search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வில்லியனூரில் மகன் மதுகுடிக்க பணம் தராததால் தந்தை தற்கொலை
    X

    வில்லியனூரில் மகன் மதுகுடிக்க பணம் தராததால் தந்தை தற்கொலை

    வில்லியனூரில் மதுகுடிப்பதற்கு மகன் பணம் கொடுக்காததால் தந்தை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் ஒதியம்பட்டு ஸ்ரீராம் நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது62). இவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் ராஜேந்திரன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதால் தினமும் மகனிடம் பணம் வாங்கி கொண்டு மதுகுடித்து வந்தார். அதேபோல் நேற்று ராஜேந்திரன் மதுகுடிக்க மகனிடம் பணம் கேட்டார். ஆனால் மகன் பணம் தற்போது இல்லை பிறகு தருகிறேன் என்று கூறிவிட்டு சென்று விட்டார்.

    இதனால் மனவருத்தம் அடைந்த குப்புசாமி தனது வீட்டின் பின்புறம் உள்ள ஆட்டுக் கொட்டகையில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு தொங்கினார். தந்தை தூக்கில் தொங்குவதை கண்ட மகன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குப்புசாமியை தூக்கில் இருந்து இறக்கி அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குப்புசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மகன் வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருள் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×