என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தலைமை ஆசிரியர் மீது தாக்குதலை கண்டித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்
Byமாலை மலர்26 Feb 2019 11:58 AM GMT (Updated: 26 Feb 2019 11:58 AM GMT)
கும்பகோணம் அருகே தலைமை ஆசிரியரை தாக்கிய வாலிபரை கைது செய்ய கோரி அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களும், ஆசிரியைகளும் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம்:
கும்பகோணத்தை அடுத்த கொட்டையூரில் வள்ளலார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவியிடம் நேற்று வாலிபர் ஒருவர் தகராறு செய்துள்ளார்.
இதுபற்றி அந்த மாணவி பள்ளி ஆசிரியையிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தகராறில் ஈடுபட்ட வாலிபரிடம் ஆசிரியை சென்று பேசியபோது அவர் தகாத வார்த்தை பேசி உள்ளார்.
இதுபற்றி அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் மனோகரன் சம்பவ இடம் சென்று வாலிபரை கண்டித்தார். அப்போது அந்த வாலிபர் மனோகரனை தாக்கினார். இதில் அவரது மூக்கு உடைந்தது.
இதுபற்றி மனோகரன் கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி தலைமை ஆசிரியர் மனோகரனை தாக்கிய வாலிபரை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தலைமை ஆசிரியரை தாக்கிய வாலிபரை கைது செய்ய கோரி அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களும், ஆசிரியைகளும் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டது. #tamilnews
கும்பகோணத்தை அடுத்த கொட்டையூரில் வள்ளலார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவியிடம் நேற்று வாலிபர் ஒருவர் தகராறு செய்துள்ளார்.
இதுபற்றி அந்த மாணவி பள்ளி ஆசிரியையிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தகராறில் ஈடுபட்ட வாலிபரிடம் ஆசிரியை சென்று பேசியபோது அவர் தகாத வார்த்தை பேசி உள்ளார்.
இதுபற்றி அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் மனோகரன் சம்பவ இடம் சென்று வாலிபரை கண்டித்தார். அப்போது அந்த வாலிபர் மனோகரனை தாக்கினார். இதில் அவரது மூக்கு உடைந்தது.
இதுபற்றி மனோகரன் கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி தலைமை ஆசிரியர் மனோகரனை தாக்கிய வாலிபரை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தலைமை ஆசிரியரை தாக்கிய வாலிபரை கைது செய்ய கோரி அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களும், ஆசிரியைகளும் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X