search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "impeachment"

    • 2009-லிருந்து 2017 வரை உதவி ஜனாதிபதியாக பைடன் பதவி வகித்தார்
    • பரிஸ்மா எனும் உக்ரைன் நிறுவனம் மூலம் சட்டவிரோதமாக லாபம் அடைந்தனர்

    ஆட்சியமைப்பிலும், நீதித்துறையிலும் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் சட்டவிரோதமாக செயல்பட்டிருந்தாலும் அவர்களை உடனடியாக ஒரு உத்தரவின் மூலம் பதவியிலிருந்து நீக்க முடியாது. குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டு, விசாரிக்கப்பட்டு, அது உறுதியானதும் சில வழிமுறைகள் பின்பற்றப்பட்டு விவாதங்கள் நடைபெற்று ஒருமித்த சட்ட மற்றும் அரசியல் வழிமுறைகளின் அடிப்படையில்தான் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள்.

    இது அரசியலமைப்பில் இம்பீச்மென்ட் (impeachment) எனப்படும்.

    இரு நாட்களுக்கு முன், அமெரிக்காவில் ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக குடியரசு கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் கெவின் மெக்கார்த்தி (Kevin McCarthy) அந்நாட்டில் இம்பீச்மென்ட் நடவடிக்கையை தொடங்க முன்மொழிந்துள்ளார்.

    உதவி ஜனாதிபதியாக 2009-லிருந்து 2017 வரை பதவி வகித்தபோது ஜோ பைடன், தனது மகன் ஹன்டர் பைடன் (Hunter Biden) செய்து வரும் பல தொழில்களிலிருந்து, குறிப்பாக உக்ரைன் நாட்டின் பரிஸ்மா (Burisma) எனும் நிறுவனத்திலிருந்து சட்டவிரோதமாக லாபம் அடைந்தார் என பைடன் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.

    அயல்நாட்டு நிறுவனங்களிலிருந்து சுமார் ரூ.165 கோடிகள் ($20 மில்லியன்) அளவிற்கு பைடன் குடும்பத்தினர்கள் ஆதாயம் அடைந்துள்ளனர் என தெரிய வந்திருக்கிறது. இருப்பினும், பயனாளிகளில் பைடனின் பெயர் இருப்பதை உறுதி செய்ய தற்போது வரை எந்த நேரடி ஆவணங்களும் கிடைக்கவில்லை என தெரிகிறது.

    குற்றச்சாட்டுக்களை விசாரிக்க இதற்கான கமிட்டியின் தலைவர் ஜேம்ஸ் கோமர் (James Comer) தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இத்தகைய குற்றச்சாட்டுக்களை முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நீண்ட காலமாக ஜோ பைடன் மீது சுமத்தி வருகிறார்.

    இந்தியாவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் இந்திய ஜனாதிபதி ஆகியோர் இம்பீச்மென்ட் முறையில்தான் பதவியிலிருந்து நீக்கப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்று இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கும்படி ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலருக்கு உத்தரவிட்டார்.
    • புகாரின் பேரில் குரும்பூர் போலீசார் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குரும்பூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 27-ந் தேதி உள்ளாட்சி தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.

    ஆழ்வார்திருநகரி ஒன்றியத்துக்கு உட்பட்ட குரும்பூர் அருகே உள்ள நாலுமாவடி பஞ்சாயத்து தேர்தலில் 7-வது வார்டில் போட்டியிட்ட நாலுமாவடி தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 48) என்ப வர் வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து ராஜேஷ் பஞ்சாயத்து துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்து வந்தார்.

    இதற்கிடையே நாலு மாவடியை சேர்ந்த அழகேசன் என்பவர், பஞ்சாயத்து துணைத்தலைவர் ராஜேசுக்கு எதிராக மதுரை ஐகோர்ட்டு கிளையில் 2021-ம் ஆண்டு டிசம்பரில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், பஞ்சாயத்து துணைத் தலைவர் ராஜேஷ் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டபோது தாக்கல் செய்த வேட்புமனு சத்திய பிரமாண பத்திரத்தில் கொலை வழக்கில் அவர் அனுபவித்த 7 ஆண்டு சிறை தண்டனையை மறைத்து 2 ஆண்டு சிறை தண்டனை என்று குறிப்பிட்டிருந்தார்.

    இவ்வாறு தேர்தலில் முறைகேடாக போட்டியிட்டு வெற்றி பெற்ற ராஜேஷ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி, தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்று இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கும்படி ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலருக்கு உத்தரவிட்டார்.

    இதனைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் ராஜேசின் வார்டு உறுப்பினர் பதவியையும், துணைத் தலைவர் பதவியையும் நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் ராஜேஷ் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாலுமாவடி தெற்கு தெருவை சேர்ந்த சுதாகரன் மனைவி அன்னலெட்சுமி (43). இவர் கடந்த ஆகஸ்டு 31-ந்தேதி ஆடுகளுக்கு இலை பறிப்பதற்காக உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பஞ்சாயத்து துணைத்தலைவராக இருந்த ராஜேஷ் வீட்டிலிருந்து வெளியே வீசப்பட்ட குப்பை பையும், மதுபாட்டில்களும் அன்ன லெட்சுமி மீது விழுந்துள்ளது. இதனை தட்டிக்கேட்ட அவருக்கு, ராஜேஷ் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வாட்ஸ்-அப்பில் அன்னலெட்சுமியை அவதூறாக பேசி ஆடியோ வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் குரும்பூர் போலீசார் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அ.தி.மு.க. அரசின் சாதனைகளை மு.க.ஸ்டாலின் மறைக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
    • எம்.ஜிஆர்.-ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படம் பொறிக்கப்பட்ட புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    வாடிப்பட்டி

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மதுரை மேற்கு (தெற்கு), அலங்காநல்லூர், வாடிப்பட்டி வடக்கு, வாடிப்பட்டி தெற்கு ஆகிய ஒன்றியங்களில் அ.தி.மு.க. எம்.ஜிஆர்.-ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படம் பொறிக்கப்பட்ட புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதய குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வாடிப்பட்டி ஒன்றியத்திற்கு ஒன்றிய செயலாளர் காளிதாசிடம் உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார்.

    இதேபோல் ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், கொரியர் கணேசன், அரியூர் ராதாகிருஷ்ணன் ஆகியோரிடமும் உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டது.

    பின்னர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    இன்றைக்கு சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.திருச்சியில் அமைச்சர் நேருவின் ஆதரவாளருக்கும், நாடாளு மன்ற உறுப்பினர் சிவாவின் ஆதரவா ளர்களுக்கும் சண்டை ஏற்பட்டது. இதில் காவல் நிலையத்தில் சண்டையிட்டு பெண் காவலர் காயமடைந்தார்.காவல் துறை வைத்திருக்கும் முதல்-அமைச்சர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?

    கொரோனா கால கட்டங்களில் எடப்பாடி பழனிசாமி வேலைவாய்ப்பு, கல்வி, வர்த்தகம் போன்ற வற்றில் ஆன்லைன் வர்த்த கத்தை செயல்படுத்தினார். அது மட்டுமல்ல அ.தி.மு.க. 51 ஆண்டுகால வரலாற்றில் 31 ஆண்டுகள் கால ஆட்சியில் தான், தகவல் ெதாழில்நுட்ப கட்டமைப் பில் 100 சதவீதம உள் கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் உருவாக்கப்ப ட்டது. அந்த சாதனைகளை எல்லாம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைத்து விட்டார்.

    அது மட்டுமல்ல இன்றைக்கு தகவல் தொழில் நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்திட 2011-ம் ஆண்டு மடிக்கணி திட்டத்தை திட்டத்தை ஜெயலலிதா உருவாக்கினார்.அதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 52 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப் பட்டது. ஆனால் தற்போது கிடப்பில் போடப்பட்டு உள்ளது. அ.தி.மு.க. ஆட்சி கால நலத்திட்டங்கள் அனைத்தும் முடக்கப்பட்டு விட்டது.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வுக்கு முதல் கையெழுத்து போடுவோம் என்று சொன்னார்கள். ஆனால் சொன்னபடி நடக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் வெற்றிவேல், ஏ.கே.பி. சுப்பிரமணியம், தனராஜன், திருப்பதி, முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பையா, பேரூர் செயலாளர் அசோக்குமார், கோட்டைமேடு பாலன், பால்பண்ணை தலைவர் பொன்ராம், உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞர் பாசறை மாவட்ட துணைச் செயலாளர் மணிமாறன் நன்றி கூறினார்.

    • பிளஸ்-2 தேர்வை நிர்வாக குளறுபடியால் 50 ஆயிரம் பேர் எழுதவில்லை.
    • அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டினார்.

    மதுரை

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் உள்ள மதுரை மேற்கு (தெற்கு), அலங்கா நல்லூர், வாடிப்பட்டி ஆகிய ஒன்றிய அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி படம் பொறிக்கப்பட்ட, புதிய உறுப்பினர்கள் அடையாள அட்டையை, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், மாவட்ட செயலாளருமான

    ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் வெற்றிவேல், தனராஜன், திருப்பதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, நிர்வாகிகள் அரியூர் ராதா கிருஷ்ணன், ரவிச்சந்திரன், காளிதாஸ், கொரியர் கணேசன், அசோக், முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    தமிழகத்தின் நிர்வாக குளறுபடியால் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மிகப்பெரிய குளறுபடி ஏற்பட்டுள்ளது. இந்த தேர்வில் ஹால் டிக்கெட் வழங்கியும், 50 ஆயிரம் பேர் தமிழ் தேர்வை எழுதவில்லை. தமிழ் மொழி காப்போம், தமிழை காப்போம் என்று கூறியவர்கள் இந்த அவல நிலையை ஏற்படுத்தி உள்ளனர்.

    தகவல் தொழில்நுட்பத் துறையில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட திட்டங்களை எல்லாம் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் எடப்பாடியார் செய்த சாதனைகளை மறைத்து கருணாநிதி காலத்தில் இருந்து சிறப்பாக செயல்பட்டதாக முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.

    டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலமாக 2020-ம் ஆண்டு மத்திய அரசிடம் தங்க விருதை எடப்பாடி பழனிசாமி தமிழகத்திற்கு பெற்று தந்தார்.

    கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, ஓசூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில், 1,321ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.664 கோடி முதலீட்டில் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்கினார். இதன் மூலம் ஒரு லட்சம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், ஒரு கோடி பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பு களும் உருவாக்கி கொடுக்கப்பட்டது.

    கொரோனா காலகட்ட ங்களில் வொர்க் ப்ரம் ஹோம் என்பதை செயல்படுத்தினார். அது போல் வேலைவாய்ப்பு, கல்வி, வர்த்தகம் போன்றவற்றில் ஆன்லைன் வர்த்தகத்தை செயல்ப டுத்தினார்.

    அது மட்டுமல்ல அ.தி.மு.க. 51 ஆண்டுகால வரலாற்றில் 31 ஆண்டுகள் கால ஆட்சியில் தான் தகவல்தொழில்நுட்ப கட்டமைப்பில் 100 சதவீதம் உள் கட்டமைப்பு அடிப்படை வசதிகளை உருவாக்க ப்பட்டது. அந்த சாதனைகள் எல்லாம் முதல்-அமைச்சர் மறைத்து விட்டார்.

    நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் அரிசி மிகவும் தரமற்றதாக இருக்கிறது. கால்நடைகளுக்கு கூட வழங்க முடியாமல் இருக்கிறது. இதுகுறித்து என்னிடம் தெரிவித்தார்கள். ஆனால் அரசு மெத்தனப்போக்கு காட்டி வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கீழக்கரையில் தரமற்ற முறையில் தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    • ஒவ்வொரு நகராட்சி கூட்டத்திலும் வரவு- செலவு கணக்குகளை வார்டு கவுன்சிலர்களுக்கு முறையாக காண்பிக்க வேண்டும்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி கூட்டம் தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ஹமீது சுல்தான் முன்னிலை வகித்தார். கமிஷனர் செல்வராஜ் வரவேற்றார்.

    கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    துணைத் தலைவர் ஹமீது சுல்த்தான்:-

    ஒவ்வொரு நகராட்சி கூட்டத்திலும் வரவு- செலவு கணக்குகளை வார்டு கவுன்சிலர்களுக்கு முறையாக காண்பிக்க வேண்டும். அதை விடுத்து விட்டு எப்போது கேட்டாலும் பின்னர் தருகிறேன் என்று சொல்லி அதனை காட்டாமல் இருப்பது சரியல்ல.

    இதுகுறித்து பலமுறை பேசியும் பயனில்லை. வார்டு குறைகளை நிவர்த்தி செய்யக்கோரி கூட்டத்தில் கூறினாலும் சரி செய்யப்படுவதில்லை.

    பாதுஷா (சுயேட்சை):-

    நகராட்சியில் முன்வைக்கப்படும் தீர்மானங்களை நிறைவே ற்றாமல் மெத்தனப் போக்கை அதிகாரிகள் கடைப்பிடிக்கின்றனர். பொதுமக்களின் பிரதிநிதிதியாக இருந்து குறைகளை நிவர்த்தி செய்வதற்கு மட்டுமே இக்கூட்டம் நடைபெறுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    சேக் உசேன் (சுயேட்சை):-

    கீழக்கரை வடக்குத்தெருவில் தார்சாலை முறையாக அமைக்காததால் தரமற்று உள்ளது. கமிஷனர் ஆய்வு செய்ய வேண்டும். கவுன்சிலர்களின் கேள்விக்கு முறையாக பதில் சொல்லி பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    துணைத்தலைவர்:-

    கேரளாவில் இருந்து கீழக்கரை நகருக்குள் தினமும்அதிக எண்ணிக்கை யில்சுற்றுலா பஸ்கள், வாகனங்கள் வருகிறது.

    இதனால் காலை, மாலையில் போக்குவரத்து நெரிசலால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். போக்குவரத்து தடைபடுகிறது. இதில் தீர்வு காண போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நகராட்சி தலைவர்:-

    கீழக்கரை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் கேரள வாகனங்கள் பிரச்னை தொடர்பாக போலீசாருடன் கலந்து பேசி பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.

    சப்ரஸ் நவாஸ்:-

    கீழக்கரையில் உள்ள வார்டுகளில் மற்ற நகராட்சிகளில் குடிநீர் வழங்குவது போன்று லாரிகள் மூலமாக குடிநீர் சப்ளை செய்வதற்கு முன்வர வேண்டும்.

    நகராட்சி தலைவர்:-

    நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் பொதுக்குழாய்கள் 39 உள்ளது.

    இவற்றில் 15 பயன்பாட்டில் இருக்கிறது. மீதமுள்ள 24 குழாய்கள் ஆய்வு செய்யப்பட்டு ஒரு மாத கால அவகாசத்தில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி டிரம்ப் மீது கண்டன தீர்மானம் கொண்டு வரப்படலாம் என பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. #DonaldTrump
    வாஷிங்டன்:

    அமெரிக்க நாட்டில் 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடந்தது. அந்த தேர்தலுக்கான பிரசாரம் உச்சகட்டத்தில் இருந்தபோது, குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீது ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள், பாலியல் புகார்களை கூறினர்.

    ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் உள்ளிட்ட 2 பெண்கள், தங்களுடன் டிரம்ப் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதை வெளியே சொல்லி விடப்போவதாக மிரட்டியதாக கூறப்பட்டது. ஒருவேளை, இந்த விவகாரம் வெளியே கசிந்து விட்டால், அது ஜனாதிபதி தேர்தலில் டிரம்புக்கு எதிராக திரும்பி விடும் என்பதால் அவர்களுக்கு டிரம்பின் வக்கீலாக இருந்த மைக்கேல் கோஹன் பணம் தந்து அவர்களின் வாயை அடைத்தார் என்று தகவல்கள் வெளியாகின.

    இதையடுத்து அமெரிக்க தேர்தல் நிதி சட்டத்தை மைக்கேல் கோஹன் மீறியதாக நியூயார்க் தெற்கு மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு, விசாரணைக்கு வந்தபோது, தன்மீது கூறப்பட்டு உள்ள குற்றச்சாட்டுகளை மைக்கேல் கோஹன் ஒப்புக்கொண்டார்.

    அப்போது அவர், “ஜனாதிபதி தேர்தலின்போது, டிரம்ப் தங்களுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதை வெளியே பகிரங்கப்படுத்திவிடுவோம் என்று சொன்ன 2 பெண்களின் வாய்களை அடைப்பதற்காக, அவர்களுக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் டாலர் ( ஒரு டாலர் சுமார் ரூ.72) கொடுத்தேன். வேட்பாளரின் உத்தரவின்பேரில் நான் இதைச் செய்தேன்” என கூறினார்.

    இந்த விவகாரத்தில் இப்போது டிரம்ப் மீது அமெரிக்க அரசு வக்கீல்கள் நியூயார்க் கோர்ட்டில் ஒரு ஆவணம் தாக்கல் செய்துள்ளனர். அந்த ஆவணத்தில், அவர்கள் முதல்முறையாக டிரம்ப் கூறித்தான், மைக்கேல் கோஹன் தேர்தல் நிதி சட்டத்தை மீறி உள்ளார் என நேரடியாக கூறி உள்ளனர்.

    இது டிரம்புக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விவகாரத்தில் டிரம்ப் மீது அமெரிக்க நாடாளுமன்றத்தில் ‘இம்பீச்மென்ட்’ (கண்டன தீர்மானம்) கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க முடியும் என கூறப்படுகிறது.

    கடந்த மாதம் அமெரிக்காவில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி அமோக வெற்றி பெற்று, பிரதிநிதிகள் சபையை கைப்பற்றி உள்ளது. எனவே அந்த சபையில் தன் மீது ‘இம்பீச்மென்ட்’ கொண்டு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக டிரம்ப் கருதுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இது தொடர்பாக வாஷிங்டன் வெள்ளை மாளிகை ‘வெஸ்ட் விங்’ (ஜனாதிபதி அலுவலகம்) வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கையில், “டிரம்ப் சொல்லித்தான் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் உள்ளிட்ட 2 பெண்களுக்கு நிதி தந்து சட்டத்தை மீறியதாக மைக்கேல் கோஹன் கூறிய விவகாரத்தில் மட்டுமே டிரம்ப் மீது ‘இம்பீச்மென்ட்’ கொண்டு வர வாய்ப்பு உள்ளது” என கூறின.

    இதில், ஜனாதிபதி பதவியில் இருந்து டிரம்ப் வெளியேறிய பின்னர், அவரை சிறைக்கு அனுப்ப வாய்ப்பு உள்ளதாக ஜனநாயக கட்சியினர் கருதுகின்றனர்.

    இதுபற்றி அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் நீதித்துறை குழுவின் தலைவர் பதவியை ஏற்க உள்ள ஜெர்ரி நாட்லர் கருத்து தெரிவிக்கையில், “டிரம்ப் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர் மீது இம்பீச்மென்ட் கொண்டு வர முடியும்” என குறிப்பிட்டார்.

    இதே போன்று ஜனநாயக கட்சி செனட் சபை எம்.பி. கிறிஸ் கூன்ஸ், “ டிரம்ப் பதவி முடிந்து வெளியே சென்ற பின்னர் அவர் மீது இம்பீச்மென்ட் கொண்டு வர முடியும்” என கருத்து தெரிவித்துள்ளார்.

    அதே நேரத்தில் தன்மீது பிரதிநிதிகள் சபையில் ‘இம்பீச்மென்ட்’ கொண்டு வரப்பட்டாலும், செனட் சபையில் அதற்கு வாய்ப்பு இல்லை என்று டிரம்ப் நம்புவதாக தகவல்கள் கூறுகின்றன.
    ×