search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "driver dies"

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    பாப்பிரெட்டிப்பட்டி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா, கச்சுபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நல்லதம்பி (வயது35). இவர் சென்னை தாம்பரம் அருகே உள்ள கிரசர் குவாரியில் லாரி டிரைவராக இருந்தார். தனது இரு சக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு வந்து கொண்டு இருந்தார்.

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே காளிப்பேட்டை என்ற இடத்தில் தனியார் கிழங்கு மில் அருகே வரும்போது மின் கம்பத்தின் மீது இவரது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

    இந்த விபத்து குறித்து பாப்பிரெட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    கடலூர் மாவட்டம் வேப்பூரில் இன்று அதிகாலை லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் டிரைவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
    வேப்பூர்:

    சென்னையில் இருந்து 25 பயணிகளை ஏற்றிக் கொண்டு ஆம்னி பஸ் ஒன்று நேற்று இரவு நெல்லை நோக்கி புறப்பட்டது.

    இந்த பஸ்சை நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த வன்னிகோநந்தல் பகுதியை சேர்ந்த மூர்த்தி(வயது 40) என்பவர் ஓட்டிவந்தார்.

    அதே பகுதியை சேர்ந்த செந்தமிழ்செல்வன்(25) என்பவர் அந்த பஸ்சில் மாற்று டிரைவராக இருந்தார்.

    இந்தநிலையில் அந்த பஸ் இன்று அதிகாலை கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்ரோடு அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் பஸ்சின் முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை ஆம்னி பஸ்டிரைவர் முந்திசெல்ல முயன்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ் தாறுமாறாக ஓடி முன்னால் சென்ற லாரியின் மீது மோதியது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முற்றிலும் உடைந்து சேதமடைந்தது.

    இந்த விபத்தில் பஸ்சின் முன் இருக்கையில் அமர்ந்து இருந்த செந்தமிழ்செல்வன் தூக்கி வீசப்பட்டார். அவர் ஆம்னி பஸ்சின் முன்பக்க டயரில் சிக்கினார். இதில் அவர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான செந்தமிழ்செல்வனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பயணிகள் 7 பேர் படுகாயமடைந்தனர்.
    திருவெண்ணைநல்லூர்:

    சென்னையில் இருந்து நெல்லைக்கு ஒரு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சில் 40 பயணிகள் பயணம் செய்தனர்.

    பஸ்சில் நெல்லை மாவட்டம் மாறாந்தையை சேர்ந்த பிச்சைமணி (வயது 30) உள்பட 2 டிரைவர்கள் இருந்தனர். இதில் பிச்சைமணி முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்தார். மற்றொரு டிரைவர் பஸ்சை ஓட்டி சென்றார். அந்த பஸ் நள்ளிரவு 1 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூர்காந்திநகர் பகுதியில் சென்னை-திருச்சி சாலையில் வந்து கொண்டிருந்தது. பஸ்சுக்கு முன்னால் ஒரு லாரி கம்பிகளை ஏற்றி கொண்டு சென்றது. அப்போது பஸ் திடீரென அந்த லாரியின் பின்புறம் மீது மோதியது.

    இதில் லாரியில் இருந்த கம்பிகள் பஸ் கண்ணாடியை உடைத்து கொண்டு உள்ளே புகுந்தன. அப்போது பஸ்சின் முன்பக்க சீட்டில் அமர்ந்திருந்த மாற்று டிரைவர் பிச்சைமணியின் உடல் மீது கம்பிகள் குத்தின. இதில் பிச்சைமணி பஸ்சில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார். மேலும் பஸ்சில் இருந்த பயணிகள் 7 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

    விபத்து பற்றி தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பலத்த காயம் அடைந்த 7 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர்கள் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருமங்கலம் அருகே பேரையூர் அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    பேரையூர்:

    விருதுநகர் மாவட்டம், வத்ராயிருப்பைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் பிரபாகரன் (வயது 26). இவர் சொந்தமாக மினி லாரி வைத்து இயக்கி வருகிறார். நேற்று திண்டுக்கல்லில் சரக்குகளை இறக்கி விட்டு ஊருக்கு புறப்பட்டார்.

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பேரையூரை அடுத்துள்ள பாறை பட்டி 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி நேருக்கு நேர் மோதியது.

    இதில் மினிலாரியின் உள்பகுதி பலத்த சேதமடைந்தது. உள்ளே இருந்த பிரபாகரன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    மற்றொரு லாரியில் வந்த விருதுநகர் மாங்குடி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த அருள்ஜீவா (29) படுகாயம் அடைந்தார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த பேரையூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 1 மணி நேரம் போராடி மினி லாரியில் இறந்த பிரபாகரின் உடலை மீட்டனர். அருள் ஜீவா மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #Tamilnews
    ×