search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Administrative malpractice"

    • அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
    • மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள்சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்.

    நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வந்தார். இந்நிலையில் இன்று தனது கட்சியின் பெயரை வெளிட்டார். அதில் கூறியிருப்பதவாது:

    தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் "ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்" ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் "பிளவுவாத அரசியல் கலாச்சாரம்" மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன.

    ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகதிற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" (பிறப்பால் அனைவரும் சமம்) என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள்சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்.

    • பிளஸ்-2 தேர்வை நிர்வாக குளறுபடியால் 50 ஆயிரம் பேர் எழுதவில்லை.
    • அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டினார்.

    மதுரை

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் உள்ள மதுரை மேற்கு (தெற்கு), அலங்கா நல்லூர், வாடிப்பட்டி ஆகிய ஒன்றிய அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி படம் பொறிக்கப்பட்ட, புதிய உறுப்பினர்கள் அடையாள அட்டையை, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், மாவட்ட செயலாளருமான

    ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் வெற்றிவேல், தனராஜன், திருப்பதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, நிர்வாகிகள் அரியூர் ராதா கிருஷ்ணன், ரவிச்சந்திரன், காளிதாஸ், கொரியர் கணேசன், அசோக், முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    தமிழகத்தின் நிர்வாக குளறுபடியால் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மிகப்பெரிய குளறுபடி ஏற்பட்டுள்ளது. இந்த தேர்வில் ஹால் டிக்கெட் வழங்கியும், 50 ஆயிரம் பேர் தமிழ் தேர்வை எழுதவில்லை. தமிழ் மொழி காப்போம், தமிழை காப்போம் என்று கூறியவர்கள் இந்த அவல நிலையை ஏற்படுத்தி உள்ளனர்.

    தகவல் தொழில்நுட்பத் துறையில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட திட்டங்களை எல்லாம் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் எடப்பாடியார் செய்த சாதனைகளை மறைத்து கருணாநிதி காலத்தில் இருந்து சிறப்பாக செயல்பட்டதாக முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.

    டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலமாக 2020-ம் ஆண்டு மத்திய அரசிடம் தங்க விருதை எடப்பாடி பழனிசாமி தமிழகத்திற்கு பெற்று தந்தார்.

    கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, ஓசூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில், 1,321ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.664 கோடி முதலீட்டில் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்கினார். இதன் மூலம் ஒரு லட்சம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், ஒரு கோடி பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பு களும் உருவாக்கி கொடுக்கப்பட்டது.

    கொரோனா காலகட்ட ங்களில் வொர்க் ப்ரம் ஹோம் என்பதை செயல்படுத்தினார். அது போல் வேலைவாய்ப்பு, கல்வி, வர்த்தகம் போன்றவற்றில் ஆன்லைன் வர்த்தகத்தை செயல்ப டுத்தினார்.

    அது மட்டுமல்ல அ.தி.மு.க. 51 ஆண்டுகால வரலாற்றில் 31 ஆண்டுகள் கால ஆட்சியில் தான் தகவல்தொழில்நுட்ப கட்டமைப்பில் 100 சதவீதம் உள் கட்டமைப்பு அடிப்படை வசதிகளை உருவாக்க ப்பட்டது. அந்த சாதனைகள் எல்லாம் முதல்-அமைச்சர் மறைத்து விட்டார்.

    நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் அரிசி மிகவும் தரமற்றதாக இருக்கிறது. கால்நடைகளுக்கு கூட வழங்க முடியாமல் இருக்கிறது. இதுகுறித்து என்னிடம் தெரிவித்தார்கள். ஆனால் அரசு மெத்தனப்போக்கு காட்டி வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×