search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "looted"

    • அற்புதராஜ் மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
    • 12 பவுன் தங்க நகைகள், ரூ. 10 ஆயிரம் ரொக்கபணம் மாயமாகி இருந்தது.

    கோவை,

    கோவை அருகே உள்ள உப்பிலிபாளையம் கிருஷ்ணா கார்டனை சேர்ந்தவர் அற்புதராஜ்(வயது58).

    இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அதிகாரியாக உள்ளார். இவரது மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அற்புதராஜ் தனது குடும்பத்துடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றார். அப்போது இவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 12 பவுன் தங்க நகைகள், ரூ. 10 ஆயிரம் ரொக்கபணம், 3 வெள்ளி டம்ளர்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.

    சுற்றுலா முடிந்து வீட்டிற்கு திரும்பிய அற்புத ராஜ் கதவு உடைக்கப்பட்டு திறந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது நகை மற்றும் பணம் கொள்ளை போனது தெரிய வந்தது.பின் னர் அவர் இதுகுறித்து சிங்காநல்லூர் போலீ சில் புகார் அளித்தார்.

    புகா ரின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி னர். மேலும் கைரேகை நிபு ணர்கள் வரவழைக்கப் பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகியிருந்த கொள்ளையர்களின் கைரே கைகளை பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவில் மர்ம நபர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.

    • சரவணன் போதையில் கதவை பூட்டாமல் அயர்ந்து தூங்கினார்.
    • இது குறித்து சரவணன் ஆழியாறு போலீசில் புகார் செய்தார்.

    கோவை,

    கோவை மாவட்டம் ஆழியாறு அருகே உள்ள துறையூரை சேர்ந்தவர் சரவணன் (வயது30). கூலித்தொழிலாளி.

    சம்பவத்தன்று இவரது மனைவி மற்றும் குழந்தைகள் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று இருந்தனர். வீட்டில் சரவணன் மட்டும் தனியாக இருந்தார்.

    சம்பவத்தன்று இரவு இவர் மது போதையில் வீட்டிற்கு வந்தார். பின்னர் போதையில் கதவை பூட்டாமல் அயர்ந்து தூங்கினார்.

    அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 4 பவுன் தங்க நகைகள், ரூ. 14 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளைடித்து தப்பிச் சென்றார்.

    போதை தெளிந்து எழுந்த சரவணன் நகை மற்றும் பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து ஆழியாறு போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டிற்குள் நுழைந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.

    • நெல்லையை அடுத்த பேட்டை சாம்பவர் வடக்கு தெருவை சேர்ந்தவர் மாடக்கன். இவரது மகன் அய்யப்பன்(வயது 36).
    • இவர் பேட்டை செக்கடி பகுதியில் மணல், ஜல்லி மற்றும் ஹார்வேர்ஸ் விற்பனை கடை நடத்தி வருகிறார்

    நெல்லை:

    நெல்லையை அடுத்த பேட்டை சாம்பவர் வடக்கு தெருவை சேர்ந்தவர் மாடக்கன். இவரது மகன் அய்யப்பன்(வயது 36).

    ரூ.47 ஆயிரம் கொள்ளை

    இவர் பேட்டை செக்கடி பகுதியில் மணல், ஜல்லி மற்றும் ஹார்வேர்ஸ் விற்பனை கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் கடையை அடைத்துவிட்டு சென்ற அய்யப்பன் இன்று காலை கடையை திறப்பதற்காக சென்றார்.

    அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த ரூ.47 ஆயிரம் பணம் திருட்டு போயிருந்தது. மேலும் கடையில் பொருத்தப்பட்டு இருந்த 3 சி.சி.டி.வி. காமிராக்கள், ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவையும் திருட்டு போனது.

    விசாரணை

    இதனால் அதிர்ச்சி அடைந்த அய்யப்பன் பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்த சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவு 12 மணி வரை அய்யப்பன் கடையில் இருந்துள்ளார்.

    அதன்பின்னர் தான் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் அதிகாலையில் வந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அருகில் உள்ள மற்ற கடைகளில் பொருத்தப்பட்டு இருக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • நேற்று பாளையில் உள்ள 2 வங்கிகளில் இருந்து ரூ.17 லட்சத்தை அவரது டிரைவர் துரை எடுத்துள்ளார்.
    • எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் துணிகர சம்பவம் நடந்துள்ளது.

    நெல்லை:

    பாளை மகாராஜநகர் பகுதியை சேர்ந்தவர் பரமசிவ அய்யப்பன். தி.மு.க. பிரமுகர். இவரிடம் தியாகராஜநகரை சேர்ந்த துரை என்பவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    ரூ.17 லட்சம் கொள்ளை

    நேற்று பரமசிவ அய்யப்பன் கூறியதன் பேரில், பாளையில் உள்ள 2 வங்கிகளில் பரமசிவ அய்யப்பனின் சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.17 லட்சத்தை அவரது டிரைவர் துரை எடுத்துள்ளார். பின்னர் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள வங்கிக்கு சென்ற துரை பணத்தை காரில் வைத்து பூட்டிவிட்டு உள்ளே சென்றார்.

    சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.17 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக நெல்லை கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் உத்தரவின்பேரில் பாளை இன்ஸ்பெக்டர் வாசிவம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சி.சி.டி.வி. ஆய்வு

    சம்பவம் நடந்த இடத்தின் அருகே கல்லூரி, வங்கி ஆகியவையும், சிறிது தூரத்தில் பாளை போலீஸ் நிலையமும் உள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் துணிகர சம்பவம் நடந்துள்ளது.

    வங்கி நுழைவு வாயிலில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. காமிராவில் காரின் டிரைவர் இருக்கை பகுதி மட்டுமே தெரிகிறது. இதனால் அதில் மர்ம நபர்களின் உருவம் பதிவாகவில்லை.

    பின் தொடர்ந்து வந்த கும்பல்

    அதன் அருகே போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள சி.சி.டி.வி.யிலும் காட்சிகள் தெளிவாக இல்லை. இதனால் டிரைவர் துரை, ஏற்கனவே பணம் எடுத்த 2 வங்கிகளும் உள்ள பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை தனிப்படையினர் ஆய்வு செய்தனர்.

    இதில் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் காரை பின் தொடர்வது தெரியவந்தது. மேலும் சம்பவ நேரத்தில் அந்த பகுதியில் உள்ள செல்போன் பதிவுகளை பட்டியல் சேகரித்தும், விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் கொள்ளை கும்பல் பற்றிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை தேடிய போது, அந்த கும்பல் ஆந்திராவுக்கு தப்பி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவர்களை கைது செய்ய தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்து உள்ளனர்.

    பேக்கரி கடைக்காரரிடம் லஞ்சம் வாங்கி கைதான ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் சேலம் மெயின் ரோட்டில் பேக்கரி கடை நடத்தி வருபவர் சரவணன். இவரது கடையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வந்ததாக கூறி ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றார். சரவணன் மீது தொடர்ந்து வழக்கு பதிவு செய்யாமல் இருக்க இன்ஸ்பெக்டர் நடராஜன் ரூ.70 ஆயிரம் லஞ்சம் தருமாறு கூறியதாக தெரிகிறது.

    இதையடுத்து சரவணன் ரூ.30 ஆயிரத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜனிடம் கொடுக்க முயன்றார். அந்த தொகையை தான் பெற மாட்டேன் என்றும், ரூ.70 ஆயிரம் தான் தர வேண்டும் என்றும் இன்ஸ்பெக்டர் நடராஜன் கூறினார். ஆனால் ரூ.70 ஆயிரம் கொடுக்க விரும்பாத சரவணன் இது குறித்து கிருஷ்ணகிரியில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைப்படி ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூ.70 ஆயிரத்தை சரவணன், நேற்று மாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜனிடம் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் கொடுத்தார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து சென்று இன்ஸ்பெக்டர் நடராஜனை லஞ்ச பணத்துடன் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடந்தது. கிருஷ்ணகிரி கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதற்கிடையே சேலத்தை அடுத்து உள்ள தாசநாயக்கன் பட்டி லட்சுமி நகரில் உள்ள இன்ஸ்பெக்டர் நடராஜன் வீட்டில் சேலம் லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரமவுலி தலைமையிலான போலீசார் நேற்று மாலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை இரவு வரை நீடித்தது. இதில்முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
    தமிழக பல்கலைக் கழகங்களில் லஞ்சம் வாங்கிக் கொண்டு துணைவேந்தர் பதவி நிரப்பப்பட்டதாக மூத்த பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். #ViceChancellors #bribe

    சென்னை:

    தமிழக பல்கலைக் கழகங்களில் இதற்கு முன்பு பெருமளவு லஞ்சம் வாங்கிக் கொண்டு துணைவேந்தர் பதவி நிரப்பப்பட்டதாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.

    இது, தமிழக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கவர்னர் சொன்ன தகவல் முற்றிலும் உண்மை என்று பல்கலைக்கழக பேராசிரியர்களும், கல்வியாளர்களும் கூறுகிறார்கள்.

    இதுபற்றி மூத்த பேராசிரியர் ஒருவர் கூறும் போது, கடந்த 15 ஆண்டுகளாகவே பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் பணம் பெற்றுதான் வழங்கப்பட்டது.

    ஆரம்பத்தில் ரூ.15 லட்சம் என இதற்கு விலை இருந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து ரூ. 50 கோடி வரை லஞ்சம் பெற்று இந்த பதவி வழங்கப்பட்டது என்று அவர் கூறினார்.

    துணைவேந்தர் பதவி காலம் 3 ஆண்டுகள் மட்டும்தான். இதற்குள் தான் லஞ்சம் கொடுத்த பணத்தை சம்பாதிப்பதுடன் மேற்கொண்டும் சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் துணை வேந்தர்களுக்கு இருந்தது.

     


     

    இதனால் உயர் கல்வித் துறையில் லஞ்சம் தலை விரித்தாடியது என்று சில பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

    சில ஒப்பந்ததாரர்களும், பல்கலைக்கழக தனியார் இணைப்பு கல்லூரிகளும் தங்களுக்கு வேண்டிய சிலரை உருவாக்குவதற்காக அவர்களே தானாக முன் வந்து லஞ்ச பணத்தை கொடுத்ததாகவும் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

    துணைவேந்தராக நியமிக்கப்படுபவருக்கு அதற்கான லஞ்ச பணத்தை திரட்டுவதற்கென்றே புரோக்கர்களும் செயல்பட்டார்கள் என்றும் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

    மேலும் துணைவேந்தருக்கு பல்வேறு வகையில் வருமானம் வருவதற்கும் இந்த புரோக்கர்கள ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளனர்.

    ஆனால், கடந்த 1½ ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் உண்மையான தகுதி அடிப்படையில் நியமிக்கப்படுவதாகவும் பேராசிரியர்கள் கூறினார்கள்.

    பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக தனி தேடுதல் குழு மற்றும் கல்வியாளர்கள் குழு செயல்படுகிறது.

    இதற்கு முன்பு அவர்கள் வெளிப்படையாக செயல்பட்டது இல்லை. ஆனால், இந்த குழு இப்போது வெளிப்படையாக செயல்பட்டு சிறந்த நபர்களை தேர்வு செய்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா தேர்வு செய்யப்பட்ட பிறகு மிகவும் நேர்மையாக பணிகள் நடப்பதாக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

    சமீபத்தில் மதுரை பல்கலைக்கழக துணை வேந்தர் தேர்வு செய்யப்பட்ட போது, 2 அதிகார வர்க்கங்கள் தலையிட்ட போதும் தேர்வு முறையாக நடந்ததாக மூத்த கல்வியாளர் ஒருவர் கூறினார்.

    கான்பூர் ஐ.ஐ.டி. முன்னாள் சேர்மன் அனந்தகிருஷ்ணன் இது பற்றி கூறும் போது, மற்றவற்றில் நடக்கும் ஊழலை விட கல்வி நிறுவனங்களில் நடக்கும் ஊழல் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். அது ஒரு சமூகத்தையே பெரிய அளவில் பாதிக்கும். துணை வேந்தர் நியமனத்தில் மட்டும் அல்ல, அனைத்து வகைகளிலும் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறினார். #ViceChancellors #bribe

    தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டுக்கு செல்லும் உறவினர்களை அனுமதிக்க தனியார் நிறுவன காவலாளிகள் லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்துள்ளன. #Bribe

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கீழ் இயங்கி வரும் ராசா மிராசுதார் மருத்துவ மனைக்கு தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர் போன்ற பல மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    தஞ்சை நகரின் மையப்பகுதியில் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகே அமைந்துள்ளதால் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்ல இந்த மருத்துவமனை வசதியாக உள்ளது.

    இங்கு பிரசவ பிரிவு, கண், பல், குழந்தைகள் நலம் ஆகிய அனைத்து பிரிவுகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் குழந்தைகளுக்கு என தனி சிறப்பு வாய்ந்த மருத்துவமனையாக ராசா மிராசுதார் மருத்துவமனை உள்ளது. தினமும் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கின்றன.

    இங்கு அனைத்து வார்டுகளுக்கும் தனியார் நிறுவனத்தின் மூலம் காவலாளிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து முக்கியமான வார்டுகளுக்கும் ஒரு நாளுக்கு ஒரு காவலாளி வீதம் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் பிரசவ வார்டுகளில் பிரசவித்த பெண்களை பார்க்க செல்லும் உறவினர்கள் மற்றும் பார்வையாளர்களிடம் ரூ.50 முதல் 200 வரை லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

    இதுகுறித்து மருத்துவ மனைக்கு குழந்தையை பார்க்க வந்த சிலர் கூறியதாவது:-

    தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவ மனை தொடங்கிய நாள் முதலே குழந்தைகளுக்கு என்று தனி பிரிவுகள் உள்ளன. மேலும் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ளதால் எளிதில் வந்து சிகிச்சை பெற்று செல்ல முடிகிறது.

    ஆனால் இங்கு தனியார் செக்யூரிட்டி சர்வீஸ் மூலம் காவலாளிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

    இவர்கள் ஆஸ்பத்திரிக்கு பிறந்த குழந்தையை பார்க்க உறவினர்கள் மற்றும் குழந்தையின் தந்தை ஆகியோரை மதியம் 12 மணி முதல் இரவு 7 மணி வரை உள்ளே அனுமதிக்கின்றனர். இரவு நேரங்களில் ஒருவரையும் அனுமதிப்பதில்லை. அவ்வாறு அனுமதித்தால் உள்ளே செல்வதற்கு ரூ.50 முதல் 200 வரை செக்யூரிட்டிகள் பணம் வாங்குகின்றனர். பணம் கொடுக்க மறுத்தால் தகாத வார்த்தையால் திட்டி உள்ளே அனுமதிக்க மறுக்கின்றனர். எனவே இதுகுறித்து கலெக்டர் மற்றும் மருத்துமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பீகார் மாநிலத்தில் பணம் எடுத்துச்செல்லப்பட்ட வாகனத்தின் காவலரை துப்பாக்கியால் சுட்டு, வாகனத்தில் இருந்த 52 லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். #Bihar
    பாட்னா:

    பீகார் மாநிலத்தின் சமஸ்திபூர் பகுதியில் இன்று பணத்தை இடமாற்றம் செய்வதற்காக பயன்படுத்தப்படும் வாகனத்தின் மீது மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதுகாவலர் கொல்லப்பட்டார்.

    இதையடுத்து அந்த வாகனத்தில் இருந்து 52 லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து அப்பகுதியில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.

    பணம் எடுத்துச் சென்ற வாகனம், வங்கி ஏ.டி.எம் இயந்திரங்களுக்கு பணம் நிரப்புவதற்காக எடுத்துச்செல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் இந்த விபத்து குறித்து முழுமையான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

    சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள போலீசார் கொள்ளையர்கள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Bihar
    கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்த உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு லஞ்சம் கேட்ட துப்புரவு ஊழியரை சஸ்பெண்டு செய்து டீன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
    கோவை:

    கோவையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு கோவை மட்டுமன்றி திருப்பூர், ஈரோடு, நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கிறார்கள்.

    தற்கொலை மற்றும் விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்கள் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவ்வாறு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ஒரு உடலை பிணவறையில் இருந்து வெளியே எடுத்து வந்து உறவினர்களிடம் அங்கு வேலை பார்க்கும் ஊழியர் லஞ்சம் கேட்பது போன்ற வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. ஊழியர் லஞ்சம் கேட்கும்போது அருகில் போலீஸ்காரர் ஒருவர் நிற்கும் காட்சியும் அதில் பதிவாகி உள்ளது.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் உடலை ஒப்படைக்கும்போது 2 ஆயிரம், 3 ஆயிரம் பணம் கேட்பதாக ஏற்கனவே புகார் வந்து இருந்தது.

    இந்த நிலையில் பிணத்தை ஒப்படைக்க போலீசார் முன்னிலையில் ஊழியர் லஞ்சம் கேட்ட விவகாரம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் அசோகனிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அவர் விசாரணை நடத்தினார். அப்போது லஞ்சம் கேட்டது அரசு ஆஸ்பத்திரியில் துப்புரவு ஊழியராக வேலை பார்த்து வரும் பரமசிவம்(42) என்பது தெரிய வந்தது. அவரை சஸ்பெண்ட் செய்து டீன் அசோகன் உத்தரவிட்டார். பரமசிவம் லஞ்சம் கேட்டபோது அங்கு இருந்த போலீசார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
    திருவள்ளூர் மாவட்டத்தில் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 6 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #bankrobbery
    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் இருந்து சென்னை வரும் சாலையில் சுமார் 2½ கிலோ மீட்டர் தொலைவில் ஆயில் மில் என்றொரு பகுதி உள்ளது.

    அங்குள்ள 3 மாடி கட்டிடத்தில் கீழ் தளத்தில் சூப்பர் மார்க்கெட் ஒன்றும், முதல் தளத்தில் “பேங்க் ஆப் இந்தியா” கிளையும் செயல் பட்டு வருகிறது.

    அந்த வங்கியின் அருகில் மற்றொரு வங்கியும் 4 ஏ.டி.எம்.களும் இருக்கின்றன. இந்த வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.களுக்கு இரவு நேர காவலாளிகள் இல்லை. அதைப் பயன்படுத்தி நேற்றிரவு மர்ம மனிதர்கள் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்குள் புகுந்து கைவரிசை காட்டி விட்டனர்.

    முதல் தளத்தில் உள்ள அந்த வங்கிக்கு செல்ல, கீழ் தள சூப்பர் மார்க்கெட்டின் பக்கவாட்டுப் பகுதியில் பாதை உள்ளது. மாலையில் வங்கிப் பணிகள் முடிந்ததும் அந்த பாதையை “‌ஷட்டர்” மூலம் மூடி விட்டு செல்வார்கள்.

    நேற்று முன்தினம் சனிக்கிழமை மதியம் வரைதான் வங்கிப் பணிகள் நடந்தது. அதன் பிறகு ஊழியர்கள் வங்கியை பூட்டி விட்டுச் சென்றனர்.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கி மூடப்பட்டிருந்தது. இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணி அளவில் வங்கிக்கு ஊழியர்கள் வந்தனர். நுழைவுப் பகுதியில் உள்ள ‌ஷட்டர் திறந்து இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

    பதட்டத்துடன் வங்கி உள்ளே சென்று பார்த்த போது, ஊழியர்கள் அமர்ந்து பணிபுரியும் இடங்களில் எந்த குளறுபடிகளும் இல்லாமல் இருந்தது. கேஷியர் அறையும் உடைக்கப்படவில்லை.

    வங்கி ஊழியர்கள் அவசரம், அவசரமாக நகைகள் உள்ள பெட்டகம் அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு பெட்டகங்கள் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    நகைப் பெட்டகங்கள் அனைத்தும் கள்ளச் சாவிப் போட்டு திறக்கப்பட்டிருந்தன. அவற்றுக்குள் வாடிக்கையாளர்களின் அடகு நகைகள் வைக்கப்பட்டிருந்தன. அந்த அடகு நகைகள் அனைத்தையும் மர்ம மனிதர்கள் வாரி சுருட்டி எடுத்துச் சென்று விட்டனர்.

    அடகு நகைகளில் ஒரு நகையைக்கூட கொள்ளையர்கள் விட்டு வைக்கவில்லை. பெட்டகங்களை துடைத்து வைத்தது போல அனைத்தையும் அள்ளிச் சென்று விட்டனர்.

    இந்த கொள்ளை குறித்து பேங்க் ஆப் இந்தியா வங்கியின் மேலாளர் சேகர் உடனடியாக திருவள்ளூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி, துணைப் போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி மற்றும் டவுன் போலீசார் ஆயில் மில் பகுதிக்கு விரைந்து சென்று கொள்ளை குறித்து விசாரித்து ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளை போன அடகு நகைகளின் மதிப்பு ரூ.6 கோடி என்பது தெரிய வந்தது.

    ஆனால் வெளிச்சந்தையில் அந்த நகைகளின் மதிப்பு ரூ. 8 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. போலீசார் அந்த வங்கியில், எத்தனை பேர், எத்தனை பவுன் நகைகளை, எவ்வளவு ரூபாய்க்கு அடகு வைத்தனர் என்ற விவரங்களை சேகரித்தனர்.

    அப்போது அந்த வங்கியில் திருவள்ளூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 624 பேர் தங்களது நகைகளை அடகு வைத்திருந்தது தெரிய வந்தது. மொத்தம் 32 கிலோ அளவுக்கு அடகு நகைகள் இருந்தன. அந்த நகைகள் அனைத்தும் பறிபோய் விட்டன.

    இந்த கொள்ளையை மர்ம மனிதர்கள் மிகவும் திட்டமிட்டு அரங்கேற்றி இருப்பது தெரிய வந்துள்ளது. பாதுகாவலர்கள் இல்லாததால் மிகவும் நிதானமாக அவர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

    அடுத்தப்படியாக அவர்கள் கொள்ளையடிப்பதற்கு விடுமுறை தினத்தை தேர்வு செய்துள்ளனர். சனிக்கிழமை இரவே மர்ம மனிதர்கள் வங்கிக்குள் புகுந்து இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    கொள்ளையர்கள் அந்த வங்கியின் எந்த ஒரு பூட்டையும் உடைக்கவில்லை. அனைத்து பூட்டுக்களையும் அவர்கள் கள்ளச்சாவியைப் பயன்படுத்தி கைவரிசை காட்டி உள்ளனர். நுழைவுப் பகுதியில் உள்ள ‌ஷட்டரில் இருந்து பாதுகாப்புப் பெட்டகம் வரை மர்ம மனிதர்கள் எந்த ஒரு இடத்திலும் பூட்டை தகர்க்கவில்லை.

    சில வங்கிகளில் கொள்ளையர்கள் பூட்டை உடைக்க முடியாதபட்சத்தில் சுவரில் துளைப்போட்டு நகைகளை கொள்ளையடிப்பார்கள். இல்லையெனில் வெல்டிங் செய்யும் கருவி மூலம் பெட்டகங்களை உடைத்து கைவரிசை காட்டுவார்கள்.

    ஆனால் அப்படி எதுவுமே இங்கு நடக்கவில்லை. கள்ளச்சாவி போட்டு காரியத்தை கச்சிதமாக முடித்து விட்டனர்.

    கொள்ளை போன நகைகளை வைத்திருந்த பெட்டகத்தின் சாவிகள் அனைத்தும் துணை மேலாளர் ஒருவர் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. சாவிகள் அனைத்தும் அவரிடம் பத்திரமாக உள்ள நிலையில் மர்ம மனிதர்கள் கள்ளச் சாவியை பயன்படுத்தி இருப்பது போலீசாருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். வங்கி ஊழியர்கள், கட்டிட உரிமையாளர் மற்றும் வங்கிக்கு அடிக்கடி வந்து செல்லும் வாடிக்கையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    ஆனால் அதில் பயன் உள்ள வகையில் எந்த துப்பும் துலங்கவில்லை.

    கொள்ளையர்கள் வங்கிக்குள் எந்த தடயத்தையும் விட்டுச் செல்லவில்லை. அந்த வங்கிக்குள் ரூ.25 லட்சம் ரொக்கப் பணம் இருந்தது.

    ஆனால் அந்த பணம் இருக்கும் பகுதிக்கு மர்ம மனிதர்கள் செல்லவில்லை. அடகு நகைகளை மட்டுமே குறி வைத்தே அவர்கள் கை வரிசை காட்டி உள்ளனர்.

    கடந்த வாரம்தான் இந்த வங்கியில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு ஆடிட்டர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருந்தனர். அன்று சுமார் 200 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

    அந்த சம்பவம் நடந்து இன்னும் ஒரு வாரம் கூட நிறைவு பெறவில்லை. அதற்குள் அதே பகுதியில் 32 கிலோ தங்கம் கொள்ளை போய் இருப்பது மக்களிடம் கடும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    பேங்க் ஆப் இந்தியாவில் அடகு நகைகள் கொள்ளை போய் விட்டது என்ற தகவல் பரவியதும் மக்கள் ஆயில்மில் பகுதியில் திரண்டனர். நகைகளை அடகு வைத்த சில பெண்கள் கண்ணீர் மல்க காணப்பட்டனர்.

    திருவள்ளூரில் அடுத் தடுத்து நடக்கும் கொள்ளைகள் போலீசாருக்கு சவால் விடும் வகையில் உள்ளது. ஆடிட்டர் வீட்டில் 200 பவுன் கொள்ளை போன போதே வங்கிகள் உஷாராகி காவலாளியை ஏற்பாடு செய்திருந்தால் அடகு நகைகள் கொள்ளை போய் இருக்காது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    சென்னை வளசரவாக்கத்தில் கடந்த மார்ச் மாதம் ரூ.45 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளைபோனது. அதிலும் இன்னமும் துப்பு துலங்கவில்லை. இந்த நிலையில் திருவள்ளூரில் ஆடிட்டர் வீட்டிலும் வங்கியிலும் கைவரிசை காட்டியது ஒரே கும்பலாகத்தான் இருக்கும் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.#bankrobbery
    ×