என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "drinking water issue"
திண்டுக்கல் நகரில் பழைய குடிநீர் குழாய்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த நடைமுறையை மாற்றி ஜிகா பைப் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பல்வேறு பகுதிகளில் பணிகள் முழுமையாக நிறைவடையாததால் குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் போராட்டம், மறியல், முற்றுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
15-வது வார்டுக்குட்பட்ட குறிஞ்சி நகர் பகுதியில் குடிநீர் முறையாக கிடைக்கவில்லை என கூறி ஏராளமான பெண்கள் மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். பின்னர் அதிகாரிகளிடம் முறையிட்டதைத் தொடர்ந்து விரைவில் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
இது குறித்து மாநகராட்சி உதவி பொறியாளர் மாரியப்பன் தெரிவிக்கையில், திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் எம்.வி.எம். நகர், அண்ணா நகர், ஆர்.எம்.காலனி, பழையது மற்றும் புதிது, சந்தை பகுதி, சவேரியார் பாளையம், பூச்சிநாயக்கன்பட்டி, குள்ளனம்பட்டி, பழைய பஸ்நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள மேல்நிலை தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்கும் பணிகள் நிறைவடைந்துவிட்டது. ஆர்.எஸ்.ரோடு, ரவுண்டு ரோடு, மலைக்கோட்டை, குடகனாறு உள்ளிட்ட பகுதிகளில் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. ஒரு மாதத்துக்குள் பணிகள் நிறைவுற்று தினசரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்ச முடியாது. எனவே அனைத்து பகுதிகளுக்கும் தடையின்றி குடிநீர் கிடைக்கும் என்று கூறினார். #tamilnews
திண்டுக்கல் நகரில் குடிநீர் பிரச்சினை பல ஆண்டுகளாகவே தீர்க்கப்படாத பிரச்சினையாகவே உள்ளது. பருவ மழை பெய்யும் காலத்தில் கூட குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும். ஏனெனில் இப்பகுதியில் குடிநீர் வழங்கும் அணைகளோ, மழைகாலத்தில் தண்ணீரை தேக்கி வைக்க தடுப்பணைகளோ கிடையாது.
குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆத்தூர் காமராஜர் அணையும், கொடைக்கானலில் பெய்யும் மழையைப் பொறுத்தே நீர் மட்டம் உயர்ந்து வரும். இதனால் திண்டுக்கல் மட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களில் கூட கோடை காலம் மட்டுமின்றி மழைக்காலத்திலும் குடிநீர் பிரச்சினை ஏற்படுகிறது.
ஆத்தூர் காமராஜர் அணையில் தற்போது 5 அடிக்கும் கீழ் தண்ணீர் உள்ளது. காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் வழங்கும் தண்ணீர் ஓரளவு தட்டுப்பாட்டை சமாளித்து வருகிறது. இதனால் நகரில் உள்ள பெரும்பாலான மக்கள் பணம் கொடுத்தே தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
குடிநீர் மட்டுமின்றி அன்றாட உபயோகத்துக்கு பயன்படுத்தப்படும் உப்பு தண்ணீருக்கும் இதே நிலைதான் உள்ளது. இதனால் சாமானிய மக்கள் தண்ணீருக்கு பெரும் போராட்டம் நடத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.
திண்டுக்கல் நாகல்நகர் டிசில்வாநகரைச் சேர்ந்த கோகிலா என்பவர் தெரிவிக்கையில், 15 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வழங்கப்படுகிறது. அதிலும் புதிய குடிநீர் குழாய் இணைப்பு மூலம் வழங்கப்படும் தண்ணீர் 2 மணி நேரம் கூட வருவதில்லை. ஒரு வீட்டுக்கு 20 குடங்கள் மட்டுமே கிடைக்கிறது. மழை காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து வீடுகளை சூழ்ந்து விடுகிறது. குடிநீர் மற்றும் அடிப்படை பிரச்சினைகளுக்காக பல முறை புகார் அளித்து ஓய்ந்து விட்டோம்.
பாம்பன் ஆசாரி தெருவைச் சேர்ந்த தனலெட்சுமி என்பவர் தெரிவிக்கையில், மாநகராட்சி சார்பில் வழங்கப்படும் தண்ணீர் எப்போது வினியோகம் செய்யப்படும் என்ற அறிவிப்பே கிடையாது. பகல் மற்றும் இரவு என நினைத்த நேரத்தில் தண்ணீர் விடுகின்றனர். வேலைக்கு செல்லும் பெண்கள் தண்ணீர் வரும் சமயத்தில் விடுப்பு எடுத்து அதற்காக வீட்டிலேயே தங்கும் நிலை உள்ளது. பல சமயங்களில் குடிநீர் துர்நாற்றத்துடன் குடிக்க முடியாத அளவுக்கு உள்ளது. குடிநீர் பிரச்சினை மட்டுமின்றி அடிப்படை வசதிகள் குறித்து புகார் அளிக்க உள்ளாட்சி மன்ற நிர்வாகிகளும் கிடையாது. அதிகாரிகளிடம் சொன்னாலும் நடவடிக்கை எடுப்பதில்லை என்று தெரிவித்தார்.
திண்டுக்கல் நகர் மட்டுமின்றி கிராமப்புற மக்களும் தண்ணீர் பிரச்சினைக்கு போராடி வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கூட்டமாக திரண்டு வந்து மனு அளித்து செல்கின்றனர். குடிநீர் பிரச்சினைக்கு அரசியல்வாதிகள் மட்டுமின்றி அதிகாரிகளும் மனம் வைத்தால்தான் தீர்வு காணமுடியும் என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
வேப்பூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ளது மங்களூர். இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 4 நீர்தேக்க தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் குடிநீர் தொட்டிகளுக்கு நீர் ஏற்றும் மின் மோட்டார் பழுதடைந்தது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு கடந்த 1 மாத காலமாக சீரானமுறையில் குடிநீர் வழங்கப்படவில்லை. கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து ஊர் பொதுமக்கள் பழுதான மின்மோட்டாரை சீர் செய்யக்கோரி மங்களூர் ஊராட்சி செயலாளருக்கும், வட்டார வளர்ச்சி அதிகாரிக்கும் மனுகொடுத்தனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இதையடுத்து குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்த பொதுமக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் மங்களூர் பஸ்நிலையம் அருகே காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிறுபாக்கம் போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்றனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பழுதான மின்மோட்டார்களை சரிசெய்து விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கோபி:
கோபி ஊராட்சி ஒன்றியம் அளுக்குழி ஊராட்சி கோபி பாளையம் பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது.
இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் அவதியடைந்தனர். இது குறித்து பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இதன் காரணமாக அந்த பகுதி பெண்களும், ஆண்களும் இன்று கலை திடீர் போராட்டத்தில் குதித்தனர். ஈரோடு-சத்தியமங்கலம் ரோட்டில் கோபிபாளையம் பிரிவில் அவர்கள் திரண்டனர்.
பெண்கள் காலி குடங்களுடன் வந்திருந்தனர். திடீரென ரோட்டில் அமர்ந்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் வசதி கேட்டு அவர்கள் கோஷம் எழுப்பினர்.
இந்த போராட்டத்தால் ஈரோடு-சத்தியமங்கலம் ரோட்டில் போக்குவரத்து பாதிப்பும், பரபரப்பும் நிலவியது. முக்கியமான சாலை என்பதால் அந்த வழியாக வந்த வாகனங்கள் மேற்கொண்டு செல்ல முடியாமல் நின்றன.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
வருவாய்த்துறை அதிகாரிகளும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் அங்கு வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்களும், பெண்களும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்