search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்தூர்"

    • மாவட்ட நிர்வாகிகள் காயத்திரி சையத் ரியாஸ் பாட்சா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
    • நம்பிக்கை மையங்களை மூடினால் எய்ட்ஸ் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

    மத்தூர்:

    தமிழகத்தில் நம்பிக்கை மையங்களை மூடும் மத்திய அரசின் முடிவை தடுத்து நிறுத்திட வலியுறுத்தி தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் சார்பாக பொதுச்செயலாளர் சேரலாதன் தலைமையில் ஊத்தங்கரை அரசு மருத்துவ மனையில் செயல்படும் நம்பிக்கை மையத்தில் முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

    இந்நிகழ்வில், மாவட்ட நிர்வாகிகள் காயத்திரி சையத் ரியாஸ் பாட்சா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

    அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தாவது:-

    எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோய்க்கு தடுப்பு ஊசி அல்லது முற்றிலும் குணப்படுத்த கூடிய மருந்துகளோ கண்டுபிடிக்கப்படவில்லை. எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் தொடர் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு எடுத்துக் கொள்ள தவறும் பட்சத்தில் அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு நோய் பரவும் அபாயமும் உயிரிழப்பு ஏற்படும். எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள் மூலம் அவர்களுடைய கருவில் இருக்கும் குழந்தைகளுக்கும் இந்த நோய் பரவும் அபாயம் உள்ளது. தொடர் ஆலோசனை மற்றும் பரிசோதனைகள் மூலமே எச்ஐவி தொற்றில்லா குழந்தைகளை பெறமுடியும்.

    தமிழகத்தில் தற்பொழுது 1.40 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் ஏ.ஆர்.டி மையங்களில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் மத்திய அரசு தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் எச்.ஐ.வி ஆலோசனை மற்றும் பரிசோதனை செய்யும் நம்பிக்கை மையங்களை மூட சுற்றறிக்கை அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் நம்பிக்கை மையங்களை மூடினால் எய்ட்ஸ் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

    எனவே தமிழக முதலமைச்சர் ஏழை, எளிய மக்களின் நலன் கருதி நம்பிக்கை மையங்களை மூட மாட்டோம் என தமிழக அரசு கொள்கை ரீதியாக அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.

    ×