search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்தூர் அருகே பஸ் மோதி கட்டிட மேஸ்திரிகள் 2 பேர் பலி - டிரைவர் கைது
    X

    மத்தூர் அருகே பஸ் மோதி கட்டிட மேஸ்திரிகள் 2 பேர் பலி - டிரைவர் கைது

    மத்தூர் அருகே பஸ் மோதி கட்டிட மேஸ்திரிகள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள மேல் சந்தம்பட்டி பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி (வயது49) கட்டிட தொழிலாளி. இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவியும், இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் சக்தி (வயது48). இவருக்கு தமிழ்செல்வி என்ற மனைவியும், இண்டு மகன்களும் உள்ளனர்.

    நேற்று மாலை மத்தூர் பகுதியில் கட்டிட வேலையை முடித்து விட்டு சக்கரவர்த்தி, சக்தி ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது மத்தூர் அருகேயுள்ள கவுண்டனூர் கூட்ரோடு பகுதியில் செல்லும் போது எதிரே புதுச்சேரியில் இருந்து பெங்களூரை நோக்கி வந்த புதுச்சேரி அரசு விரைவு பேருந்து எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு சக்கரவர்த்தி, சக்தி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் அரசு பஸ்சின் கண்ணாடிகயை உடைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    விபத்தில் இறந்த 2 பேர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து பேருந்து ஓட்டுர் புதுச்சேரியை சேர்ந்த நீதி நாதன் (55) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×