search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gujarat titans"

    • குஜராத் அணி 3 போட்டிகளில் விளையாடி 2-ல் வெற்றியும் 1-ல் தோல்வி அடைந்துள்ளது.
    • பஞ்சாப் அணி 3 போட்டிகளில் விளையாடி 2-ல் தோல்வியும் 1-ல் வெற்றி பெற்றுள்ளது.

    ஐபிஎல் தொடரின் இன்றைய 17-வது லீக் போட்டியில் பஞ்சாப்- குஜராத் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேயத்தில் நடைபெறுகிறது.

    இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    குஜராத் அணி 3 போட்டிகளில் விளையாடி 2-ல் வெற்றியும் 1-ல் தோல்வி அடைந்துள்ளது. பஞ்சாப் அணி 3 போட்டிகளில் விளையாடி 2-ல் தோல்வியும் 1-ல் வெற்றி பெற்றுள்ளது.

    • ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை - குஜராத் அணிகள் மோதின.
    • இந்த போட்டியில் சிஎஸ்கே 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஐபிஎல் தொடரின் 7-வது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய சென்னை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சிவம் துபே 52 ரன்கள் விளாசினார். இதனை தொடர்ந்து விளையாடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது. இதனால் சென்னை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முன்னதாக குஜராத் அணி மெதுவாக பந்து வீசியதாக அந்த அணியின் கேப்டனான சுப்மன் கில்லுக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

    • இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
    • இதில் குஜராத் அணி 3 முறையும், சென்னை அணி 2 முறையும் வென்று இருக்கின்றன.

    சென்னை:

    17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 7-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் பந்து வீச்சை தேர்வு செய்தது. சென்னை அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. இதேபோல் குஜராத் அணி தொடக்க ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் குஜராத் அணி 3 முறையும், சென்னை அணி 2 முறையும் வென்று இருக்கின்றன.

    தசைப்பிடிப்பு காயத்தில் இருந்து மீண்ட இலங்கை வேகப்பந்து வீச்சாளர் பதிரானா சென்னை அணியினருடன் இணைந்து இருக்கிறார். அவர் இம்பேக்ட் வீரராக விளையாட வாய்ப்புள்ளது.

    • குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
    • சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் வீரரும், ஐ.பி.எல்.-இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சாய் கிஷோர். 2024 ஆசிய கோப்பை தொடர் மூலம் இந்திய அணியில் அறிமுகமான சாய் கிஷோர் தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.

    சென்னை சேர்ந்தவரான சாய் கிஷோர் தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற சித்தா படத்தில் இடம்பெற்ற "அமுத கடல் உனக்குத் தான்" பாடலை பாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சித்தார்த் நடித்து வெளியான சித்தா படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்த பாடலும் சமூக வலைதளங்களில் வைரலானது.



    • ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து ஆடம் ஜம்பா விளகியுள்ளார்.
    • குஜராத் அணியில் இருந்து ராபின் மின்ஸ் விலகியுள்ளார்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆஸ்திரேலியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா இடம் பிடித்திருந்தார். ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை தொடர் இருப்பதால், அதிக பணிச்சுமை (heavy workload) காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். அவரை 1.5 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் அணி தக்கவைத்திருந்தது.

    இந்த நிலையில் ரஞ்சி தொடரில் அசத்திய மும்பை அணியின் இடம் பிடித்திருந்த சுழற்பந்து வீச்சாளர் தனுஷ் கொடியானை ராஜஸ்தான் ராயல்ஸ் அவரது அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கு அணியில் சேர்த்துள்ளது.

    கொடியான் ரஞ்சி தொடரில் 502 ரன்கள் அடித்ததுடன், 29 விக்கெட்டுக்கள் கைப்பற்றி தொடர்நாயகன் விருது வென்றார். 8-வது இடத்தில் களம் இறங்கிய அவர் 120, 89 ரன்கள் எடுத்து பாரோடா, தமிழ்நாட்டு அணிகளுக்கு எதிராக அசத்தினார்.

    அதேபோல் குஜராத் அணியில் இடம் பிடித்திருந்த ராபின் மின்ஸ் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார். அவருக்குப் பதிலாக கர்நாடகா மாநிலத்தின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான பி.ஆர். சரத்தை குஜராத் அணி அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கு அணியில் இணைத்துள்ளது.

    பிஆரு் சரத் 28 ஒருநாள், 20 முதல்தர கிரிக்கெட், 43 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹர்திக் தன்னுடைய ஒரிஜினல் அணியான மும்பைக்கு திரும்ப வேண்டும் என எங்களிடம் தெரிவித்தார்.
    • பாண்ட்யா முடிவை நாங்கள் மதிக்கிறோம்.

    அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந்தேதி நடக்கிறது. இந்த ஏலத்துக்கு முன்பு ஐ.பி.எல். அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். அந்த வகையில் குஜராத் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்ட்யா மீண்டும் மும்பை அணிக்கு திரும்பி உள்ளார். புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா தனது ஒரிஜினல் அணியான மும்பை இந்தியன்க்கு செல்ல விருப்பம் தெரிவித்ததாக குஜராத் அணியின் இயக்குனர் விக்ரம் சோலங்கி தெரிவித்தார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    குஜராத் அணியின் முதல் கேப்டனான ஹர்திக், இரண்டு சீசனிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டார். அவர் தன்னுடைய ஒரிஜினல் அணியான மும்பைக்கு திரும்ப வேண்டும் என எங்களிடம் தெரிவித்தார்.

    அவரது முடிவை நாங்கள் மதிக்கிறோம். மேலும் அவரது எதிர்கால முயற்சிகளில் அவர் சிறந்து விளங்க வாழ்த்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஹர்திக் பாண்ட்யாவை குஜராத் அணி தக்கவைத்துக் கொண்டது.
    • ஒருவேளை அவர் மும்பை அணிக்கு சென்றால் சுப்மன கில் கேப்டனாக செயல்படுவார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந்தேதி நடக்கிறது. இந்த ஏலத்துக்கு முன்பு ஐ.பி.எல். அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். வீரர்களை தங்களது அணியில் தக்க வைத்துக் கொள்ளவும், விடுவிக்கவும் இயலும்.

    ஒவ்வொரு அணியும் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்டவர்கள் விவரத்தை நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.

    10 அணிகளிலும் 174 வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர். 81 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில்தான் அதிகமான வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 3 அணிகள்தான் அதிகமான வீரர்களை தக்க வைத்துள்ளன.

    சென்னை அணியில் பென் ஸ்டோக்ஸ், பிரிட்டோரியஸ், அம்பதி நாயுடு, மகாலா, ஜேமிசன், பகத் வர்மா, சேனாபதி, ஆகாஷ் சிங் ஆகிய 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் டோனி விளையாடுவது உறுதியாகி உள்ளது.

    குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டயா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்புவார் என்று கடந்த சில தினங்களாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் இந்த அறிவிப்பின்போது குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டது.

    அதே நேரத்தில் வீரர்களின் பரிமாற்றம் வருகிற 12-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஹர்திக் பாண்ட்யாவை தங்களது அணிக்கு கொண்டுவர மும்பை அணி தொடர்ந்து முயற்சிக்கும் என்று தெரிகிறது. அந்த முயற்சி வெற்றி பெற்றால், குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில் செயல்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    வீரர்கள் விடுவிப்புக்கு பிறகு 10 அணிகளிடமும் ரூ.262.95 கோடி கையிருப்பு இருக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிடம்தான் அதிகபட்சமாக ரூ. 40.75 கோடி கையிருப்பு உள்ளது. அந்த அணி 11 வீரர்களை விடுவித்தது.


    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 வீரர்களை வெளியேற்றி உள்ளதால் ரூ. 31.4 கோடி கைவசம் இருக்கிறது.

    ஐதராபாத் அணி ரூ.34 கோடியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.32.7 கோடியும், பஞ்சாப் கிங்ஸ் ரூ.29.1 கோடியும், டெல்லி கேப்பிடல்ஸ் ரூ.28.95 கோடியும், குஜராத் ரூ.23.15 கோடியும், மும்பை இந்தியன்ன்ஸ ரூ.15.25 கோடியும், ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.14.5 கோடியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ரூ.13.15 கோடியும் கையிருப்பாக வைத்துள்ளன.

    • இன்ஸ்டாகிராமில் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை விதைக்கும் வகையில் புகைப்படம் பதிவிட்டிருந்தார்.
    • ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் யாஸ் தயாள் இடம் பெற்றிருந்தார்.

    ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் யாஸ் தயாள் இடம் பெற்றிருந்தார். இவர் இன்ஸ்டாகிராமில் இஸ்லாமியர்களுக்கு எதிராக சர்ச்சையை கிளப்பும் வகையில் புகைப்படம் பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் யாஷ் தயாளை கடுமையாக விமர்சித்தனர்.

    அந்த பதிவில் இஸ்லாமியர் ஆண்கள் இந்து பெண்களை குறிவைத்து திருமணம் செய்து அவர்களை கொலை செய்வது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் லவ் ஜிகாத் என்று வார்த்தையையும் பயன்படுத்தியுள்ளார். இது ரசிகர்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கிய யாஷ் தயாள், மன்னிக்கவும். அந்தப் புகைப்படத்தை தவறுதலாக பதிவிட்டுவிட்டேன். வெறுப்பை பரப்ப வேண்டாம். அனைத்து மதம் மற்றும் சமூகம் மீதும் எனக்கு மரியாதை இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

     

    இஸ்லாமியர்களுக்கு எதிராக யாஷ் தயாள் வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 5 சிக்சர்களை விட்டுக் கொடுத்து குஜராத் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தவர் தான் இந்த யாஷ் தயாள். 

    • கடந்த சீசனில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியனான நாள் தான் இன்று.
    • தற்போது ஐபிஎல் 16-வது சீசனில் இறுதிப் போட்டிக்கு வந்துள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி, சென்னை அணியை இன்று எதிர்கொள்கிறது.

    கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் 8 அணிகள் மட்டுமே விளையாடிய நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பல மாறுதல்கள் நடந்து தற்போது 10 அணிகள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகின்றன. கடந்த 2022-ம் ஆண்டு 15-வது ஐபிஎல் சீசனில் முதல் முறையாக குஜராத் டைட்டன்ஸ் அணி இடம் பெற்று விளையாடியது.

    இதில், இறுதிப் போட்டிக்கு சென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொண்டது. கடந்த 2022-ம் ஆண்டு மே 29-ம் தேதி நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 22 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

    இதேபோன்று தற்போது ஐபிஎல் 16-வது சீசனில் இறுதிப் போட்டிக்கு வந்துள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி, சென்னை அணியை இன்று எதிர்கொள்கிறது.

    நேற்று அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி நடக்க இருந்தது. ஆனால் கனமழை காரணமாக போட்டி இன்று மாற்றப்பட்டது.

    எல்லாமே குஜராத் அணிக்கு சாதகமாகவே உள்ளதாக சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். நேற்று நடக்க வேண்டிய போட்டி இன்று நடைபெறுகிறது, இன்றும் மழை வந்தால் குஜராத் அணிக்கே கோப்பை என இருக்கும் சூழலில் சென்னை தோல்வியடைந்து விடுமோ என சிஎஸ்கே ரசிகர்கள் கலத்தில் உள்ளனர்.

    இன்று இரவு நடக்கும் போட்டியிலும் மழை பெய்யக் கூடும் என்று கூறப்படுகிறது. அப்படி மழை பெய்தால், குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அப்படி அறிவிக்கப்பட்டால், 2-வது முறையாக குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியனாகும்.

    • குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 233 ரன்களை குவித்தது.
    • மும்பை இந்தியன்ஸ் 18.2 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் 2வது தகுதிச்சுற்று இன்று அகமதாபாத்தில் நடைபெற்றது.

    இந்தப் போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, குஜராத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக விரித்திமான் சகா, ஷுப்மான் கில் களமிறங்கினர். தொடக்கம் முதல் ஷுப்மன் கில் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார்.

    முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்த நிலையில், சகா 18 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சாய் சுதர்சன் கில்லுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

    இதையடுத்து, ஷுப்மான் கில் அதிரடியாக ஆடி 49 பந்தில் சதமடித்து அசத்தினார். இது இத்தொடரில் மூன்றாவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. ஷுப்மான் கில் 60 பந்தில் 10 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 129 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    2-வது விக்கெட்டுக்கு ஷுப்மான் கில்-சாய் சுதர்சன் ஜோடி 138 ரன்களை குவித்தது. சாய் சுதர்சன் 43 ரன்கள் எடுத்து ரிட்டயர் ஹர்ட் முறையில் வெளியேறினார்.

    இறுதியில், குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 233 ரன்களை குவித்தது. பாண்ட்யா 28 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது.

    இதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் அரை சதம் அடித்து 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து, திலக் வர்மா 43 ரன்களும், கேமரன் கிரீன் 30 ரன்களும் எடுத்தனர்.

    ரோகித் சர்மா 8 ரன்களிலும், விஷ்ணு வினோத் 5 ரன்களிலும், நேகல் வதேரா 4 ரன்களிலும், திம் டேவிட் மற்றும் கிறிஸ் ஜோர்டன் தலா இரண்டு ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    17ம் ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை மும்பை இந்தியன்ஸ் எடுத்திருந்தனர்.

    சரியாக 18வது ஓவரில் 12 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வந்தனர்.

    அப்போது களத்தில் இருந்த குமார் கார்த்திகேயா 6 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜாசன் 3 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

    இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் 18.2 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.

    இதன்மூலம், குஜராத் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் தொடரின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

    அடுத்ததாக, மே 28 ம்தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை அணியுடன் குஜராத் அணி மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய குஜராத் அணி 233 ரன்களை குவித்தது.

    அகமதாபாத்:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் 2வது தகுதிச்சுற்று இன்று அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

    இந்தப் போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, குஜராத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக விரித்திமான் சகா, ஷுப்மான் கில் களமிறங்கினர்.

    தொடக்கம் முதல் ஷுப்மன் கில் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார்.

    முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்த நிலையில், சகா 18 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சாய் சுதர்சன் கில்லுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

    இதையடுத்து, ஷுப்மான் கில் அதிரடியாக ஆடி 49 பந்தில் சதமடித்து அசத்தினார். இது இத்தொடரில் மூன்றாவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. ஷுப்மான் கில் 60 பந்தில் 10 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 129 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    2-வது விக்கெட்டுக்கு ஷுப்மான் கில்-சாய் சுதர்சன் ஜோடி 138 ரன்களை குவித்தது. சாய் சுதர்சன் 43 ரன்கள் எடுத்து ரிட்டயர் ஹர்ட் முறையில் வெளியேறினார்.

    இறுதியில், குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 233 ரன்களை குவித்தது. பாண்ட்யா 28 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்குகிறது.

    • அதிரடியாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 60 ரன்கள் சேர்த்தார்.
    • குஜராத் அணி தரப்பில் மோகித் சர்மா, ஷமி தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

    சென்னை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று முதலாவது தகுதிச்சுற்று ஆட்டம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

    துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். 36 பந்துகளில் அரை சதம் கடந்த அவர் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷிவம் துபே ஒரு ரன்னில் வெளியேறினார். ரகானே 17 ரன்களில் அவுட் ஆனார். மறுமுனையில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த தேவன் கான்வே, 40 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 125 ஆக இருந்தது.

    ரகானே, அம்பதி ராயுடு தலா 17 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். 19வது ஓவரில் ஜடேஜாவுடன் இணைந்த கேப்டன் டோனி 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரது அதிரடி பேட்டிங்கை காண காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதன்பின் ஜடேஜா 22 ரன்கள், மொயீன் அலி 9 ரன்கள் (நாட் அவுட்) சேர்க்க, சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் சேர்த்தது.

    குஜராத் அணி தரப்பில் மோகித் சர்மா, ஷமி தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். தர்ஷன், ரஷித் கான், நூர் அகமது தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்குகிறது.

    ×