search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government Teachers"

    கும்பகோணம் அருகே தலைமை ஆசிரியரை தாக்கிய வாலிபரை கைது செய்ய கோரி அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களும், ஆசிரியைகளும் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கும்பகோணம்:

    கும்பகோணத்தை அடுத்த கொட்டையூரில் வள்ளலார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவியிடம் நேற்று வாலிபர் ஒருவர் தகராறு செய்துள்ளார்.

    இதுபற்றி அந்த மாணவி பள்ளி ஆசிரியையிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தகராறில் ஈடுபட்ட வாலிபரிடம் ஆசிரியை சென்று பேசியபோது அவர் தகாத வார்த்தை பேசி உள்ளார்.

    இதுபற்றி அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் மனோகரன் சம்பவ இடம் சென்று வாலிபரை கண்டித்தார். அப்போது அந்த வாலிபர் மனோகரனை தாக்கினார். இதில் அவரது மூக்கு உடைந்தது.

    இதுபற்றி மனோகரன் கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி தலைமை ஆசிரியர் மனோகரனை தாக்கிய வாலிபரை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து தலைமை ஆசிரியரை தாக்கிய வாலிபரை கைது செய்ய கோரி அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களும், ஆசிரியைகளும் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டது. #tamilnews
    அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் வருகை பதிவேடு ஆய்வு செய்யப்பட்டு வருவதால் சம்பளம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. #JactoGeo
    தருமபுரி:

    ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

    போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு 4-ந் தேதி சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதற்காக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் விவரம் சேகரிக்கப்பட்டு அவர்கள் வேலை நிறுத்தம் செய்த காலத்திற்கு சம்பளத்தை பிடித்து மீதி நாட்களுக்கு சம்பளம் போட்டு அந்த பட்டியல் கருவூலத்துக்கு அனுப்பப்பட்டது.

    தருமபுரி மாவட்டத்தில் நேற்று மாலைக்குள் சம்பளம் வந்துவிடும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் சம்பளம் வரவில்லை.

    இது குறித்து தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

    இதுவரை தருமபுரி மாவட்டத்தில் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் 24 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு சஸ்பெண்டு செய்யப்பட்டனர். அதில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 10 பேர், பள்ளிக்கல்வித்துறையை சேர்ந்த ஆசிரியர்கள் 17 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    24 ஆசிரியர்களுக்கு 17டி பிரிவின்கீழ் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இவர்கள் மீது பணி நீக்கம் செய்தல், வருடாந்திர ஊதிய உயர்வு வழங்காதது போன்ற ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    மேலும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவரும், பள்ளிக்கல்வி ஆசிரியர் ஒருவரும் பணியிடை மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

    கடந்த 22-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் வருகை பதிவேடு ஆய்வு செய்யப்பட்டு வருவதால் சம்பளம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #JactoGeo
    ஆசிரியர்கள் பணிக்கு வரத்தொடங்கியதால் மூடப்பட்ட பெரும்பாலான அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. #Jactogeo
    சென்னை:

    9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்- ஆசிரியர்கள் கடந்த 22-ந்தேதி போராட்டத்தை தொடங்கினர்.

    இதற்கிடையே பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் இல்லையென்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தது. இதையடுத்து நேற்று ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினார்கள். சிலர் பணிக்கு திரும்புவதாக அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

    இந்த நிலையில் இன்று ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதால் பள்ளிகள் வழக்கம்போல் செயல்பட்டன.

    கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 5 ஆயிரத்து 872 பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் ஒரு சிலர் தவிர மீதி அனைவரும் பணிக்கு திரும்பி விட்டனர். இதனால் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் வகுப்புகள் வழக்கம் போல நடந்தன.

    ஆனால் இடைநிலை ஆசிரியர்களில் பெரும்பாலானோர் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தொடக்கப்பள்ளிகளில் வகுப்புகள் பாதிக்கப்பட்டன.

    ஈரோட்டில் உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் 97 சதவீதம் பேர் நேற்று பணிக்கு வந்தனர். தொடக்க, நடுபள்ளி ஆசிரியர்கள் 70 சதவீதம் பணிக்கு வந்தனர்.

    ஆசிரியர்கள் பணிக்கு வரத்தொடங்கியதால் மூடப்பட்ட பெரும்பாலான அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

    திருச்சி மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறையில் 99.7 சதவீதம் பேரும், தொடக்க கல்வித்துறையில் 97.78 சதவீதம் பேரும் பணிக்கு திரும்பி உள்ளனர் என்றார்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 98 சதவீதம் அளவுக்கு ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 60 சதவீதம் அளவுக்கு ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். மீதி ஆசிரியர்கள் இன்று பணிக்கு திரும்புகிறார்கள்.

    அரியலூர் மாவட்டத்தில் உயர்நிலைப்பள்ளிகளில் 98 சதவீத அளவுக்கு ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி விட்டனர். அரியலூர் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைபள்ளிகள் உள்ளன. இங்கு பணியாற்றி வரும் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பெரம்பலூர் மாவட்டத்தில் 99 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டனர்.

    கரூர் மாவட்டம் முழுவதும் 85 சதவீதம் அளவுக்கு ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர்.

    மதுரை மாவட்டத்தில் இன்று 97 சதவீத ஆசிரியர், ஆசிரியைகள் பணிக்கு திரும்பினர். போராட்டத்தில் ஈடுபட்டதாக 80-க்கும் மேற்பட்டோர் கைதாகி உள்ளதால் அவர்கள் மட்டும் பணிக்கு வரவில்லை என கூறப்படுகிறது.

    சிவகங்கை மாவட்டத்தில் இன்று 100 சதவீத ஆசிரியர், ஆசிரியைகள் பணிக்கு திரும்பினர்.

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 90 சதவீதம் பேர் பணிக்கு திரும்பிய நிலையில் இன்று அனைவருமே பள்ளிக்கு திரும்பியதாக மாவட்ட கல்வித்துறை தெரிவித்துள்ளது.

    குமரி மாவட்டத்தில் இன்று காலை பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினார்கள். வகுப்புகள் வழக்கம்போல் நடைபெற்றது. குறைவான அளவு ஆசிரியர்களே பணிக்கு செல்லவில்லை.

    தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிக்கூடங்களும் திறக்கப்பட்டன. ஒருசில நிர்வாகிகள் மட்டும் பணிக்கு செல்லவில்லை. போராட்டத்தில் கைதான ஆசிரியர்கள் மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,644 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 8 ஆயிரத்து 52 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இன்று அனைத்து ஆசிரியர்களும் பணிக்கு திரும்பினர்.

    இதேபோல் வேலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களிலும் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதால் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கின. #Jactogeo
    கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் உள்பட 2 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    அரசு ஊழியர்-ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜேக்டோ-ஜியோ சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. கோவை மாவட்டத்தில் இந்த மாவட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர். இதனால் ஒரு சில பள்ளிகளில் ஆசிரியர்கள் இன்றி காணப்பட்டது. ஒரு சில அரசு அலுவலகங்களும் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    கோரிக்கைகளை வலியுறுத்தி ஜேக்டோ-ஜியோ சார்பில் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து அரசு ஊழியர், ஆசிரியர்கள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சம்பத்குமார், ஸ்ரீதர், அருணாசலம், இன்னாசி முத்து, மைக்கேல்ராஜ், சாமிநாதன் உள்பட பலரும் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

    தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் உள்பட 2 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்து மண்டபங்களில் தங்க வைத்தனர். முன்னதாக மறியல் போராட்டம் காரணமாக கலெக்டர் அலுவலகம் முன்பு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.

    ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 9-ம் அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 3-வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இன்று மாவட்டம் முழுவதில் இருந்தும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு குவிந்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் திருப்பூர்- பல்லடம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மறியலில் ஈடுபட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கைது செய்து 5 திருமண மண்டபங்களில் அடைத்தனர். #tamilnews
    ×