search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "father suicide"

    குடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சோழிங்கநல்லூர்:

    கானத்துரை அடுத்த பனையூர், 2-வது தெருவில் வசித்து வந்தவர் சுரேஷ் (வயது 24). இவரது மனைவி ஜெயா. இவர்களது 1½ வயது மகன் கிஷோர்.

    சுரேஷ் பனையூரில் உள்ள டாக்டர் ஒருவரது வீட்டில் காவலாளியாக வேலை பார்த்தார். அவருக்கு கிடைத்த குறைந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    இதுபற்றி அவர் மனைவி ஜெயாவிடம் அடிக்கடி கூறினார். சுரேசை மனைவி சமாதானப்படுத்தி வந்தார்.

    வறுமையால் தவித்த சுரேஷ் மகனை எப்படி காப்பாற்ற போகிறோம் என்று வருத்தம் அடைந்தார். இதையடுத்து அவர் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

    நேற்று இரவு சுரேஷ் குடும்பத்துடன் வீட்டில் தூங்கினார். நள்ளிரவில் எழுந்த அவர் மகன் கிஷோரை மட்டும் எழுப்பி வி‌ஷம் கலந்த தண்ணீரை கொடுத்தார். அதில் உயிரை கொல்லும் வி‌ஷம் கலந்து இருப்பதை அறியாத அவன் அதனை குடித்தான். சிறிது நேரத்தில் கிஷோர் அங்கேயே மயங்கி விழுந்து இறந்தான்.

    இதையடுத்து சுரேஷ் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நடந்த விபரீதம் அறியாமல் ஜெயா தூங்கிக் கொண்டு இருந்தார்.

    இன்று அதிகாலையில் அவர் எழுந்து பார்த்த போது மகன் கிஷோர் வி‌ஷம் கொடுத்து கொல்லப்பட்டு இருப்பதையும், கணவர் சுரேஷ் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கிடப்பதையும் கண்டு அலறி துடித்தார்.

    தகவல் அறிந்ததும் கானத்தூர் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் 2 பேர் உடலையும் மீட்டு விசாரணை நடத்தினர்.

    அப்போது சுரேசின் சட்டைப்பையில் இருந்த கடிதத்தை கைப்பற்றினர். அதில் வருமானம் இல்லாததால் மகனை கொன்று தற்கொலை செய்வதாக எழுதப்பட்டு இருந்தது.

    குடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக சுரேசின் மனைவி ஜெயாவிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    கல்பாக்கத்தில் மகன் கண்டித்ததால் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அணுமின் நிலைய குடியிருப்பில் வசித்து வந்தவர் சித்தராமையா (வயது 60) ஆந்திராவை சேர்ந்தவர். இவரது மகன் ஆனந்தராஜ். கல்பாக்கம் அணுசக்தி துறையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த வாரம் ஏற்பட்ட தகராறின் போது ஆனந்த ராஜ், தந்தை சித்தராமையாவை கண்டித்தார். இதில் மனவேதனை அடைந்த சித்தராமையா கடந்த 13-ந்தேதி வீட்டைவிட்டு வெளியேறினார். அவரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் இளையனார் குப்பம், கடற்கரை ஓரம் உள்ள முட்புதரில் சித்தராமையா பிணமாக கிடந்தார். மகனுடன் ஏற்பட்ட தகராறில் அவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது. இதுகுறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    வில்லியனூரில் மதுகுடிப்பதற்கு மகன் பணம் கொடுக்காததால் தந்தை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் ஒதியம்பட்டு ஸ்ரீராம் நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது62). இவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் ராஜேந்திரன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதால் தினமும் மகனிடம் பணம் வாங்கி கொண்டு மதுகுடித்து வந்தார். அதேபோல் நேற்று ராஜேந்திரன் மதுகுடிக்க மகனிடம் பணம் கேட்டார். ஆனால் மகன் பணம் தற்போது இல்லை பிறகு தருகிறேன் என்று கூறிவிட்டு சென்று விட்டார்.

    இதனால் மனவருத்தம் அடைந்த குப்புசாமி தனது வீட்டின் பின்புறம் உள்ள ஆட்டுக் கொட்டகையில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு தொங்கினார். தந்தை தூக்கில் தொங்குவதை கண்ட மகன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குப்புசாமியை தூக்கில் இருந்து இறக்கி அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குப்புசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மகன் வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருள் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    நிலக்கோட்டை அருகே தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை செய்து கொண்டார்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே மட்டப்பாறையைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி சாந்தி, மகன் கேசவன். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மூர்த்தி மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அன்று முதல் கேசவன் (வயது 21) மன உளைச்சலில் இருந்தார். யாரிடமும் சரியாக பேசாமல் தனிமையிலேயே இருந்து வந்துள்ளார்.

    தந்தையின் மரணம் கேசவனை வெகுவாக பாதித்தது. அவர் இல்லாத உலகில் தானும் வாழ விருப்பம் இல்லை. எனவே தற்கொலை செய்து கொள்வது என முடிவு செய்தார்.

    சம்பவத்தன்று மாமா வீட்டுக்கு செல்வதாக தாயிடம் கூறிச் சென்றுள்ளார். அங்கு சென்ற கேசவன் கயிறால் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இது குறித்து விளாம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செயது விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகரில் மாற்றுத்திறனாளி மகனை நீரில் மூழ்கடித்து கொன்ற தந்தை தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    விருதுநகர்:

    விருதுநகர் பாண்டியன் நகர் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 53). அதே பகுதியில் தச்சுப்பட்டறை நடத்தி வருகிறார்.

    இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும், செல்வ வேந்திரன் (27), சுரேஷ் கண்ணன் (25), ராகுல் (21) என 3 மகன்கள் உள்ளனர். இதில் முதல் 2 மகன்கள் சென்னையில் வேலை பார்த்து வருகின்றனர்.

    3-வது மகனான ராகுல் கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஆவார். மேலும் வாய் பேசவும் முடியாது. இதனால் ராகுலை வீட்டில் வைத்து பெற்றோர் பராமரித்து வந்தனர்.

    மாற்றுத்திறனாளி மகனை நினைத்து முருகன் வேதனையில் இருந்தார். ராகுல் மேல் மிகவும் பாசம் வைத்திருந்த முருகன் பெரும்பாலான நேரம் அவருடனேயே இருப்பார்.

    இந்த நிலையில் மகன் துன்பப்படுவதை பொறுக்க முடியாத முருகன், அவரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி இன்று அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த ராகுலை தூக்கிக் கொண்டு, வீட்டின் முன்புள்ள 7 அடி தண்ணீர் தொட்டியில் போட்டு மூழ்கடித்தார். இதில் ராகுல் மூச்சுத்திணறி சிறிது நேரத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    பின்னர் மகனை கொலை செய்துவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில், முருகன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    காலையில் எழுந்த பாக்கியலட்சுமி, கணவர் தூக்கிலும், மகன் தண்ணீர் தொட்டியிலும் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    தகவலறிந்த பாண்டியன் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மகனை கொன்று தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    பாகூரில் கடன் தொல்லையால் போலீஸ் காரரின் தந்தை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    உறுவையாறு பாகூர் மெயின் ரோட்டை சேர்ந்த வர் கார்த்திகேயன் (வயது 58). தனியார் கம்பெனி ஊழியர். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.

    இவரது மனைவி முனியம்மாள். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் பாலமுருகன் ஐ.ஆர். பி.என். போலீசாக வேலை பார்த்து வருகிறார்.

    கார்த்திகேயனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. மேலும் ரூ. 5 லட்சம் கடன் இருப்பதால் கார்த்திகேயன் மனவருத்தத்தில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கார்த்திகேயன் வீட்டு பின்புறம் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கினார்.

    மகன் பாலமுருகன் வீட்டுக்கு வந்து தந்தையை தேடினார். தந்தை தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து மங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×