search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சியில் ரூ.3.06 கோடியில்  தாலுகா அலுவலகம்: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
    X

    கள்ளக்குறிச்சியில் தாலுகா அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

    கள்ளக்குறிச்சியில் ரூ.3.06 கோடியில் தாலுகா அலுவலகம்: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

    • கள்ளக்குறிச்சியில் ரூ.3.06 கோடியில் புதிய தாலுகா அலுவலக கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
    • கூட்ட அறை, நில அளவை பிரிவு ஆகிய அறைகள் கட்டப்பட்டு பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் தாசில்தார் அலுவலகம் மிக வும்பழுதடைந்த நிலையில் காணப்பட்டது. இதனால் புதிய வட்டா ட்சியர் அலுவலகம் கட்ட ரூ. 3 கோடியே 6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி தரைதளத்தில் காத்திருப்போர் கூடம், வருவாய் வட்டாட்சியர் (சமூக நலம்), அலுவலக அறை, தபால் வாங்குதல் மற்றும் அனுப்புதல் அறை, கணினி அறை, கழிவறை ஆகியஅறைகளும், முதல் தளத்தில் வருவாய் வட்டாட்சியர் அறை, வட்டாட்சியர்கள் ஆதிதி ராவிடம் மற்றும் வட்ட வழ ங்கல் அறை, அலுவலக அறை ஆகியவைகளும், 2-வது தளத்தில் பதிவறை, அலுவலக அறை, கூட்ட அறை, நில அளவை பிரிவு ஆகிய அறைகள் கட்டப்பட்டு பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இதையொட்டி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை யிலிருந்து காணொளி காட்சி மூலம் புதிய தாலுகா அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார். அதன்படி கள்ளக்குறிச்சி தாசில்தார் அலுவலகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வந்தது. இதைதொடர்ந்து கள்ளக்குறிச்சி சட்ட மன்ற உறுப்பினர் செந்தில்குமார் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, தாசில்தார் விஜய பிரபாகரன், குடிமை பொருள் தாசில்தார் வெங்கடேசன், ஆதிதிராவிட தனி தாசில்தார் நடராஜன், பாதுகாப்பு தனி தாசில்தார் மணிகண்டன், ரயில்வே தனி தாசில்தார் கமலம், வருவாய் ஆய்வாளர்கள் பாலு, சுகன்யா, ராமசாமி, ஜெயந்தி ஆகியோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×