search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fish Recipes"

    குழந்தைகளுக்கு ஃப்ரைடு ரைஸ் என்றால் விருப்பம் தான்.. அதிலும் பிஷ் ஃப்ரைடு ரைஸ் என்றால் ஒரு பிடி பிடித்து விடுவார்கள். இன்று பிஷ் ஃப்ரைடு ரைஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சாதம் - ஒரு கப்
    வறுத்த மீன் - 2 துண்டுகள்
    சோயா சாஸ் - 2 ஸ்பூன்
    உப்பு - தேவைக்கு
    தக்காளி சாஸ் - 1
    வினிகர் - 2 ஸ்பூன்
    வெங்காயம் - 2
    முட்டை - 1
    கறிவேப்பிலை - சிறிதளவு
    பச்சைமிளகாய் - 1
    கேரட், பீன்ஸ், கோஸ் - ஒரு கப்
    நெய் - 3 ஸ்பூன்
    பூண்டு - 4 பல்



    செய்முறை :

    வெங்காயம், பூண்டு, ப.மிளகாய், கேரட், பீன்ஸ், கோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீனை முள் இல்லாமல் எடுத்து வைக்கவும்.

    சாதத்தை உதிரியாக வடித்து கொள்ளவும்.

    முட்டையை உதிரியாக பொரித்து வைக்கவும்.

    கடாயில் நெய் விட்டு கறிவேப்பிலை, பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் சாஸ் வகைகள் மற்றும் வினிகரை சேர்த்து காய்கறிகளை வேகவிடவும்.

    அடுத்து அதில் பொரித்த முட்டை, வறுத்த மீன் மற்றும் சாதத்தை கொட்டி கிளறி இறக்கவும்.

    இப்போது சூப்பரான பிஷ் ஃப்ரைடு ரைஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    “ஓமேகா 3” என்ற ஒரு வகை ஆசிட் மீனில் உள்ளது. மீன் பஜ்ஜி மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட்ட அருமையாக இருக்கும். இன்று மீனில் பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள்:

    முள் இல்லாத துண்டு மீன் - முக்கால் கிலோ
    மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்
    பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்
    சோள மாவு - ஒரு கைப்பிடி அளவு
    கடலை மாவு - இரு கைப்பிடி அளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    எலுமிச்சை பழச்சாறு - தேவையான அளவு



    செய்முறை :

    மீனை நன்றாக கழுவி வைக்கவும்.

    கழுவிய மீனை எலுமிச்சம் பழச்சாறு, உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சோள மாவு, பேக்கிங் பவுடர், மிளகாய்த் தூளை போட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.

    ஒரு கனமான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கொதிக்க விடவும்.

    எண்ணெய் காய்ந்ததும் மீன் துண்டங்களை பஜ்ஜி மாவில் தோய்த்து எடுத்து எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்கவும். இதோ போல் அனைத்து மீனையும் செய்யவும்.

    இதோ சுவையான மீன் பஜ்ஜி தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, பூரி, நாண், புலாவ், இடியாப்பம், இட்லிக்கு தொட்டுக்கொள்ள இந்த வறுத்த மீன் குருமா அருமையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மீன் துண்டுகள் - அரை கிலோ (முள் இல்லாத மீன்)
    பச்சை மிளகாய் - 3
    வெங்காயம் - 1
    தக்காளி - 2
    கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை - சிறிது
    எண்ணெய் - தேவையான அளவு
    சோம்பு - அரை டீஸ்பூன்
    பட்டை - மிகச் சிறிய துண்டு
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1 +1/2  டீஸ்பூன்
    மல்லித்தூள் - 2-3 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கு.

    அரைக்க....

    தேங்காய்த் துருவல் - 5 டேபிள்ஸ்பூன்
    முந்திரிபருப்பு 10



    செய்முறை :


    மீன் துண்டுகளை சுத்தமாக கழுவி துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    மீனுடன் மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன், தேவைக்கு உப்பு சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு நான்ஸ்டிக் கடாயில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்து வரும் பொழுது மீன் போட்டு பொரித்து எடுக்கவும்.

    கடாயில் எண்ணெய் விடவும், சோம்பு பட்டை போட்டு தாளித்த பின்னர் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி, சிறிது உப்பு சேர்த்து மூடி போட்டு சிறிது வதங்க விடவும். தக்காளி நன்கு  வதங்கிய பின்பு மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து நன்கு ஒரு சேர வதக்கவும்.

    அடுத்து அதில் ஒன்னரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். 

    அடுத்து அதில் வறுத்து வைத்துள்ள மீன் துண்டுகளை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

    கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினா சேர்த்து இறக்கவும்.

    வறுத்த மீன் குருமா ரெடி.

    இந்த குருமாவிற்கு முள் அதிகமில்லாத மீன் துண்டுகள் சேர்த்து செய்தால் அருமையாக இருக்கும். சீலா, வாவல், பாறை மீன் பொருத்தமாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஓரே மாதிரியான அசைவ உணவை சாப்பிட்டு அலுத்து போனவர்களுக்கு புதிதாக ஏதாவது சாப்பிடத் தோன்றும். அப்படிப்பட்டவர்களுக்கான காரமான மிளகு மீன் வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    மீன் - 500 கிராம்
    மிளகுத்தூள் - 1 கரண்டி
    உப்பு - தேவைக்கு
    ஏலுமிச்சை சாறு - 2 மேஜைக்கரண்டி
    எண்ணெய் - பொரிப்பதற்கு



    செய்முறை :

    மீனை நன்றாக சுத்தம் செய்து கழுவி எடுத்து தண்ணீர் இல்லாமல் வைக்கவும்.

    மீனில் எலுமிச்சம் சாற்றை ஊற்றி உப்பு, மிளகுத்தூள் சேர்த்து பிசறி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

    ஓட்டாத கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் போட்டு காய்ந்ததும் தனித்தனியாக மீனை அடுக்கவும்.

    பொன்னிறமாக வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

    சுவையான காரமான மிளகு மீன் வறுவல் ரெசிபி தயார்.!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த நெத்திலி மீன் பொரியல். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நெத்திலி மீன் - 1/2 கிலோ,
    நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்,
    கடுகு, சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்,
    காய்ந்தமிளகாய் - 5,
    சாம்பார் வெங்காயம் - 6,
    பச்சைமிளகாய் - 2,
    இடிச்ச பூண்டு - 5 பல்,
    தேங்காய்த்துருவல் - 1/2 கப்,
    தனியாத்தூள், சீரகத்தூள் - தலா 1 டீஸ்பூன்,
    மிளகுத்தூள், கொத்தமல்லி - சிறிது,
    உப்பு -  தேவைக்கு.



    செய்முறை :

    நெத்திலி மீனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் சின்ன வெங்காயம், ப.மிளகாய், இடிச்ச பூண்டு சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தனியாத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தேங்காய்த்துருவல், நெத்திலி மீன், சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைத்து கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான நெத்திலி மீன் பொரியல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேரளாவில் மத்தி மீன் சமையல் மிகவும் பிரபலம். இன்று மத்தி மீனை வைத்து சூப்பரான மத்தி மீன் சாறு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெங்காயம் - 4,
    தக்காளி - 4,
    பச்சைமிளகாய் - 6,
    தனியாத்தூள் - 2 டீஸ்பூன்,
    மத்தி மீன் - 1/2 கிலோ,
    தேங்காய்ப்பால் - 100 மி.லி.,
    உப்பு, மிளகுத்தூள், பெருங்காயம் - சிறிதளவு,
    கொத்தமல்லித்தழை - சிறிது.

    தாளிக்க...

    கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம் - தலா 1/2 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 50 மி.லி.



    செய்முறை :

    கொத்தமல்லி, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மத்தி மீனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    அடுப்பில் மண்சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து குழைய வதக்கவும்.

    அடுத்து அதில் தனியாத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி, தேங்காய்ப்பால் ஊற்றி கொதிக்கவிடவும்.  

    நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் மத்தி மீன், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

    பின்பு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து மீன் குழம்பில் கொட்டி அதனுடன் உப்பு, மிளகுத்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கும் பொழுது கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

    சூப்பரான கேரளா மத்தி மீன் சாறு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மீனில் குழம்பு, வறுவல் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மீன் முட்டையில் பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதன் சுவை அருமையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள்

    மீன் முட்டை - 250 கிராம்
    சின்ன வெங்காயம் - 200 கிராம்
    பூண்டு - 10 பற்கள்
    மஞ்சள்தூள் - சிறிதளவு
    பச்சைமிளகாய் - 4
    இஞ்சி, பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    தேங்காய் துருவல் - சிறிதளவு



    செய்முறை

    சின்ன வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீன் முட்டையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவேண்டும்.

    அடுத்து இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி, பூண்டு விழுது நன்றாக வதங்கியதும சிறிது மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறவேண்டும்.

    பின் மீன் முட்டையை போட்டு கைவிடாமல் அடிபிடிக்காமல் கிளறவேண்டும். மீன் முட்டை நன்கு வெந்து உதிரி உதிரியாக ஆகும் வரை கிளறவேண்டும்.

    கடைசியாக தேங்காய் துருவல், கொத்தமல்லி தூவி ஒரு கிளறு கிளறிவிட்டு இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான மீன் முட்டை பொரியல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேளராவில் இந்த வாழை இலை மீன் வறுவல் மிகவும் பிரபலம். இன்று சூப்பரான இந்த வாழை இலை மீன் வறுவலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மீன்  - அரை கிலோ
    சின்ன வெங்காயம்  - 10
    மிளகாய் பொடி  - ஒரு ஸ்பூன்
    கரம்மசாலா பொடி   - 2 ஸ்பூன்
    பூண்டு   - 4
    இஞ்சி - சிறிது
    புதினா, கொத்தமல்லி இலை - சிறிது
    கறிவேப்பிலை  - 2 ஆர்க்கு
    தக்காளி - 2
    பச்சை மிளகாய் - 2
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய்   - 2 ஸ்பூன்



    செய்முறை :

    மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து உப்பு, மிளகாய் பொடி, கரம் மசாலா பொடி சேர்த்து நன்றாக கலந்து தனியாக வைக்க வேண்டும்.

    வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.

    அடுப்பில் வாணலியை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பச்சைமிளகாய் போட்டு வதக்க வேண்டும்.

    சிறிது வதங்கிய உடன் பொடியாக நறுக்கிய புதினா, கொத்த மல்லி இலை தட்டிய இஞ்சி, பூண்டு இவைகளை போட்டு வதக்கி இறக்கி விட வேண்டும்.

    வாழை இலை எடுத்து நன்கு கழுவி வேண்டிய அளவு வெட்டி அதன் மேல் சிறிதளவு மசாலாவை வைத்து பரப்பி நடுவில் மீனை வைத்து மீனின் மேல் மீண்டும் மசாலாவைத் நன்றாக கலந்து இலையை மடக்கி பேக் செய்ய வேண்டும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள வாழைஇலை மீனை வைத்து இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

    சூப்பரான வாழை இலை மீன் வறுவல் ரெடி.

    குறிப்பு - மீனை மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சோத்து கலந்து 5 நிமிடம் தோசை கல்லில் போட்டு வறுத்து அதன் பின்னர் மசாலா சேர்த்து செய்யலாம். மீனை தோசை கல்லில் போட்டு வறுப்பதற்கு பதிலாக ஆவியில் வேக வைத்தும் செய்யலாம். டயட்டில் இருப்பவர்கள். வயதானவர்கள் இவ்வாறு செய்து சாப்பிடலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    எண்ணெய் சேர்க்காத ஸ்டீம்டு சங்கரா மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருப்பதால், இதய நோய், கொலஸ்ட்ரால் பிரச்சனை வராது. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சங்கரா மீன் - 250 கிராம்,
    பெரிய வெங்காயம் - 50 கிராம்,  
    சிகப்பு மிளகாய் - 10 கிராம்,
    இஞ்சி - 20 கிராம்,
    பூண்டு - 5 கிராம்,
    கொத்தமல்லித் தழை - 15 கிராம்,
    சோயா சாஸ் - 5 மி.லி,
    உப்பு - ஒரு கிராம்,  
    வெள்ளை மிளகுத்தூள் - 2 கிராம்,  
    தண்ணீர் - 50 மி. லி.



    செய்முறை :

    வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சங்கரா மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சோயா சாஸ், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

    சங்கரா மீனின் மேல் உள்ள தோலை அகற்றி விட்டு சோயா சாஸ், உப்பு, மிளகுத்தூள் கலந்த கலவையை மீனின் மேல் தடவி ஒரு தட்டில் வைத்து விடவும்.

    நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டை நன்றாக சேர்த்துக் கலக்கி மீனின் மேல் வைத்து, சிறிதளவு நீர் விடவும்.

    இந்த தட்டை நீராவியில் வேகவைத்து எடுத்து, கொத்தமல்லி, சிகப்பு மிளகாய் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

    உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஸ்டீம்டு சங்கரா மீன் (எண்ணெய் சேர்க்காதது) ரெடி.

    குறிப்பு : எந்த மீனில் வேண்டுமானாலும் இதை செய்யலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    தோசை, இட்லி, சூடான சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த வஞ்சிரம் மீன் கிரேவி. இன்று இந்த கிரேவியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வஞ்சிரம் மீன் - 500 கிராம்,
    சின்ன வெங்காயம் - 200 கிராம்,  
    நாட்டுத் தக்காளி - 200 கிராம்,
    பெரிய வெங்காயம்100 கிராம்,
    பூண்டு - 1,
    புளி எலுமிச்சை அளவு,
    காய்ந்த மிளகாய் - 4,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    நல்லெண்ணெய் - 100 மி.லி,
    வெந்தயம் - 1 டீஸ்பூன்,
    மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்,
    கடுகு, சோம்பு, மஞ்சள் தூள் - தேவையான அளவு,
    தனியா தூள் - 1 டீஸ்பூன்,
    தேங்காய் - பாதி



    செய்முறை :

    தக்காளி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை கரைத்து கொள்ளவும்.

    வஞ்சிரம் மீனை நன்றாக கழுவி வைக்கவும்.

    பெரிய வெங்காயத்தை விழுதாக அரைத்து கொள்ளவும்.

    தேங்காயை விழுதாக அரைத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, வெந்தயத்தை போட்டு பொரிந்ததும், கடுகு, சோம்பு மற்றும் வெங்காய விழுதைச் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் சின்ன வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    பிறகு, மிளகாய்த் தூள், தனியா துள், மஞ்சள் தூள், நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது அரை டம்ளர் தண்ணீர்விட்டு வதக்கவும்.

    அடுத்து புளியைக் கரைத்து ஊற்றி, கலவை கிரேவியானதும், தேங்காயை அரைத்துச் சேர்க்கவும்.

    அடுத்து அதில் கழுவிய மீன் துண்டுகளை போட்டு, ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். கிரேவி திக்கான பதம் வந்தவுடன் இறக்கவும்.

    பரிமாறுவதற்கு முன், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துப் பறிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×