என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வில்லியனூரில் மகன் மதுகுடிக்க பணம் தராததால் தந்தை தற்கொலை
புதுச்சேரி:
புதுவை வில்லியனூர் ஒதியம்பட்டு ஸ்ரீராம் நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது62). இவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ராஜேந்திரன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதால் தினமும் மகனிடம் பணம் வாங்கி கொண்டு மதுகுடித்து வந்தார். அதேபோல் நேற்று ராஜேந்திரன் மதுகுடிக்க மகனிடம் பணம் கேட்டார். ஆனால் மகன் பணம் தற்போது இல்லை பிறகு தருகிறேன் என்று கூறிவிட்டு சென்று விட்டார்.
இதனால் மனவருத்தம் அடைந்த குப்புசாமி தனது வீட்டின் பின்புறம் உள்ள ஆட்டுக் கொட்டகையில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு தொங்கினார். தந்தை தூக்கில் தொங்குவதை கண்ட மகன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குப்புசாமியை தூக்கில் இருந்து இறக்கி அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குப்புசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மகன் வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருள் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்