search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேட்டையில் கடையை உடைத்து  ரூ.47 ஆயிரம் கொள்ளை - சி.சி.டி.வி. காமிராக்களையும் திருடி சென்றனர்
    X

    பேட்டையில் கடையை உடைத்து ரூ.47 ஆயிரம் கொள்ளை - சி.சி.டி.வி. காமிராக்களையும் திருடி சென்றனர்

    • நெல்லையை அடுத்த பேட்டை சாம்பவர் வடக்கு தெருவை சேர்ந்தவர் மாடக்கன். இவரது மகன் அய்யப்பன்(வயது 36).
    • இவர் பேட்டை செக்கடி பகுதியில் மணல், ஜல்லி மற்றும் ஹார்வேர்ஸ் விற்பனை கடை நடத்தி வருகிறார்

    நெல்லை:

    நெல்லையை அடுத்த பேட்டை சாம்பவர் வடக்கு தெருவை சேர்ந்தவர் மாடக்கன். இவரது மகன் அய்யப்பன்(வயது 36).

    ரூ.47 ஆயிரம் கொள்ளை

    இவர் பேட்டை செக்கடி பகுதியில் மணல், ஜல்லி மற்றும் ஹார்வேர்ஸ் விற்பனை கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் கடையை அடைத்துவிட்டு சென்ற அய்யப்பன் இன்று காலை கடையை திறப்பதற்காக சென்றார்.

    அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த ரூ.47 ஆயிரம் பணம் திருட்டு போயிருந்தது. மேலும் கடையில் பொருத்தப்பட்டு இருந்த 3 சி.சி.டி.வி. காமிராக்கள், ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவையும் திருட்டு போனது.

    விசாரணை

    இதனால் அதிர்ச்சி அடைந்த அய்யப்பன் பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்த சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவு 12 மணி வரை அய்யப்பன் கடையில் இருந்துள்ளார்.

    அதன்பின்னர் தான் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் அதிகாலையில் வந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அருகில் உள்ள மற்ற கடைகளில் பொருத்தப்பட்டு இருக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×