search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய கிளை"

    ஆயக்காரன்புலத்தில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளையை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் திறந்து வைத்தார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலத்தில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளையினை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன், வேதாரண்யம் மேற்கு ஒன்றிய தி.மு.க செயலாளரும், மருதூர் கூட்டுறவு சங்க இயக்குனருமான உதயம் முருகையன், வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு சட்டமன்றம் 2021-22ம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது பேரவை விதிகள் விதி 110ன் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் வட்டம் ஆயக்காரன்புலம் பகுதியில் புதிதாக கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு ஒரு வங்கி கிளை ரூ.22.00 லட்சம் மதிப்பில் புதிதாக துவங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். தொடர்ந்து ஆயக்காரன்புலத்தில் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பயனாளிக்கு வைப்பு தொகைக்கான சேமிப்பு பத்திரத்தினை வழங்கினார்.

    இந்த வங்கி கிளை துவங்குவதன் மூலம் ஆயக்காரன்புலம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு பயிர்க்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்கப்படுவதுடன், வங்கிக் கிளை மூலம் வழங்கப்படும் 

    கடன்களான பொது நகைக்கடன்கள், சிறுவணிகக்கடன், மகளிர் சுயஉதவிக்குழுக்கடன், மாற்றுத் திறனாளி–களுக்கான கடன், டாம்கோ, டாப்செட்கோ, தாட்கோ, சம்பளக்கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன், பணிபுரியும் மகளிர் கடன், கணவனால் கைவிடப்பட்ட மற்றும் கைம்பெண்களுக்கான கடன் ஆகிய கடன்கள் வழங்கப்படுவதால் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் பயன்பெறுவார்கள். 

    இவ்விழாவில் இணைப்பதிவாளர் அருளரசு, நாகப்பட்டினம் மண்டல மேலாண்மை இயக்குநர் பெரியசாமி, இணைப்பதிவாளர் ஜெகத்ரட்சகன், முதன்மை வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், துணைப்ப–திவாளர் கண்ணன், மருதூர் கூட்டுறவு வங்கி தலைவர் சோமசுந்தரம், நாகை மாவட்ட விவசாய தொழியாளர் அணி அமை–ப்பாளர் துரைராசு வங்கி அலுவலர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

    ×