search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gold smuggling"

    • இலங்கையில் இருந்து கடல் வழியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
    • இந்த முறை அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பு காரணமாக கடலில் வீசப்பட்ட 11 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இலங்கையில் இருந்து கடல் வழியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கஞ்சா, புகையிலை பொருட்கள், கடல் அட்டை போன்றவை கடத்தலின்போது அதிக அளவில் சிக்கி உள்ளன. ஆனால் அண்மை காரணமாக தங்க கட்டிகளை கடத்தி வருவது அதிகரித்துள்ளது. அவ்வாறு தங்க கட்டிகளை கடத்தி வருபவர்கள் கடலில் அதிகாரிகள் ரோந்துவரும்போது பார்சலை அவர்களுக்கு தெரியாமல் கடலில் வீசி விடுகிறார்கள். கடத்தல்காரர்கள் வீசும் பார்சலில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படுகிறது.

    எனவே தைரியமாக கடலில் அதனை வீசும் கடத்தல்காரர்கள், அதிகாரிகள் சென்ற பின் ஆழ்கடலில் குதித்து ஜி.பி.எஸ். கருவி உதவியுடன் எடுத்து செல்கிறார்கள். ஆனால் இந்த முறை அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பு காரணமாக கடலில் வீசப்பட்ட 11 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கடந்த பிப்ரவரி மாதம் முதல் தற்போது வரை 4 மாதங்களில் இலங்கையில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட 50 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவர்களின் கண்காணிப்பில் இருந்து தப்பி கடத்தல்காரர்கள் 100 கிலோவுக்கும் மேல் தங்க கட்டிகளை கடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    • சரியான ஆவணம் இல்லை எனக் கூறி கடையில் இருந்த ரூ.60 லட்சம் மதிப்புள்ள 17 தங்க பிஸ்கெட்களை எடுத்துகொண்டு சென்று விட்டனர்.
    • கடை மற்றும் மாநகரப் பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மோண்டா மார்க்கெட்டில் சித்தி விநாயக் என்ற பிரபல நகைக்கடை உள்ளது.

    இந்த கடைக்கு கடந்த 27-ந் தேதி 10 பேர் கொண்ட கும்பல் டிப்டாப் உடைய அணிந்து கார்களில் வந்து இறங்கினர்.

    அவர்கள் நாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் எனக் கூறி போலியான அடையாள அட்டைகளை காண்பித்தனர்.

    இதனை நம்பி கடை ஊழியர் மற்றும் உரிமையாளர்கள் அவர்களை சோதனை நடத்த அனுமதித்தனர். அவர்கள் கடையில் இருந்த ஆவணங்கள் மற்றும் நகைகளை சரிபார்த்தனர்.

    அப்போது சரியான ஆவணம் இல்லை எனக் கூறி கடையில் இருந்த ரூ.60 லட்சம் மதிப்புள்ள 17 தங்க பிஸ்கெட்களை எடுத்துகொண்டு சென்று விட்டனர்.

    அவர்கள் சென்ற பிறகுதான் வந்தவர்கள் வருமான வரி அதிகாரிகள் போல் நடித்த திருட்டு கும்பல் என தெரியவந்தது.

    இது குறித்து கடையின் உரிமையாளர் ஐதராபாத் போலீசில் புகார் அளித்தார்.

    ஐதராபாத் நகர போலீஸ் கமிஷனர் சி வி ஆனந்த் தலைமையில் கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கடை மற்றும் மாநகரப் பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    கும்பல் வந்த கார் பதிவு எண் மூலமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் போல நடித்து தங்க பிஸ்கெட்டுகளை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை சேர்ந்த 4 பேர் பிடிபட்டனர்.

    விசாரணையில் அவர்கள் ரகுமான் கபூர் அதர், ஜாகிர் கனி அதர், பிரவீன் யாதவ் மற்றும் ஆகாஷ் அருண் ஹோவில் என தெரியவந்தது.

    அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7 தங்க பிஸ்கெட்டுகள் மீட்கப்பட்டன.

    மேலும் 6 பேர் தலைமறைவாகி விட்டனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் கோவா பகுதிகளுக்கு அவர்கள் தப்பி சென்றது தெரிய வந்துள்ளது.

    அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    மீதமுள்ள குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் கமிஷனர் சி வி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

    • விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
    • யாரும் எதிர்பாராத வகையில் அதிகாரிகளின் பிடியில் இருந்து அவர் தப்பி ஓடினார்.

    திருச்சி:

    திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இது போன்று இயக்கப்படும் விமானங்களில் வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு மலிண்டோ விமானம் வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த பயணி ஒருவரை தனியே அழைத்துச் சென்று நவீன ஸ்கேனிங் கருவி மீலம் சல்லடை போட்டு சோதனை செய்தனர். அப்போது அவர் தனது உடலில் மறைத்து எடுத்து வந்த ரூ.39.50 லட்சம் மதிப்பிலான 652 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து அந்த பயணியை மருத்துவ பரிசோதனைக்காக விமான நிலைய பகுதியில் இருந்து சுங்கத்துறை அதிகாரிகள் வெளியே அழைத்து வந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அதிகாரிகளின் பிடியில் இருந்து அவர் தப்பி ஓடினார். ஆனால் சுங்கத்துறை அதிகாரிகள் அவரை விரட்டி சென்று பிடித்து மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். இதனால் திருச்சி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • மன்னார் வளைகுடா கடல்பகுதி வழியாக இலங்கையில் இருந்து ஒரு படகில் தங்கம் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • இலங்கையில் இருந்து ரூ.4 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.

    பனைக்குளம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் இலங்கைக்கு அருகில் அமைந்துள்ளது. இதனால் கடல் வழியாக தங்கம், கஞ்சா, கடல் அட்டைகள், பீடி இலைகள் உள்பட பல்வேறு பொருட்களை கடத்தி செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.

    இலங்கையில் இருந்து கடத்தல் காரர்கள் தங்கத்தை கடத்தி வருவதை தடுக்கும் வகையில் கடலோர பாதுகாப்பு படை போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கடத்தல்காரர்கள் வரும் பகுதிகளுக்கு ரோந்து படகில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு மன்னார் வளைகுடா கடல்பகுதி வழியாக இலங்கையில் இருந்து ஒரு படகில் தங்கம் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படையினரின் உதவியுடன் ஹோவர் கிராப்ட் கப்பலில் குறிப்பிட்ட பகுதிக்கு சென்றனர்.

    அப்போது மண்டபத்திற்கும், வேதாளைக்கும் இடைப்பட்ட கடல்பகுதியில் ஒரு நாட்டுப்படகு வந்து கொண்டிருந்தது. அதை நிறுத்துமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். அதிகாரிகளை பார்த்ததும் நாட்டுப்படகில் இருந்தவர்கள் ஏதோ ஒரு பொருளை கடலில் வீசியுள்ளனர்.

    இதையடுத்து மத்திய புலனாய்வு பிரிவினர் மற்றும் கடலோர காவல் படையினர் அந்த நாட்டுப்படகில் ஏறி சோதனை செய்தனர். அந்த படகில் வேதாளை பகுதியை சேர்ந்த முகமது நாசர், அப்துல் கனி, பாம்பன் பகுதியை சேர்ந்த ரவி ஆகியோர் இருந்தனர்.

    அவர்களை மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு அழைத்து சென்று தனித்தனியாக அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் கடலில் வீசியது தங்கக்கட்டிகளா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் கடலோர பாதுகாப்பு படை போலீசார் ரோந்து சென்ற போது இலங்கை பகுதியில் இருந்து மேலும் ஒரு நாட்டுபடகு வருவது தெரியவந்தது. அந்த படகை போலீசார் மடக்கி, அதில் வந்த அசாருதீன், சாதிக் அலி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் இலங்கையில் இருந்து ரூ.4 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து தங்கம் கடத்தி வந்த 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் வந்த படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதே போல் தங்கம் கடத்தி வந்தது தொடர்பாக நேற்று 3 பேர் வந்த படகையும் போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்று கடத்தல்காரர்கள் படகில் இருந்து கடலில் பார்சலை வீசிய பகுதி மணாலி தீவுப்பகுதி ஆகும். அங்கு கடலில் தங்கம் வீசப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் மீனவர்களை வைத்து தங்கத்தை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    தங்கம் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து பிடிபட்ட சம்பவம் மண்டபம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • லங்கையில் இருந்து வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
    • பறிமுதல் செய்த அதிகாரிகள், தங்கத்தை கடத்தி வந்ததாக இலங்கை தம்பதியை கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கொச்சி விமான நிலையத்திற்கு இலங்கையில் இருந்து வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் கண்காணித்தனர். இதில் அந்த விமானத்தில் வந்த இலங்கையை சேர்ந்த தம்பதி முகமது சுபைர் மற்றும் முகமது ஜனுபர் ஆகியோர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது. அவர்கள் இருவரையும் தனியாக அழைத்து சென்று அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அப்போது அவர்களின் உடலில் கேப்ஸ்யூல்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் சுமார் 1202.55 கிராம் தங்கம் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதன் மதிப்பு ரூ.60 லட்சம் ஆகும். அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், தங்கத்தை கடத்தி வந்ததாக இலங்கை தம்பதி முகமது சுபைர், முகமது ஜனுபர் இருவரையும் கைது செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேரளாவின் கரிப்பூர் விமான நிலையத்திற்கு தோகாவில் இருந்து ஒரு விமானம் வந்தது.
    • தங்கத்தை கடத்தி வந்ததாக நிஷாத் என்பவரை கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவின் கரிப்பூர் விமான நிலையத்திற்கு தோகாவில் இருந்து ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணி ஒருவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    அவரை அதிகாரிகள் சோதனை செய்த போது அவரிடம் 570 கிராம் தங்கம் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.35 லட்சம் ஆகும். அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், தங்கத்தை கடத்தி வந்ததாக நிஷாத் (வயது 30) என்பவரை கைது செய்தனர்.

    • சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்காமல் இருப்பதற்காக பயணிகள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.
    • சூட்கேஷின் கைப்பிடிகளை பார்த்தபோது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    ஐதராபாத்:

    வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் தங்கம் விலை உயர்ந்த போதைப்பொருட்களை கடத்தி வருகின்றனர்.

    கடத்தல் பொருட்களை தடுக்கும் விதமாக விமான நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளின் உடைமைகளை முழுவதுமாக சோதனை செய்து வருகின்றனர்.

    சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்காமல் இருப்பதற்காக பயணிகள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். ஒரு சிலர் போதை பொருட்களை டியூப் மாத்திரை வடிவில் விழுங்கியும், ஒரு சிலர் தங்கங்களை வாட்ச், தலைமுடி, ஷூ உள்ளிட்டவைகளில் வைத்தும் கடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று வெளிநாட்டில் இருந்து பயணி ஒருவர் விமானத்தின் மூலம் ஐதராபாத் விமான நிலையத்திற்கு வந்தார். அவர் கொண்டு வந்த சூட்கேசில் இருந்த பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    சூட்கேஸில் எந்தவிதமான கடத்தல் பொருட்களும் இல்லை. சூட்கேஷின் கைப்பிடிகளை பார்த்தபோது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    சூட்கேசின் கைப்பிடி மற்றும் ஸ்க்ரூக்கள் தங்கத்தில் செய்யப்பட்டிருந்தது. மொத்தம் ரூ.70 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அவர் நூதன முறையில் கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பயணியிடம் 1.8 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது.
    • கடந்த 24 மணி நேரத்தில் இருவரிடம் இருந்தும் ரூ.2 கோடி மதிப்பிலான 5 கிலோ கடத்தல் தங்கம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    அரபு நாடுகளில் இருந்து கேரளா வரும் விமானங்களில் அடிக்கடி தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

    இதனால் கேரளாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சுங்க அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகப்படும் பயணிகளின் உடமைகள் அனைத்தும் முழுமையாக பரிசோதித்த பின்னரே அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    அந்த வகையில் நேற்று அரபு நாட்டில் இருந்து கேரளாவின் கொச்சி விமான நிலையத்திற்கு வந்த பயணி ஒருவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவர்கள் அந்த பயணியை முழுமையாக பரிசோதித்தனர்.

    இதில் அந்த பயணியிடம் 1.8 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது. இதனை அவர் தனது உள்ளாடையில் மறைத்து எடுத்து வந்தார். இதன் மதிப்பு ரூ.1.6 கோடியாகும். இதையடுத்து அவரை அதிகாரிகள் கைது செய்தனர். அவரது பெயர் முகமது அஷ்ரப். மலப்புரத்தை சேர்ந்தவர்.

    இதுபோல நேற்று முன்தினம் இன்னொரு பயணி உடலுக்குள் கேப்ஸ்யூல் வடிவில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தார். அவரது பெயர் முகமது நசீப். அவரிடம் இருந்து 1.15 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    கடந்த 24 மணி நேரத்தில் இருவரிடம் இருந்தும் ரூ.2 கோடி மதிப்பிலான 5 கிலோ கடத்தல் தங்கம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொ டர்பாக 2 பேரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கேரளாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சுங்க அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • தங்கத்தை கடத்தி வந்ததாக கோழிக்கோடு மாவட்டம் நரிக்குனியை சேர்ந்த அஸ்மா பீவி கைது செய்யப்பட்டார்.

    திருவனந்தபுரம்:

    வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்படுகிறது.

    இதையடுத்து கேரளாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சுங்க அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகப்படும் பயணிகளின் உடமைகள் முழுமையாக பரிசோதிக்கப்பட்ட பின்னரே அவர்கள் வெளியே செல்ல அனுமதித்தனர்.

    இந்த நிலையில் துபாயில் இருந்து கோழிக்கோடு வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதிகாரிகள் அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் பரிசோதித்தனர்.

    இதில் இளம்பெண் ஒருவரை பரிசோதித்தபோது அவரது உள்ளாடைக்குள் தங்கம் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவரிடம் இருந்து ரூ.ஒரு கோடி மதிப்பிலான 2031 கிராம் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.

    தங்கத்தை கடத்தி வந்ததாக கோழிக்கோடு மாவட்டம் நரிக்குனியை சேர்ந்த அஸ்மா பீவி (வயது 32) கைது செய்யப்பட்டார். இவர் தங்க கடத்தல் கும்பலை சேர்ந்தவராக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகப்பட்டனர்.

    எனவே அவரிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வளைகுடா நாடான ஷார்ஜாவில் இருந்து கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு தினசரி ஏர் அரேபியா விமானம் இயக்கப்படுகிறது.
    • வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 11 பயணிகளிடம் இருந்து மொத்தம் 6.62 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்தனர்.

    கோவை:

    கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும், மும்பை, டெல்லி, ஐதராபாத் போன்ற பிற மாநிலங்களுக்கும், சென்னைக்கும் தினசரி விமானங்கள் இயக்கப்படுகிறது.

    வெளிநாடுகளில் இருந்தும் விமானத்தில் வரும் பயணிகள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வருவது வாடிக்கையாக உள்ளது. இதனை அதிகாரிகள் கண்காணித்து நகைகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    வளைகுடா நாடான ஷார்ஜாவில் இருந்து கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு தினசரி ஏர் அரேபியா விமானம் இயக்கப்படுகிறது. இந்த விமானத்தில் கோவைக்கு வரும் பயணிகள் சிலர் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வருவதாக உளவுப்பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து கோவை விமான நிலைய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஷார்ஜாவில் இருந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.

    அப்போது அந்த விமானத்தில் வந்த 11 பயணிகள் தங்களது பேண்ட் பைகள், மலக்குடல், காலணிகள் மற்றும் ஜீன்ஸ் பேண்டில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.

    வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 11 பயணிகளிடம் இருந்து மொத்தம் 6.62 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.3.8 கோடி ஆகும்.

    இந்த சோதனையில் ½ கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகளை கடத்தி வந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த அர்ஜூன் (43) என்பவரை மட்டும் அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து மற்ற பயணிகளிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 2 பயணிகள் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர்களை தனியாக அழைத்து விசாரணை செய்தனர்.
    • தங்கம் கடத்தி வந்த 2 பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆலந்தூர்:

    துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது 2 பயணிகள் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர்களை தனியாக அழைத்து விசாரணை செய்தனர். அப்போது ஒருவர் அவரது உள்ளாடைக்குள் 856 கிராம் தங்கச் செயினை மறைத்து கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

    இதேபோல் மற்றொரு பயணி தான் கொண்டுவந்த டி-சர்ட்டின் காலரில் 330 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது தெரிந்தது.

    இதையடுத்து மொத்தம் சுமார் 1.08 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். தங்கம் கடத்தி வந்த 2 பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய் பாஸ்கருக்கு தகவல் கிடைத்தது.
    • 4 பெண்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களது உடமைகளை சோதனை செய்தனர்.

    சென்னை:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் அதிக அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய் பாஸ்கருக்கு தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் இலங்கையில் இருந்து வந்த விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது இலங்கையை சேர்ந்த விமலா ராணி (வயது 30), ஜுவானி (28) உள்பட 3 பெண்களும், தமிழகத்தை சேர்ந்த ஒரு பெண் என 4 பெண்களை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களது உடமைகளை சோதனை செய்தனர்.

    அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அப்போது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். 4 பேரிடம் இருந்து ரூ.61 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 330 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக 4 பெண்களை கைது செய்து தங்க கடத்தல் பிண்ணனியில் உள்ளவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×