search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "guard"

    பரங்கிமலை ரெயில் விபத்து விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. விபத்தில் தொடர்புடைய மின்சார ரெயில் டிரைவர், ‘கார்டு’ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #Parangimalai #TrainAccident #StThomas
    சென்னை:

    சென்னை பரங்கிமலை ரெயில் விபத்து தொடர்பான விசாரணையை ரெயில்வே போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். ரெயில் விபத்தில் பயணிகள் உயிரிழந்தது தொடர்பாக வழக்கு எண் 174(மர்ம சாவு, சந்தேக மரணம்) பதிவு செய்யப்பட்டு இருந்தது.

    இதுதொடர்பாக கடந்த 8-ந் தேதி (சனிக்கிழமை) முதற்கட்ட விசாரணை சென்டிரல் ரெயில்வே போலீஸ் டி.எஸ்.பி. இரா.ரவி தலைமையில் நடந்தது. இதில் ரெயில் விபத்து நடந்தபோது அந்த மின்சார ரெயிலை இயக்கிய டிரைவர், ‘கார்டு’ மற்றும் கடற்கரை, மாம்பலம், பரங்கிமலை ரெயில் நிலைய அதிகாரிகள் என 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    அன்றைய தினம் ரெயில் விபத்து எப்படி ஏற்பட்டது? இதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள்? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றது.

    இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி நடந்து முடிந்த முதற்கட்ட விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. அன்றைய தினம் நடத்தப்பட்ட விசாரணையில் ரெயில் டிரைவர், ‘ரெயிலை இயக்குவது மட்டும் தான் என்னுடைய வேலை. கூட்டம் அதிகமாக இருப்பது குறித்தும், பயணிகள் படிக்கட்டில் தொங்கி வருவது குறித்தும் ‘கார்டு’ தனக்கு தகவல் அளிக்கவில்லை என்றும், அவர் தகவல் அளித்து இருந்தால் பக்கவாட்டு சுவர் இருந்த இடத்தில் வேகத்தை குறைத்து இருப்பேன்’ என்றும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட இந்திய குற்றவியல் நடை முறைச் சட்டம் பிரிவு 174-ன் கீழான வழக்கை இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304(ஏ)-க்கு (உள்நோக்கம் இல்லாமல் மரணத்தை விளைவித்தல்) மாற்றப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மின்சார ரெயில் டிரைவர், கார்டு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    இதையடுத்து வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) அடுத்தகட்ட விசாரணை நடைபெற இருக்கிறது. இதில் முதற்கட்ட விசாரணையில் ஆஜரான 5 பேரும் மீண்டும் ஆஜராகிறார்கள். அதுமட்டுமில்லாமல் அன்றைய தினம் சாதாரண பாதையில் இருந்து விரைவு பாதையில் செல்வதற்கு அதிகாரம் அளித்த அதிகாரியையும், மேலும் சிலரையும் விசாரணைக்கு அழைத்து இருக்கின்றனர்.

    இந்த விசாரணையில் ரெயில் விபத்து குறித்து முழு தகவல்களும், என்னென்ன மாதிரியான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன என்ற தகவல்களும் வெளியாகும் என்று போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 
    புதுவையில் காவலர் தேர்வு வயது வரம்பை கவர்னர் கிரண்பேடி உயர்த்த வேண்டும் என்று ஓம்சக்தி சேகர் கடிதம் எழுதியுள்ளார்.

    புதுச்சேரி:

    முன்னாள் எம்.எல்.ஏ. ஓம் சக்தி சேகர் கவர்னர் கிரண்பேடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் தற்போது நடைபெற உள்ள 390 காவலர் பணியிடங்களுக்கான தேர்வு மற்றும் வயது வரம்பு தொடர்பாக வேலை வாய்ப்பற்ற இளைஞர்களின் கோரிக்கையினை தங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

    புதுவை அரசின் காவல் துறை 390 காவலர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை தகுதி வாய்ந்த இளைஞர்களிடமிருந்து வர வேற்றுள்ளது. ஆனால் இந்த தேர்வுக்கான வயது வரம்பு தற்போது 22 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது புதிய பணி நியமன விதியில் 22 ஆக குறைத்து இருப்பது புதுவையில் உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

    புதுவையில் வேலை வாய்ப்பு மிகவும் குறைவு அதை விட அரசு வேலை வாய்ப்பு என்பது மிகவும் குறைவு. எனவே தற்போது நிலவி வரும் வேலை வாய்ப்பற்ற அசாதாரண சூழ்நிலையில், இந்த தேர்வுக்கான வயது உச்ச வரம்பினை மாற்றம் செய்வது என்பது தவிர்க்க முடியாதது.

    எனவே புதுவையில் உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்களின் நலன் கருதி பணிநியமன விதியில் மாற்றம் செய்ய கவர்னர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலை வாய்ப்பற்ற இளைஞர்களின் எதிர்காலத்தையும், அவர்களின் பரிதாபமான நிலையினையும் கருத்தில் கொண்டு தற்போது உள்ள பணிநியமன விதியை மாற்றி வயது உச்ச வரம்பினை தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு ஓம் சக்தி சேகர் கூறியுள்ளார்.

    பீகார் மாநிலத்தில் பணம் எடுத்துச்செல்லப்பட்ட வாகனத்தின் காவலரை துப்பாக்கியால் சுட்டு, வாகனத்தில் இருந்த 52 லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். #Bihar
    பாட்னா:

    பீகார் மாநிலத்தின் சமஸ்திபூர் பகுதியில் இன்று பணத்தை இடமாற்றம் செய்வதற்காக பயன்படுத்தப்படும் வாகனத்தின் மீது மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதுகாவலர் கொல்லப்பட்டார்.

    இதையடுத்து அந்த வாகனத்தில் இருந்து 52 லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து அப்பகுதியில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.

    பணம் எடுத்துச் சென்ற வாகனம், வங்கி ஏ.டி.எம் இயந்திரங்களுக்கு பணம் நிரப்புவதற்காக எடுத்துச்செல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் இந்த விபத்து குறித்து முழுமையான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

    சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள போலீசார் கொள்ளையர்கள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Bihar
    ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற அணிவகுப்பு வரவேற்பு நிகழ்ச்சியின் போது மயக்கம் அடைந்த விமானப்படை வீரரிடம் சென்று பிரதமர் மோடி நலம் விசாரித்த நிகழ்வு வீரர்கள் மற்றும் அதிகாரிகளை நெகிழச்செய்தது. #Modi #TakeCare #Ceremony
    புதுடெல்லி:

    செஷல்ஸ் நாட்டு அதிபர் டேனி பார் அரசு முறை பயணமாக நேற்று டெல்லி வந்தார். அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய வரவேற்பு வழங்கப்பட்டது. இதில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.



    இந்த அணிவகுப்பின் போது, அதில் கலந்து கொண்ட விமானப்படை வீரர் ஒருவர் மயங்கி விழுந்தார். கடும் வெயில் காரணமாக மயங்கி விழுந்த அவரை, சக வீரர்கள் பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்து சென்றனர்.

    பின்னர் வரவேற்பு நிகழ்வுகள் அனைத்தும் முடிந்ததும் செஷல்ஸ் அதிபர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோர் அங்கிருந்து சென்றனர். ஆனால் பிரதமர் மோடி, மயக்கம் அடைந்த அந்த வீரரின் அருகே நடந்து சென்று, அவரிடம் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

    சில நிமிடங்கள் அங்கு நின்ற அவர், வீரரிடம் ‘உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ளுங்கள்’ என்று பரிவாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். பிரதமர் மோடியின் இந்த செயல், அங்கிருந்த வீரர்கள் மற்றும் அதிகாரிகளை நெகிழச்செய்தது.  #Modi #TakeCare #Ceremony
    ×