search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government servant"

    • அரசு ஊழியர் மர்மமான முறையில் இறந்தார்.
    • இதுகுறித்து சாத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஊத்துப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் நாராயணபெருமாள். இவரது மகன் செல்வகுமார்(வயது33). இவர் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள விவசாய துறை அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு மாதவி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மனைவி, குழந்தைகள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வசித்து வருகின்றனர். அவர்களை விடுமுறை நாட்களில் செல்வகுமார் பார்க்க செல்வதுண்டு. இவருக்கு மது பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு செல்வ குமார் மோட்டார் சைக்கி ளில் ஊருக்கு புறப்பட்டார். அப்போது மது குடித்திருந்த தாக தெரிகிறது. சாத்தூர் அருகே உள்ள உப்பத்தூர் விலக்கு பகுதியில் சென்ற போது செல்வகுமார் சாலை யோரத்தில் மோ ட்டார் சைக்கிளை நிறுத்தினார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

    இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவரது தந்தை நாராயண பெருமாளுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து 108 ஆம்புலன்சு மூலம் செல்வகுமார் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் செல்வகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக சாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமார் எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளி அலுவலக (எஸ்.எஸ்.ஏ) பணியாளராக அடையாள அட்டை மற்றும் பணி ஆணையும் வழங்கியுள்ளாா்.
    • முதன்மைக் கல்வி அலுவலரின் பெயருக்குகளங்கம் விளைவிக்கும் விதமாகவும் செயல்பட்டுள்ளாா்.

    திருப்பூர் :

    திருப்பூரில் அரசு அலுவலரின் பெயரில் போலிச் சான்று வழங்கியவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் திருவளா்செல்வி தரப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பியுள்ள புகாா் கடிதத்தில் கூறியுள்ளதாவது :- திருப்பூா் மாவட்டம் உடுமலை வட்டம் போடிப்பட்டி கிராமம் காமராஜா் நகரில் வசித்து வருபவா் சரவணகுமாா். இவா் அரசு வேலையில் இருப்பதாக கூறி உடுமலையைச் சோ்ந்த தமிழ்செல்வன், ஜெயந்தி, இமானு பிரதீப், சுகுமனோன், பொள்ளாச்சியை சோ்ந்த கோகுல் ஆகிய 5 பேரிடம் ரூ.50 ஆயிரம், ரூ.60 ஆயிரம் என வசூல் செய்து, அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பள்ளி அலுவலக (எஸ்.எஸ்.ஏ) பணியாளராக அடையாள அட்டை மற்றும் பணி ஆணையும் வழங்கியுள்ளாா்.மேலும் அரசு அலுவலரின் பெயரில் போலி சான்றிதழ்களை தயாா் செய்து முதன்மைக் கல்வி அலுவலரின் பெயருக்குகளங்கம் விளைவிக்கும் விதமாகவும் செயல்பட்டுள்ளாா். ஆகவே, அவா் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் ஏற்படுத்திட வேண்டும்.
    • காலை சிற்றுண்டி உணவை அந்தத் துறையில் பணியாற்றும் சத்துணவு ஊழியர்கள் மூலமாகவே சமைத்து வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தஞ்சாவூர், நவ.24-

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் 15-வது மாவட்ட பேரவை கூட்டம் இன்று தஞ்சை இந்திரா நகரில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்தி ரன் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் தமிழ்வாணன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்ட இணை செயலாளர் அறிவழகன் வரவேற்றார். மாநிலச் செயலாளர் அம்சராஜ் தொடக்க உரையாற்றினார்.

    மாவட்ட செயலாளர் ரெங்கசாமி வேலை அறிக்கையும், மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் வரவு செலவு அறிக்கையும், மாவட்ட மகளிர் துணைக் குழு அமைப்பாளர் செல்வி மகளிர் அறிக்கையும் தாக்கல் செய்து பேசினர்.

    மாநில செயலாளர் கோதண்டபாணி சிறப்புரையாற்றினார். மாவட்டத் துணைத் தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட இணை செயலாளர்கள் மகேஷ், செந்தில்குமார், தமிழ்வாணன் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினர் ‌‌.

    இந்த பேரவை கூட்டத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் , சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.

    பள்ளி சத்துணவு மையங்களில் வழங்கப்படும் காலை சிற்றுண்டி உணவை அந்தத் துறையில் பணியாற்றும் சத்துணவு ஊழியர்கள் மூலமாகவே சமைத்து வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், சாலை பணியாளர்களில் 41 மாத பணி நீக்க காலத்தினை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.

    கொரோனா காலத்தில் முடக்கப்பட்டுள்ள சரண் விடுப்பை திரும்ப வழங்கிட வேண்டும், கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் ஏற்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் முன்னாள் மாநில செயலாளர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் மாவட்ட தலைவர் கலியமூர்த்தி, அகில இந்திய இன்சூரன்ஸ் சங்கம் கோட்டத் தலைவர் செல்வராசு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில செயலாளர் ஹேமலதா, மாவட்ட துணை தலைவர் முருகன் ஆகியோர் நன்றி கூறினர்.

    • சிதம்பரம் அருகே அரசு ஊழியர் வாய்க்காலில் அடித்துச் செல்லப்பட்டு பலியானார்.
    • செயற்கைக் கால் பொருத்திய மாற்று திறனாளி. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குமராட்சி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சோழன் (வயது 45). இவர் காட்டுமன்னார்கோவில் சார்நிலை கருவூலத்தில் பணியாற்றி வந்தார். மேலும் செயற்கைக் கால் பொருத்திய மாற்று திறனாளி. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை குமராட்சியில் உள்ள ராஜன் வாய்க்காலுக்கு தனியாக குளிக்க சென்றார். பின்னர் வாய்க்காலில் குளித்துக் கொண்டிருக்கும் போது நீரின் வேகம் அதிகரித்து எதிர்பாராத விதமாக சோழன் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

    குளிக்கச் சென்ற சோழன் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் வீட்டில் உள்ளவர்கள் ராஜன் வாய்க்கா லுக்கு சென்று அவரை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து காட்டு மன்னார்கோவில் தீயணைப்பு நிலையம் மற்றும் போலீ சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை நீரில் அடித்துச் செல்லப்பட்டு புதரில் மாட்டி இருந்த சோழனின் உடலை போராடி மீட்டனர். பின்னர் சோழ னின் உடலை குமராட்சி போலீஸ் நிலையத்திடம் ஒப்ப டைத்தனர். குமராட்சி போலீசார் சோழனின் உடலை பிரேத பரிசோ தனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    • மேல்மலையனூரில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த அரசு ஊழியர் பலியானார்.
    • கடந்த 3-ந் தேதி அலுவலகத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜாமணி (வயது 57) மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம நல அலுவலராக பணிபுரிந்து வந்தார். கடந்த 3-ந் தேதி அலுவலகத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரதவிதமாக சாலை ஓரத்திலிருந்த சிமெண்ட் கட்டை மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராஜமணியை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.பின்பு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ராஜாமணி இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விழுப்புரம் அருகே அரசு ஊழியரை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தினார்.
    • புகாரின்பேரில், அளித்த வளவனூர் போலீசார் வழக்குப் பதிந்து ஸ்டாலினை கைது செய்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே புலவனூரைச் சேர்ந்தவர் புஷ்பராஜ். திறந்த வெளி நெல் கொள்முதல் நிலைய பில் கலெக்டர். இவர், சிறுவந்தாடு அடுத்த ப.வில்லியனுார் பகுதியில் நெல் கொள்முதல் பணியில் ஈடுபட்டிருந்தார். அங்கு கஞ்சா போதையில் வந்த ப.வில்லியனுார் காலனி பகுதியைச் சேர்ந்த அரசு மகன் ஸ்டாலின்திடீரென சிறிய கத்தியால், புஷ்பராஜ் தோள்பட்டை யில் குத்தினார். காயம்டைந்த அவர், விழுப்புரம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார். புகாரி ன்பேரில், அளித்த வளவனூர் போலீசார் வழக்குப் பதிந்து ஸ்டாலினை கைது செய்தனர்.

    ஆசிரியர்கள் பணிக்கு வரத்தொடங்கியதால் மூடப்பட்ட பெரும்பாலான அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. #Jactogeo
    சென்னை:

    9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்- ஆசிரியர்கள் கடந்த 22-ந்தேதி போராட்டத்தை தொடங்கினர்.

    இதற்கிடையே பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் இல்லையென்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தது. இதையடுத்து நேற்று ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினார்கள். சிலர் பணிக்கு திரும்புவதாக அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

    இந்த நிலையில் இன்று ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதால் பள்ளிகள் வழக்கம்போல் செயல்பட்டன.

    கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 5 ஆயிரத்து 872 பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் ஒரு சிலர் தவிர மீதி அனைவரும் பணிக்கு திரும்பி விட்டனர். இதனால் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் வகுப்புகள் வழக்கம் போல நடந்தன.

    ஆனால் இடைநிலை ஆசிரியர்களில் பெரும்பாலானோர் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தொடக்கப்பள்ளிகளில் வகுப்புகள் பாதிக்கப்பட்டன.

    ஈரோட்டில் உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் 97 சதவீதம் பேர் நேற்று பணிக்கு வந்தனர். தொடக்க, நடுபள்ளி ஆசிரியர்கள் 70 சதவீதம் பணிக்கு வந்தனர்.

    ஆசிரியர்கள் பணிக்கு வரத்தொடங்கியதால் மூடப்பட்ட பெரும்பாலான அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

    திருச்சி மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறையில் 99.7 சதவீதம் பேரும், தொடக்க கல்வித்துறையில் 97.78 சதவீதம் பேரும் பணிக்கு திரும்பி உள்ளனர் என்றார்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 98 சதவீதம் அளவுக்கு ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 60 சதவீதம் அளவுக்கு ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். மீதி ஆசிரியர்கள் இன்று பணிக்கு திரும்புகிறார்கள்.

    அரியலூர் மாவட்டத்தில் உயர்நிலைப்பள்ளிகளில் 98 சதவீத அளவுக்கு ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி விட்டனர். அரியலூர் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைபள்ளிகள் உள்ளன. இங்கு பணியாற்றி வரும் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பெரம்பலூர் மாவட்டத்தில் 99 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டனர்.

    கரூர் மாவட்டம் முழுவதும் 85 சதவீதம் அளவுக்கு ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர்.

    மதுரை மாவட்டத்தில் இன்று 97 சதவீத ஆசிரியர், ஆசிரியைகள் பணிக்கு திரும்பினர். போராட்டத்தில் ஈடுபட்டதாக 80-க்கும் மேற்பட்டோர் கைதாகி உள்ளதால் அவர்கள் மட்டும் பணிக்கு வரவில்லை என கூறப்படுகிறது.

    சிவகங்கை மாவட்டத்தில் இன்று 100 சதவீத ஆசிரியர், ஆசிரியைகள் பணிக்கு திரும்பினர்.

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 90 சதவீதம் பேர் பணிக்கு திரும்பிய நிலையில் இன்று அனைவருமே பள்ளிக்கு திரும்பியதாக மாவட்ட கல்வித்துறை தெரிவித்துள்ளது.

    குமரி மாவட்டத்தில் இன்று காலை பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினார்கள். வகுப்புகள் வழக்கம்போல் நடைபெற்றது. குறைவான அளவு ஆசிரியர்களே பணிக்கு செல்லவில்லை.

    தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிக்கூடங்களும் திறக்கப்பட்டன. ஒருசில நிர்வாகிகள் மட்டும் பணிக்கு செல்லவில்லை. போராட்டத்தில் கைதான ஆசிரியர்கள் மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,644 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 8 ஆயிரத்து 52 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இன்று அனைத்து ஆசிரியர்களும் பணிக்கு திரும்பினர்.

    இதேபோல் வேலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களிலும் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதால் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கின. #Jactogeo
    ×