search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "govt schools"

    அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி கற்பிக்கப்பட்டு வரும் நிலையில், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. #TNGovt
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வி தொடங்க அனுமதி அளிக்க கோரிக்கை விடப்பட்டது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்க அனுமதி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஏற்கெனவே அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஆங்கில வழி கல்விக்கு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் வரவேற்பு அதிக அளவில் இருந்து வருகிறது. அதனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. எனவே அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வியை விரிவுபடுத்தப்பட உள்ளதாக அரசாணை தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் ஆங்கில வழி பிரிவுகளில் பயிலும் மாணவர்களிடம் எத்தகைய கட்டணமும் வசூலிக்கக் கூடாது. ஆங்கில வழியில் பாடத்தை நடத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இதர வசதிகள் போதுமான அளவில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஆங்கில வழி கல்வி கோரும் பள்ளிகளில் 50 சதவீத பிரிவுகள் கட்டாயமாக தமிழ் வழி பிரிவுகளாக இருக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஜி.எஸ்.டி.யை எதிர்கொள்ளும் வகையில் 25 ஆயிரம் மாணவர்களுக்கு ஆடிட்டிங் பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
    ஆரணி:

    ஆரணி அருணகிரி சத்திரத்தில் அரசு நடுநிலைப்பள்ளி திறப்பு விழா இன்று நடந்தது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் 3 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டுவரப்படும். 1 லட்சம் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டங்கள் குறித்து கற்பித்தல் பயிற்சி அளிக்கப்படும்.

    ஜி.எஸ்.டி.யை எதிர்கொள்ளும் வகையில் 25 ஆயிரம் மாணவர்களுக்கு ஆடிட்டிங் பயிற்சி (சி.ஏ.) அளிக்கப்படும். 1, 6, 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தில் செல்போனில் பாடங்களை பதிவிறக்கம் செய்து பாடம் நடத்தும் முறை கொண்டுவரப்படும். மத்திய அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டங்கள் உள்ளன. வரும் கல்வியாண்டில் கொண்டுவரப்படும் புதிய பாடத்திட்டம் மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக இருக்கும்.

    அரசு பள்ளிகளில் கழிவறைகளை சுத்தம் செய்ய ஆயிரம் வாகனங்கள் வாங்கப்பட உள்ளன. 20 பள்ளிகளுக்கு ஒரு வாகனம் என ஊழியர்கள் நியமிக்கப்பட்டு கழிவறைகள் சுத்தம் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Sengottaiyan
    தமிழகத்தில் 3 ஆயிரம் அரசு பள்ளிகளில் ரூ.480 கோடி செலவில் இந்த மாத இறுதிக்குள் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், மூலனூர், குண்டடம், வெள்ளகோவில் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தாராபுரம் புதிய கல்வி மாவட்ட அலுவலகம் தாராபுரம் பைவ் கார்னர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டது. இந்த புதிய கல்வி மாவட்ட அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

    விழாவுக்கு கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்கி புதிய கல்வி மாவட்ட அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கல்வெட்டை திறந்துவைத்தார்.

    இதைத்தொடர்ந்து உடுமலை ஜி.வி.ஜி. கலையரங்கில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் 2017-2018-ம் கல்வி ஆண்டில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் மற்றும் 100 சதவீத தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 216 பள்ளி தலைமை ஆசிரியர்கள், 1,687 ஆசிரியர்கள், 21 ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள், நல்லாசிரியர் விருது பெற்ற 6 ஆசிரியர்கள், 100 சதவீதம் வருகை புரிந்த 3 ஆசிரியர்கள் என மொத்தம் 1,933 ஆசிரியர்களுக்கு அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்கள்.

    விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:-

    தமிழகத்தில் 16 மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 500 பட்டய கணக்காளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதன் மூலம் சுமார் 20 ஆயிரம் மாணவ- மாணவிகள் பயனடைவார்கள். பிளஸ்-2 வகுப்பு முடித்தவுடன் இவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.

    தனியார் பள்ளிகளில் மாணவர்கள் மதிப்பெண் குறைவாக எடுத்தால் மாற்று சான்றிதழ் (டி.சி) கொடுத்து வெளியில் அனுப்பி விடுகின்றனர். ஆனால் அரசு பள்ளிகளில் அப்படி இல்லை. தனியார் பள்ளிகளுடன் போட்டி போட்டு வெற்றி பெற வேண்டியது உள்ளது. ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்யும் வகையில் ‘பயோ மெட்ரிக்’ முறை அடுத்த மாதம் முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

    மேலும் தமிழகத்தில் 3 ஆயிரம் பள்ளிகளில் ரூ.480 கோடி செலவில் இந்த மாத இறுதிக்குள் ‘ஸ்மார்ட்’ வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

    தமிழகத்திற்கு மத்திய மனித வளத்துறை மந்திரி வந்த போது கல்வித்துறையில் தமிழ்நாட்டை பின்பற்றப்போகிறோம் என்று பாராட்டினார். புதிய பாடத்திட்டம் வரலாறு படைத்துள்ளது. இன்னும் ஒரு மாத காலத்தில் அங்கன்வாடி மையத்தில் 4 வயது முடிந்த குழந்தைகளை நேரடியாக பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் பள்ளிகல்வியில் 2 லட்சம் பேர் கூடுதலாக சேர்க்கப்படுவார்கள்.

    இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.

    விழாவில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசுகையில், கிராமப்புற ஏழைகள் பயன்பெறும் வகையில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ரூ.25 கோடி செலவில் 38 ஆயிரத்து 500 பேருக்கு கோழிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார். 
    அரசு பள்ளிகளில் கூடுதல் மாணவர்கள் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று பள்ளி கல்வித்துறை மானியக் கோரிக்கை மீது செம்மலை பேசினார். அப்போது அவர் பேசிய கருத்துக்கு பதில் அளித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

    இந்த ஆட்சியில் பள்ளிகளை மூடும் எண்ணம் கிடையாது. 854 பள்ளிகளில் 29 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை. மற்ற பள்ளிகளில் 10 மாணவர்களுக்கு குறைவாக இருப்பதால் மாணவர்களை அதிகமாக சேர்க்க அந்த பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    செப்டம்பர் மாதம் வரை கூடுதலாக மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனவே பள்ளிகளை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை.

    இந்தியாவிலேயே பள்ளிக் கல்வித்துறையில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் அனைத்தும் நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் பல திட்டங்களை மாணவர்கள் நலன் கருதி அரசு செயல்படுத்த உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Sengottaiyan
    ×