என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "girl suicide"
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வாய்மேடு அருகே உள்ள தகட்டூர் சமத்துவபுரம் ரோஜா தெருவை சேர்ந்தவர் வீரமணி (வயது50). விவசாயி. இவருடைய இளைய மகன் ரவிசங்கர் (19). டிப்ளமோ படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
நேற்றுமுன்தினம் வீட்டில் இருந்த ரவிசங்கர், திடீரென மாயமானார். அவரை வீரமணி மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
நேற்று காலை அப்பகுதியில் வீரமணி மற்றும் உறவினர்கள் ரவிசங்கரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் ரவிசங்கரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். இதில் ரவிசங்கரின் செல்போன் ‘ரிங்டோன்’ அப்பகுதியில் உள்ள ஒருவருடைய வீட்டுக்குள் இருந்து ஒலித்தது. ஆனால் அந்த வீடு பூட்டப்பட்டிருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த வீரமணி உள்ளிட்டோர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் மின்விசிறியில் ரவிசங்கர், 16 வயது சிறுமி ஒருவருடன் தூக்கில் பிணமாக தொங்கினர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வீரமணி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீகாந்த், வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேம்பரசி மற்றும் போலீசார் அங்கு சென்று ரவிசங்கர் மற்றும் சிறுமியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
முதல் கட்ட விசாரணையில் ரவிசங்கரும், 16 வயது சிறுமியும் ஒன்றாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் இவர்கள் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்ததும் தெரியவந்தது. இவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்பது பற்றி வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த நரியாம்பட்டு பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் குப்பன். இவரது மனைவி ரஜினா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சுசிலா (வயது 14). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பும், அவரது தங்கை சுஸ்மிதா (12). 6-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை சகோதரிகள் 2 பேரும் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு திடீரென கைகலப்பாக மாறியது.
இதனை கண்ட ரஜினா, சுசிலாவை கடுமையாக திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சுசிலா வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த உமராபாத் போலீசார் உடலை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்:
திருவாரூர் தாலுகா காவல் சரகத்திற்குட்பட்ட புலவலம் பகுதியை சேர்ந்தவர் வீரக்குமார். விவசாயி. இவருடைய மனைவி மதிசெல்வி (வயது 31). இவர்களுக்கு திருமணம் முடிந்து 7 வருடங்கள் ஆகிவிட்டன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே கணவன்-மனைவி இடையே தகராறு இருந்து வந்தது. இதனால் மதிசெல்வி கணவரை பிரிந்து திருவாரூர் அருகே உள்ள விளமல் பகுதியில் தனியாக வசித்து வந்தார். இதனால் மனஉளைச்சலில் இருந்த வந்த அவர் கடந்த 17-ந்தேதி வீட்டில் இருந்த மண்எண்ணெய் உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மதிசெல்வி சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #suicide
கோவை கவுண்டம்பாளையத்தை அடுத்துள்ள இடையார்பாளையம் சிவாஜி காலனி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 31). இவர் பெங்களூரில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வருகிறார் இவரது மனைவி மஞ்சுளா தேவி (23). இவர்களுக்கு 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது
மஞ்சுளாதேவி மாமியார் மாமனாருடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாமியார் உடல் நலக் குறைவால் படுத்த படுக்கையாக இருந்தார். அவரை மஞ்சுளாதேவி சரியாக கவனிக்கவில்லை என்று உறவினர்கள் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மஞ்சுளாதேவி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற துடியலூர் அனைத்து மகளிர் போலீசார் மஞ்சுளா தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து நடத்தி கூருகின்றனர்.
திருமணம் நடந்து 3 வருடங்கள் மட்டும் ஆவதால் ஆர்.டி.ஒ விசாரணையும் நடந்து வருகிறது. மஞ்சுளா தேவியின் கணவர் மற்றும் உறவினர்களிடம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள ஆலத்தூரைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகள் ஜனனி (வயது 19). வடமதுரை அருகே உள்ள நாடு கண்டனூர் பிரிவில் உள்ள தனியார் மில்லில் தங்கி வேலை பார்த்து வந்தார். நேற்று விடுதி அறையிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து மில் நிர்வாகத்தினர் வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஜனனியின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஜனனியின் அறையில் ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில் தான் ஒருவரை காதலித்ததாகவும், அவர் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் எழுதி இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜனனியின் தற்கொலை குறித்து அறிந்ததும் அவரது உறவினர்கள் மற்றும் இந்து முன்னணியினர் திண்டுக்கல் - திருச்சி 4 வழிச்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். வேடசந்தூர் டி.எஸ்.பி. தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அவர்கள் கலைந்து செல்லாததால் லேசான தடியடி நடத்தி அவர்களை கலைய வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அனுமதியின்றி மறியலில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்டவர்கள் மீது வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி அருகே அரண்மனைப்புதூர் முல்லை நகரைச் சேர்ந்தவர் முருகன் மகள் சங்கீதா (வயது 22). அப்பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்துக் கொண்டு மாலை நேர கல்லூரியில் படித்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றதால் மனமுடைந்த சங்கீதா விஷம் குடித்து மயங்கினார். அக்கம் பக்கத்தினர் மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கீதா பரிதாபமாக உயிழந்தார்.
கூடலூர் எம்.ஜி.ஆர். காலனியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் கபிலன் (வயது 17). அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பள்ளி தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கூடலூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி அருகே அல்லி நகரம் கக்கன்ஜி காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ் (30). இவரது மனைவி கிருஷ்ணவேனி. இருவருக்கும் திருமணமாகி 10 வருடங்கள் ஆகிறது. ஆனால் குழந்தைகள் இல்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ரமேஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அல்லிநகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திண்டுக்கல்-நத்தம் நம்பிக்கோட்டை பகுதியை சேர்ந்த திருப்பதி மகள் ராஜேஸ்வரி (வயது23). இவர் அதே பகுதியை சேர்ந்த சக்திவடிவேல் (25) என்பவரை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளார்.
இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக சென்று வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சக்திவடிவேல் தனது காதலியை பார்ப்பதை தவிர்த்து வந்துள்ளார். அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.
ஆனால் அதற்கு அவர் மறுத்ததோடு இனிமேல் தனக்கு போன் செய்ய வேண்டாம் என மிரட்டி உள்ளார்.
இதனால் வேதனை யடைந்த ராஜேஸ்வரி இன்று காலை தனது காதலன் வீட்டுக்கு வந்தார். அவரை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்துள்ளனர். இதனால் தான் கொண்டு வந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் இது குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து ராஜேஸ்வரியை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிக்கை வேளாங்காட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகள் விஜயபாரதி (வயது 17). ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த வருடம் பொதுத்தேர்வு என்பதால் நன்றாக படிக்க அவரது தாய் வற்புறுத்தியுள்ளார்.
ஆனால் மாணவி படிப்பில் நாட்டமில்லாமலேயே இருந்துள்ளார். இதனை அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த விஜயபாரதி விஷம் குடித்து மயங்கினார். கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அம்பிளிக்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம் அருகே ஸ்ரீராமபுரம் கணபதி நகரைச் சேர்ந்தவர் மகுடீஸ்வரன் (வயது 35). எலக்ட்ரீஷியன். குடும்ப தகராறு காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த மகுடீஸ்வரன் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பழனி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே உள்ள உழவன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 42), விவசாயி. இவருடைய மனைவி மணிலா (37). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏ ற்பட்டு வந்துள்ளது. இதேபோல் நேற்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த மணிலா தற்கொலை செய்து கொள்வதற்காக தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பழனி மனைவியை காப்பாற்ற கிணற்றில் குதித்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கணவன்-மனைவி 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே மணிலா பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த பழனிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்தகராறில் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்