search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mathur"

    • மாவட்ட நிர்வாகிகள் காயத்திரி சையத் ரியாஸ் பாட்சா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
    • நம்பிக்கை மையங்களை மூடினால் எய்ட்ஸ் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

    மத்தூர்:

    தமிழகத்தில் நம்பிக்கை மையங்களை மூடும் மத்திய அரசின் முடிவை தடுத்து நிறுத்திட வலியுறுத்தி தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் சார்பாக பொதுச்செயலாளர் சேரலாதன் தலைமையில் ஊத்தங்கரை அரசு மருத்துவ மனையில் செயல்படும் நம்பிக்கை மையத்தில் முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

    இந்நிகழ்வில், மாவட்ட நிர்வாகிகள் காயத்திரி சையத் ரியாஸ் பாட்சா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

    அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தாவது:-

    எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோய்க்கு தடுப்பு ஊசி அல்லது முற்றிலும் குணப்படுத்த கூடிய மருந்துகளோ கண்டுபிடிக்கப்படவில்லை. எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் தொடர் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு எடுத்துக் கொள்ள தவறும் பட்சத்தில் அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு நோய் பரவும் அபாயமும் உயிரிழப்பு ஏற்படும். எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள் மூலம் அவர்களுடைய கருவில் இருக்கும் குழந்தைகளுக்கும் இந்த நோய் பரவும் அபாயம் உள்ளது. தொடர் ஆலோசனை மற்றும் பரிசோதனைகள் மூலமே எச்ஐவி தொற்றில்லா குழந்தைகளை பெறமுடியும்.

    தமிழகத்தில் தற்பொழுது 1.40 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் ஏ.ஆர்.டி மையங்களில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் மத்திய அரசு தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் எச்.ஐ.வி ஆலோசனை மற்றும் பரிசோதனை செய்யும் நம்பிக்கை மையங்களை மூட சுற்றறிக்கை அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் நம்பிக்கை மையங்களை மூடினால் எய்ட்ஸ் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

    எனவே தமிழக முதலமைச்சர் ஏழை, எளிய மக்களின் நலன் கருதி நம்பிக்கை மையங்களை மூட மாட்டோம் என தமிழக அரசு கொள்கை ரீதியாக அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.

    மத்தூர் அருகே பஸ் மோதி கட்டிட மேஸ்திரிகள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள மேல் சந்தம்பட்டி பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி (வயது49) கட்டிட தொழிலாளி. இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவியும், இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் சக்தி (வயது48). இவருக்கு தமிழ்செல்வி என்ற மனைவியும், இண்டு மகன்களும் உள்ளனர்.

    நேற்று மாலை மத்தூர் பகுதியில் கட்டிட வேலையை முடித்து விட்டு சக்கரவர்த்தி, சக்தி ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது மத்தூர் அருகேயுள்ள கவுண்டனூர் கூட்ரோடு பகுதியில் செல்லும் போது எதிரே புதுச்சேரியில் இருந்து பெங்களூரை நோக்கி வந்த புதுச்சேரி அரசு விரைவு பேருந்து எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு சக்கரவர்த்தி, சக்தி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் அரசு பஸ்சின் கண்ணாடிகயை உடைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    விபத்தில் இறந்த 2 பேர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து பேருந்து ஓட்டுர் புதுச்சேரியை சேர்ந்த நீதி நாதன் (55) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×