search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government Primary Health Center"

    • நோயாளிகள் காத்திருப்பு கூடம், அவசர சிகிச்சை பிரிவு ஆகிய இடங்களில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
    • மேலும் மருத்துவமனை வளாகத்தில் 100 மரக்கன்றுகள் வளர்க்க அறிவுறுத்தினார்.

    எட்டயபுரம்:

    எட்டயபுரம் அருகே உள்ள கீழ ஈரால் அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு செய்தார்.

    அப்போது உள் நோயாளி சிகிச்சை பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு, ஆய்வகம், புற நோயாளி பிரிவு, நோயாளிகள் காத்திருப்பு கூடம், அவசர சிகிச்சை பிரிவு, சித்த மருத்துவ பிரிவு ஆகிய இடங்களில் திடீர் ஆய்வு செய்தார். மருத்துவ பணியா ளர்களி டம் அடிப்படை பிரச்சி னைகள் குறித்து குறைகளை கேட்டு அறிந்தார். மேலும் மருத்துவமனை வளாகத்தில் 100 மரக்கன்றுகள் வளர்க்க அறிவுறுத்தினார்.

    ஆய்வின்போது சித்த மருத்துவர் கார்த்திகா, சுகாதார நிலைய கண்கா ணிப்பாளர் செந்தில் குமார், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் இமானுவேல், கோவில்பட்டி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக் கண்ணன், கீழ ஈரால் தி.மு.க. கிளைச் செயலாளர், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும் .
    • தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் அழைப்பு விடுத்துள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் நாளை அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் உள்ளிட்டவைகளை திறக்க மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வருகிறார். இதில் திருப்பூர் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும் என தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சியின் 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை (சனிக்கிழமை) மதியம் 12 மணிக்கு திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நகராட்சிக்கு உட்பட்ட கரட்டுப்பாளையத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருப்பூர் மாவட்டத்தில் 12 இடங்களில் கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையங்கள், பிரசவ காத்திருப்பு அறை மற்றும் சித்தா பிரிவு ஆகிய கட்டிடங்களை திறந்து வைக்க உள்ளார்.

    அதன்படி உடுமலை தாலுகாவில் எரிசனம்பட்டி, வெங்கிட்டாபுரம், மானுப்பட்டி, சோமவாரப்பட்டி, ஆண்டியூர், கே.வல்லகொண்டாபுரம், அவினாசி தாலுகாவில் முறியாண்டம்பாளையம், தாராபுரம் தாலுகாவில் டி.ஆலம்பாளையம், வெள்ளகோவில் கரட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் ஆரம்ப துணை சுகாதார நிலையங்கள் திறக்கப்படுகிறது.

    உடுமலை தாலுகாவில் அமராவதிநகரில் பிரசவ காத்திருப்பு அறை மற்றும் மடத்துக்குளம், சாவடிபாளையத்தில் சித்தா பிரிவு கட்டிடங்கள் திறக்கப்படுகிறது. இதில் திருப்பூர் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளை நிர்வாகிகள், இன்னாள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட பிரதிநிதிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கருமத்தம்பட்டியில் பொதுமக்கள் கோரிக்கை
    • விபத்து அவசர சிகிச்சை அளிக்க டாக்டர்களை நியமிக்க வேண்டும்

    கருமத்தம்பட்டி,

    கோவை கருமத்தம்பட்டி பகுதியில் ஆடுவதைக் கூடத்தில் தற்காலிகமாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    இங்கு தினந்தோறும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கர்ப்பிணி பெண்கள் வாரம் தோறும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்ய செவ்வாய்க்கிழமை தோறும் வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, கழிவறையில் தண்ணீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் சரிவர இல்லாமல் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு என தனி கட்டிடம் கட்ட வேண்டும் எனவும் மற்றும் கருமத்தம்பட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் விபத்து ஏற்பட்டால் அவசர கால சிகிச்சைக்கு அவினாசி மற்றும் கோவை செல்ல வேண்டிய சூழல் உள்ளது. எனவே ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தில் 24 மணி நேர விபத்து அவசர சிகிச்சை அளிக்க டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்றனர்.

    இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தரச்சான்று குழுவினர் ஆய்வு செய்தனர்.
    திருப்புவனம்:

    திருப்புவனம் யூனியனை சேர்ந்த பூவந்தியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்தில் பூவந்தியை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 2008-ல் ஐ.எஸ்.ஓ. தரச் சான்று கிடைத்துள்ளது. மேலும் கடந்த ஏப்ரல் மாதத்தில் மாநில சுகாதாரத் துறையும் ஆய்வு மேற்கொண்டுள்ளது.

    தற்போது மத்திய சுகாதாரத் துறையின் தேசிய தர உறுதிச் சான்று ஆய்வு குழு உறுப்பினர்கள் டாக்டர். அர்ச்சனா, டாக்டர். கமலேகர் பாட்டீயா ஆகியோர் கடந்த 2 நாட்களாக பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் ஆய்வு செய்தனர். முன்னதாக அதிகாரிகளை சிவகங்கை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர். ராம்கணேஷ் வரவேற்றார்.

    பின்பு தேசிய தர உறுதிச் சான்று குழுவினர் மருத்துவமனை வளாகத்தூய்மை, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, அவசர சிகிச்சை பிரிவு, ரத்தப் பரிசோதனை கூடம், ஸ்கேன், எக்ஸ்ரே, இ.சி.ஜி. அறைகள், நோயாளிகள் வருகை பதி வேடுகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஆய்வு செய்ததுடன் இதுகுறித்து விளக்கம் கேட்டு அறிந்தனர்.

    தேசிய தர உறுதிச்சான்று குழுவினரிடம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சேதுராமு, டாக்டர்கள் ஸ்ரீகாந்த், வரதீஸ்வரி ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
    டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க கர்ப்பிணி பெண்களுக்கு நூலஅள்ளி அரசு சுகாதார நிலையத்தில் நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    தருமபுரி:

    டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க கர்ப்பிணி பெண்களுக்கு நூலஅள்ளி அரசு சுகாதார நிலையத்தில் நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உழவர் பேரியக்க மாநில செயலாளர் வேலுசாமி தலைமை தாங்கி கர்ப்பிணி பெண்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கினார்.

    நூலஅள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள கர்ப்பிணி கால பெண்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை பற்றி விளக்கி பேசினார். வீடுகளில் பெண்கள் வீட்டை சுத்தமாக வைத்து பராமரிக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க வீட்டை சுற்றி கொட்டாங்குச்சி, பிளாஸ்டிக் டம்ளர், மூட்டை ஓடு, டயர், உடைந்த மண்பானை சட்டி ஆகிய பொருட்களில் தேங்கும் மழைநீரால் டெங்கு கொசு உருவாகிறது. 

    அந்த தேங்கி இருந்த மழைநீரில் இருந்து உருவான ஒரு கொசுவை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. டெங்கு கொசு பரவாமல் இருக்க வீடுகளை அனைவரும் சுத்தமாக பராமரித்து வைக்க வேண்டும். கர்ப்பிணி பெண்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க தீவிரமாக கண்காணித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.  பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
    பெருமத்தூர் கிராமத்தில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். #MinisterVijayabaskar
    மங்களமேடு:

    பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள பெருமத்தூர் கிராமத்தில், நீண்ட நாட்களாக பொதுமக்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறக்க வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர். இதையடுத்து பெருமத்தூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

    விழாவிற்கு தமிழ்நாடு பொதுசுகாதார துறை இயக்குனர் குழந்தைசாமி தலைமை தாங்கினார். பெரம்பலூர் மாவட்ட துணை இயக்குனர் சம்பத் வரவேற்றார். எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு விருந்தினராக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்து பேசுகையில், “தமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக 30 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 925 சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    வேப்பூர் ஒன்றியத்தில் அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தின் கீழ் இப்பகுதி மக்களுக்கு அனைத்து பரிசோதனைகளும் இலவசமாக செய்யப்பட்டு வருகின்றன. மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை, அம்மா பெட்டக பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட அனைத்து பணியாளர்களும் நியமிக்கப்பட்டு சிறப்பான சிகிச்சை தரப்படுகிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார். இதில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணசாமி, கர்ணன், சிவப்பிரகாசம் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் டாக்டர் சேசு நன்றி கூறினார். 
    ×