search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "meen kulambu"

    சப்பாத்தி, பூரி, நாண், புலாவ், இடியாப்பம், இட்லிக்கு தொட்டுக்கொள்ள இந்த வறுத்த மீன் குருமா அருமையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மீன் துண்டுகள் - அரை கிலோ (முள் இல்லாத மீன்)
    பச்சை மிளகாய் - 3
    வெங்காயம் - 1
    தக்காளி - 2
    கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை - சிறிது
    எண்ணெய் - தேவையான அளவு
    சோம்பு - அரை டீஸ்பூன்
    பட்டை - மிகச் சிறிய துண்டு
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1 +1/2  டீஸ்பூன்
    மல்லித்தூள் - 2-3 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கு.

    அரைக்க....

    தேங்காய்த் துருவல் - 5 டேபிள்ஸ்பூன்
    முந்திரிபருப்பு 10



    செய்முறை :


    மீன் துண்டுகளை சுத்தமாக கழுவி துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    மீனுடன் மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன், தேவைக்கு உப்பு சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு நான்ஸ்டிக் கடாயில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்து வரும் பொழுது மீன் போட்டு பொரித்து எடுக்கவும்.

    கடாயில் எண்ணெய் விடவும், சோம்பு பட்டை போட்டு தாளித்த பின்னர் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி, சிறிது உப்பு சேர்த்து மூடி போட்டு சிறிது வதங்க விடவும். தக்காளி நன்கு  வதங்கிய பின்பு மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து நன்கு ஒரு சேர வதக்கவும்.

    அடுத்து அதில் ஒன்னரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். 

    அடுத்து அதில் வறுத்து வைத்துள்ள மீன் துண்டுகளை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

    கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினா சேர்த்து இறக்கவும்.

    வறுத்த மீன் குருமா ரெடி.

    இந்த குருமாவிற்கு முள் அதிகமில்லாத மீன் துண்டுகள் சேர்த்து செய்தால் அருமையாக இருக்கும். சீலா, வாவல், பாறை மீன் பொருத்தமாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாக்கை ஊறவைக்கும் சுவையான கேரளா ஸ்பெஷல் மீன் முளகிட்டது ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம். இந்த மீன் குழம்பை சூடான சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள்

    மீன் - அரை கிலோ,
    வெங்காயம் - 2,
    சின்ன வெங்காயம் - 10,
    இஞ்சி - 2 மேசைக்கரண்டி,
    தக்காளி - 2,
    பூண்டு - 10 பல்,
    பச்சை மிளகாய் - 2,
    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி,
    மிளகாய் தூள் - ஒன்றரை மேசைக்கரண்டி,
    மிளகுத் தூள் - அரை மேசைக்கரண்டி,
    ஊறவைத்த குடம் புளி - சிறிதளவு,
    உப்பு - தேவையான அளவு,
    தேங்காய் எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை,வெந்தயம் - தாளிக்க.



    செய்முறை

    சின்ன வெங்காயம், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு மற்றும் வெந்தயம், சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, பச்சை மிளகாயைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

    பின்னர் நறுக்கிய வெங்காயம், சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    பிறகு தூள் வகைகள் மற்றும் உப்புச் சேர்த்து பிரட்டவும். மசாலா நன்றாக சேர்ந்து வரும் போது அதனுடன் மீனை சேர்க்கவும்.

    அத்துடன் ஊற வைத்த குடம் புளிச் கரைசலைச் சேர்க்கவும்.

    பிறகு குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.

    பிறகு அடுப்பை சிம்மில் வைத்து மூடி போட்டு வைக்கவும்.

    15 நிமிடங்கள் கழித்து திறந்து கறிவேப்பிலை தூவி இறக்கிவிடவும்.

    சுவையான மீன் முளகிட்டது தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×