப்படும் 

    கடன்களான பொது நகைக்கடன்கள், சிறுவணிகக்கடன், மகளிர் சுயஉதவிக்குழுக்கடன், மாற்றுத் திறனாளி–களுக்கான கடன், டாம்கோ, டாப்செட்கோ, தாட்கோ, சம்பளக்கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன், பணிபுரியும் மகளிர் கடன், கணவனால் கைவிடப்பட்ட மற்றும் கைம்பெண்களுக்கான கடன் ஆகிய கடன்கள் வழங்கப்படுவதால் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் பயன்பெறுவார்கள். 

    இவ்விழாவில் இணைப்பதிவாளர் அருளரசு, நாகப்பட்டினம் மண்டல மேலாண்மை இயக்குநர் பெரியசாமி, இணைப்பதிவாளர் ஜெகத்ரட்சகன், முதன்மை வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், துணைப்ப–திவாளர் கண்ணன், மருதூர் கூட்டுறவு வங்கி தலைவர் சோமசுந்தரம், நாகை மாவட்ட விவசாய தொழியாளர் அணி அமை–ப்பாளர் துரைராசு வங்கி அலுவலர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

    ×